Thursday, August 14, 2008

(193) பாரதத்தின் 62வது சுதந்திரதினம்

நாளை ஆகஸ்ட் 15 பாரதத்தின் 62வது சுதந்திரதினம்.

ஆகஸ்டு 15ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து அடிமைப்பட்டதிலிருந்து கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடுவது.

இன்றுவரை காஷ்மீரில் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த விதத்திலும் உதவிடாமல், இந்திய GDPல் எந்த பங்களிப்பும் தராத வெட்கம் ஏதும் இன்றி, பச்சை பாகிஸ்தானியக் கொடியேந்தி பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடும் நச்சுப்பிரிவினைவாதிகளிடம் இருந்து எப்போது பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்கும்??

இப்படிப்பட்ட தேசவிரோத பச்சைப் பாகிஸ்தானியக் கொடிபிடிக்கும் PDPn மெஹ்பூபா முப்திகள்,NCதேசிய மாநாட்டு அப்துல்லாக்கள், Hurriyat மிர்வைஸ் பாருக், போன்ற பச்சையான காஷ்மீர நச்சுப்பிரிவினைவாதிகளிடம் நாய்போல் வாலைக்குழைத்துக்கொண்டு "மதச்சார்பின்மை' செக்குலரிஸம் பேசி பாரத மக்களை 1947ல் இருந்து கடந்த 62 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 55ஆண்டுகள் மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்த இன்றும் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாரதத்திற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்??

62ஆண்டுகள் ஆனபோதும் மக்களை மேம்படுத்தாத ஜாதிவாரி ஓட்டு அரசியல் நடத்தி நாறடிக்கும் கீழ்த்தரமான அரசியல் வியாதிகளிடம் இருந்து பாரதத்திற்கு என்று மெய்யான சுதந்திரம் கிடைக்கும்??

படித்து, உழைத்து மேம்படுவதில் கவனத்தைச் சிதறவிட்டுவிடு மும்பை, கோவை, டில்லி, பெங்களூர்,ஆமதாபாத்,சூரத் என்று பாரததேசமெங்கும் வெடிகுண்டுகள் வைத்து பொதுமக்களைச் சிதறடிக்கும் நற்பணி செய்யும் அமைதிப்படையினரிடம் இருந்து பாரதத்திற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்??

பாரதத்தின் உண்மை வரலாற்றைச் சிலுவையில் அறைந்துவிட்டு, பொய்யான இட்டுக்கதைகளை வெள்ளைக்காரதேசங்களில் இருந்து வந்துவிழும் பணத்தால் புனிததோமையாரின் கிறித்துவமே சைவம், வைணவம், சமணம், புத்தம் என்றும் வேத உபநிஷத்துகளாக மருவின என்று புனிதமற்ற செயலைச் செய்யும் மதமாற்ற, வரலாற்று திரிப்புகள், பண்பாடு அழிப்பு எனும் பன்முக கொடூரத்தை நடைமுறைப்படுத்தும் சர்ச்சுகளின் கிறித்துவஅரசியல் வெறியில் இருந்து பாரதத்திற்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும்??

வெள்ளைக்காரர்களின் பணபலத்துடன், அரசியல் அதிகார வெறிபிடித்த கிறித்துவ சர்ச்சுகளின் பாரத பண்பாட்டு அழிப்பு, இனபேதம் ஏற்படுத்தும் தொடர்ந்த செய்கைகளால் சிதைந்துபோன சமூகமாய் இன்னொரு உகாண்டா, ருவாண்டா என்று கிறித்துவ சர்ச்சுகளின் பிரிவினையில் சிதைந்துபோன இன்னொரு ஆப்பிரிக்காவாவதில் இருந்து பாரததேசத்திற்கு சுதந்திரம் எப்படி & எப்போது கிடைக்கும்??

வெள்ளையனிடம் போராடிப் பெற்ற பாரதத்தின் சுதந்திரத்தை வெள்ளையனே இருந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற பகுத்தறிவுக் கூட்டத்தினரிடம் தந்து இன்று இந்த பகுத்தறிவுக் கூட்டத்தினர் ஆட்சி, அதிகாரத்தில் தொடர கிறித்துவ மதவெறி சர்ச்சுகளுடன் இணைந்து வெள்ளைக்காரர்களின் பணபலத்துடன் பாரதப்பண்பாட்டை மறுத்தும், திரித்தும் கிறித்துவமே புனிததோமையார் போன்றவர்களால் நான்மறை வேதங்கள், திருக்குறள், பகவத்கீதை, நாலாயிரதிவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற செல்வங்களை தந்தருளியது என்பதை நிறுவும்விதமாக நவீன பாரத வரலாற்றுச் சிதைப்பை 100கோடி செலவில் திரைப்படமாக புனிததோமையார் பற்றி எடுக்க பாரதத்தில் தமிழகம் இடம்கொடுக்கும், பாரதப்பண்பாட்டின் சுயம் அறியாத "பகுத்தறிவு"மயக்கத்தில் இருந்து பாரத மக்கள் சுதந்திரம் பெறுவது எப்போது??

இனிவரும் நாட்களில் பாரதம் அரசியல் போலித்தனங்களில் இருந்து விழிப்படையவேண்டும்...சுதந்திரம் பெறவேண்டும்!!

இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம், என்கிற அனைத்து அரசியல் இலவசங்களில் இருந்து மக்கள் சுதந்திரம் பெற்று சுயத்தைப் பற்றி சிந்தித்து மானம் மிகுந்து மேம்படவேண்டும்!!

அந்தமான் கொடூர சிறைச்சாலைகளில் நமது பாட்டன்கள் கடுமையான உடல், உள்ளச்சிரமங்கள் பலவற்றுக்கு உள்ளாகி, ரத்தம்சிந்தி வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் இன்றைக்கு இலவசங்கள் அரசியல், போலி மதசார்பின்மை அரசியல், படிப்பு-வேலை என அனைத்திலும் ஜாதி அரசியல், சர்ச்சுகளின் வரலாற்றுத் திரிப்பு அரசியல் என்றும் எங்கும் எதிலும் லஞ்சம், ஊழல் என்று உண்மையான சுதந்திரம் அடைந்த பலனை பாரததேசமும் அதன் பல சமூகங்களும் முழுமையாக மேம்படவிடாமல் செய்திருக்கிறது.

இன்று படித்த பலகோடி பாரத மக்களால், அரசியல்வியாதிகளால் ஒழுங்காய்ப் பேணப்படாத பாரதத்தின் சுதந்திரத்தால் விளையும் கேடுகள் வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் பாரதம் இருந்தபோது விளைந்த கேட்டினை விடவும் பல மடங்கு சேதத்தை பாரதத்துக்கு ஏற்படுத்தும்.

பாரதமெங்கும் எதிலும் நேர்மை, ஒழுக்கம், தன்மானம், பண்பாடு இவை அனைத்தையும் அழிக்கும் அக்கறையின்மை எனும் புற்றுநோயை வளர்த்த்தெடுத்துப்பதற்காகவா 62 ஆண்டுகள் முன்பு சுதந்திரம் பெற்றோம்??

நாளைக்கு ஆகஸ்ட் 15, பாரதத்தின் சுதந்திரநாள். சிகரெட்,மதுபானம் குடித்தும், கேடுகெட்ட டிவிமுன்பு உட்கார்ந்து நடிகைகளின் அங்கதரிசனம் செய்து வீணாக்காமல், தனியாக உட்கார்ந்து ஆத்மதரிசனம் செய்து பாரதத்தின் மீது அக்கறை கொண்ட பொறுப்பான நபராக இனியாவது நம் பாட்டன்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை உருப்படியாகப் பயன்படுத்த சூளுரைத்து அதன்படியே செயல்பட்டு வெற்றியடைய வேண்டுகிறேன்!

அனைவருக்கும் 62வது பாரத சுதந்திரதின வாழ்த்துக்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

44429

டெஸ்ட் மெசேஜ்!

கால்கரி சிவா said...

"நாளைக்கு ஆகஸ்ட் 15, பாரதத்தின் சுதந்திரநாள். சிகரெட்,மதுபானம் குடித்தும், கேடுகெட்ட டிவிமுன்பு உட்கார்ந்து நடிகைகளின் அங்கதரிசனம் செய்து வீணாக்காமல், தனியாக உட்கார்ந்து ஆத்மதரிசனம் செய்து பாரதத்தின் மீது அக்கறை கொண்ட பொறுப்பான நபராக இனியாவது நம் பாட்டன்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை உருப்படியாகப் பயன்படுத்த சூளுரைத்து அதன்படியே செயல்பட்டு வெற்றியடைய வேண்டுகிறேன்!"


உண்மையான வார்த்தைகள்.

சுதந்திரத்தை பேணிக் காப்போம்.

வாழ்த்துக்கள் மஹேஷ்

Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்