Monday, October 22, 2007

(180) பெஸ்ட் ஆஃப் இந்தியா & பெஸ்ட் ஆஃப் ஐரோப்பா

இமயமலையின் க்ளாசியர் பனிக்கட்டி உருகி கங்கையாக ப்ரவாகமெடுத்து மலையினின்று இறங்கி வெகு வேகத்துடன் பூமியைத் தொடும் இடம் ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் இங்கே கங்கை நீர் கலங்கலாக மணல்துகள்களுடனும், கொளுத்தும் 45டிகிரி சம்மர் வெய்யிலிலும் ஆற்றுநீரில் ஐந்து நிமிடம் அமிழ்ந்திருந்தால் உடல் மரத்துப்போகும் குளிர்ச்சியோடு இருக்கிறது. ரிஷிகேஷில் குளித்தால் கண்,மூக்கு, காது எல்லாம் நுண்மையான மண்துகள் மயமாகிவிடும்!

ரிஷிகேஷிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் பூமியில் ஓடி வந்து ஹரித்வாரில் கங்கை நீரில் மணல் துகள் நிறையவே மட்டுப்பட்டு விடுகிறது. கங்கையின் ஆர்ப்பரிக்கும் வேகம் படித்துறையிலேயே தெரியும். பாதுகாப்புக்கு இருக்கும் இரும்புச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு குளித்தல் அவசியம். படித்துறையில் அமர்ந்து கொண்டு ஆற்றின் ஓட்டத்துக்கு குறுக்காக காலை நீட்டினால் காலை ஒடித்துவிடும் வேகத்துடன் ஓடுகிறாள் கங்கை!

டெல்லி வெய்யிலில் அலைந்த சூடு தணிக்கும் படுகுளிர்ச்சியான கங்கைக்குளியல். எண்பதுகளில் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது கோடை விடுமுறை நாட்களில் வைகையாற்றில் குளித்ததை அடுத்து நான் அதிகமாகக் குளித்தது கங்கையில் தான் (1991, 2007) (ரெண்டு தரத்துக்கே இவ்வளவு பில்டப்பான்னு டென்ஷனாகாதீங்க)

ஹரித்வாரில் கங்கை நீரை பாட்டிலில் பிடித்தால் வேகம் காரணமாக turbidity கலங்கல் அதிகமாக இருக்கிறது. சிலமணி நேரம் கழித்து Crystal clear ஆகிவிடுகிறது மிகச் சொற்பமான வெண்ணிற Sand Residues பாட்டிலின் அடியில்.

குறுகலான வாயுடைய பெட் பாட்டிலில் புரண்டோடும் அதிவேக கங்கையில் பாட்டிலை நீரோடு விட்டுவிடாமல் நீரை ரொப்புவது என்பது தனி அட்வஞ்சர்!

இமயத்திலிருந்து நதியாக உருவாகி வங்காள விரிகுடா கடலில் கலக்கும் வரை கங்கைநதியின் நீளம் 2510 கிமீ. கங்கை நதி உத்ராகண்ட், உத்ரபிரதேஷ், பீஹார், மேற்கு வங்காளம், வங்க தேசம் எனப் பாய்ந்தோடி வளப்படுத்தி கடலில் கலக்கிறது.


ஐரோப்பாவில் டான்பெ Daunbe நதி ஜெர்மனியில் கருங்காடுகளில் உருவாகி மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா முழுவதும் பாய்ந்தோடி நிலத்தால் சூழப்பட்ட கருங்கடலில் கலக்கிறது.

Germany ,Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Bulgaria, Romania, and Ukraine என்று 9 தேசங்கள் வழியாக 2850 கிமீ தூரம் பயணிக்கிறது டான்பெ நதி.

இயற்கையை, நதியை தெய்வமாக வழிபடும் சனாதன கலாச்சாரம் நிரம்பியிருந்த பாரதத்தில் ஓடும் கங்கையை காசியில் பாதி எரிந்த பிணங்கள் மிதக்கும் காட்சியாகக் கண்டால் பாரம்பரிய கலாச்சார-தத்துவ பிணைப்பு சிதைந்து போனால், சுயநல சூப்பர்ஸ்டிஷன் மட்டும் நிரம்பிய தினசரி வாழ்வியல் பேணும் மூடர் கூட்டமாக நம்மக்கள் வாழ்வது தெரிகிறது.

ஐரோப்பாவில் நதிகளைப் பேணுகிறார்கள். அனைத்து ஐரோப்பிய பெருநகர்களூடாக நதிகள் ஓடுகின்றன. ஐரோப்பாவில் நதிகளை சாலை, ரயில் போக்குவரத்துக்கு இணையாக முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

கங்கையாவது ஆன்மீகத் தலைநகரமான வாரணாசி நகருக்குள்ளே சுயநல மூடநம்பிக்கையாளர்களால் சில பல கிலோமீட்டர்களுக்கு மாசுபடுத்தப்பட்ட நதியாக இருக்கிறது.

தமிழகத் தலைநகரில் மூட நம்பிக்கைகளை உடைத்த பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் சென்னை நகருக்குள்ளே ஒடுகின்ற கூவம் நதி, அடையாறு நதிகளின் பவித்ரமான தூய நிலையை நினைத்துக்கொண்டேன்!

நதியை தெய்வம் என்று தொழுதவர்களே தமிழர்கள். தெய்வமே இல்லை எனும் கொள்கையுடையோர் ஆட்சிக்கு வந்து 40 ஆண்டுகள் கோலோச்சி தலைநகர் சென்னையின் நதிகளில் இருந்த தெய்வத்தை வெற்றிகரமாக விரட்டிவிட்டார்கள்!

பகுத்தறிவான செயல்பாடுகளால் இன்றைக்கு தமிழ்நாட்டின் எந்த நதிகளிலும் நீர் ஓடினால் அது செய்தி எனும் நிலை! தெய்வம் நீங்கிய ஆட்சிகளால் தமிழகத்து நகரங்களில் ஓடும் நதிகளில் அரசியல் திரா"விட" பகுத்தறிவு மட்டும் நிரம்பி ஓடி பெரிதாய் மணக்கிறது!

எங்காவது ஒரு பெரிய நகருக்குள் நல்ல நீர் நிரம்பி ஓடும் நதிகளைக் காணும்போதெல்லாம் இந்த ஆதங்கம் பெரிதாக எனக்குள் வரும். சென்னையில் வாழும் தமிழனாயிருப்பதில் ஒரு வசதி எனக்கு! வெட்கப்படுவது என்பது மறந்துவிட்டது!

அடுத்த தலைமுறைக்கு நதிகள் மாதிரியான இயற்கைச் செல்வங்களை எப்படி விட்டுச்செல்வது என்பதை ஐரோப்பாவின் டான்பெ நதியைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

தமிழன் என்ற இன உணர்வுடன், பகுத்தறிவோடு சிந்தித்து திட்டம் தீட்டி தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து ஆட்சி நடத்தும் திரா"விட" கட்சியினரது வாழ்நாள் சாதனைகளான கூவம் ஆறு, அடையாறு இவற்றின் நிலையினைப் பார்த்து அடுத்த தலைமுறையினர்க்கு இயற்கைச்செல்வங்களை எப்படியான நிலையில் விட்டுச்செல்லக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

அன்புடன்

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

40,333
டெஸ்ட் மெசேஜ்!

மங்களூர் சிவா said...

//
சென்னையில் வாழும் தமிழனாயிருப்பதில் ஒரு வசதி எனக்கு! வெட்கப்படுவது என்பது மறந்துவிட்டது!
//
கலக்கல்

மங்களூர் சிவா said...

//
சென்னை நகருக்குள்ளே ஒடுகின்ற கூவம் நதி, அடையாறு நதிகளின் பவித்ரமான தூய நிலையை நினைத்துக்கொண்டேன்!
//
//
தமிழ்நாட்டின் எந்த நதிகளிலும் நீர் ஓடினால் அது செய்தி எனும் நிலை!
//
//
அடுத்த தலைமுறைக்கு நதிகள் மாதிரியான இயற்கைச் செல்வங்களை எப்படி விட்டுச்செல்வது என்பதை ஐரோப்பாவின் டான்பெ நதியைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!
//
ஆவற கதையா இது !!!

//
கூவம் ஆறு, அடையாறு இவற்றின் நிலையினைப் பார்த்து அடுத்த தலைமுறையினர்க்கு இயற்கைச்செல்வங்களை எப்படியான நிலையில் விட்டுச்செல்லக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!
//
நன்றாக சொன்னீர்கள்