Saturday, May 19, 2007

(158) தேவாரம் திருவாசகத்தைக் கொளுத்தவேண்டாம்- சிவபெருமானைக் காண்பதற்கு

கோவி. கண்ணன் சிதம்பரத்தில் ஒன்லி தமிழ் வழிபாட்டுக்காக வேண்டி "தேவார திருவாசக எரிப்புப் போராட்டக் கோபக்கனல் பிளாக்கில் கண்டு கைலாயத்தில் சிவனே தன் நெற்றிக்கண் வேலை செய்கிறதான்னு டெஸ்ட் செஞ்சுக்கிட்டாராம்.

சிதம்பரத்தில் நடராஜனுக்குத் தமிழில் மட்டுமே வழிபாடு செய்யாததால் சிவபெருமான் சோகமாகி மதுரையில் சொக்கநாதராகக் குடி இருந்தும் மதுரையின் குடிமக்களை அஞ்சாநெஞ்சன்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் எரித்துக் கொன்றபோது தமிழ்நாட்டுக் கோவில்களில் ஒன்லி தமிழ் வழிபாடு இல்லாததால் கோபம் கொண்டு விட்டார்.

கடந்த வாரம் மதுரையில் நடந்த தீக்குண்டு தாக்குதல் அழகிரியின் கைவண்ணம் என்று வாழைமட்டைத் தமிழ் மக்கள் நினைத்திருக்கின்றார்கள்.

மெய்யாக மதுரையில் வெடித்த தீக்குண்டுகள் மதுரை சுவாமிசன்னதியில் வீற்றிருக்கும் சொக்கநாதப்பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த நெருப்பு அது! சிதம்பரத்தில் அரசியல் திரா"விட" தமிழ் இல்லாததால் மதுரையில் வெளிப்பட்ட கோபம் இது!

தினகரன் மீதான தீக்குண்டு தாக்குதல் வழக்கில் சிபிஐ புலன்விசாரணை நடத்தி கைலாயத்தில் இருந்து சிவனைக் கைவிலங்கிட்டு சிவன் போன்றே கண்ணகி மற்றும் அழகிரியாலும் எரிக்கப்பட்ட மதுரையின் வீதிகளில் நடாத்தி முன்சீப் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிவரும் போது கருணாநிதி எத்தனை பெரிய ஆன்மீகவாதி என்பது தெரியும்.

ஆன்மீக அடியார்கள் காலம் காலமாகத் தேவரம் திருவாசகம், சம்ஸ்கிருத மந்திரங்கள் வரவழைக்கமுடியாத சிவபெருமானை தினகரன் - அழகிரி-சிபிஐ கூட்டணியால் வரவழைக்கும் பெருமை தானைத்தலைவர் அகில உலக தமிழினக் காவலர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கே உண்டு!

என்ன சிவ பெருமான் உலகத் தமிழர் காண முதன்முதலாக வரும் காட்சியை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாகக் காட்ட சன் தொலைக்காட்சிக்கு அனுமதி கிடைக்குமான்னு தெரியாது!



அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

37226
டெஸ்ட் மெசேஜ்!

நன்மனம் said...

//....என்ன சிவ பெருமான் உலகத் தமிழர் காண முதன்முதலாக வரும் காட்சியை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாகக் காட்ட சன் தொலைக்காட்சிக்கு அனுமதி கிடைக்குமான்னு தெரியாது!....//

என்ன ஹரிஹரன் சார், நீங்களுமா இத அரசியல் நாடகம்னு புரிஞ்சுக்கல!!!

முத்துகுமரன் said...

ஹரிஹரன் நல்ல மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

Hariharan # 03985177737685368452 said...

//ஹரிஹரன் நல்ல மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். //


பொதுவா மருத்துவர்ன்னா எப்படி?

கூட்டணி மருத்துவர் ராமதாஸ்?

இல்லைன்னா 2% செயல்பாட்டு மதிப்புடையமத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி?

இல்லை புதியதமிழகம் மருத்துவர் கிருஷ்ணசாமி?

அல்லது

மூவேந்தர் முன்னேற்ற மருத்துவர் சேதுராமன்?

Sowmya said...

Very nice blog with lots of good contents :)

ஜீவானந்தம் said...

//சிதம்பரத்தில் நடராஜனுக்குத் தமிழில் மட்டுமே வழிபாடு செய்யாததால் சிவபெருமான் சோகமாகி மதுரையில் சொக்கநாதராகக் குடி இருந்தும் மதுரையின் குடிமக்களை அஞ்சாநெஞ்சன்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் எரித்துக் கொன்றபோது தமிழ்நாட்டுக் கோவில்களில் ஒன்லி தமிழ் வழிபாடு இல்லாததால் கோபம் கொண்டு விட்டார்.

//

அய்யா பெரியவரே!
என்ன உள்குத்து கொடுக்கிறோம்னு நினைப்பா , தமிழ் நாட்டில் தமிழ் பாட கூடாதுன்னு சொல்றவனை என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க.

அவனை எல்லாம் பூணூல் அறுத்துட்டு
கைபர் கணவாய் வழியே அனுப்பனும்னு சிவ பெருமான் சொல்றார்.

TBCD said...

நல்ல இயல்பா வருது ..உங்களுக்கு.... கட்டுக் கதை எழுத...
இப்படித் தான், வேதங்கள் எல்லாம் எழுதி இருப்பாங்க போல இருக்கு...என்ன சொல்லுறீங்க..