Thursday, September 27, 2007

(177) பெண்ணடிமைத்தனம் made easy to understand

பெண்ணடிமைத்தனம்னு முழங்கி மேம்பட்ட-பெரியாளாகும் பகுத்தறிவு முயற்சி இல்லை இப்பதிவு.

குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி.

உண்மையில் தன்னடிமைத்தனமான பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

அம்மாவாய் சில பல மாதங்கள் முயற்சித்து, தானே முன் நின்று அலசி,தேடித் தெரிவு செய்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கி திருமணம் செய்வித்த மகனின் வாழ்க்கையில் திருமணமான சில நாட்களில்(வாரங்களில், மாதங்களில், வருடங்களில்)அதே அம்மா சொல்வது:

மகனே நீ உம் பொண்டாட்டி நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆட்டமா ஆடுவேன்னு நான் கனவுலேயும் நினைக்கலைடா... (ஆண்)மகனுக்கு ஜென்மச்சனி உச்சத்துக்கு பெயர்கிறது.

இதுக்காடா உன்னை பெத்து வளர்த்து படிக்கவச்சு நானும் உன் அப்பாவும் ஆளாக்கினது? (அப்பாவின் விருப்பம் இல்லாமலே இந்த அம்மா-மருமகள் எனும் இரு பெண்கள் மேட்டரில் அவரும் அய்யோ பாவத்துக்கு உள்ளுக்கு இழுக்கப்படுகிறார்)

அம்மாவுக்கு என்ன ஆச்சு காலங்காத்தால? என்னைத் தாளிக்கிறா? என்று குழம்பிய படியே மகன் தன் அறைக்குள் சென்றால்... அங்கே இன்ஸ்டண்ட் கண்ணீருடன் மனைவி... உங்கம்மா என்னைத்தானே சொன்னாங்க? நீங்க கேட்டுட்டு ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க? ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆகியாச்சு இன்னும் அம்மாக்கோண்டுவாக அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே நடப்பீங்க்களா? என்னை "யார்" என்ன சொன்னாலும் பரவாயில்லையா?

குளிக்க அவசியமில்லாமல் மனைவியின் அங்கலாய்ப்பு அருவியில் குளித்து வரும் (ஆண்)மகன் ஹாலில் அப்பா பேப்பருக்குள் வசதியாக தன்னை மூழ்கடித்துக்கொண்டதில் ஏதோ ஒரு சாமர்த்தியம் இருப்பதை மெல்ல உணர்கிறார்.

இப்படி விடுமுறை தினத்தில் அம்மா, மனைவின்னு ரெண்டு பேரும் எப்படா விடியும்னு காத்திருந்தது இப்படி தன் தலையில் வந்துதான் விடியணுமா?ன்னு க்ராஸ்பய்யரில் மாட்டிக்கொண்டுவிட்ட தன் அவலநிலையை (ஆண்)மகன் நொந்துகொண்டு இருக்கும் போதே தனது மகள் வந்து அன்றைய நாளேட்டில் வந்த க்ராஸ்வேர்டு-குறுக்கெழுத்துப் புதிருக்கு வகபுலரியில் உதவ வேண்டியதை ஏற்காமல் மறுத்த மறுவிநாடி அந்தச் சின்னப்பெண்ணோ, அவள் அம்மாவாகிய தன் மனைவி தந்த பாலபாடம் முன்னெடுத்துச்செல்ல" போ..அப்பா... உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்ற சர்டிபிகேட் தந்து மும்முனைத்தாக்குதலில் (ஆண்) மகனை ஆழ்த்திடுகிறாள்.

சோபாவில் பேப்பர் கொஞ்சம் கீழிறங்கி மறைந்திருந்த அப்பாவின் முகம் கண்கள் அளவுக்குத் தெரிய அந்தக் கண்களில் அதீத அனுதாபம் தென்படுவதாக உணர்கிறார் (ஆண்)மகன்.


மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அம்மா தனியாக இருக்கும் நேரத்தில் மனைவியின் மாமியாராகிய தனது அம்மாவிடம் கட்டாயமாகத் தெரிவித்துவிடும்படி (எச்சரித்து)சொல்லிய கருத்தை தூதுவராக அம்மாவிடம் திக்கித் திணறித் தெரிவித்து முடிக்குமுன்பே... "மகனே உனக்கு இப்படி தலையணைமந்திரம் போட்டு வச்சிருக்காளேடா உம்பொண்டாட்டி... நீயும் அவ போட்ட மந்திரத்துக்கு சாமிவந்த மாதிரி ஆடுறியேடா"-ன்னு அம்மா சாமியாடி முடிக்க...

தன் அறைக்குள்ளே போனால் "மீண்டும் அம்மாக்கோண்டு... உங்களுக்கு எதுவும் தெரியாது" எனும் பட்டம் 1008வது முறையாக தன் குழந்தைகள் முன்னிலையில் தரப்படுவதை நினைத்து மீண்டும் செல்ல பயப்பட்ட நிலையில் தவிக்கும் (ஆண்)மகனை நோக்கி அம்மாவீட்டுக்கு வந்திறங்கிய, அம்மாவின் அணி நிரந்தர சப்போர்ட்டரான தன் சகோதரி
அண்ணா /டேய் தம்பி... நீ கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டன்னு கண்களின் ஷட்டரைத் திறந்து 1-டிஎம்சி இன்ஸ்டண்ட் கண்ணீரை வெளியேற்ற...

அங்கே வந்த அம்மாவோ... சபாஷ் ..வந்தும் வராததுமா கூடப்பிறந்தவளைக் கண்கலங்க வைச்சுட்டயேடான்னு அடுத்த எபிசோடை ஆரம்பிக்க... கிச்சனில் பலமான பல பாத்திரச் சத்தங்கள் செய்தபடியே மனைவி வேலை செய்வதில்- ஈராக்கில் அமெரிக்கா+பிரிட்டிஷ் கண்டுபிடிக்காத WMDயை தான் கண்டுபிடித்துவிட்டதாக மனசுக்குள்ளே உணர்ந்தாலும் ... முந்நாள் ஹீரோவான (ஆண்)மகன் தன் நிலையை WMD விழுந்த ஹிரோஷிமாவாக்கிக் கொள்ள விரும்பாமல் 1500வது முறையாக அடங்கிப்போய் நழுவ...

அப்பா தன்னுடைய எழுபதுவயதில் ஏன் காய்கறி மார்க்கெட்டுக்கு கறிகாய் வாங்க ஒரு நடை, பச்சைமிளகாய்க்கு ஒரு நடை, கறிவேப்பிலைக்கு ஒரு நடை, கீரைவாங்கன்னு ஒரு நடைன்னு லூசுமாதிரி இருக்கிறார் என்பதில் இருக்கும் சூட்சுமம் புரிகிறது. After all it is necessary to get fresh air very often - which is directly to the proportion of number of பெண்மணிகள்(வயது வித்தியாசம் இல்லாமல்) in the home)

இப்போ பெண்ணடிமைத்தனம் அப்டீன்னா என்னன்னு பார்க்கலாம்.

அடிமைத்தனம் அப்டீன்னா என்னங்க?

நம்ம விருப்பத்திற்கு, சொல்லுகிற சொல்லுக்கு வரவேற்பு, மரியாதை இருக்காத நிலையை அடிமைத்தனம்னு சொல்லலாம்.

அம்மா எனும் தானே தேடி,அலசி ஆராய்ஞ்சு, விசாரிச்சு, தேர்ந்தெடுத்துத் தந்த வாழ்க்கைத் துணைவி என்று இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிட்டு... பழியை எல்லாம் மகன் மேலே சுமத்துவது... பொண்டாட்டியோட நட்டுவாங்கத்துக்கு ஆடுறவன்...தலையணை மந்திரத்துக்கு மயங்கினவன்ன்னு பழிக்கவேண்டியது,

மனைவி எனும் பெண் கல்யாணமானவுடனே கணவனை அவனது தாயாரிடம் இருந்து கத்தரிக்க ஆனதைச் செய்யவேண்டியது... அம்மாக்கோண்டு என்பது.... அலுவலகத்தில் திறமையான மேலாளராக இருந்தாலும் ...உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...ஒரு மண்ணும் தெரியாதுன்னு கும்ம வேண்டியது...

சகோதரி எனும் பெண் "கல்யாணத்துக்கு அப்புறமா நீ ரொம்ம மாறிட்ட"ன்னு பத்திரம் தரவேண்டியது... கல்யாணமானா.. எப்படி அப்படியே இருப்பது... கணவனாக..குழந்தைகளுக்கு அப்பாவாக என்று முன்னில்லாத கூடுதல் கடமைகள் என பல மாற்றங்கள் வந்துவிட்ட வாழ்க்கை... இதில் எப்படி அப்படியே இருந்து தொடர்வது?

ஒரு ஆணின் வாழ்க்கையில் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்கள் கூட்டணி இப்படி முன்னே போனால் கடிப்பதாக... பின்னே வந்தால் உதைப்பதாக இருந்து அவர்களாக அவர்களை ஆட்டுவித்துக்கொண்டுவிட்டு அய்யோ பெண்ணடிமைத்தனம் என்றால்... அது தன்னடிமைத்தனம்.

தலைமுறை தலைமுறையாக இவ்வளவுக்கு முன்னுக்குப்பின் முரண்படும் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்களது நச்சரிப்புப் பேச்சை ஆண்கள் நாள்போக்கில் சீரியஸாக மதிப்பும் மரியாதையும் தந்து வரவேற்று எடுப்பது குறைவதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

குரல் கொடுப்பது என்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட கல்யாணமாகி, அம்மா-மனைவி-சகோதரியாகிய இப்பெண்களிடம் தினசரி"எமோஷனல் ப்ளாக்மெயில்", எமோஷனல் பிக்பாக்கெட் நிகழ்வுகளில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் அபலை(ஆண்)மகன்களுக்குக் குரல் தருவதே நியாயம்!

இன்னொருதரம் பெண்ணடிமைத்தனம்னு சொல்லுமுன் யோசிங்க ... திருத்திச்சொல்லுங்க.. அது தன்னடிமைத்தனம் என்று!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, September 20, 2007

(176) ராமர்பால கட்டுமானப் பணியில் ராமபிரான்

ராம பிரான் சமுத்திரத்தைக் கடந்து லங்கா செல்வதற்கான (ராமர்)பாலம் ஹனுமானின் தீவிர மேற்பார்வையில் வானர சேனைகள் வெகு வேகமாகக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

வானர சேனைகள் ராம நாமம் எழுதி கடலில் எறியும் பாறைகள் மூழ்காமல் மிதந்து பாலம் அமைக்க அதன் மேல் முன்னேறியபடியே பாலம் கட்டுவது விரைவாக நடக்கிறது.

ராமபிரானும் நேரடியாகக் களத்தில் இறங்கி பாலக்கட்டுமானத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஒரு பாறையைத் ராமபிரான் தன் கைகளால் தூக்கி கடலில் எறிய உடனே அது கடல் நீரில் மூழ்குகிறது.

ராம பிரான் யோசித்தபடியே "அனைத்து வானரசேனைகள் கடலிலே எறியும் பாறைகள் மிதக்கிறது, ஆனால் தான் எறிந்த பாறை மூழ்கிவிட்டதே" என்று குழப்பத்துடனும் யாரும் தான் செய்ததைப் பார்த்துவிட்டார்களா எனும் மெல்லிய வெட்க உணர்வுடன் சுற்று முற்றும் பார்க்கிறார் ராமபிரான்.

மானுட உணர்வுகளுடன் தான் இறை அம்சமானவன் என்பதை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்ளாது மானுடனாகவே வாழ்ந்தவன் ராமபெருமான்!

ஹனுமான் ராமபிரான் செய்ததைப் பார்த்தபடியே ராமபிரானின் அருகே வருகிறார்.

அருகே வந்த ஹனுமானிடம் தான் எறிந்த பாறை மட்டும் உடனே கடலில் மூழ்கியதை விவரிக்கிறார் ராமபிரான்.

ஹனுமான் ராமபிரானிடம் சொல்கிறார். "ராமபிரானே பாறைக்கல்லே ஆயினும் அதை நீ கைவிட்டு விட்டால் அது உடனடியாக மூழ்கித்தானே ஆக வேண்டும்" என்று.

Sriராம ஜெயராம ஜெய ஜெய ராம! என்று சொல்லியே ராமபிரானின் அருளைப் பெற்று பேரானந்தத்துடன் வாழ்வோமாக!


அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, September 18, 2007

(175) தந்தையை விபத்தில் இழந்த MCA படிக்கும் கிராமத்து தமிழ்ப்பெண்ணுக்கு Project workக்கு உதவி தேவை

இணையத்து தமிழ் நண்பர்களே! வணக்கம். MCA Final Yearபடிக்கும் தந்தையை விபத்தில் இழந்த ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டி இந்தப் பதிவிடுகிறேன்.

குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.

அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.

இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.

05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.

தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.

மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.


அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, September 13, 2007

(174) ஹரிஹரனின் பார்வையில் தலைநகரம் டில்லி

டெல்லியும் மொகலாயத்தனமான ஆட்சிகளும் பிரிக்கமுடியாத வரலாறு என்பது இன்றளவும் உயிரோட்டத்துடன் இருப்பது நேரடியாகக் கடந்த ஜூன் மாதம் நேரடியாக உணர்ந்தேன்.

டெல்லியின் இந்திரா காந்தி பன்னா(ட்டு)டை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் இந்த மொகலாயர்கள் கதை நினைவுக்கு வந்தது.

நெறியற்று, மக்களுக்கு பயனற்ற வகையில் அரசாட்சி செய்த முகலாய அரச தந்தை ஷஜஹான் தனது சாகும் தருவாயில் தன் மகனிடம் எனக்கு நீ மக்களிடையே நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்று தன் மகன் ஔரங்கசீப்பிடம் கேட்டுக்கொள்ள ஔரங்கசீஃப் நடத்திய கொடுங்கோலாட்சியைக் கண்டு பீதியும் துயரமுற்ற மக்கள் ஷஜகான் எவ்வளவோ பரவாயில்லை இந்த கொடுங்கோலன் ஔரங்கசீப்போடு ஒப்பிடுகையில் என்றனர்.


இந்தியா வரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் இந்தியாவில் சுற்றுலா செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், ஹிமாச்சல், மற்றும் இதர இமயமலைப் பிரதேசங்களான உத்தராஞ்சல் என வருவோர் அனைவருக்கும் பிரதான இந்திய நுழைவு வாயில் இந்த இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்! இந்தியாவுக்கு தேச அவமானமாக மிக மிக மட்டமான கட்டமைப்பு அடிப்படை வசதிகளுடன் ஔரங்கசீஃப் கொடுந்தொல்லையாகி சென்னையை ஷஜகான் பரவாயில்லையே என உயர்த்திக் காட்டியது எனக்கு!

ஆகஸ்ட் 1991க்கு அப்புறம் டில்லிக்கு ஜூன் 2007ல் தான் வருகிறேன். 91ல் தனியாக உடன்பணி செய்த நண்பனுடன். 2007 ஆறுபேர் கொண்ட மூன்று தலைமுறை கொண்ட பெருங்கூட்டத்துடன் :-)

கால அவகாசமின்மையால் நாங்கள் நேரடியாக குவைத்திலிருந்து டெல்லிக்கும், என் வயதான பெற்றோரை சென்னையில் இருந்து டெல்லிக்கு தனியாக உள்நாட்டு விமானத்தில் வரும்படி செய்து டெல்லியின் விமானநிலையத்திலே சந்தித்துக் கொள்ளும்படியாக எபக்டிவாக கோ ஆட்டினேட் செய்ய டெக்னாலஜி(மொபைல்) உதவியது.

மொழிப்போர் தியாகியாகி ஹிந்தியை நான் எதிர்க்காமல் அரைகுறையாக சிவயோகம் சாரிடம் ஹிந்தி ப்ரவேஸிகா வரையில் பிரைவேட்டாகப் படித்துத் தெரிந்து கொண்டது வெத்துவேட்டாகாமல் டாக்ஸி டிரைவரிடம், உள்ளூர் வணிகர்களிடம் பேசிப் பழகி குறைவாக ஏமாற உதவியது.

ஒரு சொட்டு ஹிந்தி தெரியாமல் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக எனது பெற்றோர் அவ்வப்போது அரிதாரம் பூசாத அவதாரம் எடுத்ததைப் பார்க்கும் போது தமிழ்நாட்டுக்கு ஆஸ்கர் தந்து கட்டுப்படியாகாது என்பதால் தான் தரப்படவில்லை என்று புரிந்தது.

என் தந்தை ஒருபடி மேல் சென்று சரளமான முழுத் தமிழிலே ஹிந்திக்காரனிடம் தான் சொல்ல வந்ததைச் சொல்லி டெல்லியின் ஹிந்திக்காரர்களுக்கு தேசத்தின் மொழிக்கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை இவற்றை அடிக்கடி நினைவுபடுத்தும்படி கிலி ஏற்படுத்தினார்!

புதுடில்லி ரயில்வே ஸ்டேஷனுக்குப் "புது" டில்லின்னு தைரியமாகப் பேர் வைத்தவனைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். புதுப் புது குப்பைகள் நிறைந்த இடத்தில் இருக்கும் ஸ்டேஷன் என்பதால் அப்பெயர் என விளங்கிக் கொண்டேன்!

இந்தியத் தலைநகரிலிருக்கும் தேசிய அவமானம் புது மற்றும் பழைய டில்லி ஸ்டேஷன்கள் இரண்டும்! நிஜாமுதீன் ஸ்டேஷன் போகும் பாக்கியம் கிட்டவில்லை இந்தமுறை.

LNG எரிபொருளாக பொதுமக்கள் போக்குவரத்துவாகனங்களில் பேருந்து, டாக்ஸி,ஆட்டோவில் பயன்படுத்தப்படுவதால் சென்னையை விட வாகனப் புகையால் கண் எரிச்சல் பரவாயில்லை. டெல்லி போக்குவரத்துக்கழக, தனியார் பேருந்துகள் டிபிக்கல் நார்த் இண்டியன் தரம். ஒருசில தாழ்தளப் பேருந்துகள் பரவாயில்லை.

டெல்லிக்காரர்கள் டிராபிக் லைட்டை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். கனாட் பிளேசிலேயே Might is Right என்பதே டிராபிக் விதியாகக் காணப்பெற்றேன்.

தலைநகர் டெல்லியின் ஒரே போக்குவரத்து சிறப்பு மஞ்சள் லைன், நீல லைன், சிவப்பு லைன் என்று ஓடும் டெல்லியின் நவீன மெட்ரோ ரயில் நெட்வொர்க்! அதிலும் மஞ்சள் லைன் நீல லைன் என இரண்டு மெட்ரோ லைன் சந்திக்கும் ராஜீவ் சௌக் (கன்னாட் ப்ளேஸ்) மெட் ரோ ஸ்டேஷன் அரசியல்வாதிகள் மனதுவைத்து நிதிஒதுக்கி, திட்டம்தீட்டி செல்படுத்தினால் நவீன இந்தியா எப்படி சிங்காரமாக மாறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. குப்பை இல்லாத, பிச்சைக்காரர் இல்லாத, பான்பராக் எச்சில் இல்லாத அதி சுத்தமான பளிச் ரயில் நிலையங்கள் டெல்லி மெட்ரோ நிலையங்கள் என்பதற்காகப் பாரட்ட வேண்டும்!

விமானநிலையத்துடன் மஞ்சள் லைன், மற்றும் நீல லைன் இணைக்கப்பட்டு 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக நடக்கும் மெட்ரோ ரயில் இரண்டாம் நிலை விரிவாக்கம் டெல்லியை போக்குவரத்தில் ஓரளவுக்கு இன்னும் சிறப்புடையதாக்கும்.

வரலாற்று டெல்லி மொத்த நகரமுமே குப்பை கூளங்கள் நிறைந்த மெகா சைஸ் மியூசியமாக இருக்கிறது! ஜூன் மாத வெயிலில் டெல்லியின் வீதிகளில் வலம் வர ஒரு கொடுப்பினை வேண்டும். எனக்கு நிறையவே இருந்தது அந்தக் குடுப்பினை!

நம்மூர் சித்திரைத் திருவிழாவில் அக்கினிக் குண்டம் இறங்க பயப்படுபவன் டெல்லியின் பல ஸ்தலங்களில் காலணியைக் கழற்றி வைத்துவிட்டு மதிய வெயிலை உள்வாங்கிய கிரானைட், மார்பிள் கற்களில் உரிந்து போன வெப்பத்தடுப்புப் பூச்சால் பூக்குழி இறங்கிய அனுபவமும் பெற்றேன்.

கால்காஜி தாமரைக் கோவிலில் மதிய 2 மணிக்கு ஓஹோய்.. ஏ க்யா ஹை என்று வெயில் கொளுத்தும் படிகளில் ஸ்டெப் டான்ஸாடியபடியே "பஹாய் பாரம்பரிய" வழிபாட்டு அரங்கின் வழிபாட்டு அரங்கத்தின் பெஞ்சில் வெந்து போன நூடுல்ஸாக டெல்லி வெயில் தாக்கத்தின மனதுக்குள் அமைதியாக நொந்தபடி அமர்ந்து வந்தது எக்ஸ்ட்ரீம்லி "ஹாட்& பர்ன்டு" அனுபவம்!

மாலையில் கைலாஷ் கிழக்கில் இருக்கும் இஸ்கான் கோவிலின் மாலை நேர ஆரத்தி ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டங்கள் மற்றும் உள்ளரங்கு காட்சி அமைப்பு ஸ்பெஷல் எபக்ட் காட்சிகள் பார்வையிடல் ஒரு சிறப்பான அனுபவம்.

தென்னிந்தியக் கோவில்கள் அதன் கருங்கல் சிற்பங்கள் பலநூறு ஆயிரம் வருடங்கள் வெய்யில் மழை தாங்கி நிலைத்து இன்றளவில் கோலோச்சுவதும் அதன் வேத பாரம்பரிய ஸ்தபதி சாஸ்திர ஆர்க்கிடெக்சுரல் எக்ஸலன்ஸின் பெரும் அருமையை நவம்பர் 2005ல் திறக்கப்பட்ட அக் ஷர்தாம் கோவில் கலைவளாகத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

நவம்பர் 2005ல் திறக்கப்பட்ட அக் ஷர்தாம் கோவில் கலைவளாகத்தில் ஜூன் 2007ல் இரண்டாண்டுகளுக்குள்ளாக பிரதான கோவிலைச் சுற்றிய நீர்நிலையில் அமைக்கப்பட்ட கோமுகங்கள் நீக்கப்பட்டும் நீர்நிலையில் மராமத்து வேலை, வெளிப்பிரஹாரத்தில் இருக்கும் மணற்பாறையில் வடிக்கப்பட்ட பிரதான யானை சிற்பங்கள் வெடித்தும், கீறல் விழுந்தும் என இரண்டே ஆண்டுகளுக்குள் 21ம் நூற்றாண்டு டெக்னாலஜி எட்டம்/பத்தாம் நூற்றாண்டு பண்டைய பாரதத்தின் வேத பாரம்பரியமான ஸ்தபதி சாஸ்திரம் கொண்டு நிறுவப்பட்ட காஞ்சி, மதுரை,மாமல்லபுரம் சிற்ப,கட்டிடக்கலை நுட்பத்திடம் பகிரங்கமாகத் தோற்றுப் போயிருக்கிறது.

என்ற போதும் பாரதப் பாரம்பரிய கட்டிட, சிற்பக்கலையை மீண்டும் வெளியே உணர்த்த அக்ஷர்தாம் கோவில் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. வெயில் விழாத கோவில் உட்புறத்திலிருக்கும் பளிங்குக்கல் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதம். நுணுக்கமான சிற்பவேலை அதிலும் சீலிங் மார்பிள் கார்விங் நிஜமாக வாய்பிளக்க வைக்கிறது!

எண்டெர்டெயின்மெண்ட் தீம்பார்க் தொழில் நுட்பம் மற்றும் ரொபாட்டிக்ஸ் நவீன பொம்மலாட்ட உத்தியை பாரத பாரம்பரியப் பண்டைக்காலத்தையும் சுவாமி நாரயண் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்த அமர்க்களமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.


வெளியே அடிக்கும் வெயிலுக்கு மிக இதமாக குளிர்சாதன அக்ஷர்தாம் ஐ மேக்ஸ் பெருந்திரை ஸ்பெஷல் எபக்ட் தியேட்டரில் "நீல்கண்ட்" சுவாமி நாராயணனாவது பற்றிய 45 நிமிடப் படம் சிறப்பான தொழில் நுட்பத்தில் இமயமலைகளின் பிரம்மாண்ட கேமரா கோணங்களுடன் கண்ணுக்கும், மனதுக்கும் இதம்!

கூவம் சென்னைக்கு, செங்கோட்டை, அக்ஷர்தாம் வளாகங்களின் பின்னே ஓடும் யமுனை டெல்லிக் கூவம்! சைதாப்பேட்டைக் கூவம் ஆற்று மறைமலை அடிகள் பாலத்தை மூக்கை மறைக்காமல் நடக்கும் சென்னைவாசிக்கு டெல்லி யமுனை தெள்ளிய நதியாகவும் தெரியலாம்! இந்த ஆற்றைச் சாக்கடை ஆக்குவதில் சென்னை ஔரங்கசீஃப்பாகி டெல்லியை ஷஜகான் ஆக்கிகிறது!

செங்கோட்டையைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஆஜ்தக் டிவிக்காக உலக புராதான சின்னங்கள் பட்டியலில் செங்கோட்டை இடம்பெற்றதை ஒட்டி செங்கோட்டை இந்தியாவின் பெருமை என்று என்னைக் கருத்து தெரிவிக்கச் சொன்னார் அந்த நிருபர் பெண்மணி. நான் எனது எண்ணங்கள் அப்படி இல்லை. செங்கோட்டையை இந்தியர்கள் அடிமையாக்கப்பட்ட, வேதனையான கடந்த காலத்தின் எச்சமாகவே என்னால் அடையாளம் காண முடிகிறது. இந்தியனாய் செங்கோட்டையை இந்தியாவின் பெருமையாகவெல்லாம் கருத முடியவில்லை என்றேன். அடுத்த ஆளைப் பார்த்து தனக்கு உவப்பான கருத்தைச் சேகரிக்கச் சென்றுவிட்டார் அந்த பெண் நிருபர்!


கன்னாட் பிளேஸூம், சாந்திபாத்தும் பன்னாட்டு வங்கிகள், அலுவலகங்கள், தூதரகங்கள் என இருப்பதால் புதுடெல்லியாக பளபளப்போடு இருப்பதை ஆர்கேபுரம் மலைமந்திர் முருகனைக் காணப் பயணித்தபோது பார்க்க, உணர முடிந்தது.

மலைமந்திர் முருகப்பெருமான் வெயில் கொடுமை குறைய அருள் புரிந்தார் என்பதை படியேறி மேலே செல்லு முன்பாக கீழே இடும்பன் சன்னதியில் தோகை விரித்தாடி மயில் சொல்லியது. அன்று மாலை மழை பெய்தது டெல்லியில்.

மலைமந்திர் முருகன் கோவில் வளாகத்தில் தமிழ்நாட்டில் இருந்து வரும் குண்டுமல்லிகை கண்டு மகிழ்ந்தவாறே தமிழில் பேரம் பேசி வாங்க வாய்ப்பு என்பதால் என் தாயார்க்குக் கூடுதல் மகிழ்ச்சி (பேரம் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம்)

கன்னாட்ப்ளேஸ் ஹனுமான் கோவிலுக்கு டெல்லிவந்த செவ்வாய்க் கிழமை அன்றே சென்றதைத் தவிர்த்திருக்கலாமோ எனும் அளவுக்கு மிகநெரிசலாய் இருந்தது.

கன்னாட்ப்ளேசில் சீக்கியர் வழிபாட்டுத்தலமான பங்ளாசாகேப் குருத்வாரா சென்றபோது ஏழடி உயரத்திற்கு வாளும், வேல்கம்புமாய் பிரதான கோவில் வாசலில் காவல் இருக்கும் சீக்கியர் சரித்திர காலத்திற்கு இட்டுச்செல்ல ஸ்பார்க்கினார். பக்தர்கள் நடக்கும் பாதையை ஒரு வேண்டுதலாகச் சுத்தம் செய்யும் சீக்கியர்கள், பக்தர்கள் தாகத்திற்கு தண்ணீர்தரும் சீக்கியர்கள் என்று வித்தியாசமான அனுபவம்.

பழைய டெல்லி ரயில் நிலையத்தில் ஜம்மு மெயில் பிடித்துப் பஞ்சாப்-காஷ்மீர்-ஹிமாச்சல் பார்டர் டவுன் பதான்கோட்டில் இறங்கி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலா-மெக்லோட்கஞ்ச்(Ppper Dharamshala-Mcleodganj) மலைப்பிரதேசத்துக்கு பஸ் பயணம். 110 கிமீ தூரம் 5மணிநேரம் ஒரு டீ பிரேக், ஒரு சிற்றுண்டி ஹால்ட் என படுத்தினார்கள் ஹிமாச்சல் பரிவஹன் நிஹம்(போக்குவரத்து நிறுவனம்)!

டெல்லியில் வெயிலில் காய்ந்ததற்கு பனிமூடிய தௌலாதர் ரேஞ்ச்(Dauladhar Range) இமயமலைச் சிகரங்கள் பின்ணணியோடு மலைமுகட்டில் இருக்கும் ஹிமாச்சல் பெரிய வரப்பிரசாதம் டெல்லியிலிருந்து 700 கிமீ தொலைவு. ஜம்மு 100 கிமி தூரம்தான் பதன்கோட்டிலிருந்து...



அன்புடன்,


ஹரிஹரன்

Wednesday, September 12, 2007

(173) So Called (இந்தியப்) பெண்ணடிமைத்தனத்திற்கு(??) ஆண்கள் மட்டுமா பொறுப்பேற்கவேண்டும்?

பெண்ணடிமைத்தனம் என்கிற விஷ(ய)த்திற்கு ஆண்களை 100% பொறுப்பேற்கச் சொன்னால் அதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது.

ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்றவாறே பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் அடிமைத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களின் இயற்கையான இயல்பே ஆண்களை விட பலமடங்கு அதிகப்படியாக சுயநலமாக இருப்பது.

குடும்பப் பெண்கள் அவர்கள் வீட்டுத்தேவைக்காக வாங்கிய புடவை, பாத்திரம், பண்டம், நகை,நட்டுன்னு தான் வாங்கிய அனைத்தையும் அப்பார்ட்மெண்டில் அத்தனை ப்ளாட்களில் வசிக்கும் தோழியரிடம் காட்டி பெருமை பறைசாற்றி அடுத்த பெண்களிடையே நமக்கு இப்படி வாழ்க்கை அமையவில்லையே என்று மன நிறைவின்மைக்கு அடிமையாக்கிக் கொள்வது யார் குற்றம்.


குடும்பத்தினுள்ளே இருக்கும் பெண்களால் அவர்கள் பேராசை காரணமாக தொடர் நச்சரிப்பு செய்து ஆண்கள் லஞ்சம் வாங்க, ஊழல் செய்ய என்று உந்து சக்தியாக இருந்து ஊறு விளைவிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியாவில் இந்திராகாந்தி, சோனியாகாந்தி, பிரதீபா பாட்டில், தமிழகத்தில் ஜெயலலிதா, உபியில் மாயாவதி,ராஜஸ்தானில் விஜய ராஜெ சிந்தியா,மம்தா பானர்ஜி, ரேணுகா சௌத்ரி இலங்கையில் பண்டாரநாயகா, சந்திரிகா, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, பேகம் காலிதா, பாகிஸ்தானில் பெனாசீர் புட்டோன்னு அரசியல் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் இருப்பது பெண்ணடிமைத்தனம் செய்யும் ஆணாதிக்க ஆண்கள் இருப்பதால்தானே.

ஐ லவ் யூ டார்லிங் எனும்போது ஐ லவ் யூ டூ /டா எனும் acknowledgment இல்லாளிடம் இருந்து வருவது தொடரவேண்டியே சீரியல்கள் பல பார்த்துக்களைத்து முன் தூங்கிப் பின் எழும் மனைவியரைக் காலையில் எழுப்ப "பய"Logical அலாரமாக எத்தனையோ கணவர்கள் ப்ரஷ்ஷில் பேஸ்ட் ரெடியாய் வைத்து பெட்காபி ரெடிசெய்து அட்ஜஸ்ட் செய்து வண்டி ஓட்டுவது பெண்ணடிமைத்தனம் தானே!

பொண்ணு பார்க்கும் / நிச்சயதார்த்தத்தின் போது எம்பொண்ணு செல்லமா வளர்ந்தவ.. நீங்கதான் அணுசரணையா இருக்கணும்னு சொல்லிட்டே அடையாறு ஆனந்தபவன்ல் வாங்கின பஜ்ஜியை பரிமாறியது புரிபடாமல் கல்யாணமாகி வந்தபின்னால் "ஐ நோ ஒன்லி ஹவ் டு குக் ஹாட் வாட்டர்யா" எனும் மனைவி இருக்கின்ற யதார்த்தத்தில் கையில் கத்தி எடுத்த (காய்கறி நறுக்கத்தான்) எதார்த்தம் ஆணாதிக்கம் அன்றி வேறென்ன?

புது மனைவியின் மரணவிலாஸ் சமையலை வீட்டிலும் சமாளித்து அந்த விஷ(ய)த்தை லஞ்ச் பாக்ஸில் கட்டித்தந்து "மிச்சம் வைக்காம சாப்பிடுங்க" என்று சொல்லி இல்லாள் வழியனுப்பியதற்காக, பாதி லஞ்சிலேயே நீர்பெருகிய கண்களினூடே எமனின் பாசக்கயிறும், எருமைக்கொம்பும் தென்பட்டாலும் விக்கலோடு விழுங்கிவிட்டு என்று பல்வகையான பேர்களோடு இருந்தாலும் கணவர்கள் அனைவரும் நீலகண்டன்களாகி நிற்பதுவே நடப்பதுவேக்களாக அணுசரணையாக இருப்பது பெண்ணடிமைத்தனம்தானே!

சீரியஸான விஷயமா பார்க்கலாம். பல குடும்பத்தினுள்ளே பெண்கள் தான் தாம்பத்ய உறவைத் துருப்புச் சீட்டாக, அவர்கள் ஆசையை நிறைவேற்ற வற்புறுத்தி ஆண்களிடம் காரியத்தை சாதிக்கிறார்கள்.

தனது சின்னவீ(ட்)டு (களு)க்காக நம் அரசியல் வாதிகள் / மன்னர்கள் செய்யும் / செய்த சமூக அட்டூழியங்கள் நடவாதிருந்தால் எவ்வளவோ மேம்பட்டு இருந்திருக்கலாம்.

சமூகத்திலே வெகுதியான அளவில் திருமணமான பின்னர் அம்மா(மாமியார்), தங்கை ,மனைவி எனும் உறவுகள் ஒரு சராசரி ஆணை எந்த ஊரில்/நாட்டில் வாழ்ந்தாலும் கீழ்ப்பாக்கம் மானசீகமாகப் போக வைக்கிறதா? இல்லையா?

ஆணாக இருந்ததால் பாரிவள்ளல் முல்லைக்குத் தன் தேரையே தந்து உதவினான். அம்மா-மனைவி-தங்கை எனும் மூன்று பெண்கள் மூன்று முழ முல்லைப்பூவைப் பிரிந்துக்கொள்வதில் சண்டையை ஆரம்பித்து குடும்பம் எனும் தேரையே சாய்த்து, முழுக்குடும்பத்தையுமே பிரிக்கும் வல்லமை பெண்களுக்கே இருக்கிறது.

இவ்வளவு கொடுமை அனுபவித்தும் ஆண் திருந்துகிறானா என்றால் இல்லை.
பெண்கள் பூ போன்ற மென்மையான இதயம் படைத்தவர்கள் என்று வசனம் எழுதுகிறான். திருமணம் என்று உறவு இணையத்திலே வந்து விட்ட ஒவ்வொரு ஆணும் சந்தேகமே இல்லாமல் மசோகிஸ்டுதான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கருத்து.

குடும்பத்தினுள்ளே பெண்களுக்கு இருக்கும் ஆளுமையே பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. திருமணமான பெரும்பான்மை ஆண்கள் சேர்ந்து வாழ்வதை மட்டுமே விரும்புபவர்கள். ஆணின் குடும்பக் கடமைகளுக்கு ஹவுஸ் வொய்ப்/ வொர்க்கிங் வொய்ப் எனும் பேதமின்றி பெண்களே தங்கள் சுயநலசிந்தனையால் முட்டுக்கட்டை போடுபவர்கள்.

இன்றைக்கு குடும்பத்தில் ஆண்கள் சம்பாதிப்பதோடு பள்ளிக்குக் குழந்தைகளைத் தயார்செய்வதில் பங்களிப்பு, உணவுதயாரிப்பு, வீட்டுவேலை இவைகளில் பங்களிப்பு என்பதை ஆணடிமை என்று முழங்காமல் கடமையாகச் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இதெல்லாம் நகரத்து ஆண்கள் நிலையாக இருக்கலாம். கிராமங்களில் பெண்களுக்குக் கல்வி இல்லை,வாழ்வியல் உரிமைகள் இல்லை என்போருக்கு தேசமெங்கும் தேநீர்க்கடையகளில் டோர் டெலிவரி வேலைசெய்யும் பையன்கள், பட்டாசுக்கம்பெனியில் வேலைசெய்யும் பையன்களாகிய ஆண்களுக்கும் கல்வி, இதர உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவில் காணாமல் போகும் அப்பாவிப் பெண்களை ஈவு இரக்கமின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில் அயோக்கிய ஆண்களை மிஞ்சும்விதமாக "அக்கா"க்களின் பங்களிப்பும் மிக அதிகம்!

முள்ளுக்காட்டில் சாராயம் காய்ச்சுவது ஆண்கள் அதை இடுப்பில் உறைகளாக்கி, ரப்பர் டியூப்பில் நகரின் தெருக்களில் ரீடைல் சேல் செய்வது பெண்கள்தானே!

ஆணுக்கும் பெண்ணுக்கும் Equal Rights என்று முழங்குவார்கள் எல்லாம் செய்துவிட்டு ரயில் டிக்கட் ரிசர்வேசனுக்கு பொதுவரிசை என்றால் பெண் என்று ஈவு இரக்கம் இருக்கா பாரு என்று வசை பாடுவார்கள்.

உண்மையில் ஆணடிமையை எதிர்த்து ஆண்கள் போராடினால் Need of the Hour எனும் அர்த்தம் இருக்கும். அதை விடுத்து பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று மசோகிஸ்டாக ஆண்கள் இருந்து குரல் தருவது ஏற்கனவே ஆண்களை மஸ்கிடோவாக நடத்தும் பெண்களிடம் இன்னமும் ஓடஓட விரட்ட ஓடோமாஸ் எடுத்துத் தருவதாகவே இருக்கும்.


குறிப்பு: இது நகைச்சுவைப் பதிவு இல்லீங்க! இணையத்தில்(ஆண்)வர்க்கப் போராட்டம்!

அன்புடன்,


ஹரிஹரன்

Sunday, September 09, 2007

(172) பகுத்தறிவுப் பகலவர் ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகம்

ஈவெரா எனும் பகுத்தறிவுப் பகலவன் எழுந்ததால் தான் சூரியன் அஸ்தமிக்காத பகுத்தறிவு ராஜ்ஜியம் தமிழகத்தில் தோன்றியது என்று கதறும் பகுத்தறிவு ஆட்களே அய்யா பாவமாகி சினிமா செண்டிமெண்ட் ரேஞ்சில் அச்சுப் பிசகாமல் கடல் கடந்தும் இந்துமதம்,பிள்ளையார் சிலை-இவற்றைக் கடைந்தே பகுத்தறிவு"வெண்ணைய்" திரட்டிக் கடைந்தேறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் மனோஜ் Knight சியாமளன் Sixth sense சினிமாவாக Hollywoodவாயிலாக ஆறாம் அறிவுணர்வைத் உலகிற்குத் தருவதற்கு பலகாலம் முன்னமே நம்ம ஈரோட்டு வெங்காய. ராம்சாமி பகுத்தறிவை மலிவு விலையில் பகுத்தறிவுக்கு ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்து ( திஸ் வேர்ல்டு & அண்டு அதர் காலக்ஸீஸ் ரைட்ஸுடன்) பூமியிலே ஏர்பிடிப்பவனிடமும் ஆகாயத்தில் ஏரோப்பிளேன் ஓட்டுபவனிடமும் ஒரே நேரத்தில் Two way One wire transmission எனும் நானோtechnology மூலமாக பகுத்தறிவு விழிப்புணர்வை நிலைநாட்டியவர்.

பகுத்தறிவு பகலவரு தோன்றிய தமிழகத்திலே வேளாங்கண்ணி மாதா ஐரோப்பாவில் இல்லாத கிறித்துவ தேச்சப்பரத்தில் பவனி வந்ததை Notice செய்யாத பகுத்தறிவு"வெண்ணை" உருகி பார்வை மங்கினாலும், ரமலான் நோன்புக்கஞ்சி பாரம்பரியத்தை- பகுத்தறிவின் பரிந்துரையை வியந்தபடியே, வாழவிடாத போரிலே தொலைந்துபோய்விட்ட தொன்மையான பாரம்பரியத்தை, வசிக்கும் தொலைதேசத்தில் விநாயகர் தேர்ச்சப்பரத்தினை பகுத்தறிவு நோட்டீஸால் நிறுத்தும் முயற்சி - SELF LESS self-respect Matter that got self exported!

மைனர் ஈ.வெ.ராமசாமி சண்டித்தனம் செய்ய
1) பிராமண எதிர்ப்பு
2)இந்துக் கடவுள் எதிர்ப்பு
3)இந்து-தெய்வ இலக்கியங்கள் எதிர்ப்பு
4)வெள்ளைக்கார துரையே இருக்கட்டும்,
5)தமிழர்கள் இசுலாமியராக மாறவேண்டும் -என்று ஐந்துக்கும் மேற்பட்ட பகுத்தறிவுக் கொள்கைகளை வைத்து திராவிட-பகுத்தறிவுக் கொள்கை எழுச்சிக் குழையடிப்புக் கூத்தை தமிழகத்தில் நடத்தினார்/ நடாத்துகிறார்.

ஒரு தமிழ் சினிமாவில் கவுண்டமணி அஞ்சுகொலை செய்த பெரிய தாதா என்கிற பில்டப் தரப்பட்டு பெரிய கித்தாப்புடன் ஊரில் வலம் வருவார்.

அடுத்தடுத்த காட்சிகளில் அஞ்சு கொலை செய்யுமளவுக்கு கவுண்டமணிக்கு வீரதீரம் ஏற்பட்டது எப்படி? அஞ்சு கொலை செய்த விதம் எப்படி? என்று விவரிக்கப்படும் போது கவுண்டமணி தானாக, கொலைகாரத் தொழில், கொள்கைப்பிடிப்புடன் எந்தக் கொலையுமே உண்மையில் செய்திருக்கமாட்டார்.

தென்னந்தோப்பில் கொலைசெய்யப்பட வேண்டி எதிரியிடம் கவுண்டமணி காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்கும் போது தென்னைமரத்தில் இருந்து தேங்காய் விழுந்து அகஸ்மாத்தாய் எதிரி மாண்டுபோவார். இப்படி ஒவ்வொரு கொலைக்கும் பிண்ணனியாக இருக்கும் கொள்கைகள் வெளிவரும்.

கடைசியாக அஞ்சுகொலை ஆறுமுகம் என்று கவுண்டமணியின் பெயர்க் காரணமானது அவர் சந்தையிலே ஐந்து தேங்காய் குலைகளைக் களவாடிய குற்றதிற்காக ஐந்துகுலை ஆறுமுகம் என்பது மருவி அஞ்சுகொலை ஆறுமுகமாகியது வெளிவந்து அதுவரை இருந்த கவுண்டமணியின் வீரதீர அஞ்சுகொலை அடைமொழி பில்டப் உடைந்து சுக்குநூறாகும்.

பிராமணர்களின் செருக்கைக் கொலை செய்தவர் - பகுத்தறிவு பகலவரு ஈவெரா

இதிலே பிராமணர்கள் தம்மீது சுட்டிக்காட்டப்பட்ட தவறை தாமாக, தங்களுக்குள்ளேயே முன்வந்து மாற்றிக் களைந்து கொண்டனர், இன்னும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.


இந்துமத தெய்வீகத்தை சிலைகள் உடைத்தே கொலை செய்தவர் பகுத்தறிவு பகலவரு ஈவெரா

பொதுமக்கள் எவர் செய்தது அதிமூடத்தனம் என்று உணர்ந்திருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தரிசனமும், தமிழகத்து திருவண்ணாமலை கிரிவலமே நலம் தருவது என்று பகுத்தறிந்திருக்கிறார்கள்

ராமாயண,பாரத,திருக்குறளை மலமென உரைத்தே இல்லை என்றாக்கியவர்-பகுத்தறிவு பகலவரு

இரண்டடிக் குறளில் இருக்கும் மணம் ஈராயிரம் அடி பகுத்தறிவு எழுத்து பேச்சில் இல்லை என்றும், எது உண்மையான மலம் என்றும் இன்று மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

சாதியைத் தமிழகத்தில் இருந்து ஓடஓட விரட்டிக் கொலை செய்தவர் -பகுத்தறிவு பகலவரு

பகுத்தறிவு பகலவரு ஈவெரா சீர்திருத்திய பின்பு சாதி தமிழகத்திலே மூலை முடுக்கேல்லாம் அரசியல் ஆதரவுடன் தழைத்திருப்பது மாதிரி வேறெங்கும் காணமுடியாது!

தேர்தல், நலத்திட்டம், ஆட்சி என எதுவும் எது பயன் தரும் சாதி? எது பயந்தரும் சாதி? என்ற கணக்கினை ஆய்வு செய்த பின்னரே நடக்கும்!


அமெரிக்க விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எல்லாம் எங்கள் ஈரோட்டுப் பகலவரு பகுத்தறிவுக் கேண்டீனில் பயின்றவர் (பாசறை பயிற்சி பெஞ்சு எல்லாம் ரெயின்போ கலரில் சாதிக் கட்சிகள் துண்டுகள் போட்டு ரிசர்வ் ஆகிவிட்டபடியால்!) என்று அள்ளிவிட்டாலும் சத்தியமா யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை!

தமிழ்நாட்டின் மக்கள் தம் தலைக்குமேலே அரசியல் திரா"விட" பகுத்தறிவு வெள்ளம் பெருக்கிட்டு ஓடுவதையே கணக்கில் கொள்வதில்லை!

One can Prove his stupidity in two ways:

1. By remaining silent
2. By uttering aloud


வரலாற்றை நோக்குகையிலும், நோட்டீஸடித்துப் பன்னாட்டளவில் பிரகடனம் செய்துவரும் பகுத்தறிவுப் பகலவரின் கிர(ஹ)ணங்கள் சொல்வதிலிருந்தும் விளங்குவது:

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பகலவரு ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகம் தெரிவு செய்தது இரண்டாம் வகை என்று.

E.V.Ramsamy Proves aloud his stupidity in all of his concepts & contemplations!

தமிழ் இணையம் செய்து கொண்டிருக்கும் பகுத்தறிவுப் பகலவரு ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகத்தின் உண்மையான பகுத்தறிவு வேட்கை, கொள்கைப் பிடிப்பு என்று விடுதலை செய்து இருட்டுக்கருமையை இந்நாள் வரை உணராதோருக்கும் உணரவைப்பதே!

உண்மை எதுவோ அது விடுதலையாகியே தீரும்!

அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, September 06, 2007

(171) தமிழ்நாட்டில் எருமைகளால் கூட நிம்மதியாக வாழமுடியாத சூழல்!

தமிழ்நாட்டில் எருமைகள் கூட நிம்மதியாக வாழமுடியவில்லை எனும் உண்மையை இந்தச் செய்தி விடுதலை செய்கிறது!

சத்துள்ள பால் தரும் பயனுள்ள இந்த எருமைகளின் பெருக்கம் தமிழகத்தில் குறைந்து பால் உற்பத்தியும் பாதிப்படைந்திருக்கிறது!

பால் உற்பத்தி குறைகிறதே என்று கவலைப்படாமல் தமிழ்நாட்டில் பால்வளத்துறை அமைச்சர் எருமைகள் குறைவு எனும் செய்தியை வாய்ப்பாக வைத்தே பகுத்தறிவு முழக்கம் செய்யப் பார்ப்பார்கள்.

1. "கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் எமனின் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டோம்"

2." பாரதத்தின் ஆட்டோமொபைல் தலைநகரம் சென்னை இருக்கும் தமிழகத்தில் எமனே எருமை கிடைக்காமல் சான்ட்ரோ காரில் தான் செல்லும் நிலையை நிறுவி கழக ஆட்சி சாதனை படைத்து இருக்கிறது"


:-))) :-)))

அன்புடன்


ஹரிஹரன்

Wednesday, September 05, 2007

(170) தங்கையைக் கல்யாணம் செய்வதே தமிழினத்துக்கு உகந்தது என்ற பகுத்தறிவுப் பகலவர்ர்ர் ஈவெரா

தமிழர்களுக்குள் எல்லா சாதியினராலும் தமிழர்க்கே உரிய பிரத்யேக திருமணப் பாரம்பரியம் உண்டு.

அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது என்பது தமிழரிடையே எல்லா சாதியிலும் இருக்கும் தமிழர் திருமண பாரம்பரியத்தில் தனிச்சிறப்பானது, மிகவும் தொன்மையானதும் கூட.

தமிழகத்திலே இருக்கும் முக்குலத்தோர், செட்டியார், உடையார், வன்னியர், பார்ப்பனர், நாவிதர், கவுண்டர், பறையர்,பள்ளர், சிவாச்சாரியார், முதலியார் , நாடார், மீனவர் என அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவான தமிழர் திருமண, தமிழர் கலாச்சார பாரம்பரியம் என்றால் அது அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது, அத்தை மகன்/மகள், மாமா மகளை/மகனை திருமணம் செய்வது.

ஆயிரமாண்டுகள் கழித்தும் இன்றும் நடைமுறையில் தமிழர்கள் மத்தியில் போற்றப்படும் தொன்மையான பாரம்பரியமாக அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது, அத்தை மகன்/மகள், மாமா மகளை/மகனை திருமணம் செய்வது எனும் பாரம்பரியப் பழக்கம் உதாரணமாக விளங்கி வருகிறது.

அடுத்து தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை / சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.


திரா"விட" பெத்தடின் கண்டுபிடித்த பகுத்தறிவு பகலவர்ர்ர்ர் ஈவெரா சொல்லியது :

தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே என்பது!

தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் சித்தி மகளை மணமுடிப்பதை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டிருப்பவர்கள். நேரடியாகக் கண்டுணர்ந்த அனுபவம் எனக்கிருக்கிறது.


நான் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்ற காலத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து வந்து படித்த இசுலாமிய நண்பன் அவனது சிற்றன்னையின் மகளை முறைப்பெண்ணை வயது வித்தியாசம் காரணமாக மணம் செய்யமுடியாது போயிற்று என்ற போது அதிர்ந்தேன்!

தமிழகத்தில் இருக்கும் சோழர் காலத்துப் புகழுடைய ஜெயங்கொண்டத்தில், இன்றைய காலத்தில் இசுலாமியத்தைத் தழுவியவரது வேரை ஆராய்ந்தால் அது வன்னியர்/உடையார்/அகமுடையார் /ஆதிதமிழர் என்று தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழ்ப் பரம்பரையினையே அடையாளம் காட்டும்.

தமிழர்களிடையே நிலவிவரும் தொன்மையான திருமணப்பாரம்பரியத்தில் தங்கையைத் தாரமாக்கும் பழக்கம் இருந்ததே இல்லை எனத் தெளிவாக அறுதியிடலாம்!

தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள். ஆனால் பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.

சிற்றன்னை மகளை/தங்கையைத் திருமணம் செய்யும் தமிழர்க்கு ஒப்பாத வந்தேறி திருமணபாரம்பரியத்தவர் நோன்பில் கஞ்சிகுடித்து அது தமிழர் உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்ல பாரம்பரியம் என்று கருணாநிதி மற்றும் இன்னபிற பகுத்தறிவு, தமிழினமான(??)த் தலைவர்கள் தமிழ்நாட்டில் சமூக நீதி பேசி தமிழர் பாரம்பரியத்தை கலைஞராக இருந்து பேணுவார்கள்!

சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!

தமிழுணர்வு மிக்க தமிழக/உலகத் தமிழர்கள் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளும் அந்நிய பாரம்பரியத்தை, அதன் சமூக விளைவுகளை பகுத்தறிந்து பார்க்க வக்கற்ற ஈவெராவைத் தமிழர்தந்தை என்றும், கருணாநிதியை தமிழினத்தலைவன் என்றும் போற்றுகிறார்கள்!


இன்னும் ஒருவாரம் தான் இருக்கிறது இசுலாமிய ரம்ஜான் பண்டிகைக்கு..

தமிழுணர்வு மிக்க திரா"விட" பெத்தடின் தமிழர்கள் அனைவரும் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா பரிந்துரைத்த சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கிக்கொள்ளும் பாரம்பரியத்தை தமிழகத்துக்குத் தந்த இசுலாமிய ரம்ஜான் நோன்புக்கு கஞ்சி குடிக்க/ மட்டன் பிரியாணிக்கு ரெடியாவதில் பிசியாக இருப்பார்கள்.

வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை எனில் சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கிக்கொள்ளும் பாரம்பரியத்தை தமிழர் கலாச்சாரத்தைச் சிதைப்பதாக உணரக்கூட உதவி செய்யாத திரா"விட"ப்பெத்தடின் பகுத்தறிவுடன் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்று பாரிவள்ளல் மகள்களை கருப்பாக்கிக் காட்டி தமிழினத்தை இழிவு செய்துவிட்டாய் என்று வலையுலகில் உதார் காட்டுகிறோம்.


தமிழகத்தில் வாணியம்பாடி/ ஆம்பூர் /ஜெயங்கொண்டம்/தஞ்சையில் சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கும் இசுலாமிய பாரம்பரிய திருமண விருந்தின் பிரியாணிக்குள் சிதைக்கப்படும் தொன்மையான பாரம்பரிய தமிழர் கலாச்சாரத்தையைச் சிதைத்துச் சுவைத்தபடி மானமிகு.வீரமணி,தமிக்குடிதாங்கி மருத்துவர் குடிதாங்கி, கறுஞ்சிறுத்தை திருமாவளவன் போன்றவர்கள் தமிழின மான மீட்பு நடத்துகிறார்கள்!

சாமானிய / சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்!

பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா பாசறையில் பயின்ற இந்த தமிழின மானப் போராளிகளுக்கு வீர வணக்கம் செய்வதைத் தவிர!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, September 02, 2007

(169) தமிழுணர்வு முழங்கும் தமிழ் வலையுலகுக்கு ஒரு வயலும் வாழ்வும் செய்தி

தமிழ் மொழியைக் கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ளும் சக்தி இருந்ததற்காக சென்னை மெட்ரோ வாட்டர் / குழாயடி சண்டை நடக்கும் இடங்களில் அரிதாக வருந்தவேண்டிய சூழல் நம்மில் பலருக்கு ஏற்பட்டு இருக்கக்கூடும். அந்தத் தெருவைக் கடக்கும் முன்பே சமாதானம் அடைந்தும் விடுவோம். காரணம் அப்படியான அழுகல் தமிழ்மொழிப் பயன்பாட்டைக் கையாள்வோர் கல்லாமை என உணர்வதால்.

கணிணியில் தமிழ்மொழியைப் படித்து தமிழ்மொழிபேசுவோர் உள்ளத்தில் இருக்கும் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்ததற்காக வெட்கி வெந்து நொந்தேன்.

மனனப் பகுதியாக மதிப்பெண்ணுக்காக மட்டுமே தமிழ் ஆன்றோர் மொழிகளைக் கருதித் தாய்த்தமிழில் பள்ளியில் சொல்லித்தரப்பட்ட கருத்துக்களைக் காற்றில் விடுதலை செய்துவிடுவதால் வெளிப்படும் உண்மை வெளிச்சம் இல்லாத கருமையாக வெளிப்படுகிறது.

எனது பள்ளிக்கூடகாலத்தில் தமிழாசிரியர் எனக்குத் திருத்தமாகச் சொல்லித்தந்த தமிழ் ஆன்றோர் செய்யுளை நினைவு கொள்கிறேன்.


"இன்சொல் விளைநிலமாம் ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவூட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்!"


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கணிணி நிபுணத்துவம் நிறைந்த உயர்கல்வி கற்ற நம் தமிழ்மக்கள் நிறைந்த தமிழ் வலை உலகில் பதிவர்கள் அனைவராலும் பின் பற்றப்பட வேண்டிய விஷயங்களை ஒரே செய்யுளாக "நச்" என்று நாலுவரியில் நம் தமிழ் ஆன்றோர் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னேயே சொன்னது.

நம்மால் வலை உலகில் பதிவுகளில் தமிழ் வார்த்தைகளாய், வாக்கியங்களாய் வெளிப்படுத்தப்படும் தமிழ் பண்புடன்,நல்ல தமிழாய் நறுமணத்துடன் திகழும்படி பார்த்துக்கொள்வது என்பது "தமிழுணர்வு"க்கு அடிப்படையாக அமைதல் அவசியம்.


அன்புடன்,

ஹரிஹரன்