Tuesday, October 31, 2006

(39) எம்டன் மகன் 'n' கருணாநிதி

சென்ற பதிவில் கருணாநிதியைப் போற்றி உண்மையில் உயர்வு நவிற்சியில் கவிதையை ஆசையோடு எழுதிவிட்டு கவிதையின் கீழே கருணாநிதியால் தமிழக சரித்திரத்தில் நிகழ்ந்திட்ட தரித்திர உண்மை நிகழ்வுகளை குறிப்பாக இட்டேன். தமிழ்த்தாய்க்கே கோபம் எனது உயற்வு நவிற்சிக் கவிதைகள் உணர்வு மாறி வஞ்சப்புகழ்ச்சியாகி தோற்றம் மாறிவிட்டது!

சென்ற இப்பதிவில் பின்னூட்டத்தில் குழலி " ஹரிகரா உனக்கு மனச்சாட்சியே இல்லியா?" கருணாநிதி சாகவேண்டும் என்று மட்டமான சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறாயே! என்று அவர் பார்வையை எனது பதிவின் பார்வையாக்க முயன்றார்.

கடற்புறத்தான் ஜோவோ குழலியினும் ஒருபடி மேலே போய் நான் பதிவெழுதும் போது நினைத்திடாத, "கருணாநிதி செத்தால்தான் எனக்கு நிம்மதி என்று நான் தெளிவாகச் சொல்லிவிட்டதாக" தன் கருத்தை எனது பதிவின் கருத்தாக மண்டகப்படி நடத்தினார்!

அடடா! என்ன இது உண்மைகளை மட்டுமே பதிவிட்ட என்னைப் போய் கருணாநிதி சாவை எதிர்நோக்கும் கொம்பேறிமூக்கன்னு குழலி ஐயாவும், ஜோ ஐயாவும் சொல்லிப்புட்டாங்களேன்னு பெரும் மனக்கவலையுடன் நேற்று மாலை வீட்டுக்கு வந்து " இந்த அபவாதத்திலிருந்து என்னைக் காப்பாத்து முருகா-ன்னு தமிழ்க்கடவுள் முருகனை (எனது உயர்வு நவிற்சிக் கவிதையை வஞ்சப்புகழ்ச்சியாக்கியது இத்தமிழ்க்கடவுள் முருகன் செயல் தானெ) வேண்டியவாறு வருத்தப்பட்ட மனதை மாற்றிட சினிமாவை பார்க்கலாம்னு "எம்டன் மகன்" திரைப்படத்தைப் போட்டுப்பார்த்தேன்.

நாசர், வடிவேலு, பரத்னு திரையில வந்து பட்டைய கிளப்பி நடிச்சிட்டு இருந்தாங்க! இடைவேளைக்கு முன்பாக பரத்தின் தாய்வழிப்பாட்டன், நோய்வாய்ப்பட்ட கிழவன், செயல்பாட்டு ஆக்கம் குன்றிய கிழவன், சுமையாகிப் போன கிழவன் படுக்கையில் இழுத்துக்கொண்டு கிடப்பார், டாக்டர் வந்து உறவுகள் எல்லாம் சூழ்ந்து கொள்ள சோதனை செய்து கொண்டிருக்கும் போது அந்தக் கிழவனின் அடுத்த இளைய தலைமுறைப் பேரன்கள் டாக்டரைச் சுற்றிக்கொண்டு எதிர்பார்ப்போடு பார்க்க ..ம்ம் எல்லாருக்கும் சொல்லி அனுப்புங்க என்பார் டாக்டர்... பேரன்கள் கோரஸாக இதுவரை நாலுவாட்டி சொந்த பந்தங்களுக்குச் சொல்லி அனுப்பியாச்சு ஒரு நல்லதும் நடக்கக்காணோம் என்னய்யா டாக்டர்ன்னு முற்றுகையிடுவார்கள்.

சில சீன்கள்கழித்து சீரியஸாகிப்போன கிழவனை மீண்டும் டாக்டர் பரிசோதித்து வாயெல்லாம் பல்லாக கன்பார்ம்டு... கிழம் மண்டையப் போட்டாச்சுன்னு சொன்னதும் பேரன்கள் மூஞ்சியில் ஆயிரம் வாட் ஒளியோடு பெரு மகிழ்ச்சியோடு "கல்யாணசாவு" என்று பாட்டுப்பாடி, தேரேற்றி கிழவனை மயானத்திற்கு இறுதி ஊர்வலம்னு சாவை இந்த அளவுக்குக் காமெடியா சொல்லியிருப்பார் இயக்குநர்.

ஆக இளைய தலைமுறை பேராண்டிகள் நோய்வாய்ப்பட்ட, ஆக்கம் குன்றிய, சுமையாகிப்போன தாத்தாவின் முடிவை எதிர்நோக்குவது தமிழ்நாட்டு நடைமுறையில் இருக்கும் திராவிட வழக்கமே என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் அக்மார்க் திராவிடத் தமிழர் திருமுருகன் . கருணாநிதியின் சன் டிவியிலே "மெட்டி ஒலி" சீரியல் தந்தவர். (நல்லவேளை எம்டன் மகன் திரைப்படத்தின் இயக்குநராக மணிரத்னமோ, பாலச்சந்தரோ,ஷங்கரோ இல்லை (முருகக்கடவுளே! கருணைகாட்டினாய்))

கருணாநிதியும்...

.....ஊழல் நோய் தாக்கிய முதியவரே!

.....தமிழகத்தின் வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆக்கம் குன்றிய முதியவரே!

..மக்கள் நலத்திட்ட நிதியைக் களவாடி தமிழகத்தின் சுமையாகிய முதியவரே!

பேரனாக என்னை ஏற்றுக்கொள்வாயா கருணாநிதியே! மாட்டாய்!

ஆகவே கருணாநிதியே நீடுழி நூறாண்டுகள் வாழ்ந்திடுக!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, October 30, 2006

(38) பகவத் கீதையை படிக்க ஏற்ற பருவம் எது?

ஒவ்வொரு எழுத்தும் ஒரு பருவத்தில் படித்தால் எழுத்தின் கருத்தோடு உணர்வோடு இணைந்து படிப்பதே பெரிய சுகானுபவமாகிறது. உடனடி தினசரி வாழ்விலும் படித்த எழுத்தின் செறிவான கருத்துக்களைக் சரளமாய்க் கையாள வாய்ப்பும் ஏற்படுகிறது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேகமான எழுத்து, வீரமான எழுத்து இவைகளைக் காட்டிலும் காதல் எழுத்து அதிகம் கவனத்தினை ஈர்க்கும். இருபாலர் படிக்கும் கல்லூரி எனில் படித்த காதல் எழுத்தை ராக்கெட்டாக்கி சீற விட்டு எதிர்பாலர் காதல் எதிர்ப்பாளராக இருந்தாலும் சமீபத்தில் படித்த காதல் எழுத்தினை உடனடியாக அதன் முழுப்பயன்பாட்டு டார்கட் ஏரியாவில் பயன்படுத்திடும் போது உற்சாகம் கூடுகிறது.

பொதுவாகத் தந்தையின் காசில் வளர்ந்து படிக்கும் நாட்களில் தத்துவங்கள் பேசிடும் எழுத்தை தன்னருகே அண்ட விடாது அந்த வயசுக்கான மனது. டீன் ஏஜ் ஹார்மோன்கள் வாசிக்கும் ஹார்மோனியத்திற்கு மிகச்சரியானது காதல், மற்றும் காதலர் வருணனை எழுத்துக்களே.

எனவே டீன் ஏஜ் வயதில் பகவத் கீதை படி என்றால் 'ஏ க்யா பக்வாஸ் ஹை" என்று ஒதுங்கி ஓடிவிடுவதே நிதர்சனமாக இருக்கும்.

கல்லூரி படித்து முடித்து வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு கைநிறைய சம்பளத்துடன் ஆபீஸர் வேலை கிடைத்து தங்கை கல்யாணத்திற்கு சில லட்சங்கள் என சில வருடங்களும் பின்பு மாத ஈஎம்.ஐ 15K ஆகும் 800சதுர அடியில 2BHK ப்ளாட்க்கு, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ரேஷ்மாவுக்கோ, மீனாட்சிக்கோ, காயத்ரிக்கோ ஐ லவ் யூ சொல்லி செட்டில் ஆகிடலாமா லைஃப்லன்னும், யோசிக்கிற இருபதுகளில் பகவத் கீதை புத்தகம் நல்ல விஷயங்கள் அடங்கியதுதான் என்ற உண்மை தெரிந்தாலும் முழுமையாகப் படிக்க மனம் ட்யூன் ஆகியிருக்காது.

இருபதுகளின் கடைசியில் / முப்பதுகளின் தொடக்கத்தில் பெற்றோர் பார்த்த பெண்ணோ, சுயமாய்ப் பெண் பார்த்து பெற்றோரிடம் காட்டி சம்மதம் வாங்கிக் காதலைக் கல்யாணமாக்கியோ, கல்யாணத்தினை காதலாக்கியோ வாழ்க்கை மேற்கொண்டு பயணித்து நகர, காட்சிகள் மாறி அறங்கேற ஆரம்பிக்கிறது.

தெனாலி கமல் மாதிரி பயம் மெள்ளத் தொற்றிக்கொள்ளும், குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும். பெரும்பாலும் வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ வாழ்கின்ற போது பரஸ்பரம் எழும் பூசல்கள் பெரும்பாலும் சீர் பருப்புத்தேங்காய் முனை உடைந்தநிலையில் மரியாதைக்குறைவாக வந்ததாக ஏற்கனவே மகனை இழுத்துக்கொண்டு போகிறார்களே என்ற உணர்வுக் கொதிநிலையில் இருக்கும் அம்மாவிடம் நைஸாகப் போட்டுக் குடுக்கும் அத்தையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அழுத்தக்காரர்கள் என்ற எண்ணம் அழுத்தமாக பதிந்து போனதில் வெளிநாட்டில் ஒருநாள் ஏதேனும் ரஸத்தில் உப்புக்குறைவு என்ற உப்புப்பெறாத விஷயத்தில் ரசாபாசமாய் பூகம்பமாய் வெடிக்கும் பூசல்கள் , பரஸ்பரமாய் என்னை என்ன மாதிரியான மரியாதை தெரியாத ஒரு குடும்பத்தில் தள்ளிவிட்டாய் என்று முக்கால் வாசி சம்பளத்தை ஒருமாதம் டெலிபோன் செய்து சங்காத்தமே வேணாம் என்று மோஸ்ட் எகானமி ஆர்லைன்ஸில் பேக் ஆஃப் செய்யப் பெட்டிகளைப் பேக் செய்துகொண்டு இருக்கும் போது எங்கப்பா கடைசியிலே இப்படி வெளிநாட்டு வரன்னு பாழுங்கிணத்தில என்னைத்தள்ளிட்டாரே என்று பேசிக்கொண்டே மனைவி மயங்கிச்சரிய என்னடா பெரிய தியேட்டர் பெர்பார்மன்ஸ் காட்டுறா என்று சலிப்போடு பக்கத்து க்ளினிக் கூட்டிப்போன சமயத்தில் "கங்கிராஜுலேஷன்ஸ் ஷி இச் கன்ஸீவ்டு" என்று நம்முர் டாக்டர் சொல்ல வீட்டுக்குத் திரும்பி வரும் போது ரெண்டு பேரும் மேலே பொங்காம நின்னு யோசிச்சு முந்தைய நாள் பேக் ஆஃப் முடிவுக்கு பேக் ஆஃப் சொல்லி கொஞ்சநாள் கழிச்சி ஊருக்குச் சொல்லலாம்னு முடிவெடுத்து அடுத்த 8மாசத்தில விஸிட்ல அம்மா அப்பாவைக் கூட்டி வந்து, குழந்தை பிறந்து பாஸ்போர்ட் எடுத்து அதில் ப்ளேஸ் ஆஃப் பர்த் இந்தியா தவிர்த்த வெளிநாட்டு நகரம் என்ற விஷயத்தை பெரிய அச்சீவ்மெண்ட் என்று அல்பமாய் அகமகிழ்ந்து கண்ணாடியில முகம் பார்த்தா களைப்புடன் என்னிடம் ஏதோ சரியில்லையோ என்று மருகி, ஒருவேளை இவ அடிக்கடி சொல்றாளே உங்களுக்கு ஏதும் தெரியாது என்று நிஜமாக இருக்குமோ? என்று குழம்பி நிற்க நேரிடும்.

என்ன ஊர் இது கோவில் இல்லை, குளம் இல்லை இது அம்மா, அடுத்த தெரு நடந்து போக பாஸ்போர்ட் எடுத்துட்டு போகணும், காலாற தெருவில நடக்க முடியல இது அப்பா மூணுமாசம் அம்மா சரியா தூங்கக்கூட இல்லை. இனி நீ அப்பா ஆகியாச்சு பாத்து சும்மா சண்டை போட்டுட்டே இருக்கவேண்டாம். அப்பா அம்மா ஊருக்குத் திரும்பிப் போயாச்சு. இப்போ கைக்குழந்தை நைட் எல்லாம் அழுகை... நைட் தூங்க முடியல... காலையில விஜய்காந்த் மாதிரி சிவந்த கண்களோட ஆபீஸுக்கு போகவேண்டியிருக்கு. வீட்டுவேலையில கூடமாட உதவட்டும் என்று வைத்த பெண்மணிக்கு நாம சேவகம் செய்யவேண்டிய கடமை வேற சேந்துக்கிச்சு இப்போ.

வயசு 33-37 வாழ்க்கையே நான்கு ஆண்டுகளில் மாறிப்போச்சு. போர்க்களமாகி விட வாழ்க்கையில் அடுத்து என்ன ஸ்டெப் எடுக்கணும்னு மூளைக்கு ப்ரியாரிடைஸ் செய்ய கூர்மை மக்கிப்போனமாதிரி படுது.

சொந்தத்துலயே / நட்புலேயே யார் யார் போட்டு வாங்குறாங்கன்னு தெரியுது என்ன செய்யணும்னு தெரியலே!

நாலுபேர் துரோகம் பண்ணிட்டாங்க! ஷிட் வாட் அ ஸெல்பிஷ் பீப்புள்ன்னு மனம் மருகுது.

சே ஐயாம் அஷேம்டு ஆஃப் மைஸெல்ப்... ஐ ஷுட் நாட் ஹாவ் டிட்ச்டு ஹிம். ஆனா நேர்மையா மன்னிப்புக்கேட்க கித்தாப்பு விடமாட்டேங்குது!

கீதையில அர்ஜுனன் இப்படித்தான் போர்களத்துக்கு நடுவிலே குழம்பிப்போய் நின்னான். "கமாண்டர் இன் சீஃப் ஆஃப் பாண்டவா ஆர்மி" என்ற போதும் நடுப் போர்க்களத்தில் போர்புரிய மாட்டேன்னு அடம் புடிச்சான்!

வீட்டுல ஒரு வயசுக் குழந்தை நடந்து விளையாண்டு டோட்டல் சரண்டர்னா என்னன்னு நீ கோபமா வெடிச்சுக் கத்தும் போது நேரா மூஞ்சியப்பார்த்து சிரிக்கும்போது வீக் எண்டில் "பகவத் கீதை" லெக்சர் யாரோ ஸ்வாமிஜி தர்றான்ற ஈமெயில் நினைவுக்கு வரும். போய் லெக்சர்ல உக்கார்ந்தா உனக்கான குழப்பங்கள் எல்லாம் அர்ஜூனனுக்கு எப்படி முன்னமே வந்திருக்குன்னு ஆச்சர்யப்படுவே. ஸ்வாமிஜியோடக்யூ அண்ட் ஏ செஷனில் பலர் கேட்ட கேள்விகள் நீ கேட்க நினைச்ச கேள்விகளாயிருப்பது கண்டு ஆச்சரியம் கூடி லெக்சர் முடிவில் புக்ஸ்டால்ல பத்து புஸ்தகம், கீதா சேப்டர்கள், வேதிக் ஸெல்ஃப் மானேஜ்மெண்ட் வாங்கிப் படிப்பாய்.


கீதை பிரச்சினைக்ளுக்குத் தீர்வினைச் சொல்லும் நூல். பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுபவர்களுக்கு கீதைப் படிப்பு மிக அவசியமானது.

வீட்டில் ஒருவயது / இரண்டு வயதுக் குழந்தைகள் இருக்கும் 33-37 வயது பருவமே மிகவும் சிறந்தது கீதை படித்து, புரிந்துகொண்டு, அதன்படி நடக்க இதுவே மிகச் சிறந்த காலம்.

உடனே எழும் தினசரிப் பிரச்சனையைத் தீர்க்க உடனிருக்கும் நல்லாசிரியன் கீதை. பகவத் கீதையை படியுங்கள் பண்போடு, அன்போடு வாழுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

(37) கருணாநிதியே நீ நூறாண்டு வாழவேண்டும்!

...
கருணாநிதியே பல்லாண்டுகளாய் நீ
குறள்தொல்காப்பிய உரை எழுதியதில்
தமிழகம் கண்ட தமிழின் தமிழானாய்!

திரா'விட' உணர்வு', தமிழ் மொழிப்பற்று என்று நீ மக்களை உசுப்பி உந்திவிட்டு, உனது இயக்கத்தின் நிரந்தர நம்பர் 2 நபர் கூட ராமையா என்ற பெயரை அன்பழகனாக்க நீ மட்டும் அண்ணாவே சொன்னதால் தியாகத்துடன் கருணாநிதியாகவே தொடர்ந்ததுடன் உன் குடும்பத்தினர்க்கு ஸ்டாலின், கலாநிதி,தயாநிதி, பேரனுக்கு உதயநிதி என்றும் உன் குடும்ப நிறுவனங்கள் அனைத்துக்கும் பார்த்துப் பார்த்து தமிழ் மொழி உணர்வை ஊட்டிடும் பெயர்களான் சன், சன்நியூஸ், சன்மீஜிக், உதயா,சூர்யா,கே.டிவி என்று பெயரிட்டதால் தானே தமிழக்த்தின் வாழைமட்டைத் தமிழன் உனக்குத் தமிழின் தமிழ் என்று புகழாரம் சூட்டினான்!

தமிழ் வியாபாரி அல்லவோ நீ! உன்னிலும் மேலான வெகுதியான தமிழிலக்கியங்களுக்கு கோனார்உரை எழுதிய அச்சகத்தாரே தமிழின் தமிழ், முத்தமிழ் பட்டங்களுக்கு முழுத்தகுதி உடையவர்கள்!

தமிழன் நெஞ்சுக்கு நீதி இதுவன்றோ!

கருணாநிதியே நீ மட்டும்
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திருக்காவிடில் தமிழகம்
விழிப்புற்று முழித்திருக்காது!

இந்த நேரத்தில் நீ டால்மியாபுரத்தினை கல்லக்குடி என்று பைந்தமிழில் பெயர் மாற்றம் செய்ய ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துச் செய்த வீரப்போராட்டம் நினைவில் ருசிக்கிறது! நிஜமான அரிதாரம் பூசிய கலைஞன் கூட இவ்வளவுக்கு ஓபன் ஸ்டேஷன் தியேட்டர் பர்பார்மன்ஸ் தந்திருக்கமுடியுமா! சோத்தாலடித்த பிண்டமான தமிழன் இதனால் தானே உன்னை கலைஞர் என்று சிலாக்கியமாய் அழைக்கிறான்!

கருணாநிதியே உனக்கு மட்டும்
அகண்ட அகவை வாய்க்காதிருப்பின் தமிழகம்
வாய்மைகளை மீட்டெடுத்திருக்காது!


உழவுத் தமிழன் உணவு சாகுபடிக்கு உற்ற தேவையான, உரிமையான காவிரி நீர் பங்கீடு, பெரியாறு நீர் பங்கீடு எனத் தமிழனின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்சினை 40ஆண்டுகளாய்த் தீர்க்கப்படாமலிருக்க ரோமாபுரி மன்னன் நீரோ மாதிரி ஐந்து முறை முதல் அமைச்சனாக பட்டம்,பரிவட்டம் சூட்டிக் கொண்ட நீ குஜராத் பைங்கிளி நமீதா ஆட்டத்தில் நயந்ததென்ன, திரிஷவின் ஆட்டத்தில் திளைத்ததென்ன! நதிநீர் பங்கீட்டிலே உன் வாய்மைதான் என்ன எனத் தெரிந்துவிட்டதே!

கருணாநிதியே உனது நெடுநாள்
வாழ்க்கையால் உணர்ந்திருக்கிறது தமிழகம்
பகுத்தறிவுப் பல்கலைக்கழகம் நீ என்பதனை!


ஈ.வெ.ரா, அண்ணாவின் பகுத்தறிவுப் பாசறைகளின் முதல் மாணவனான நீ முதிர்ந்த வயதில், கொள்கைச் சிங்கமாய், தற்(செயல்)குறியாய் மஞ்சள் துண்டணிந்து காமாலை வந்தவன் பாடிய பாமாலையாய் வலம் வருவதென்ன? பெண்களின் தாலி, பொட்டு போன்ற அடையாளங்களே அடிமைத்தளை என உனது தாய்க்கழகக் கொள்கையிருக்க.. நீரோ நீயோ உன் குடும்பப் பெண்களை ஒரு ரூபாய் அளவுக்கு குங்குமப் பொட்டுடன் வளைய வர நீ ஆவன செய்த அதி தீரம்தான் என்ன?! காட்டிய ஆதுரம் தான் என்ன என்ன?

பம்மாத்துப் பகுத்தறிவிலே பகலவனான பாசறை குரு ஈ.வெ.ரா வை மிஞ்சிய பல்கலைக்கழகம் நீ!

தொழில் நுட்ப ஊழலில் நாட்டுக்கே நீ நிகரற்ற பல்கலைக்கழகமாகத் திகழ்கிறாய்! பீகாரின் ஊழல் லாலு பாடம் படிக்கிறார் உன்னிடம். 3கிலோ கோழிக்கு 27கிலோ தீவனம் என்று கணக்கெழுதி சில கோடிகள் ஊழல் செய்ததை எண்ணி எண்ணி வெட்கப்படுகிறார் உன் சர்க்கார்தோறுமான சர்க்காரியா சாதனைகளை அறிந்தபின்பு!

கருணாநிதியே முதியவனாகி நீ
பெரிய கோவில் கட்டாமலே தமிழகம்
கண்ட ராஜராஜசோழன் ஆகிப்போனாய்!


மலைகளற்ற தஞ்சையில் இமயத்தினிறு பாறைகொணர்ந்து தரையிலே நிழல் விழாமல் கலை அதியமாய் பெரியகோவில் கட்டி வரலாற்றில் இடம்பெற்றான் சோழமாமன்னன் இராஜராஜன்.

ஆனால் தற்காலச் சோழன் நீயோ தமிழகத் திருக்கோவில்களுக்கு கைப்பிடி மண்ணைக்கூட அள்ளிப்போடாதவன்.

அரசு ஆலயங்களுக்கு நிதி உதவி செய்த நியதியை மாற்றிய ஆலயத்தினின்று நிதியை நீக்கியவன் நீ!

கருணாநிதியே அறுபதாண்டுகளாய் நீ
அரசியல் பொதுவாழ்வில் இருந்த்ததில் தமிழகம்
உணர்ந்தது சாணக்கியன் நீஎன!

2004ல் நடுவண் அரசமைய தமிழக எம்.பிக்கள் ஆதரவு இன்றியமையாததானபோது காவிரி, பெரியாறு நதிநீர் பங்கீட்டினை முனைந்து முடித்திடும் அதிகாரம் தரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சினைப் பெறாது நின்குடும்ப வளத்துக்கான தொலைதொடர்புத்துறைக்கு நின் பேரன் தயாநிதியை அமைச்சனாக்கி உன் குடும்பத் தொலைக்காட்சித் தொழில் விரிவாக்கி போட்டியாளர்களான ராஜ், விஜய், ஜெயா டிவிக்களை கட்டுப்பாட்டில் வைத்திட மன்மோகன்சிங்கை மிரட்டிப் பெற்ற நீ ஒப்பற்ற சுயநல அரசியல் சாணக்கியனே!

கருணாநிதியே பன்னிரண்டு ஐந்தாண்டுகளாய்
மக்களோடு மக்களாய் வாழ்ந்ததில் தமிழகம்
பார்த்த பொருளாதாரமேதையானாய் நீ!


அறுபதாண்டுகளுக்கு முன் ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஐந்துபேர் சாட்சிக்கையெழுத்துப் போடும் படியான பொருளாதாரத்திலிருந்த நீ சில திரைப்படங்களுக்கு கதை, வசனமெழுதியதோடு ஐந்து முறை முதல் அமைச்சனாகி சர்க்காரியா கமிஷன் கண்ட சர்க்கார் நடத்தியதில் இன்று ஆசியாவின் முதல் மூன்று கோடீஸ்வரக் குடும்பப் பட்டியலில் கேடித்தனம் பல செய்து ஜொலிக்கிறாய்!

நோபல் பரிசு பெற்ற பொருளாதாரமேதை அமெர்த்தியா சென்னை கையமர்த்திய சுயநல பொதுநிதி கையாடல் மேலாண்மை முனைவரல்லவோ கருணாநிதி நீ!

இப்படித் தமிழனை, மறத்துப் போன தமிழனை உனது நீண்ட, நெடிய வாழ்வு, தர்மத்தின் வாழ்வு தனைக் கவ்விய உனது சூது வாழ்வு பொட்டில் அடித்தமாதிரி சரித்திரத்தில் காணக்கிடைக்கும் உன் தியாக வாழ்வு பல காலத்திற்கும் இனி பம்மாத்து எது? பயன் தருவது எது? என்று பகுத்தறியும் திறனைத் தந்திருக்கிறது.

ஆகவே கருணாநிதியே நீ நூறாண்டு வாழ்வாயாக!

அன்புடன்,

ஹரிஹரன்














Monday, October 16, 2006

(36) தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்

தமிழனை இன்னும் தமிழகத்தில் மலம் அள்ளவிட்டும், சென்னை நகரிலேயே மவுண்ட் ரோடு அண்ணாசிலை அருகிலேயே பாதாள சாக்கடையில் முக்குளித்து முத்தெடுக்கவிடும் தமிழக திராவிடகட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் தமிழகத்தின் தொகுதி மேம்பாட்டு நிதிகளாக ஆண்டுக்கு பெறும் நிதிகளின் அளவினைப் பார்க்கலாம்.

எம்.பி தொகுதி மேம்பாட்டு நேரடி நிதித்திட்டம் தொகுதிக்கு ஒரு கோடி என்று நரசிம்மராவின் காங்கிரஸ் அரசால் 1992ல் ஏற்படுத்தப்பட்டது பின்பு தொகுதிக்கு 2கோடி என்று உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் 1997ல் ஏற்படுத்தப்பட்டது
ஆரம்பத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு எம்.எல்.ஏவுக்கு 35லட்சம் தரப்பட்டது
பின்பு இரண்டாண்டுகளில் 1999ல் 77 லட்சம் என உயர்த்தப்பட்டது.

இதுவரை தமிழகத்தின் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ + எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி விபரங்களைத் தோராயமாகப் பார்க்கலாம்:

1992-1996 ஆண்டு வரையிலான நான்காண்டு எம்.பி நிதி = 39 x 1 x 4 = 156 கோடி

1997 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 35 = 81.90 கோடி
1997 ஆண்டு எம்.பி நிதி 39 X 2 = 78 கோடி

1998 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 35 = 81.90 கோடி
1998 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

1999 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 77 = 180.18கோடி
1999 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

2000 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 77 = 180.18கோடி
2000 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

2001ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 77 = 180.18கோடி
2001ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

1997-2001 ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த எம்.எல்.ஏ நிதி = 704.34 கோடி
1997-2001 ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த எம்.பி நிதி = 390 கோடி
97- 01 ஐந்து ஆண்டு மொத்த எம்.எல்.ஏ+ எம்.பி நிதி= 1094.34 கோடி


2002ல் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 82லட்சமாக உயர்த்தப்பட்டது.

2002ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2002 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

2003ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2003 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

2004ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2004 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

2005ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2005 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி

02-05 நான்கு ஆண்டுகளுக்கான மொத்த எம்.எல்.ஏ நிதி = 767.52 கோடி
02-05 நான்கு ஆண்டுகளுக்கான மொத்த எம்.பி நிதி = 304.2 கோடி
02- 05 ஆண்டு மொத்த எம்.எல்.ஏ+ எம்.பி நிதி= 1071.72 கோடி

ஆக 1992 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில்
தமிழகத்தின் எம்பிக்களுக்குத் தரப்பட்ட நிதி= 850.2கோடி

1997 ஆண்டு முதல் 2005 வரையிலான காலத்தில் தமிழகத்தின் எம்.எல்.ஏக்களுக்கு தரப்பட்ட நிதி = 1471.86 கோடி

2300கோடிகளை தொகுதி வளர்ச்சிக்காக தமிழகத்து எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் வாங்கிப் பயன்படுத்திக்கட்டியவை மொத்தத்தில் 300 பேருந்து நிறுத்த நிழற்குடைகளும் கல்வர்ட் எனப்படும் சிறுபாலங்களும்தான். உபயோகமற்ற கட்சி சார் அலங்காரவளைவுகள் அடுத்த சாதனை.

திட்ட நிதி பகிற்வுப் பட்டியல்

கழகத்தலைவர்க்கு ....%

  1. முதலமைச்சருக்கு ...%
  2. கழக-இயக்கநிதி...%
  3. துறை அமைச்சருக்கு ...%
  4. எம்.எல்.ஏ ....%
  5. எம்.பி ....%
  6. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ...%
  7. மாவட்டம் ...%
  8. வட்டம் ...%
  9. தொண்டர் ....பிரியாணி + பேட்டாக்காசு
  10. தொகுதி வளர்ச்சித் திட்டம் = நிதிப் பற்றாக்குறை அடுத்த நிதியாண்டு கவனிக்கப்படும் என்ற வாக்குறுதி!

பொதுமக்கள்.... தலையில் பூசிக்கொள்ள சந்தனம்

ஆக எம்.எல்.ஏவாக இருந்தால் பெட்டி கேஷ் ஆண்டுக்கு ஒரு கோடி தொகுதி வளர்ச்சி நிதி புரளும். எம்.பி எனில் 2 கோடி!

ஐந்தாண்டுக்கு கூட்டணியோடு அரசை ஒப்பேத்தினால் ஐந்து கோடி பெட்டி கேஷ் உத்திரவாதம்! எம்.பிக்கு 10 கோடி!

இது போக தொகுதியில் இன்டர்செக்ட் ஆகிற எந்த திட்டத்திலும் % நெகோஷியேட் செய்து கறக்கும் வாய்ப்பு.

அரசு காண்ட்ராக்டர்களாக தம் கழக கைத்தடிகளை வட்டம், மாவட்டம் என்போரை நியமித்து போடாத ரோடு, வெட்டாத கேணி என்று அதிலும் காசு பார்க்கலாம்.

தமிழன் மலம் அள்ளுகிறான், சாக்கடையில் முத்துக்குளிக்கிறான்னு செய்திக்கு தமிழக எம்.எல்.ஏ /எம்.பி பதில் என்ன.... ம்ம்ம்...

பதில் 1: பாப்பான்கள் தான் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விடு பாப்பானை அடி!

பதில் 2: ஆரிய வந்தேறிகளின் வருணசாஸ்திரம். பாப்பானை பீயள்ளவிடவேண்டும், சாக்கடையில் முக்குளிக்க விடவேணும்!

பதில். 3 பார்ப்பன ஏடுகளின் புரட்டுச் செய்தி. இந்த ஏழை சூத்திரன் மீது விஷம் கக்குகின்றன!

பதில் 4 : பாப்பான்களின் ஆரிய மாயையில் சிக்கிய ஆரிய அடிவருடிகளின் திட்டமிட்ட சதி! கோயபல்ஸ் அறிக்கை!

பதில் 5: (மனதுக்குள் ) அவன் தலைவிதி அது! அவனில்லை எனில் ...நிதி, ...நிதி, ...நிதி.... நிதியாக் களவாண்டு சேர்த்து ஆசியாவின்...உலகின் முதல் நிதிகூடிய குடும்பம்/கூட்டம் என்று எப்படி ஆவது!

தமிழனின் நலனுக்கான வளர்ச்சித்திட்டத்திற்கான எல்லா நிதியையும் இப்படிக் கூட்டுக்களவானிகளாகக் கொள்ளையடித்தால்..

தமிழன் எப்படி வளர்வது?

தமிழ்ச்சாதி எப்படி சாதிப்பது?

தமிழ்ச்சமுதாயம் எப்படி உலகிலேயே முன்னேறிய சமுதாயமாவது?

என்று கேள்விகள் எழுவது நியாயமே.

அரசியல் திரா'விட"க் கட்சித் தலைவர்களின் பதில்:

நாங்கள் அக்மார்க் திராவிடர்கள் தானே, தீந்தமிழ், பைந்தமிழை தினமும் பேசுபவர்கள்தானே, செம்மொழியாம் தனித்தமிழில் ஒரு பழமொழி உண்டு " ஒருபானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்" என்பதை இக்கணத்தில் நினவு கூர்வது அவசியம்!

அடியேன் தமிழிந்தமிழான எனது முன்னேற்றம் தமிழின் முன்னேற்றம்!எனது நிதி உயர்வு நிலை உலகத் தமிழ்ச் சாதியின் நிதிகூடியநிலை!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, October 15, 2006

(35) முரசொலிப்பு : சென்னையில் "அர'வழியில் தேர்தல்!

சென்னையில் 13-10-2006 வெள்ளியன்று 'அர"வழியில் ஒரிஜினல் அக்மார்க் அரசியல் திரா"விட' க் கழகக் கட்சியின் ஒப்பெற்ற சாதனையாக சென்னை மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது.

உடன்பிறப்பே, சென்ற ஆட்சியில் அம்மையாரால் சிறையிலிடப்பட்ட நமது அரசியல் திரா'விட' ப் பெத்தரின் இயக்கக் கொள்கைகளில் பற்றுக்கொண்ட பெரியார், அண்ணா பாசறைகளில் கடும் பயிற்சிபெற்ற சமூகத்தியாகிகள், சமூகத் தியாகிகளான தம்பிகள் மாட்டு' மனோகர், "பங்க்' பரமன், 'தளபதி' தயா, 'பாட்டில்' பாபு, 'சைக்கிள் செயின்' சையது, 'ஜெலட்டின்" ஜெரோம், 'பொருள்' பாண்டி, "கடா"கபிலன் ஆகியோர் அடங்கிய சமூகநீதிக்காவலர்கள் குழு பார்வையாளர்களாக அரம், கொடுவாள், பட்டாக்கத்திகளோடு டாடாசுமோ போன்ற சிற்றுந்துகளில் தெருவெங்கும் சுற்றித் திரிந்து சென்னை மாநகராட்சி தேர்தல் அர நெறியோடு சீரிய முறையில் நடத்திக்காட்டியுள்ளனர்.

பார்ப்பன அம்மையாரால் சிறையிலடைக்கப்பட்ட இந்த அக்மார்க் திராவிடத் தம்பிகளைச் சரியான தக்க சமயத்தில் 'பரோலிலாவது" விடுவிப்பது 83வயதான இந்த அண்ணனின் தலையாய அரசியல் 'திரா'விடக் கடமையன்றோ!

ஆனால் இங்கு பார்ப்பன அச்சு, ஊடக முதலாளிகளான ஆரியப்பாம்புகளின் விஷம நாளேடுகளான தினமலர், தினமணி போன்ற நாளேடுகளில் அய்யோ...அய்யய்யோ... கொல்றாங்களே..., வன்முறை, ஜனநாயகக் கொலை என்று மாய்மால ஒப்பாரிவைப்பதன் நோக்கம் இந்த ஏழையான 83வயதான, 15தொலைக்காட்சி சான்ல்கள், 10 அச்சுப்பதிப்பு வார, நாளேட்டு நிறுவனங்கள் கொண்ட நான் ஒரு சூத்திரன் என்பதாலேயே இந்த பார்ப்பன ஏடுகள் முகாரி, ஒப்பாரி வைக்கின்றன எனும் பேருண்மையை என்மாதிரியே நீயும் அறிந்திருப்பாய்.

தமிழ் நண்டு போல் தமிழர் தந்தை நிறுவிய அவர் காலத்தில் நடுநிலைமையோடு செய்தி வெளியிட்ட தினமும்தந்தி, மாலையில்முரசு, மாலையில்மலர் ஏடுகள் பார்ப்பன அடிவருடியாய் இவ்விஷயத்தில் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளதால் அக்மார்க் திராவிடனான, தமிழுணர்வுள்ள உடன் பிறப்பே நீ முழுமையான, உண்மையான செய்திகளுக்கு இந்த ஆரிய, மற்றும் ஆரிய அடிவருடிச் செய்திகளை நம்பிவிடக்கூடாது.

உண்மையான , கலப்பற்ற அரசியல் திரா'விட'ப் பெத்தடின் செய்'தீ'களுக்கு முழுக்க கழக நாட்டு நடப்புகளுக்கு என்றும் முரசொலிப்பை வாங்கிப் படி.

"நச்சு" என்ற செய்'தீ'க்ளுக்கு தமிழர்முரசு நாளேட்டினை வாங்கிப் படி.

தித்திக்கும் கல(ழ)க ஆட்சி சாதனைச் செய்திகள் தினசரிகரனி(ன்)ல் வரும்-படி!

தமிழுணர்வோடு 'பேஸ்ட் கண்ணா பேஸ்ட்" என்று வாராவாரம் வரும்
மங்கலகுங்குமத்தினை படித்தால் மட்டுமே வரும் கும்மாளம், குதூகலம்!

சத்தியமாய்ச் சொல்கிறேன் சூரியச்சானல் செய்திகளில் மட்டுமே சடாரென்று உடனுக்குடன் வரும் நான் "எழுதிய" செய்திகள்! ..நீ விரும்பும் செய்திகள்!

சமூக அக்கறையில் இயக்கத்தின் இளைய தம்பிகள் திருடர்கள்=இந்துக்கள் பண்டிகையாம் தீபாவளிக்குள்ளும், மனதிற்கும் உடலுக்கும் நன்மை பயத்து முடிவுற்று நமது நல்லிணக்கம் கூறி வரும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பே தமிழனை இன்றையதினம் நிமிர விடாமல் செய்யும் சிக்குன்-குனியா பரப்பும் கொசுக்களை தெருக்களிலே விரட்டி வெட்டி வீழ்த்தக் கையில் பட்டாக் கத்திகளை ஏந்தி ரத்தம் சிந்த வைத்ததை, வந்தேறி பார்ப்பன நாளேடுகளும்
ஆரிய மாயை, பார்ப்பன அடிவருடி ஏடுகளும் மாநகராட்சித் தேர்தல் வன்முறை, வாளெடுத்துக் கொலைவெறியாட்டம் என திரிப்பது... உடன் பிறப்பே உண்மையற்றது என உணர்வாய்!

சென்னையில் நடந்தது "அர'வழியிலான (அரம்= வாள்/கத்தி)க்லகத் தேர்தல்!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, October 11, 2006

(34) வேதங்கள் மூடத்தனமானதா? அறிவியலா?

பகுத்தறிவு என்ற ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு அரசியல் திரா'விட'ப் பெத்தடின் ஏற்றும் கூட்டம் நமது பாரம்பர்யமான வேதங்கள் என்றாலே வேப்பங்காய், மூட நம்பிக்கைகளும் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களும் மட்டுமே என்று பிழைப்புவாத ஜல்லியடிப்பு தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

நமது பாரம்பர்ய அறிவு, வேதங்கள் பற்றி ஒரு flow chart பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுமையோடு பிரிவுகளைப் படிக்கவேண்டுகிறேன். முழுமையாகப் படித்தல் அவசியம்.

வித்யா (Knowledge) - பரந்த அறிவு

பரந்த இந்த அறிவு இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன்.
1. ஸ்ருதி (Sruthi) - மரணமற்ற கோட்பாடுகள் - தியரி
2. ஸ்மிருதி(Smirtis) - மரணமற்ற கோட்பாடுகளை உபயோகத்தில் எடுத்துவரும் ப்ராக்டிகல்ஸ்

இதில் ஸ்ருதி (Sruthi) - மரணமற்ற கொள்கைகள் - Eternal Principles என்ற தியரியில் நான்கு வேதங்கள் வருகின்றன.

வேதங்கள் இரு பெரும் பிரிவாக்கப்பட்டுள்ளன:

1.1கர்ம காண்டம் -தினசரி செயலாக்கம் - Actions to Implement
1.2.ஞான காண்டம் - Design,Conceptualization, BrainStorming

கர்ம காண்டம் மேலும் இரு உட்பிரிவுகளாக

1.1.1சம்ஹிதாஸ்(SAMHITAS) -Mantras- மந்திரங்கள்
1.1.2ப்ரம்மணாஸ்(Brahmanas)-Ritualistic -வழிபாட்டுமுறைகள்

ஞான காண்டம் இரு உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளன.

1.2.1 Aaranyakaas(ஆரண்யகாஸ்)-நெறிநடத்தல்-Contemplatives
1.2.2 Vedanta (வேதாந்தம்)வேதங்களின் இறுதிப்பகுதி-உபநிடதங்கள்-தத்துவங்கள்

இனி most interesting பகுதி as ever படித்ததை / கற்றதைச் செயல்படுத்தும் ப்ராக்டிகல்ஸ் பகுதியான ஸ்மிருதி (Smiritis).

ஸ்மிருதி ஆறுவகைப் படுத்தப்படுகிறது.

2.1 உபவேதங்கள் (Upavedas)
2.2 வேத அங்கங்கள்-Vedaangaas
2.3 வேத உப-அங்கங்கள்-Veda-upa angaas
2.4 தர்மசாஸ்த்திரம்-Dharma Saastras
2.5 புராணங்கள்-Puraanas
2.6 இதிகாசங்கள்-Itihaasas

இதில் உப வேதங்கள் நான்கு வகைப்படுத்தப் படுகின்றன.

2.1.1 ஆயுர்வேதம்
மருத்துவம் & வாழ்வுசார் அறிவியல் பற்றியது- Medicine & Science of Life

2.1.2 தனுர்வேதம்
போர் மற்றும் போர்த்தளவாடம் பற்றியது- Science of Warfare and defence

2.1.3 காந்தர்வ வேதம்
இசை, கலைகள் , இசைக்கருவிகள் பற்றிய அறிவியல் -Science of Music and Arts

2.1.4 ஸ்தபதி சாஸ்திரம்
கட்டிடம், சிற்பம், இயந்திரங்கள் பற்றிய அறிவியல் -Science of Construction & mechanics.

ஸ்தபதி சாஸ்திரமான கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்றவை கோவில்கள் என்ற அளவிற்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டுவிட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய டயமண்ட் கட்டிங் டூல்ஸ்களுக்கு இணையான கருவிகளோடு கிரானைட் கற்களைக் குடைந்து இமயம் முதல் குமரி வரை பல்வேறு பிரம்மாண்ட ஆலயங்கள், கோவில்கள், பிரத்யேக நாட்களில் ஒளி சந்நிதியில் விழுகின்ற துல்லியத்துடன் கட்டுமானத்துறையில் வேதங்களின் வழியிலான அறிவியல் பிரகாசித்தது.

ஆயுர்வேதம் தீராத நோய்களைத் தீர்த்துவைத்தது. பயோ மெடிசின், பக்கவிளைவுகளற்ற வைத்தியம் சாத்தியமாகியிருந்தது வேதங்கள் சார்ந்த மருத்துவ அறிவியலால். இன்று க்ரானிக் அல்சருக்கு அலோபதி ஆங்கில மருந்து எடுத்தால் 6மாதம் கழித்து கண்ணுக்கு குவி/குழி லென்ஸ் ப்ரேம்லெஸ்ஸாகவோ, கான்டாக்ட் லென்ஸாகவோ அணிவிக்க வேண்டியதில்லாமல் இருக்க முடிந்தது.

தனுர் வேதத்தில் போர்க்கருவிகள், போர்முறைகள், போர்த்தளவாடங்கள், ராக்கட்டுகள், பல்வகை விமானங்கள், கெப்பாசிட்டி அட்ஜஸ்டிங் விமானங்கள், ஏவுகணைகள் என டிபன்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்டேஷனுக்கு இதிலே நம்ம ISRO, DRDO, VSSC, இவைகள் இன்னும் இன்ஸ்பயர் ஆகி சாதிக்க ஏராளமான கான்ஸப்ட்கள் இன்னுமிருக்கிறது.

காந்தர்வ வேதத்தில் இசை, கலைகள், இசைக்கருவிகள் தயாரிப்பு என்று ஏகப்பட்ட விஷயம் பயன்பாட்டிற்கு இருக்கிறது.

வேதங்கள் டெக்னாலஜி தன்னிறைவுக்கு அறிவியல் பூர்வமாக மானிட அவசியத்திற்கான எல்லாவற்றுக்கும் அறிவியல் பூர்வமாக தீர்வுகளைத் தந்திருக்கின்றது.

வெறுமனே பகுத்தறிவு என்று சும்மா பகுத்தறிவு, சுயமரியாதைச் சுனாமியாய்ச் சுற்றிச் சுற்றி ஆரிய மாயை, வேதம் என்பதே மூடத்தனம் என்பது தன் பிழைப்புக்காக அரசியல் திரா'விட'ப் பெத்தடின் ஏற்றிவிட்டுத் திரிவது பகுத்தறிவு அல்ல... ஆற்றல் குன்றிக் குந்திய அறிவாகும்!

பதிவின் நீளம் கருதி இன்னொரு பாகத்தில் இதர வேதப் பிரிவுகளை பார்க்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, October 09, 2006

(33) பகவத் கீதை சூத்திரனுக்கா? பிராமணனுக்கா? யாருக்காக?

அரசியல் திரா'விடப்'ப் பெத்தடினாக ஊசியில் அடிக்கடி ஏற்றி தமிழர்களிடத்தில் பகவத் கீதையில் சொல்லப் பட்ட கருத்துக்கள் சூத்திரனான(!?) திராவிடனுக்கில்லை ஆரிய வந்தேறி பார்ப்பனக்கூட்டம் தமிழன் மேல் திணித்தது என்று ஜல்லியடித்து நடுநடுவே அவர்களுக்கு வசதியாக ஒன்றிரண்டு வரிகளை தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது.


எந்த ஒரு நூலைப் படிக்க ஆரம்பிக்கும் முன்பும் முன்னுரையைப் படிக்கவேண்டும். முன்னுரையில் அந்த நூலில் சொல்லப்பட்ட விஷயங்கள், டார்கட் ஆடியன்ஸ் பற்றி கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும்.

பகவத் கீதையின் 18 கீதாச்சாரத்திற்குள் போவதற்கு முன்பாக ஆரம்பத்திலேயே முன்னுரையான தியான மந்திரங்களிலேயே வியாசர் மிகத் தெளிவாக நான்காவது மந்திரத்திலேயே சொல்லியிருக்கிறார் கீதை யாருக்கானது என்று.

Sarvo-panisado gaavo dogdhaa gopaala-nandanah
சர்வோபனிஷதோ காவோ தொக்தா கோபால நந்தனக

Paartho vatsah suddhirboktha dugdham gitaamrutam mahat
பார்த்த்தோ வத்ஸ சுதிர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்

வரிக்கு வரி அருஞ்சொற்ப்பொருள்

Sarvo-upnanishad - அனைத்து உபநிடதங்கள்
Gaavo - பசுக்கள்
Doktha - பால்கறப்போன்
Gopala-Nandanah - பகவான் கிருஷ்ணன்
Paartho - பார்த்தன்
Vatsah - கன்றுக்குட்டி
Suddhir - தூய்மையான புத்தியுடைய மக்கள்
Boktha - கொண்டாடி மகிழ்வோர்
Dugdham - பால்
Gitaamrutham - அமிர்தமாகிய பகவத் கீதை
Mahat - உயர்வான


சரி இதன் முழுமையான விளக்கப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.


"பார்த்தன் என்ற கன்றுக்குட்டியினைக் கொண்டு தூண்டப்பட்டு அனைத்து உபநிஷத்துகள் என்ற பசுக்களிடம் கோபால நந்தனாகிய கிருஷ்ணரால் கறக்கப்பட்ட உயர்வான பகவத் கீதை என்ற அமிர்தத்துக்கு ஒப்பான பாலானது தூய்மையான புத்தியுடைய மக்கள் அருந்திக் கொண்டாடி மகிழ்வதற்கு ஆனது"

ஆக பகவத்கீதை படிக்க வேண்டுமெனில் பிராமணனாக, ஷத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக இருக்க வேண்டும் என்று சொல்லப் படவில்லை.

"பகவத் கீதை படிக்க ஒரே Pre-requisitie தகுதியாக அவசியப்படுவது, தூய்மையான புத்தி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்"

மேலும் வியாசர் இங்கே பகவத் கீதையைப் பாலுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பானது. பால் மட்டுமே குழந்தை, பாலகன், இளைஞன், கிரஹஸ்தன், வயதானவர் என அனைத்து வயதினருக்கும் உரிய உணவு.

சொற்பமான வெகு சிலருக்கு மட்டுமே பாலை செரிக்க முடியாது, பால் ஒத்துக் கொள்ளாது என்ற குறைபாடுகள் இருக்க முடியும். இது தனிநபரின் தகுதிக் குறைவே அன்றி பாலின் குறையாகாது.

ஆகவே பகவத் கீதையை ஆரோக்கியமான புத்தியுள்ள அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

இங்கே அரசியல் திராவிடப் பெத்தடின் தாக்கத்தில் I have gone through Bhagavat Gita many times ... nothing new or useful என்பவர்களுக்குச் சொல்ல விழைவது " Let Bhagavat Gita go through you once... everything will be new and meaningful to you என்பதுதான்!

பகவத் கீதை மாதிரி எவர் மாடர்ன் மானேஜ்மெண்ட் டூல் ஏதுவும் கிடையாது. Be it self management (or ) time management ( or) crisis management (or) workshop on optimizing performance at work பகவான் கிருஷ்ணர் தான் உலகின் Fore most Most Effective மானேஜ்மெண்ட் குரு!

பகவத் கீதை நமது இந்தியப் பாரம்பர்யத்தின் ஒப்பற்ற Manual - gifted to the man kind.

மனுதர்மம் என்றாலே மட்டையடிக்கும் அரசியல் திரா'விட"ப்பெத்த்டின் உபயோகிப்போர் கவனத்திற்கு:

உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழ்ந்த இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து ஏற்படுத்திய Manu-al என்ற நெறிப்படுத்தி/வழிகாட்டும் புத்தகத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையே இந்திய மனு நெறியினின்று வந்ததே!

அன்புடன்,

ஹரிஹரன்