Tuesday, December 04, 2007

(185) ஈவெரா கொளுகைப்படி மானமிகு / இனமான தலைவனாவது எப்படி?

மடையா , மக்குன்னு மக்கள் பட்டப்பெயர் சூட்டிக் கலாய்ப்பதில் இருந்து மேம்பட்டு மானமிகு / இனமான என்று அடைமொழியோடு வானவில்லின் ஏதோ ஒரு கலர் துண்டு, சட்டை போட்டு உலா வரணும்னு ஆசைப்படும் மக்களுக்கு உங்கள் கனவு நனவாக இந்த ஐந்து ஸ்டெப் கொண்ட க்ராஷ் கோர்ஸ்.

மானமிகு -இனமான அடைமொழிகொண்ட தலைவன் ஆக ஸ்டெப் 1.

நாய் /பூனை/ஆடு/மாடு/கோழின்னு சகட்டு மேனிக்கு ஏதாவது ஒண்ணை தன் வீட்டில் வளர்க்கிற ஒரு பிரபலமான கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாய்சேகர்/நாய்பாஸ்கர் மாதிரி நபரிடம் கைத்தடியா சேர்ந்துடுங்க.

ஸ்டெப் 2.

பசித்திருந்து, தனித்திருந்து, வாய்ப்புக்கு விழித்திருக்க வேண்டியதில்லை.

அவசியம் மறக்காமல் தங்கள் உடன் எதிர்கால எவிடெண்ஸுக்கு வேண்டி ஒரு ஆளை கம்பெனிக்கு வச்சுக்குங்க!

ஆனா ஒரே ஒரு ஸ்டிரிக்ட் கண்டிஷன்! அவரும் இன்னொரு இனமான -மானமிகு தலைவனாகும் தீவிரமான கனவும்,எண்ணமும்டையவராக இருக்கணும்.

ஸ்டெப் 3:

நீங்க காத்திருந்தது வீண் போகலை. நாய் வளர்க்கும் பார்ட்டி உங்களை தீவனம் வாங்கி வரச்சொல்லிட்டாங்க.

ஸ்டெப் 4:

தெரு முக்கு சந்தைக் கடைக்குப் போய் அங்கேர்ந்து கீரைக்கட்டு /புண்ணாக்கு / நொய்யரிசித்தவிடு / பொறைன்னு எதையும் வாங்காம நோட்டம் விட்டுட்டுவந்துடணும்!

ஸ்டெப் 5:

இப்போ மிருகத்துக்குத் தீவனம் வாங்கிட்டு வரச்சொன்னவர் வெறும் கை வேந்தனா வந்து நிக்கும் உங்களைப் பார்த்து கேட்குமுன் நீங்களே சொல்லிடுங்க

1. நான் ஏன் நாய்க்கு பொறை வாங்கலை தெரியுமா? தமிழினாத்தின் உணவு அரிசிச்சோறு! பொறை வடநாட்டான்களின் உணவான கோதுமையால் செய்யப்பட்டதுன்னு!

முக்கியமா இந்த வரலாற்று இனமானப் போராட்டப் பாசறைப் பயிற்சியை உங்க கூட இருக்குற கூட்டணி ஆள்கிட்ட மேட்டரை அப்டேட் செஞ்சுக்குங்க!

நாளைக்கு நாயைப் பட்டினி போட்டு ஆரம்பிச்சு, பேவரிட் உணவா தந்தூரி ரொட்டி சாப்பிட்டபடிக்கு, இனமான மானமிகு தலைவனா கோலோச்சி 75 வயசு விழாவில் உங்க கோதுமை மறுப்பு கொள்கைப் பிடிப்பைப் பாராட்ட வசதியா இருக்கும்!

என்ன சந்தேகம் நாயைப் பட்டினி போட்டா ப்ளூக்ராஸ்கிட்ட மாட்டிப்போம்னா?

அட நீங்க வேற! நாய்க்கு கிடைக்க இருந்த பாலை கிடைக்க விடாம விழுந்து கெடுத்து நாயைப் பட்டினி போட்டா மானமிகுன்னு பட்டம் தமிழ்நாட்டில் மேடைபோட்டு நாமளே நமக்கு தந்துக்கிட்டதை சிலாகிக்கலாம்!

இந்த விஷயம் தெரிஞ்சா தெருநாய்கூட மதிக்காதுன்னு பொது அறிவு சொல்லுதா?

உங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு! தெருநாய்கூட மதிக்காத செயலைச் செஞ்சீங்கன்னா நீங்க சந்தேகமே இல்லாம்ம பகுத்தறிவுப் பகலவனின் பிரதான் சீடரா உருவாகிட்டீங்க!

கையைக் குடுங்க கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க 101வது மானமிகு-இனமானத் தலைவன் இன் த மேக்கிங்!

குறிப்பு: டிஸ்கி:கி.வீரமணி சாரோட 75வது பிறந்த நாள்விழாவில் அவரது ஈவெரா வின் கொள்கைப்பிடிப்பை முதல்வர் மு.கருணாநிதி பேசிய புளகாங்கித பேச்சுக்கும் இதுக்கும் நோ சம்பந்தம்!


இப்படிக்கு,

வெளியே அதிகம் தெரியாத இன்னொரு மானமிகு-இனமானத் தலைவன்
ஹரிஹரன்

நான் இனமான-மானமிகுவான கதை சிறு குறிப்பாக உங்கள் பார்வைக்கு:
(பசியோடு இருந்த நாய்க்கு தெரு முக்கு நாயர் சாயா கடையில் பால் வாங்காமல் நாயர் தமிழனே அல்ல! மலையாளி என்று கொள்கைப்பிடிப்பைக் காட்டி மானமிகு-இனமானத் தலைவனானவன். எனக்கு இப்போது 39வயது இன்னும் 36 வருடம் கழித்து எனது கொள்கைப்பிடிப்பை எனது கஞ்சாக்கருப்பு மாதிரியான நெடுநாள் தோழனைவைத்து பிரகடனம் செய்வேந் விழாவில் அனைவருக்கும் அருகாமை அச்சுதன் நாயர் கடை சாயாவையும் சப்ளை செய்வேன்

அறிவிப்பு:
இந்த மானமிகு-இனமானத் தலைவன் ஆகும் கோர்ஸ் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும். கோர்ஸ் உள்ளடக்கம்-மேம்பாட்டுக்கான வாசகர் டிப்ஸ் வரவேற்கப்படுகின்றன.

Monday, December 03, 2007

(184) ஈவெராவின் கொளுகைக் களுதையை 100% பின்பற்றிய வீரமணி...புளகாங்கிதப்படும் கருணாநிதி...

தமிழ்நாட்டின் தற்போதைய டாப் நகைச்சுவை நடிகர் யார்?

கைப்புள்ள வடிவேலுவோ சின்னக் கலைவாணர் விவேக் என்றோ நினைத்தால் தவறு. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்!

நேற்றைக்கு இந்த சாதனையை கருணாநிதி இப்படி நகைச்சுவையாகப் பேசி நிகழ்த்தியிருக்கிறார்:

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி. பெரியார் தனது நாய் குட்டிக்கு பால் வாங்கிவரும்படி வீரமணியிடம் கூறினார். கடைக்கு சென்ற வீரமணி பால் வாங்காமல் திரும்பி வருகிறார். பெரியார், ஏன் பால் வாங்க வில்லை என்று கேட்டதற்கு பிராமணர் ஓட்டலாக இருந்ததால் வாங்கவில்லை என்று வீரமணி கூறியுள்ளார்.


பெரியார் பிராமணர் ஓட்டலில் எதுவும் வாங்க கூடாது என்று கூறியதற்காக நாய்க் குட்டிக்கு கூட பால் வாங்காமல் வரும் அளவுக்கு அவ்வளவு பிடிவாதமாக கொள்கையை காப்பாற்றியவர் வீரமணி என்கிற போது புளகாங்கிதம் அடைந்தேன்.
என்னையே பாராட்டிக் கொள்கிறேன் எவ்வளவு பெரிய சகோதரனை பெற்றிருக்கிறேன்.


ஈவெராவுக்கு மெய்யாவே கொளுகைன்னு ஒன்னு இருந்துச்சா???
ஈவெராவின் கொளுகையை அவரே பின்பற்ற நினைத்ததில்லை!

எக்ஸாம்பிள்ஸ் சிலது பார்க்கலாம்:

ஈவெராவின் தந்தை வழிச் சொத்து முழுதும் ஈவெராவுக்கு கிடைக்கும்படி நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத்தந்தவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் எனும் பிராமணரே!

கருணாநிதியின் குடும்ப மருத்துவர், வக்கீல், ஆடிட்டர் எல்லோரும் பிராமணர்களே!

பொய்ப் பகுத்தறிவுப்பால் ஊட்டி சமானியத் தமிழர்களை நோஞ்சான் நாய்க்குட்டிகளாக்கிவிட்டு வெட்கம் என்பதே இல்லாமல் எப்படிங்க இப்படி?

மிஸ்டர் ஜோக்கர் கருணாநிதி??? ஷேம் ஆன் யூ!

அடுத்து மூடநம்பிக்கையைப் பற்றி

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி.

எப்படிங்க இப்படி? ஈவெராவுக்கே இல்லாத கொள்கையை எப்படி கண்ணைமூடிக்கொண்டு பின் பற்றி?? யே..அப்பா காமெடி இவ்வளவுக்கு கொட்டிக்கிடக்கு?

அப்புறம் கி. வீரமணி சார். இன்னொருவாட்டி அடுத்தவர்களின் மூட நம்பிக்கை பற்றி நீங்க பேசாதீங்க!

இன்னொரு விஷயம். உங்க நகைச்சுவைக் கூட்டணி நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது. வடிவேலு + விவேக் + கஞ்சாக்கருப்பு காம்பினேஷன் காமெடி எல்லாம் சும்மா ஜூஜூபி!

கங்ராஜுலேஷன்ஸ் டு மு.கருணாநிதி + கி.வீரமணி

கொசுறு நியூஸ்: பொய்ப் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா எனும் நிரந்தர கொளுகை நகைச்சுவையாளனுக்கு கஞ்சாக்கருப்பு கருணாநிதியும் கைப்புள்ள கி.வீரமணியுமாச் சேர்ந்து பகுத்தறிவு நகைச்சுவைத் தலைநகரமாம் சென்னையில் 95 அடியில் சிலை வைக்கப்போறாங்களாம்.

சப் கொசுறு நியூஸ்: ரஷ்யா, மற்றும் ஐரோப்பாவில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் டிரான்ஸ் மைக்ரேட்டரி பறவைகள் சங்கம் 95அடி உயரமான டாய்லட் வசதியை தங்களுக்கு வழியில் சென்னையில் ஏற்படுத்தித் தருவதற்காக நன்றியை பகுத்தறிவு நகைச்சுவை இளையர்களான கஞ்சாக் கருப்பு கருணாநிதிக்கும் கைப்புள்ள கி.வீரமணிக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன!

அரசியல் திரா"விட" பெத்தடின் பகுத்தறிவுகளின் கொளுகைக் களுதையை நினைச்சு சிரிங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, December 02, 2007

(183) தமிழ் மொழியில் அறிவியல் கல்வி சாத்தியப்படும் அவசியமா?

பிளஸ்டூ வரைக்கும் தமிழ்வழியில் கல்வி கற்று 85% மதிப்பெண் பெற்ற மாணவன் பொறியியல் கல்வி ஆங்கிலத்தில் இருந்ததால் விளங்கிக்கொள்ள இயலாமல் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு மாண்டு போன செய்தியை வைத்து தமிழிலேயே பொறியியல் கல்வி படிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.

தமிழிலேயே அனைத்து பொறியியல் துறைகளிலும் கல்வி சாத்தியமா?
ஏரோநாட்டிக், பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட் ரிகல், எலக்ட் ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று இந்த அனைத்து பொறியியல் பாடங்களின் தமிழ் வடிவம் அதன் சூத்திரம், சூட்சுமங்கள் என அனைத்தும் தமிழ் மூலத்திலேயே அமைந்து சாமானிய கிராமத்து மாணவர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்கிறதா?

மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் தமிழ் எந்த அளவுக்கு இருக்கிறது?

உதாரணமாக வேதியலில் ஹீலியம், ஹைட் ரஜன், நைட் ரஜன், வாயுக்கள் தமிழ்ப்படுத்தப்படுமா மற்றும் வேதிக்குறியீடுகளான H2O, NaCl, K, N, He, போன்றவை தமிழ்நாட்டு லைசன்ஸ் ப்ளேட் ஸ்டைலில் தமிழாக்கப்படுமா?

கணிதத்தில் 1,2 3...9 என்பது தமிழ் எண்களாக்கப்பட்டு தமிழ்படுத்தப்படுமா?
Fourier Transformation, Vector, Aljebra போன்றவை எவ்விதம் பயிலத்தக்கவகையில் முழுமையாய்த் தமிழ்ப்படுத்தப்படும்?

குறைகடத்தி என்று Semi Conductors ஐத் தமிழாக்கித் திருப்திப்பட்டுக்கொண்டு மின்ணணுவியலின் பிரதான விஷயங்களான Thyrister, Silicon Controlled Rectifier, Diac, Triac,Microprocessors, Transistors, இன்ன பிற மின்ணணு குறைகடத்திக் கருவிகள் செயல்படும் முறைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழில் பயிலத்தக்கவகையில் முழுமையாகத் தமிழ்படுத்தப்படுமா?

அடுக்களைக் கரப்பான் பூச்சி உயிரியலில் Periplaneta americana என்றழைக்கப்டுவதும், தோட்டத்து செம்பருத்திப்பூ hybiscus Rosa Sinenis என்று அழைக்கப்படுவது தமிழ்வழி அறிவியல் கல்வியமைப்பில் எங்கனம் தமிழ்ப்படுத்தப்படும்?

தாவரவியலின் Malvaceae, Fabaceae, Solanaceae, மால்வேசி, ஃபேபெசி, சொலனேசி இன்ன பிற தாவரகுடும்பப் பெயர்கள் வேசி, ஏசி என்று வசையாய் இருப்பதாய் எண்ண நேரிடும் நிலை தவிர்க்க மால், பெப, சொல என்று குறுக்கப்பட்டு தமிழ்ப்படுத்தப்படுமா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?

ஜப்பானியர், ஜெர்மானியர், ப்ரஞ்சு, டச்சுக்காரர்கள் தாய் மொழியில் அறிவியலை படிக்கிறார்கள்! எப்படி சாத்தியமாகிறது இந்த தேசங்களில் தாய்மொழிக்கல்வி??
இந்த தேசங்களின் கல்வித் திட்டத்தில் "ஓட்டு" அரசியல் கிடையாது.
தாய்மொழி மெய்யாக பேணப்பட வேண்டும் எனும் அக்கறையில் நாடகத் தன்மை இல்லை.

ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் ஹெல்முட் கோல் / ஜெர்ஹார்டு ஷ்ரோடர்/ஆஞ்சலா மெர்க்கல் வழி நில், என்று புதிய ஆத்திச்சூடி பாடி இளைஞர்களை ஜெர்மன் மொழி பேண வழி நடத்துவதில்லை.

ப்ரான்சில் ஜாக்குஸ் சிராக் / நிக்கோலஸ் சர்கோஸி வழி நில் என்று பிரஞ்சு ஆட்சியாளர்கள் கதறி கலம்பகம் பாடுவதில்லை!

ஜப்பானிய ஆட்சியாளர்கள் தம் நாட்டு மக்களை டொஷிகி கய்ஃபூ / யூனிச்சிரோ கொய்சூமி வழி நில் என்று வழி நடத்துவதில்லை.

ஜெர்மனி ஹிட்லரை உருவாக்கிய தேசம் என்பது வரலாறு என்ற போதும் ஜெர்மனியின் சகல சாதகமற்ற விஷயங்களுக்கும் / நிகழ்வுகளுக்கும் ஹிட்லரின் சமூகத்தவரே காரணம் என்று 1945ல் இருந்து ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் பழிசூட்டும் விளையாட்டை மட்டும் விளையாடுபவராக இல்லை.

ஜப்பானின் சமூராய் இனத்தவர் போர்வெறியால் கிழக்கு ஆசியா முழுதும் பல சேதாரங்கள் செய்தவர் என்பது வரலாறு. ஜப்பானின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட, பல லட்சம் ஜப்பானியர்கள் தாய்நாட்டின் ஹிரோஷிமா நாகசாகியில் மடிய நேர்ந்த நிலைக்கு சமுராய் இனத்தவர்களின் போர்வெறியே வித்து. ஜப்பானிய ஆட்சியாளர்கள் சமுராய் இனத்தவரைக் கைகாட்டிப் பழிக்கும் வேலையை 1945ல் இருந்து செய்யவில்லை.

பிரஞ்சு அரசன் பதினாறாம் லூயியின் மோசமான அரசாட்சி ப்ரஞ்சுப்புரட்சி, கலவரத்துக்குக் காரணமானது என்பது வரலாறு. பிரான்ஸில் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் லூயி பரம்பரையினர் மீது பழி போடும் சாதனையை மட்டும் 1800ல் இருந்து செய்ய வில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் சிந்தனையின் தரம், செயல்பாட்டுத் திறமை, ஜெர்மனி, ஜப்பான், ப்ரான்ஸ் தேசத்தின் ஆட்சியாளர்களுடன் ஒப்பீடு செய்யத் தக்க அருகதையுடன் இருக்கிறதா?

அருகதை அற்ற ஆட்சியாளர்களால் ஆளப்படும் தமிழ்நாட்டில் ஆசை மட்டும் இருந்து என்ன பயன்?

"அரசு சொத்தை ஆட்டையா போடணும்னா...அண்ணாவழி நில்" எனும் புத்தம்புதிய அரசியல் திரா"விட" பெத்தடின் ஆத்திச்சூடி படித்து தமிழுணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

தமிழிலேயே பொறியியல் கல்வி கற்க அரசியல் சார்பற்ற, சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளில் இருக்கும் அறிவார்ந்த கல்வியாளர்கள் ஒன்று பட்டு பல காலம் உழைத்து பயிலத்தக்க அறிவியல் பதங்களுடனான பாடங்களை உருவாக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தமிழை விற்கும் கலைநயமிக்க வியாபாரிகள் தமிழுணர்வாளர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்து தொடரும் நிலை இருக்கும் வரையில் முழுமையான, முறையான தமிழ் வழிக் கல்வி என்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இருப்பதாக உணர முடியவில்லை.

அதுவரையில் அவரவர் வயதுக்கு ஏற்றார்போல இத்தனை ஆண்டுகளாக தமிழ் உணர்வு எனது ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது என்று சொல்லி நடமாடும் ஊறுகாய் பாட்டில்களாக உலா வரலாம்! (ஊறுகாய்கள் நக்கப்படும் அபாயம் இருப்பதால் டாஸ்மாக் பக்கம் போகும் போது கவனமாயிருக்கவும் )


வரலாற்றுப்பாடத்தில் கடையேழு வள்ளல்கள்னு கம்பீரமா படிச்சது நவீன புவியியல் பார்வை கொண்டு, ஈவெரா தோன்றி 100% சாதியை மறுத்து/ஒழித்து விட்ட தமிழ்நாட்டில் லேட்டஸ்டா சிவாஜி அங்கவை சங்கவை மேட்டருக்குப் பின்னாலே அதியமான், பாரி வள்ளல்களே வன்னியர்னு பின்நவீனமா சிந்திக்க ஆரம்பிச்சாச்சு.

இந்த மாதிரியான பார்வை 100% தமிழ்வழியில் கற்கும் பாடத்திட்டத்தில் பிரதிபலிக்காது என்பதற்கு உத்திரவாதம் மாணவர்களுக்கு உண்டா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் பெயர் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?


அன்புடன்,

ஹரிஹரன்