Thursday, August 07, 2014

Allow Yourself to Evolve Else Revolve!

 

GRACE is vital for a Human to PROGRESS purposefully in the very Janma.

GRACE of GOD, GRACE of a Guru enhances life showing right direction and giving opportunities to Evolve utilizing Human format.

Now while relaxing when I comfortably look back my past, I realize How God has been protecting me all along. If only GOD has GRANTED me all my desires I had in my 20's, for sure by Now My life would have become so BARREN and THORNY!

GRACE of the LORD is all encompassing. HE has been giving me what I deserve to drive me on the right path to evolve further purposefully using this human form.

Grace of Guru is so very enticing, like my Gurudev Swami Chinmayananda through his teaching, vide his books & talks wakes me to pick the right set of values to walk the path of Shreyas to Evolve utilizing this very human format.

100years of GuruDev Swami Chinmayanandaji's celebrations in Chennai offers myself a great opportunity to listen to deatailed lectures on all the 18 chapters of Bagavad Gita by Swami Mitrananda delivered to the seekers in one Bagavad Gita chapter Per month mode.

If I do not allow myself to cleanse & refine my mind to EVOLVE to live & experience the higher realms utilizing this very Human Janma, then with my IGNORANCE, for sure I will be REVOLVING the vicious Birth-Death cycle un-intelligently!

Think for a while. In a day human mind entertains upto 60,000 thoughts! Wasteful thinking, Wasteful Talking, Wasteful Actions with No clarity, No right direction, falling prey to the wrong projections of my own mind coloured and flavoured by "KamaKrodhaMohaLobhaMadhaMatsarya"

Freeing myself from these wasteful miserable pattern of purposeless life style is the first step to Evolve.

Shivoham! Shivoham!

Wednesday, August 20, 2008

(195) மிடில்கிளாஸ் மாதவ-மாதவிகள் அரசியல் கட்சிகளிடம் இனி கேட்க வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள்!

இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலத் தேர்தல்களில் மிக அதிகமாக பதிவாகும் வாக்குப்பதிவு 65% சதவீதமே!

தேர்தல்களால், மாறும் அரசுகளினால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவுக்கு பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்கள் அவர்களது ஆற்றலுடனான பங்களிப்பை அரசியல்கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல்வாதிகளை 'ஸ்பான்சர்ஷிப்" செய்வதன் மூலமாக சாதித்துக்கொள்கிறார்கள்.

பணமில்லாத ஏழைகள் தங்கள் ஓட்டுக்கு இவ்வளவு என்று ஓட்டு விற்பனை, இலவச பிரியாணி, இலவச டிவி, இலவச நிலம், இலவச அடுப்பு, இலவச சேலை, வேட்டி, மலிவு விலை ரேஷன் அரிசி இப்படி பல இலவசங்களை வாக்குறுதிகளாகப் பெற்று பெருவாழ்வு வாழாவிட்டாலும் டாஸ்மாக்கில் குஷியாகி இருக்கும் சொற்ப கைப்பொருளையும் இழந்து விடுகிறார்கள்! தம் ஓட்டை பிரியாணிக்கும் இன்ன இலவசங்களுக்கும் ஈடாக்கி வாழ்வில் ஈடேற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

வாக்காளர் மிஸ்டர் மிடில்கிளாஸ் மாதவன்கள். இவர்கள் இருப்பதிலேயே தனியான தினுசு. இவர்கள் பொதுவாக இலவசங்களை வாங்கமாட்டார்கள், தேர்தல் மற்றும் அரசியல் கட்சி, அரசுகளின் இலவசங்களை வாங்குவது அவமானம்-கௌரவக்குறைவாக நினைப்பவர்கள். அதுக்குன்னு அரசியல் கட்சி வேட்பாளர்களை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர்களும் அல்ல இந்த மிடில்கிளாஸ் மாதவன்கள்.


இந்தியாவில் தேர்தல் வாக்கு வங்கியில் மிடில்கிளாஸ் மாதவன்கள் கிட்டத்தட்ட 50%
இந்தியாவில் செயல்படும் எந்த அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ , வேட்பாளர்களோ என எவரும் பகைத்துக்கொண்டுவிட முடியாத தனிபெரும்பான்மையான தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையுடைய பிரிவினர் இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள்.

யாரெல்லாம் மிடில்கிளாஸ் மாதவ-மாதவிகள் பிரிவில் வருவார்கள்??

சென்னையின் மாநகரப் பேருந்தில் Mசர்வீஸ் பஸ்டிக்கட் வாங்கிப் பயணம் செய்யும் பொருளாதார வசதி படைத்த நபரில் இருந்து ஆரம்பித்து, உழைத்துச் சம்பாதித்த காசிலும், பாதி வங்கி லோனிலுமாக வாங்கிய Maruti Swift-VDI மாடலில் தினசரியாக அலுவலகத்துக்கு செல்ஃப் டிரைவிங் செய்யும் சாப்ட்வேர் ஆசாமிவரை நீளும் பெரிய சோஸியல் எகனாமிக் ஸ்பெக்ட்ரம் இந்த மிடில்கிளாஸ் வர்க்கம். இந்த பொருளாதாரப் பட்டைக்குள் (Economic band) வருவோர் அனைவரும் மிடில்கிளாஸ் மாதவன்-மாதவிகளே!
(சும்மா ரைமிங்குக்காக மாதவன்-மாதவின்னு... அதெப்படி மாதவின்னு சொல்லலாம்னு மதுரையை எரிச்ச கண்ணகிகளா மாறி மானிட்டரை எரிக்குமளவுக்குப் பார்க்க வேண்டாம்)

இந்த மிடில்கிளாஸ் ஆசாமிகளால்தான் நம் இந்திய தேசத்தின் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது!

மிடில்கிளாஸ் மாதவன்கள் தான் இந்திய தேசத்தின் மத்திய, மாநில அரசுகள், அதன் அமைச்சர்கள் என அனைவரையுமே அரசியல் கட்சிகள் நிர்ணயிக்க பிரதான காரணியாகின்றனர்!

பதிவைப் படிக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் அவசரமா ரொம்ப பெருமைப் பட்டுவிடவேண்டாம்!

துரதிர்ஷ்டவசமாக மிடில்கிளாஸ் மாதவன்கள் இந்திய அரசியல் நிர்ணயத்தை பாஸிவ்வாக தாங்கள் அரசியல் கடமையை செயல்படுத்தாமல் இருந்து அரசியல் கட்சிகளுக்கு அநாவசியமான அகங்காரத்தினை அளிக்கின்றார்கள்.

ஆக்டிவ்வாக மிடில்கிளாஸ் மாதவன்கள்/ மிடில்கிளாஸ் மாதவிகள் ( வரும் தேர்தல்களில் வோட்டுப்போடும் அரசியல் கடமையை 100% செய்யவேண்டும்.

காடுவெட்டி குரு, வடசென்னை சேகர் மாதிரியான ரௌடி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அந்தத் தொகுதிகளில் 49ஓ போடுங்க! நரேஷ் குப்தா வரும் தேர்தலில் அனைத்து பூத்களிலும் 49ஓ வாக்காளர் போட வழிவகை செஞ்சிருக்காரு!

வெள்ளைக்கார ரவுடிங்களை எதிர்த்து நம்ம தாத்தாக்கள், பாட்டிகள் எல்லாம் அடிவாங்கி, அந்தமான் சிறை சென்று என்று அரும்பாடுபட்டுப் போராடிப் பெற்ற சுதந்திரம் மிடில் கிளாஸ் மற்றும் அனைத்து சமூகப்பிரிவு பேராண்டிகளால் பேணப்படவேண்டியது அவசியம்!

பாரத தேசமெங்கும் மக்கள் தொகையில் 50 சதவீத வாக்கு வங்கியாக இருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் தேர்தலில் போடும் 49ஓவை விட அரசியல் கட்சிகளிடம் மிடில்கிளாஸ் மக்கள் நேர்மையான பொருளாதார சீர்திருத்தங்களை வாக்குறுதிகளாக ஒருசேர்ந்து நெகோஷியேட் செய்து வாங்க வேண்டும்.

1. வருமான வரி வரம்பு குறைந்தபட்ச அளவை ஒரு நிதி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாயாக்க வேண்டும்.

2.வங்கிகளில் சேமிப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை ஒரு லட்ச ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.

3.அனைத்து இருசக்கர, 100 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் 10% விற்பனைவரி அல்லது 10% சாலைவரி இவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே வசூலிக்கப்படும்.

4. நிதிஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்திற்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படும். வருமான உச்சபட்ச வரி 15% என்ற அளவில் அமைக்கப்படவேண்டும்.

5. பெட்ரோல், டீசல், எரிவாயு, சமையல் எரிவாயு போன்ற எரி பொருட்கள் மீதான மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மொத்த விற்பனைவரி உச்சபட்சமாக 15% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

6. உணவுப்பொருள், அத்தியாவசியப் பொருட்கள் இவற்றின் மீதான மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மொத்த விற்பனைவரி உச்சபட்சமாக 10% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

7. நாள் ஒன்றுக்கு ரூ 1500/- வாடகை வாங்கும் தங்கும் விடுதிகளில் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த விற்பனைவரி உச்சபட்சமாக 5% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

8. உணவு விடுதிகளில் ரூ 500/-க்கு மேற்பட்ட தொகைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். உச்ச பட்ச ஒருங்கிணைந்த மத்திய மாநில அரசுகளின் விற்பனைவரி 5% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

9. ரெடிமேட் ஆடைகள், ஜவுளி, காலணிகள், தங்க நகை, வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் , கம்ப்யூட்டர் போன்ற அனைத்துப் பொருட்களுக்குமான மத்திய மாநில ஒருங்கிணைந்த உச்சபட்ச விற்பனைவரி 5% என்ற அளவில் அமைக்க வேண்டும்.

10. மாணவர்கள் கல்விக்கான பாடபுத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுதுபொருட்களுக்கு 100% முழுமையான மத்திய மாநில அரசுகளின் வரிவிலக்கு அளிக்கவேண்டும்.


மிடில்கிளாஸ் மாதவ, மாதவிகள் தேர்தல் அன்று விடுமுறையை வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்காமல் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் சினிமாப்படம், சினிமா நிகழ்ச்சி, சாட்டிங், மயிலாட மானாட பார்த்து என்று முறையற்று இருந்துவிட்டு விலைவாசி எல்லாம் எகிறியதற்கு திறமை அற்ற மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தை வசைபாடுமுன்பு இவை இவ்வளவு மோசமானதற்கு வாக்காளர் மக்கள் தொகையில் 50% அளவுக்கு இருந்தும் வாளாவிருந்த பாஸிவ் மிடில்கிளாஸ் மக்களின் பொறுப்பற்ற அரசியல் பங்களிப்பே காரணம் என்பதை உணரவும்.

மிக மோசமாகச் செயல்படும் திறமையற்ற கொடுங்கோல் பல்முனை சேவை வரிவிதிப்புத் திலகமான நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாதிரியான மத்திய நிதி அமைச்சர்களையும், மாநில நிதி அமைச்சரான க.அன்பழகனையோ, ஊழல் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியையோ மக்களவை/மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து திருப்பி அழைக்கும் தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி மத்திய மாநில தேர்தல் ஆணையாளர்களிடம் மிடில் கிளாஸின் 50% வாக்காளர்களும் ஒருசேரத் திரண்டு சமூகப் பலன்களை உரிமையாக்க வழிவகை செய்யவேண்டும்.


சென்னையில் ஒரு ரூம் உடைய வீட்டுக்கு மாத வாடகை ரூ 7,000 முதல் 10,000/- வரை, பெட் ரோல் லிட்டர் ரூ 60/- சாதாரண உணவு விடுதியான சரவணபவனில் ஒரு ரெண்டு இட்லி ஒரு தோசை, காபி ரூ 80/- மதிய உணவு ரூ 60/- இரவு உணவு ரூ 80/- எனும்வகையில் ஒரு நாளைக்கு ரூ 220/-

வயிறு நிறையாத உணவுக்கு ஸ்டார் அந்தஸ்து ஏதும் அற்ற சாதாரண சரவண பவன் / உடுப்பி ஓட்டலுக்கே ஒரு மாதத்திற்கு பேச்சிலருக்கு ரூ 7000/- தேவைப்படுகிற மோசமான பொருளாதார சூழல்!

தான் சென்னையில் மெஸ்ஸில் வாழ்ந்துகொண்டு தன்னை படிக்கவைத்த பெற்றோர், குடும்பத்திற்கோ, வாங்கிய கல்விக் கடனைத் திருப்பிக்கட்டுவதற்கு அனுப்புவதற்குமாக ஒரு பேச்சிலருக்கு குறைந்தபட்சம் 20,000/- சென்னையில் வருமானம் இருந்தாக வேண்டும்.

திருமணமாகி, மனைவி, பள்ளி செல்லும் இரு குழந்தைகள், பெற்றோர் என்று குடும்பத்துடன் சென்னையில் 100சிசி இருசக்கர வாகனத்துடன் சாதாரண வீடு/பிளாட்டில் வசிக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் மாதசம்பளம் 25,000/- இருக்க வேண்டும்.

சொந்தமாக 700 சதுரஅடி வீடு ரெண்டு 10க்கு 10 ரூம், ஹால்,கிச்சன், கழிவறைகொண்ட மிகச்சாதாரணமான ஒரு ப்ளாட் வாங்கி வசிக்க வேண்டுமானால் ப்ளாட்டுக்கு ஒரு சதுர அடி ரூ 7000 என குறைந்தது ஐம்பதுலட்சம் விலை தரவேண்டும். கடன் வாங்கி 20 ஆண்டுகள் மாத தவணையாக புறாக்கூடு வீட்டுக்கு வீட்டுக்கடன் மட்டுமே மாதாமாதம் 30,000/- கட்டவேண்டிய அவலமான பொருளாதாரச்சூழல்!

முடை நாற்றம் நிறைந்த கூவமும், அடையாறும் பெருக்கெடுத்து நகர்முழுதும் ஓடும் குப்பைகள் நிறைந்த சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவழித்து புறாக்கூடு பிளாட்டாக வீடு வாங்குவது அவசியமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் நடப்பது இறைநம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி என்ற போதும் குடும்பமாய் வாழ்பவர்கள் வயதான பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி, கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களிலும் குடும்பத்தலைவன் சனிக்கு சனிக்கிழமை, சங்கடஹரசதுர்த்தி போன்ற நாட்களிலும், படிக்கும் குழந்தைகள் தஷிணாமூர்த்தி மற்றும் குருவுக்கு வியாழக்கிழமையிலும் வீட்டுத்தலைவி மகாலஷ்மி, சக்திக்கும் உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதங்கள் இருக்கப்பழகிக்கொள்வது பொருளாதாரத்தை இந்து சமய ஆன்மீகத்தின் துணை கொண்டு பகுத்தறிவுடன் சமாளிக்க பேருதவியாய் இருக்கும்!

எல்லாவற்றுக்கும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநில அரசின் நிதி அமைச்சர் க.அன்பழகனும் அவர்களது முட்டாள்தனமான பெரும்பான்மை மக்களைப் பற்றிய அக்கறை இல்லாத பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட வரிவிதிப்புகளும் காரணம்!

இன்றைக்கு பெருவாரியான மத்திய தர சாமானிய மக்கள் உழைத்து ஈட்டிய சம்பளப்பணம்/பொருள் தத்தம் வீடு வந்து சேருமுன்பாக பல்முனை சேவை வரிகளால் சேதாரப்பட்டு போகும்விதமான ஆப்பிரிக்கநாடுகளை ஒத்த மோசமான கொடூர வரிவிதிப்பு பொருளாதார சூழல் இந்தியாவில் நிலவுகிறது!

பத்துகோடி, நூறுகோடி என்று தொழிலதிபர் போர்வையில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் 40% கமிஷனை அரசியல்வாதிக்கு வெட்டி வாங்கிவிட்டு பின்னர் ஒரு சுபயோக தினத்தில் இன்ஸால்வன்ஸி என்று மஞ்சக்கடுதாசி இன்னும் ஒரு 15% கமிஷன் வெட்டினால் கட்சி, ஆட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் மிடில்கிளாஸ் மக்களின் வங்கி டெபாசிட் பணத்தை சூறையாடுகிறார்கள்.

மிடில்கிளாஸ் மாதவன்கள் தங்களது அரிய தேர்தல் கடமையை உரிய சமயத்தில் தவறாமல் செய்வதன் இன்றியமையாத கடமையை உணராமல் டிவியில் தேர்தல் தினத்தன்று நேற்று நக்மா, குஷ்பூ,என்றும் இன்று நமீதா குத்தாட்ட நடிகை வகையாறாக்களின் மார்புக் க்ளிவேஜ்களின் க்ளோஸப் காட்சிகளில் சிக்கித் தவித்துப் பின்னொரு சமயத்தில் பொருளாதார சிக்கல்களிடையே மாட்டித்தவித்துக் பொருளாதார ரீதியில் க்ளோசாகிறார்கள்!


நம் தாத்தாக்கள் அரும்பாடுபட்டு கொள்ளைக்கார வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நம் அப்பாக்கள் அசட்டுத்தனத்தினால் அயோக்கிய அல்லக்கை கட்சி அரசியல்வாதிகளிடம் காவுதந்ததால் இந்தியாவின் வரிவிதிப்பு ஆப்பிரிக்க நாடுகளையும் விஞ்சும்விதத்தில் மிகமிக மோசமானதாக இருக்கிறது!

மிடில்கிளாஸ் மாதவன்களின் தேர்தல் ப்ராஸஸில் பங்கேற்காத குணாதிசயம், வோட்டுப் போடுவதில், அரசியல் கட்சிகளிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதிலான பாஸிவ்னஸ், அசட்டைத்தனம் இவை அரசியல் வாதிகளின் மிக மோசமான வரிவிதிப்பு, நிதி நிர்வாகத்திறமையின்மை இவைகளை தேர்தலுக்குப் பின்பாக வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களாக மிடில்கிளாஸ் மக்களை ஆக்குகிறது!

அடுத்துவருகின்ற மக்களவை / மாநில தேர்தல்களில் மிடில்கிளாஸ் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு, அரசு நிதி அமைச்சகங்களுக்கு, மாவட்ட கலெக்டர்களுக்கு இமெயில்களாக, குடியிருப்புச் சங்கங்கள் இதர சமூக அசோசியேஷன்கள் மூலம் பொது இடங்களில் பிட் நோட்டீஸ்களாக, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சிகளின் வட்ட, மாவட்டங்களுக்கு எழுத்து பூர்வ கோரிக்கைகளாக தொடர்ச்சியாக அனுப்பி மிடில்கிளாஸ் மக்களின் அரசியல் பலத்தை உணர்த்தவும்.

மக்கள் தொகையில் 15% என்று சிறுபான்மையாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவதில் பெரும்பான்மையாக ஆண்டுகள் தோறும் தொடர்ச்சியாக இருக்கும் சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகளை ஏற்கின்ற அரசியல் கட்சிகளின் அரசுகள் ஒற்றுமையாக ஒருசேர்ந்து 50% வாக்காளர் பலத்துடன் இருக்கும் மிடில்கிளாஸ் மக்களின் நியாயமான பொருளாதார கோரிக்கைகளை மறுத்துவிடுமா?

மிடில் கிளாஸின் தனித்த ஒரு ஓட்டு அரசியல் கட்சிகளிடையே பயத்தையோ,பாதிப்பையோ ஏற்படுத்தாது! ஒருசேர்ந்து அமைப்பாக இன்றிலிருந்தே வரப்போகும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு உருப்படியான மிடில் கிளாஸ் மக்களுக்கான வரிவிதிப்புடனான ஒரு பொருளாதார கோரிக்கை லிஸ்டை அரசியல் கட்சிகள், அரசுகளுக்குத் தெரியப்படுத்துங்கள்!

அழுகிற பிள்ளை பசியாறும்!

மக்களுக்கு வரிவிதிப்பு நியாயமாகும்! தனி நபர் பொருளாதாரம் மேம்படுவதன் வாயிலாக தேசத்தின் பொருளாதாரம் மேம்படும்! நியாயமான வரிகள் ஏய்ப்பு செய்யப்படாமல் அரசுக்கும் செலுத்தப்படும்!

மிடில்கிளாஸ் வர்க்கத்தினர் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படும் மோசமான கட்சிகளின் அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை காலம் இந்தியர்களின் ஒவ்வொருவர் தலைக்கும் இத்தனை ஆயிரம் கடன் வைத்திருக்கும் இந்திய அரசுகளைச் சகித்திருக்க வேண்டும்!

அடுத்த தேர்தல் வருமுன்பாக உடனடியாக ஆட்சியைத் தேரிவு செய்வதற்கு விழித்தெழுங்கள் மிடில் கிளாஸ் மாதவன்களே & மாதவிகளே!

மிடில்கிளாஸ் மக்களாகிய உங்கள் சேவை வரப்போகும் தேர்தல் காலங்களில் பாரத தேசத்திற்கு மிக அவசியம் தேவை!


அன்புடன்

ஹரிஹரன்

Tuesday, August 19, 2008

(194) நாங்கள் பாகிஸ்தானிகள் காஷ்மீர் ஹூரியத் தலைவர் பகிரங்க அறிவிப்பு!!

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam,"

Hardline separatist leader Syed Ali Shah Geelani Monday demanded the merger of Jammu and Kashmir with Pakistan, as leaders of the moderate Hurriyat faction spoke about independence and a dialogue over the state, triggering a leadership and ideological clash in the Muslim-dominated valley.

Tens of thousands of Muslim Kashmiris marched towards a United Nations office here amid heavy security arrangements, demanding UN intervention to solve the more than 60-year-old Kashmir dispute.

Demonstrators shouting "We Want Freedom", "Aiy zaalimo, aiy kaafiro, Kashmir hamara chhod do" (Tyrants and oppressors, leave our Kashmir), as they marched past police barricades near the UN Military Observer Group in India and Pakistan (UNMOGIP) office in the summer capital Srinagar.

Addressing the mammoth gathering at the Tourist Reception Centre here, octogenarian Geelani said there was "no solution to the Kashmir issue other than merger with Pakistan".

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam," he roared, as the crowd cheered and chanted along with him: "Hum Pakistani hain, Pakistan hamara hai" (We are Pakistanis, Pakistan is ours).

சுதந்திர இந்தியாவின் 62 ஆண்டுகளில் 55 ஆண்டுகளாக பலமுறை மத்தியில் ஆட்சி செய்யும் "மதசார்பற்ற" காங்கிரஸ் ஆட்சி தங்களைப் பாகிஸ்தானிகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள சையது கிலானிக்க்கு 2008ம் ஆண்டு பாரதரத்னாவை இனி அறிவித்து மகிழும்.

"மதசார்பற்ற" கட்சியான காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தியின் ஆணைப்படி இலாகா இல்லாத பிரதமர் மன்மோகன் சிங் ஹூரியத் தலைவர் சையது கிலானியை மத்திய அமைச்சராக்கி இந்திய பாதுகாப்புத்துறை இலாகாவை வழங்கி உரிய அங்கீகாரம், மரியாதைகளைச் செய்யும்.

அமர்நாத் பனிலிங்க குகைகோவில் பக்தியாத்திரைக்குச் நடைப்பயணமாகச் செல்லும் பக்தர்களுக்கு உறங்கி, இளைப்பாற கூடாரம், கழிப்பிடம், போன்ற தேவைகளுக்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்குவது பாரத தேசத்தில் மதவெறியைத் தூண்டும் செயல்!


"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam," என்று மாநாடு நடத்தி முழங்கினால் "மதச்சார்பின்மை"


காஷ்மீரில் பிரிவினை பேசும் பாகிஸ்தானிய எச்சைக்கலை நாய்களான ஹூரியத் தலைவர்கள், முப்திமுகமது சையீதுகள், யாசின் மாலிக், பாருக் அப்துல்லாக்களை பாகிஸ்தானுக்குள் மீண்டும் இந்தியாவுக்குள் வரமுடியாதபடி விரட்டி விடுதல் தேசத்தின் முதல் தேவை!

இந்திய பாராளுமன்றத்தைத் தாக்கியபோதும், "மதசார்பின்மை" இந்திய அரசியல்வாந்திகளை உயிருடன் தப்பச்செய்து "மதசார்பின்மை" அரசியல் பேசி பாரதத்தை அழிக்கத் திட்டமிட்ட குற்றத்துக்காவாவது ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன் உச்ச்நீதிமன்ற இட்ட உத்தரவுப்படி "காங்கிரஸ் ரத்னா" அஃப்சல் குருவை தூக்கிலிடவேண்டும்!


இந்திய "அரசியல் மதச்சார்பின்மை" காங்கிரஸால் தொழுநோயால் அழுகிய தேகம் மாதிரி சீர்கெட்டு நாறிக்கிடக்கிறது!

வெறுப்புடன்,

ஹரிஹரன்

Thursday, August 14, 2008

(193) பாரதத்தின் 62வது சுதந்திரதினம்

நாளை ஆகஸ்ட் 15 பாரதத்தின் 62வது சுதந்திரதினம்.

ஆகஸ்டு 15ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து அடிமைப்பட்டதிலிருந்து கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடுவது.

இன்றுவரை காஷ்மீரில் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த விதத்திலும் உதவிடாமல், இந்திய GDPல் எந்த பங்களிப்பும் தராத வெட்கம் ஏதும் இன்றி, பச்சை பாகிஸ்தானியக் கொடியேந்தி பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடும் நச்சுப்பிரிவினைவாதிகளிடம் இருந்து எப்போது பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்கும்??

இப்படிப்பட்ட தேசவிரோத பச்சைப் பாகிஸ்தானியக் கொடிபிடிக்கும் PDPn மெஹ்பூபா முப்திகள்,NCதேசிய மாநாட்டு அப்துல்லாக்கள், Hurriyat மிர்வைஸ் பாருக், போன்ற பச்சையான காஷ்மீர நச்சுப்பிரிவினைவாதிகளிடம் நாய்போல் வாலைக்குழைத்துக்கொண்டு "மதச்சார்பின்மை' செக்குலரிஸம் பேசி பாரத மக்களை 1947ல் இருந்து கடந்த 62 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 55ஆண்டுகள் மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்த இன்றும் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாரதத்திற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்??

62ஆண்டுகள் ஆனபோதும் மக்களை மேம்படுத்தாத ஜாதிவாரி ஓட்டு அரசியல் நடத்தி நாறடிக்கும் கீழ்த்தரமான அரசியல் வியாதிகளிடம் இருந்து பாரதத்திற்கு என்று மெய்யான சுதந்திரம் கிடைக்கும்??

படித்து, உழைத்து மேம்படுவதில் கவனத்தைச் சிதறவிட்டுவிடு மும்பை, கோவை, டில்லி, பெங்களூர்,ஆமதாபாத்,சூரத் என்று பாரததேசமெங்கும் வெடிகுண்டுகள் வைத்து பொதுமக்களைச் சிதறடிக்கும் நற்பணி செய்யும் அமைதிப்படையினரிடம் இருந்து பாரதத்திற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்??

பாரதத்தின் உண்மை வரலாற்றைச் சிலுவையில் அறைந்துவிட்டு, பொய்யான இட்டுக்கதைகளை வெள்ளைக்காரதேசங்களில் இருந்து வந்துவிழும் பணத்தால் புனிததோமையாரின் கிறித்துவமே சைவம், வைணவம், சமணம், புத்தம் என்றும் வேத உபநிஷத்துகளாக மருவின என்று புனிதமற்ற செயலைச் செய்யும் மதமாற்ற, வரலாற்று திரிப்புகள், பண்பாடு அழிப்பு எனும் பன்முக கொடூரத்தை நடைமுறைப்படுத்தும் சர்ச்சுகளின் கிறித்துவஅரசியல் வெறியில் இருந்து பாரதத்திற்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும்??

வெள்ளைக்காரர்களின் பணபலத்துடன், அரசியல் அதிகார வெறிபிடித்த கிறித்துவ சர்ச்சுகளின் பாரத பண்பாட்டு அழிப்பு, இனபேதம் ஏற்படுத்தும் தொடர்ந்த செய்கைகளால் சிதைந்துபோன சமூகமாய் இன்னொரு உகாண்டா, ருவாண்டா என்று கிறித்துவ சர்ச்சுகளின் பிரிவினையில் சிதைந்துபோன இன்னொரு ஆப்பிரிக்காவாவதில் இருந்து பாரததேசத்திற்கு சுதந்திரம் எப்படி & எப்போது கிடைக்கும்??

வெள்ளையனிடம் போராடிப் பெற்ற பாரதத்தின் சுதந்திரத்தை வெள்ளையனே இருந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற பகுத்தறிவுக் கூட்டத்தினரிடம் தந்து இன்று இந்த பகுத்தறிவுக் கூட்டத்தினர் ஆட்சி, அதிகாரத்தில் தொடர கிறித்துவ மதவெறி சர்ச்சுகளுடன் இணைந்து வெள்ளைக்காரர்களின் பணபலத்துடன் பாரதப்பண்பாட்டை மறுத்தும், திரித்தும் கிறித்துவமே புனிததோமையார் போன்றவர்களால் நான்மறை வேதங்கள், திருக்குறள், பகவத்கீதை, நாலாயிரதிவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற செல்வங்களை தந்தருளியது என்பதை நிறுவும்விதமாக நவீன பாரத வரலாற்றுச் சிதைப்பை 100கோடி செலவில் திரைப்படமாக புனிததோமையார் பற்றி எடுக்க பாரதத்தில் தமிழகம் இடம்கொடுக்கும், பாரதப்பண்பாட்டின் சுயம் அறியாத "பகுத்தறிவு"மயக்கத்தில் இருந்து பாரத மக்கள் சுதந்திரம் பெறுவது எப்போது??

இனிவரும் நாட்களில் பாரதம் அரசியல் போலித்தனங்களில் இருந்து விழிப்படையவேண்டும்...சுதந்திரம் பெறவேண்டும்!!

இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம், என்கிற அனைத்து அரசியல் இலவசங்களில் இருந்து மக்கள் சுதந்திரம் பெற்று சுயத்தைப் பற்றி சிந்தித்து மானம் மிகுந்து மேம்படவேண்டும்!!

அந்தமான் கொடூர சிறைச்சாலைகளில் நமது பாட்டன்கள் கடுமையான உடல், உள்ளச்சிரமங்கள் பலவற்றுக்கு உள்ளாகி, ரத்தம்சிந்தி வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் இன்றைக்கு இலவசங்கள் அரசியல், போலி மதசார்பின்மை அரசியல், படிப்பு-வேலை என அனைத்திலும் ஜாதி அரசியல், சர்ச்சுகளின் வரலாற்றுத் திரிப்பு அரசியல் என்றும் எங்கும் எதிலும் லஞ்சம், ஊழல் என்று உண்மையான சுதந்திரம் அடைந்த பலனை பாரததேசமும் அதன் பல சமூகங்களும் முழுமையாக மேம்படவிடாமல் செய்திருக்கிறது.

இன்று படித்த பலகோடி பாரத மக்களால், அரசியல்வியாதிகளால் ஒழுங்காய்ப் பேணப்படாத பாரதத்தின் சுதந்திரத்தால் விளையும் கேடுகள் வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் பாரதம் இருந்தபோது விளைந்த கேட்டினை விடவும் பல மடங்கு சேதத்தை பாரதத்துக்கு ஏற்படுத்தும்.

பாரதமெங்கும் எதிலும் நேர்மை, ஒழுக்கம், தன்மானம், பண்பாடு இவை அனைத்தையும் அழிக்கும் அக்கறையின்மை எனும் புற்றுநோயை வளர்த்த்தெடுத்துப்பதற்காகவா 62 ஆண்டுகள் முன்பு சுதந்திரம் பெற்றோம்??

நாளைக்கு ஆகஸ்ட் 15, பாரதத்தின் சுதந்திரநாள். சிகரெட்,மதுபானம் குடித்தும், கேடுகெட்ட டிவிமுன்பு உட்கார்ந்து நடிகைகளின் அங்கதரிசனம் செய்து வீணாக்காமல், தனியாக உட்கார்ந்து ஆத்மதரிசனம் செய்து பாரதத்தின் மீது அக்கறை கொண்ட பொறுப்பான நபராக இனியாவது நம் பாட்டன்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை உருப்படியாகப் பயன்படுத்த சூளுரைத்து அதன்படியே செயல்பட்டு வெற்றியடைய வேண்டுகிறேன்!

அனைவருக்கும் 62வது பாரத சுதந்திரதின வாழ்த்துக்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, August 11, 2008

(192) சோனியா சூனியக்காரியின் காங்கிரஸ் அரசால் அவமானப்பட்ட இந்தியா

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2008 சீன ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய அரசை, இந்திய பிரதமரையோ, இந்திய ஜனாதிபதியையோ சீனா அழைக்க மறுத்துவிட்டது.

ஆனால் மறக்காமல் சோனியாகாந்தி+ சோனியாவின் குடும்பத்தினர்க்கு சீனாவின் இந்திய தூதரகம் முறையாக அழைப்பை 10, ஜன்பத், புதுதில்லி விலாசத்தைத் தேடிச் சென்று ஒலிம்பிக்ஸ் விருந்தினராக அழைத்தது.

பாரத நாட்டின் நன்மைக்காக பிரதமர் பதவியை 2004ல் தியாகம் செய்த "அன்னை" சோனியாகாந்தி குடும்பத்தாருடன் பெய்ஜிங் கிளம்பிச்சென்றுவிட்டார்.

இடது சாரி கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் இந்திய ஆங்கில மீடியா அனைத்தையும் "மூடிக்கொண்டு" அடக்கி வாசிக்கிறது. இந்தியாவை அவமானம் செய்தது சீனா ஆயிற்றே எப்படி காட்டிக்கொடுத்து எழுதமுடியும் இடதுசாரிகளால்?!!

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் தன் ஏவல் படியே நடக்கும் ஆட்கள் என்று காங்கிரஸ் கட்சிமூலமாக பாரத தேசத்தை மிக அசிங்கமாக நாட்டிலும் உலக அரங்கில் ஆட்டிபடைக்கும் சூனியக்காரி சோனியா காந்தியால் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அழைக்கப்படாமல் சீனாவால் இளப்பமாக இந்தியா அவமானப்பட்டிருக்கிறது!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் முழக்கத்தோடும், பாகிஸ்தான் கொடியோடும் பாகிஸ்தானுக்குள் சென்று வர்த்தகம் செய்வோம் என்று பாகிஸ்தான் பிரிவினைவாதிகளான மெஹ்பூபா முப்திகளுடனும், கையாலாகத அப்துல்லாக்களுடனும், ஹுரியத் தீவிரவாதிகளுடனும் கை குலுக்கிக் கொண்டு இருக்கிறது கையாலாகத சூனியக்காரி சோனியாவின் அடிமையான மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் அரசு!

60 ஆண்டுகளாக பச்சை பாகிஸ்தான் கொடி பிடித்து, பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொல்லும் பிரிவினை கோரும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாய்களுடன் கைகோர்த்து "செக்குலரிஸம்" பேசி வரும் மத்திய காங்கிரஸ் அரசு மீது கொதித்துப்போய் நாற்பது நாட்களாக ஜம்முவில் பாகுபேதமின்றி அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள்!

சூனியக்காரி சோனியா தன் மோசமான அடிமைத்தனத்தை மேலெடுக்கும் வழிநடத்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து பாரத தேசத்தையே தொடர் தலைக்குனிவுகளுக்குள் தள்ளி வருகிறது!

சீன ஒலிம்பிக்ஸ் விழாவுக்கு இந்தியா அழைக்கப்படாமல் அவமதிக்கப்பட்டு, தேச அவமானமாக சோனியாவை சீனா அழைத்ததை ஆளும் காங்கிரஸ், இடது சாரி கம்யூனிஸ்டுகள், எதிர்கட்சிகளான பிஜேபி மௌனமாக இருந்து ஆமோதிப்பது ஏன்??

ஒலிம்பிக்ஸில் அகஸ்மாத்தாக ஏதோ ஒரு பதக்கம் வெல்லும் தேசம் என்பது உண்மை என்றாலும் ஒலிம்பிக்ஸுக்கு முறையாக அழைக்காத சீனாவுக்கு தேச அவமானத்தை எதிர்க்கும் விதமாக இந்திய வீரர்களை அனுப்பாமல் இருத்தல்தானே மானமுள்ள தேசத்தின் அரசு செய்யவேண்டிய முதல் கடமை?

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் சீனாவில் ஒலிம்பிக்ஸ் கண்டுகளித்துக்கொண்டிருக்கும் அன்னை சோனியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றார்களா?

சூனியக்காரியின் சூதில் மாட்டித்தவிக்கிறது பாரத தேசம்!


கோபத்துடன்,

ஹரிஹரன்