Monday, April 14, 2008

(190) உலகத்தமிழர் வீடுகளெங்கும் ISO:9001 அங்கீகாரம் பெற்ற "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கும் பல்வேறு தேசங்களில் வாழும் உலகத் தமிழர் அனைவருக்கும் "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொதுவா தீபாவளிப் பண்டிகைக்குத்தான் "லேகியம்" என்பது அனைவரும் அறிந்தது. இந்த 2008ஆண்டு வரும் "ஸர்வதாரி" தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல்வர் கருணாநிதி அவர்கள் இனிமேல் ஜனவரியில்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்தது லேகியமாகியிருக்கிறது.

கழ(ல)கத்தின் நிரந்தர ஓட்டு வங்கியாகவும், கருணாநிதியின் கழகத்திற்குச் சிறப்பு நிதி வழங்கியாகவும் தொடர்ந்து இருந்து, கருணாநிதியான தன்னை ஐந்தாவது முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் கிறிஸ்துவ சர்ச்களின் அமைப்புகளுக்கு கடமைப்பட்டவராக கருணாநிதி செயல்படுவதில் உலகில் தமிழர் மட்டுமல்ல வேறு எவர்க்கும் எந்த ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை.

கிறித்துவ ஆண்டு ஜனவரியில் வருவதால் தமிழ்ப்புத்தாண்டும் ஜனவரியில்தான் வருவது ஏற்புடையதாக கிறித்துவ சர்ச்களுக்கு இருக்கலாம். கருணாநிதியும் கிறித்துவ சர்ச்களுடன் உடன்பட்டுப் போவதில் உலகத்தமிழர் மட்டுமல்ல வேறு எவர்க்கும் எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை.

கருணாநிதி என்று தனிமனிதனாய் இருந்து இப்படியெல்லாம் செயல்பட்டால். ஆனால் மதசார்பற்று, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இன்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல்படுவேன் என்று முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கருணாநிதி இவ்விதம் செயல்படுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தாரா? என்று கிறித்துவத்தை கேள்விகேட்கும் மேற்கத்திய கிறித்துவர் இயக்கிய திரைப்படமான "தி டாவின்ஸி கோடு" திரைப்படத்திற்கு கருணாநிதி ஐந்தாம் முறை தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் இந்திய அரசை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் திரையிடத் தடை உத்தரவு பிறப்பித்த கருணாநிதியின் கிறித்துவ சர்ச்சுகளுக்கான செஞ்சோற்றுக்கடன் என்பது உலகத் தமிழர்களுக்கு ஒரு கண் திறப்பு சம்பவமே.

தேசமே தெய்வமாக வழிபடும் இராம பெருமானை எந்த எஞ்ஞினியரிங் காலேஜில் படித்து சேதுவை வடிவமைத்தார் என்று கேட்டு பகுத்தறிவையும் மதசார்பின்மையையும் கேட்போர் கிறு கிறுத்துபோகும் அளவுக்கு கிறித்துவ சர்ச்களுடைய கைப்பாவையாய் செயல்பட்டார் நம் முதல்வர் கருணாநிதி அவர்கள்!

தமிழகமெங்கும் அக்மார்க் தமிழ் ஆன்றோர்கள், தமிழ் முன்னோர்கள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக வாழ்ந்து என்று தமிழர்களது பாரம்பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழிபட்ட தமிழகத்தின் புராதான பண்டைய இந்துக் கோவில்களில் அனைத்திலும் இந்த 2008ம் ஆண்டு "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எந்த சிறப்பு நிகழ்வும் நடத்தக்கூடாது என்று கிறித்துவ சர்ச்களின் நிதிக்காகவும் கிறித்துவ ஓட்டுக்காகவும் மட்டும் நமது முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்து கொண்டு வாய்மொழியாக உத்தரவு போடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களில் கடைந்தேறிய அயோக்கியத்தனமாக உலகத்தமிழர்கள் உணர்கிறார்கள்.


அடுத்த சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மத சார்பற்ற தமிழக முதல்வர் பகுத்தறிவு மிகு திரு.கருணாநிதி அவர்கள் கிறித்துவ சர்ச்களின், இத்தாலிய அம்மையாரின் ஆசைக்கு இணங்கி தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்து ஆலயங்களில் இனி மூலவர் / உற்சவராக சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மட்டுமே தமிழ்க்கடவுளாக ஏற்கப்படுவார் என்று அறிவித்தாலும் அதிர்ச்சி அதிகம் இருக்காது வாழைமட்டையாகிவிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே!

எதிர்காலத்தில் வரும் 2009 சித்திரையில் வரும் தமிழ்ப் புத்தாண்டு "விரோதி" ஆண்டு என்பது கருணாநிதியின் கூமுட்டைத்தனமான செயல்பாடுகளால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் அவருக்குமான உறவைச் சொல்வதாக அமைந்துவிடும்.


சூடா இருந்தாத்தான் சூரியன்! சித்திரை ஒண்ணாம் தேதின்னாதான் தமிழ்ப்புத்தாண்டு!


அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

42,987

டெஸ்ட் மெசேஜ்!

ஜயராமன் said...

/// கிறித்துவ ஆண்டு ஜனவரியில் வருவதால் தமிழ்ப்புத்தாண்டும் ஜனவரியில்தான்
வருவது ஏற்புடையதாக கிறித்துவ சர்ச்களுக்கு இருக்கலாம். கருணாநிதியும்
கிறித்துவ சர்ச்களுடன் உடன்பட்டுப் போவதில் உலகத்தமிழர் மட்டுமல்ல வேறு
எவர்க்கும் எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை. ///

ஐயா,


நன்று சொன்னீர்கள். நீங்கள் மேலே எழுதியிருப்பது கற்பனை அல்ல. இந்துத்துவா
பிரச்சாரமும் அல்ல. உண்மை. கிருத்துவ புத்தாண்டை முன்னிறுத்தவே இந்த
கரு.நா.நிதி இந்த புத்தாண்டு மாற்றம் என்ற கோமாளி அறிவிப்பை அறிவித்தார் என்று
தெரிகிறது. தமிழ்விரோத மற்றும் அருவருப்பு பத்திரிக்கையான விடுதலை தன் இதழில்
எழுதியிருப்பதைப் பாருங்கள்..


/// அவரவர்க்கு ஓர் ஆண்டுக் கணக்கு வைத்துக் கொண்டாலும், உலகம் முழுக்க
அனைவரும் கடைப்பிடிக்கும் கணக்கு ஜனவரிமுதல் டிசம்பர் முடிய உள்ளதைத்தான்.
அதன்படிப் பார்த்தால் தைத் திங்கள் முதலில் வருகிறதே! சித்திரை அதற்கு 90 நாள்
கழித்துதான் வருகிறது. இதற்கு என்ன பதில்? ///


இப்போது புரிந்ததா, இந்த தையில்தான்-புத்தாண்டு ஸ்டன்ட் அடிப்பதின் நோக்கம்.


நன்றி

மங்களூர் சிவா said...

உங்களுக்கும் தாமதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

தலைப்பு சூப்பர்

dondu(#11168674346665545885) said...

அன்புள்ள ஹரிஹரன்,

உங்கள் போலிப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்