Thursday, August 07, 2014

Allow Yourself to Evolve Else Revolve!

 

GRACE is vital for a Human to PROGRESS purposefully in the very Janma.

GRACE of GOD, GRACE of a Guru enhances life showing right direction and giving opportunities to Evolve utilizing Human format.

Now while relaxing when I comfortably look back my past, I realize How God has been protecting me all along. If only GOD has GRANTED me all my desires I had in my 20's, for sure by Now My life would have become so BARREN and THORNY!

GRACE of the LORD is all encompassing. HE has been giving me what I deserve to drive me on the right path to evolve further purposefully using this human form.

Grace of Guru is so very enticing, like my Gurudev Swami Chinmayananda through his teaching, vide his books & talks wakes me to pick the right set of values to walk the path of Shreyas to Evolve utilizing this very human format.

100years of GuruDev Swami Chinmayanandaji's celebrations in Chennai offers myself a great opportunity to listen to deatailed lectures on all the 18 chapters of Bagavad Gita by Swami Mitrananda delivered to the seekers in one Bagavad Gita chapter Per month mode.

If I do not allow myself to cleanse & refine my mind to EVOLVE to live & experience the higher realms utilizing this very Human Janma, then with my IGNORANCE, for sure I will be REVOLVING the vicious Birth-Death cycle un-intelligently!

Think for a while. In a day human mind entertains upto 60,000 thoughts! Wasteful thinking, Wasteful Talking, Wasteful Actions with No clarity, No right direction, falling prey to the wrong projections of my own mind coloured and flavoured by "KamaKrodhaMohaLobhaMadhaMatsarya"

Freeing myself from these wasteful miserable pattern of purposeless life style is the first step to Evolve.

Shivoham! Shivoham!

Wednesday, August 20, 2008

(195) மிடில்கிளாஸ் மாதவ-மாதவிகள் அரசியல் கட்சிகளிடம் இனி கேட்க வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள்!

இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலத் தேர்தல்களில் மிக அதிகமாக பதிவாகும் வாக்குப்பதிவு 65% சதவீதமே!

தேர்தல்களால், மாறும் அரசுகளினால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவுக்கு பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்கள் அவர்களது ஆற்றலுடனான பங்களிப்பை அரசியல்கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல்வாதிகளை 'ஸ்பான்சர்ஷிப்" செய்வதன் மூலமாக சாதித்துக்கொள்கிறார்கள்.

பணமில்லாத ஏழைகள் தங்கள் ஓட்டுக்கு இவ்வளவு என்று ஓட்டு விற்பனை, இலவச பிரியாணி, இலவச டிவி, இலவச நிலம், இலவச அடுப்பு, இலவச சேலை, வேட்டி, மலிவு விலை ரேஷன் அரிசி இப்படி பல இலவசங்களை வாக்குறுதிகளாகப் பெற்று பெருவாழ்வு வாழாவிட்டாலும் டாஸ்மாக்கில் குஷியாகி இருக்கும் சொற்ப கைப்பொருளையும் இழந்து விடுகிறார்கள்! தம் ஓட்டை பிரியாணிக்கும் இன்ன இலவசங்களுக்கும் ஈடாக்கி வாழ்வில் ஈடேற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

வாக்காளர் மிஸ்டர் மிடில்கிளாஸ் மாதவன்கள். இவர்கள் இருப்பதிலேயே தனியான தினுசு. இவர்கள் பொதுவாக இலவசங்களை வாங்கமாட்டார்கள், தேர்தல் மற்றும் அரசியல் கட்சி, அரசுகளின் இலவசங்களை வாங்குவது அவமானம்-கௌரவக்குறைவாக நினைப்பவர்கள். அதுக்குன்னு அரசியல் கட்சி வேட்பாளர்களை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர்களும் அல்ல இந்த மிடில்கிளாஸ் மாதவன்கள்.


இந்தியாவில் தேர்தல் வாக்கு வங்கியில் மிடில்கிளாஸ் மாதவன்கள் கிட்டத்தட்ட 50%
இந்தியாவில் செயல்படும் எந்த அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ , வேட்பாளர்களோ என எவரும் பகைத்துக்கொண்டுவிட முடியாத தனிபெரும்பான்மையான தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையுடைய பிரிவினர் இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள்.

யாரெல்லாம் மிடில்கிளாஸ் மாதவ-மாதவிகள் பிரிவில் வருவார்கள்??

சென்னையின் மாநகரப் பேருந்தில் Mசர்வீஸ் பஸ்டிக்கட் வாங்கிப் பயணம் செய்யும் பொருளாதார வசதி படைத்த நபரில் இருந்து ஆரம்பித்து, உழைத்துச் சம்பாதித்த காசிலும், பாதி வங்கி லோனிலுமாக வாங்கிய Maruti Swift-VDI மாடலில் தினசரியாக அலுவலகத்துக்கு செல்ஃப் டிரைவிங் செய்யும் சாப்ட்வேர் ஆசாமிவரை நீளும் பெரிய சோஸியல் எகனாமிக் ஸ்பெக்ட்ரம் இந்த மிடில்கிளாஸ் வர்க்கம். இந்த பொருளாதாரப் பட்டைக்குள் (Economic band) வருவோர் அனைவரும் மிடில்கிளாஸ் மாதவன்-மாதவிகளே!
(சும்மா ரைமிங்குக்காக மாதவன்-மாதவின்னு... அதெப்படி மாதவின்னு சொல்லலாம்னு மதுரையை எரிச்ச கண்ணகிகளா மாறி மானிட்டரை எரிக்குமளவுக்குப் பார்க்க வேண்டாம்)

இந்த மிடில்கிளாஸ் ஆசாமிகளால்தான் நம் இந்திய தேசத்தின் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது!

மிடில்கிளாஸ் மாதவன்கள் தான் இந்திய தேசத்தின் மத்திய, மாநில அரசுகள், அதன் அமைச்சர்கள் என அனைவரையுமே அரசியல் கட்சிகள் நிர்ணயிக்க பிரதான காரணியாகின்றனர்!

பதிவைப் படிக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் அவசரமா ரொம்ப பெருமைப் பட்டுவிடவேண்டாம்!

துரதிர்ஷ்டவசமாக மிடில்கிளாஸ் மாதவன்கள் இந்திய அரசியல் நிர்ணயத்தை பாஸிவ்வாக தாங்கள் அரசியல் கடமையை செயல்படுத்தாமல் இருந்து அரசியல் கட்சிகளுக்கு அநாவசியமான அகங்காரத்தினை அளிக்கின்றார்கள்.

ஆக்டிவ்வாக மிடில்கிளாஸ் மாதவன்கள்/ மிடில்கிளாஸ் மாதவிகள் ( வரும் தேர்தல்களில் வோட்டுப்போடும் அரசியல் கடமையை 100% செய்யவேண்டும்.

காடுவெட்டி குரு, வடசென்னை சேகர் மாதிரியான ரௌடி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அந்தத் தொகுதிகளில் 49ஓ போடுங்க! நரேஷ் குப்தா வரும் தேர்தலில் அனைத்து பூத்களிலும் 49ஓ வாக்காளர் போட வழிவகை செஞ்சிருக்காரு!

வெள்ளைக்கார ரவுடிங்களை எதிர்த்து நம்ம தாத்தாக்கள், பாட்டிகள் எல்லாம் அடிவாங்கி, அந்தமான் சிறை சென்று என்று அரும்பாடுபட்டுப் போராடிப் பெற்ற சுதந்திரம் மிடில் கிளாஸ் மற்றும் அனைத்து சமூகப்பிரிவு பேராண்டிகளால் பேணப்படவேண்டியது அவசியம்!

பாரத தேசமெங்கும் மக்கள் தொகையில் 50 சதவீத வாக்கு வங்கியாக இருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் தேர்தலில் போடும் 49ஓவை விட அரசியல் கட்சிகளிடம் மிடில்கிளாஸ் மக்கள் நேர்மையான பொருளாதார சீர்திருத்தங்களை வாக்குறுதிகளாக ஒருசேர்ந்து நெகோஷியேட் செய்து வாங்க வேண்டும்.

1. வருமான வரி வரம்பு குறைந்தபட்ச அளவை ஒரு நிதி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாயாக்க வேண்டும்.

2.வங்கிகளில் சேமிப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை ஒரு லட்ச ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.

3.அனைத்து இருசக்கர, 100 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் 10% விற்பனைவரி அல்லது 10% சாலைவரி இவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே வசூலிக்கப்படும்.

4. நிதிஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்திற்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படும். வருமான உச்சபட்ச வரி 15% என்ற அளவில் அமைக்கப்படவேண்டும்.

5. பெட்ரோல், டீசல், எரிவாயு, சமையல் எரிவாயு போன்ற எரி பொருட்கள் மீதான மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மொத்த விற்பனைவரி உச்சபட்சமாக 15% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

6. உணவுப்பொருள், அத்தியாவசியப் பொருட்கள் இவற்றின் மீதான மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மொத்த விற்பனைவரி உச்சபட்சமாக 10% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

7. நாள் ஒன்றுக்கு ரூ 1500/- வாடகை வாங்கும் தங்கும் விடுதிகளில் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த விற்பனைவரி உச்சபட்சமாக 5% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

8. உணவு விடுதிகளில் ரூ 500/-க்கு மேற்பட்ட தொகைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். உச்ச பட்ச ஒருங்கிணைந்த மத்திய மாநில அரசுகளின் விற்பனைவரி 5% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.

9. ரெடிமேட் ஆடைகள், ஜவுளி, காலணிகள், தங்க நகை, வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் , கம்ப்யூட்டர் போன்ற அனைத்துப் பொருட்களுக்குமான மத்திய மாநில ஒருங்கிணைந்த உச்சபட்ச விற்பனைவரி 5% என்ற அளவில் அமைக்க வேண்டும்.

10. மாணவர்கள் கல்விக்கான பாடபுத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுதுபொருட்களுக்கு 100% முழுமையான மத்திய மாநில அரசுகளின் வரிவிலக்கு அளிக்கவேண்டும்.


மிடில்கிளாஸ் மாதவ, மாதவிகள் தேர்தல் அன்று விடுமுறையை வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்காமல் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் சினிமாப்படம், சினிமா நிகழ்ச்சி, சாட்டிங், மயிலாட மானாட பார்த்து என்று முறையற்று இருந்துவிட்டு விலைவாசி எல்லாம் எகிறியதற்கு திறமை அற்ற மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தை வசைபாடுமுன்பு இவை இவ்வளவு மோசமானதற்கு வாக்காளர் மக்கள் தொகையில் 50% அளவுக்கு இருந்தும் வாளாவிருந்த பாஸிவ் மிடில்கிளாஸ் மக்களின் பொறுப்பற்ற அரசியல் பங்களிப்பே காரணம் என்பதை உணரவும்.

மிக மோசமாகச் செயல்படும் திறமையற்ற கொடுங்கோல் பல்முனை சேவை வரிவிதிப்புத் திலகமான நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாதிரியான மத்திய நிதி அமைச்சர்களையும், மாநில நிதி அமைச்சரான க.அன்பழகனையோ, ஊழல் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியையோ மக்களவை/மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து திருப்பி அழைக்கும் தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி மத்திய மாநில தேர்தல் ஆணையாளர்களிடம் மிடில் கிளாஸின் 50% வாக்காளர்களும் ஒருசேரத் திரண்டு சமூகப் பலன்களை உரிமையாக்க வழிவகை செய்யவேண்டும்.


சென்னையில் ஒரு ரூம் உடைய வீட்டுக்கு மாத வாடகை ரூ 7,000 முதல் 10,000/- வரை, பெட் ரோல் லிட்டர் ரூ 60/- சாதாரண உணவு விடுதியான சரவணபவனில் ஒரு ரெண்டு இட்லி ஒரு தோசை, காபி ரூ 80/- மதிய உணவு ரூ 60/- இரவு உணவு ரூ 80/- எனும்வகையில் ஒரு நாளைக்கு ரூ 220/-

வயிறு நிறையாத உணவுக்கு ஸ்டார் அந்தஸ்து ஏதும் அற்ற சாதாரண சரவண பவன் / உடுப்பி ஓட்டலுக்கே ஒரு மாதத்திற்கு பேச்சிலருக்கு ரூ 7000/- தேவைப்படுகிற மோசமான பொருளாதார சூழல்!

தான் சென்னையில் மெஸ்ஸில் வாழ்ந்துகொண்டு தன்னை படிக்கவைத்த பெற்றோர், குடும்பத்திற்கோ, வாங்கிய கல்விக் கடனைத் திருப்பிக்கட்டுவதற்கு அனுப்புவதற்குமாக ஒரு பேச்சிலருக்கு குறைந்தபட்சம் 20,000/- சென்னையில் வருமானம் இருந்தாக வேண்டும்.

திருமணமாகி, மனைவி, பள்ளி செல்லும் இரு குழந்தைகள், பெற்றோர் என்று குடும்பத்துடன் சென்னையில் 100சிசி இருசக்கர வாகனத்துடன் சாதாரண வீடு/பிளாட்டில் வசிக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் மாதசம்பளம் 25,000/- இருக்க வேண்டும்.

சொந்தமாக 700 சதுரஅடி வீடு ரெண்டு 10க்கு 10 ரூம், ஹால்,கிச்சன், கழிவறைகொண்ட மிகச்சாதாரணமான ஒரு ப்ளாட் வாங்கி வசிக்க வேண்டுமானால் ப்ளாட்டுக்கு ஒரு சதுர அடி ரூ 7000 என குறைந்தது ஐம்பதுலட்சம் விலை தரவேண்டும். கடன் வாங்கி 20 ஆண்டுகள் மாத தவணையாக புறாக்கூடு வீட்டுக்கு வீட்டுக்கடன் மட்டுமே மாதாமாதம் 30,000/- கட்டவேண்டிய அவலமான பொருளாதாரச்சூழல்!

முடை நாற்றம் நிறைந்த கூவமும், அடையாறும் பெருக்கெடுத்து நகர்முழுதும் ஓடும் குப்பைகள் நிறைந்த சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவழித்து புறாக்கூடு பிளாட்டாக வீடு வாங்குவது அவசியமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் நடப்பது இறைநம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி என்ற போதும் குடும்பமாய் வாழ்பவர்கள் வயதான பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி, கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களிலும் குடும்பத்தலைவன் சனிக்கு சனிக்கிழமை, சங்கடஹரசதுர்த்தி போன்ற நாட்களிலும், படிக்கும் குழந்தைகள் தஷிணாமூர்த்தி மற்றும் குருவுக்கு வியாழக்கிழமையிலும் வீட்டுத்தலைவி மகாலஷ்மி, சக்திக்கும் உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதங்கள் இருக்கப்பழகிக்கொள்வது பொருளாதாரத்தை இந்து சமய ஆன்மீகத்தின் துணை கொண்டு பகுத்தறிவுடன் சமாளிக்க பேருதவியாய் இருக்கும்!

எல்லாவற்றுக்கும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநில அரசின் நிதி அமைச்சர் க.அன்பழகனும் அவர்களது முட்டாள்தனமான பெரும்பான்மை மக்களைப் பற்றிய அக்கறை இல்லாத பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட வரிவிதிப்புகளும் காரணம்!

இன்றைக்கு பெருவாரியான மத்திய தர சாமானிய மக்கள் உழைத்து ஈட்டிய சம்பளப்பணம்/பொருள் தத்தம் வீடு வந்து சேருமுன்பாக பல்முனை சேவை வரிகளால் சேதாரப்பட்டு போகும்விதமான ஆப்பிரிக்கநாடுகளை ஒத்த மோசமான கொடூர வரிவிதிப்பு பொருளாதார சூழல் இந்தியாவில் நிலவுகிறது!

பத்துகோடி, நூறுகோடி என்று தொழிலதிபர் போர்வையில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் 40% கமிஷனை அரசியல்வாதிக்கு வெட்டி வாங்கிவிட்டு பின்னர் ஒரு சுபயோக தினத்தில் இன்ஸால்வன்ஸி என்று மஞ்சக்கடுதாசி இன்னும் ஒரு 15% கமிஷன் வெட்டினால் கட்சி, ஆட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் மிடில்கிளாஸ் மக்களின் வங்கி டெபாசிட் பணத்தை சூறையாடுகிறார்கள்.

மிடில்கிளாஸ் மாதவன்கள் தங்களது அரிய தேர்தல் கடமையை உரிய சமயத்தில் தவறாமல் செய்வதன் இன்றியமையாத கடமையை உணராமல் டிவியில் தேர்தல் தினத்தன்று நேற்று நக்மா, குஷ்பூ,என்றும் இன்று நமீதா குத்தாட்ட நடிகை வகையாறாக்களின் மார்புக் க்ளிவேஜ்களின் க்ளோஸப் காட்சிகளில் சிக்கித் தவித்துப் பின்னொரு சமயத்தில் பொருளாதார சிக்கல்களிடையே மாட்டித்தவித்துக் பொருளாதார ரீதியில் க்ளோசாகிறார்கள்!


நம் தாத்தாக்கள் அரும்பாடுபட்டு கொள்ளைக்கார வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நம் அப்பாக்கள் அசட்டுத்தனத்தினால் அயோக்கிய அல்லக்கை கட்சி அரசியல்வாதிகளிடம் காவுதந்ததால் இந்தியாவின் வரிவிதிப்பு ஆப்பிரிக்க நாடுகளையும் விஞ்சும்விதத்தில் மிகமிக மோசமானதாக இருக்கிறது!

மிடில்கிளாஸ் மாதவன்களின் தேர்தல் ப்ராஸஸில் பங்கேற்காத குணாதிசயம், வோட்டுப் போடுவதில், அரசியல் கட்சிகளிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதிலான பாஸிவ்னஸ், அசட்டைத்தனம் இவை அரசியல் வாதிகளின் மிக மோசமான வரிவிதிப்பு, நிதி நிர்வாகத்திறமையின்மை இவைகளை தேர்தலுக்குப் பின்பாக வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களாக மிடில்கிளாஸ் மக்களை ஆக்குகிறது!

அடுத்துவருகின்ற மக்களவை / மாநில தேர்தல்களில் மிடில்கிளாஸ் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு, அரசு நிதி அமைச்சகங்களுக்கு, மாவட்ட கலெக்டர்களுக்கு இமெயில்களாக, குடியிருப்புச் சங்கங்கள் இதர சமூக அசோசியேஷன்கள் மூலம் பொது இடங்களில் பிட் நோட்டீஸ்களாக, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சிகளின் வட்ட, மாவட்டங்களுக்கு எழுத்து பூர்வ கோரிக்கைகளாக தொடர்ச்சியாக அனுப்பி மிடில்கிளாஸ் மக்களின் அரசியல் பலத்தை உணர்த்தவும்.

மக்கள் தொகையில் 15% என்று சிறுபான்மையாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவதில் பெரும்பான்மையாக ஆண்டுகள் தோறும் தொடர்ச்சியாக இருக்கும் சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகளை ஏற்கின்ற அரசியல் கட்சிகளின் அரசுகள் ஒற்றுமையாக ஒருசேர்ந்து 50% வாக்காளர் பலத்துடன் இருக்கும் மிடில்கிளாஸ் மக்களின் நியாயமான பொருளாதார கோரிக்கைகளை மறுத்துவிடுமா?

மிடில் கிளாஸின் தனித்த ஒரு ஓட்டு அரசியல் கட்சிகளிடையே பயத்தையோ,பாதிப்பையோ ஏற்படுத்தாது! ஒருசேர்ந்து அமைப்பாக இன்றிலிருந்தே வரப்போகும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு உருப்படியான மிடில் கிளாஸ் மக்களுக்கான வரிவிதிப்புடனான ஒரு பொருளாதார கோரிக்கை லிஸ்டை அரசியல் கட்சிகள், அரசுகளுக்குத் தெரியப்படுத்துங்கள்!

அழுகிற பிள்ளை பசியாறும்!

மக்களுக்கு வரிவிதிப்பு நியாயமாகும்! தனி நபர் பொருளாதாரம் மேம்படுவதன் வாயிலாக தேசத்தின் பொருளாதாரம் மேம்படும்! நியாயமான வரிகள் ஏய்ப்பு செய்யப்படாமல் அரசுக்கும் செலுத்தப்படும்!

மிடில்கிளாஸ் வர்க்கத்தினர் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படும் மோசமான கட்சிகளின் அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை காலம் இந்தியர்களின் ஒவ்வொருவர் தலைக்கும் இத்தனை ஆயிரம் கடன் வைத்திருக்கும் இந்திய அரசுகளைச் சகித்திருக்க வேண்டும்!

அடுத்த தேர்தல் வருமுன்பாக உடனடியாக ஆட்சியைத் தேரிவு செய்வதற்கு விழித்தெழுங்கள் மிடில் கிளாஸ் மாதவன்களே & மாதவிகளே!

மிடில்கிளாஸ் மக்களாகிய உங்கள் சேவை வரப்போகும் தேர்தல் காலங்களில் பாரத தேசத்திற்கு மிக அவசியம் தேவை!


அன்புடன்

ஹரிஹரன்

Tuesday, August 19, 2008

(194) நாங்கள் பாகிஸ்தானிகள் காஷ்மீர் ஹூரியத் தலைவர் பகிரங்க அறிவிப்பு!!

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam,"

Hardline separatist leader Syed Ali Shah Geelani Monday demanded the merger of Jammu and Kashmir with Pakistan, as leaders of the moderate Hurriyat faction spoke about independence and a dialogue over the state, triggering a leadership and ideological clash in the Muslim-dominated valley.

Tens of thousands of Muslim Kashmiris marched towards a United Nations office here amid heavy security arrangements, demanding UN intervention to solve the more than 60-year-old Kashmir dispute.

Demonstrators shouting "We Want Freedom", "Aiy zaalimo, aiy kaafiro, Kashmir hamara chhod do" (Tyrants and oppressors, leave our Kashmir), as they marched past police barricades near the UN Military Observer Group in India and Pakistan (UNMOGIP) office in the summer capital Srinagar.

Addressing the mammoth gathering at the Tourist Reception Centre here, octogenarian Geelani said there was "no solution to the Kashmir issue other than merger with Pakistan".

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam," he roared, as the crowd cheered and chanted along with him: "Hum Pakistani hain, Pakistan hamara hai" (We are Pakistanis, Pakistan is ours).

சுதந்திர இந்தியாவின் 62 ஆண்டுகளில் 55 ஆண்டுகளாக பலமுறை மத்தியில் ஆட்சி செய்யும் "மதசார்பற்ற" காங்கிரஸ் ஆட்சி தங்களைப் பாகிஸ்தானிகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள சையது கிலானிக்க்கு 2008ம் ஆண்டு பாரதரத்னாவை இனி அறிவித்து மகிழும்.

"மதசார்பற்ற" கட்சியான காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தியின் ஆணைப்படி இலாகா இல்லாத பிரதமர் மன்மோகன் சிங் ஹூரியத் தலைவர் சையது கிலானியை மத்திய அமைச்சராக்கி இந்திய பாதுகாப்புத்துறை இலாகாவை வழங்கி உரிய அங்கீகாரம், மரியாதைகளைச் செய்யும்.

அமர்நாத் பனிலிங்க குகைகோவில் பக்தியாத்திரைக்குச் நடைப்பயணமாகச் செல்லும் பக்தர்களுக்கு உறங்கி, இளைப்பாற கூடாரம், கழிப்பிடம், போன்ற தேவைகளுக்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்குவது பாரத தேசத்தில் மதவெறியைத் தூண்டும் செயல்!


"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam," என்று மாநாடு நடத்தி முழங்கினால் "மதச்சார்பின்மை"


காஷ்மீரில் பிரிவினை பேசும் பாகிஸ்தானிய எச்சைக்கலை நாய்களான ஹூரியத் தலைவர்கள், முப்திமுகமது சையீதுகள், யாசின் மாலிக், பாருக் அப்துல்லாக்களை பாகிஸ்தானுக்குள் மீண்டும் இந்தியாவுக்குள் வரமுடியாதபடி விரட்டி விடுதல் தேசத்தின் முதல் தேவை!

இந்திய பாராளுமன்றத்தைத் தாக்கியபோதும், "மதசார்பின்மை" இந்திய அரசியல்வாந்திகளை உயிருடன் தப்பச்செய்து "மதசார்பின்மை" அரசியல் பேசி பாரதத்தை அழிக்கத் திட்டமிட்ட குற்றத்துக்காவாவது ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன் உச்ச்நீதிமன்ற இட்ட உத்தரவுப்படி "காங்கிரஸ் ரத்னா" அஃப்சல் குருவை தூக்கிலிடவேண்டும்!


இந்திய "அரசியல் மதச்சார்பின்மை" காங்கிரஸால் தொழுநோயால் அழுகிய தேகம் மாதிரி சீர்கெட்டு நாறிக்கிடக்கிறது!

வெறுப்புடன்,

ஹரிஹரன்

Thursday, August 14, 2008

(193) பாரதத்தின் 62வது சுதந்திரதினம்

நாளை ஆகஸ்ட் 15 பாரதத்தின் 62வது சுதந்திரதினம்.

ஆகஸ்டு 15ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து அடிமைப்பட்டதிலிருந்து கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடுவது.

இன்றுவரை காஷ்மீரில் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த விதத்திலும் உதவிடாமல், இந்திய GDPல் எந்த பங்களிப்பும் தராத வெட்கம் ஏதும் இன்றி, பச்சை பாகிஸ்தானியக் கொடியேந்தி பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடும் நச்சுப்பிரிவினைவாதிகளிடம் இருந்து எப்போது பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்கும்??

இப்படிப்பட்ட தேசவிரோத பச்சைப் பாகிஸ்தானியக் கொடிபிடிக்கும் PDPn மெஹ்பூபா முப்திகள்,NCதேசிய மாநாட்டு அப்துல்லாக்கள், Hurriyat மிர்வைஸ் பாருக், போன்ற பச்சையான காஷ்மீர நச்சுப்பிரிவினைவாதிகளிடம் நாய்போல் வாலைக்குழைத்துக்கொண்டு "மதச்சார்பின்மை' செக்குலரிஸம் பேசி பாரத மக்களை 1947ல் இருந்து கடந்த 62 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 55ஆண்டுகள் மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்த இன்றும் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாரதத்திற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்??

62ஆண்டுகள் ஆனபோதும் மக்களை மேம்படுத்தாத ஜாதிவாரி ஓட்டு அரசியல் நடத்தி நாறடிக்கும் கீழ்த்தரமான அரசியல் வியாதிகளிடம் இருந்து பாரதத்திற்கு என்று மெய்யான சுதந்திரம் கிடைக்கும்??

படித்து, உழைத்து மேம்படுவதில் கவனத்தைச் சிதறவிட்டுவிடு மும்பை, கோவை, டில்லி, பெங்களூர்,ஆமதாபாத்,சூரத் என்று பாரததேசமெங்கும் வெடிகுண்டுகள் வைத்து பொதுமக்களைச் சிதறடிக்கும் நற்பணி செய்யும் அமைதிப்படையினரிடம் இருந்து பாரதத்திற்கு என்று சுதந்திரம் கிடைக்கும்??

பாரதத்தின் உண்மை வரலாற்றைச் சிலுவையில் அறைந்துவிட்டு, பொய்யான இட்டுக்கதைகளை வெள்ளைக்காரதேசங்களில் இருந்து வந்துவிழும் பணத்தால் புனிததோமையாரின் கிறித்துவமே சைவம், வைணவம், சமணம், புத்தம் என்றும் வேத உபநிஷத்துகளாக மருவின என்று புனிதமற்ற செயலைச் செய்யும் மதமாற்ற, வரலாற்று திரிப்புகள், பண்பாடு அழிப்பு எனும் பன்முக கொடூரத்தை நடைமுறைப்படுத்தும் சர்ச்சுகளின் கிறித்துவஅரசியல் வெறியில் இருந்து பாரதத்திற்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும்??

வெள்ளைக்காரர்களின் பணபலத்துடன், அரசியல் அதிகார வெறிபிடித்த கிறித்துவ சர்ச்சுகளின் பாரத பண்பாட்டு அழிப்பு, இனபேதம் ஏற்படுத்தும் தொடர்ந்த செய்கைகளால் சிதைந்துபோன சமூகமாய் இன்னொரு உகாண்டா, ருவாண்டா என்று கிறித்துவ சர்ச்சுகளின் பிரிவினையில் சிதைந்துபோன இன்னொரு ஆப்பிரிக்காவாவதில் இருந்து பாரததேசத்திற்கு சுதந்திரம் எப்படி & எப்போது கிடைக்கும்??

வெள்ளையனிடம் போராடிப் பெற்ற பாரதத்தின் சுதந்திரத்தை வெள்ளையனே இருந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற பகுத்தறிவுக் கூட்டத்தினரிடம் தந்து இன்று இந்த பகுத்தறிவுக் கூட்டத்தினர் ஆட்சி, அதிகாரத்தில் தொடர கிறித்துவ மதவெறி சர்ச்சுகளுடன் இணைந்து வெள்ளைக்காரர்களின் பணபலத்துடன் பாரதப்பண்பாட்டை மறுத்தும், திரித்தும் கிறித்துவமே புனிததோமையார் போன்றவர்களால் நான்மறை வேதங்கள், திருக்குறள், பகவத்கீதை, நாலாயிரதிவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற செல்வங்களை தந்தருளியது என்பதை நிறுவும்விதமாக நவீன பாரத வரலாற்றுச் சிதைப்பை 100கோடி செலவில் திரைப்படமாக புனிததோமையார் பற்றி எடுக்க பாரதத்தில் தமிழகம் இடம்கொடுக்கும், பாரதப்பண்பாட்டின் சுயம் அறியாத "பகுத்தறிவு"மயக்கத்தில் இருந்து பாரத மக்கள் சுதந்திரம் பெறுவது எப்போது??

இனிவரும் நாட்களில் பாரதம் அரசியல் போலித்தனங்களில் இருந்து விழிப்படையவேண்டும்...சுதந்திரம் பெறவேண்டும்!!

இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம், என்கிற அனைத்து அரசியல் இலவசங்களில் இருந்து மக்கள் சுதந்திரம் பெற்று சுயத்தைப் பற்றி சிந்தித்து மானம் மிகுந்து மேம்படவேண்டும்!!

அந்தமான் கொடூர சிறைச்சாலைகளில் நமது பாட்டன்கள் கடுமையான உடல், உள்ளச்சிரமங்கள் பலவற்றுக்கு உள்ளாகி, ரத்தம்சிந்தி வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் இன்றைக்கு இலவசங்கள் அரசியல், போலி மதசார்பின்மை அரசியல், படிப்பு-வேலை என அனைத்திலும் ஜாதி அரசியல், சர்ச்சுகளின் வரலாற்றுத் திரிப்பு அரசியல் என்றும் எங்கும் எதிலும் லஞ்சம், ஊழல் என்று உண்மையான சுதந்திரம் அடைந்த பலனை பாரததேசமும் அதன் பல சமூகங்களும் முழுமையாக மேம்படவிடாமல் செய்திருக்கிறது.

இன்று படித்த பலகோடி பாரத மக்களால், அரசியல்வியாதிகளால் ஒழுங்காய்ப் பேணப்படாத பாரதத்தின் சுதந்திரத்தால் விளையும் கேடுகள் வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் பாரதம் இருந்தபோது விளைந்த கேட்டினை விடவும் பல மடங்கு சேதத்தை பாரதத்துக்கு ஏற்படுத்தும்.

பாரதமெங்கும் எதிலும் நேர்மை, ஒழுக்கம், தன்மானம், பண்பாடு இவை அனைத்தையும் அழிக்கும் அக்கறையின்மை எனும் புற்றுநோயை வளர்த்த்தெடுத்துப்பதற்காகவா 62 ஆண்டுகள் முன்பு சுதந்திரம் பெற்றோம்??

நாளைக்கு ஆகஸ்ட் 15, பாரதத்தின் சுதந்திரநாள். சிகரெட்,மதுபானம் குடித்தும், கேடுகெட்ட டிவிமுன்பு உட்கார்ந்து நடிகைகளின் அங்கதரிசனம் செய்து வீணாக்காமல், தனியாக உட்கார்ந்து ஆத்மதரிசனம் செய்து பாரதத்தின் மீது அக்கறை கொண்ட பொறுப்பான நபராக இனியாவது நம் பாட்டன்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை உருப்படியாகப் பயன்படுத்த சூளுரைத்து அதன்படியே செயல்பட்டு வெற்றியடைய வேண்டுகிறேன்!

அனைவருக்கும் 62வது பாரத சுதந்திரதின வாழ்த்துக்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, August 11, 2008

(192) சோனியா சூனியக்காரியின் காங்கிரஸ் அரசால் அவமானப்பட்ட இந்தியா

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2008 சீன ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய அரசை, இந்திய பிரதமரையோ, இந்திய ஜனாதிபதியையோ சீனா அழைக்க மறுத்துவிட்டது.

ஆனால் மறக்காமல் சோனியாகாந்தி+ சோனியாவின் குடும்பத்தினர்க்கு சீனாவின் இந்திய தூதரகம் முறையாக அழைப்பை 10, ஜன்பத், புதுதில்லி விலாசத்தைத் தேடிச் சென்று ஒலிம்பிக்ஸ் விருந்தினராக அழைத்தது.

பாரத நாட்டின் நன்மைக்காக பிரதமர் பதவியை 2004ல் தியாகம் செய்த "அன்னை" சோனியாகாந்தி குடும்பத்தாருடன் பெய்ஜிங் கிளம்பிச்சென்றுவிட்டார்.

இடது சாரி கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் இந்திய ஆங்கில மீடியா அனைத்தையும் "மூடிக்கொண்டு" அடக்கி வாசிக்கிறது. இந்தியாவை அவமானம் செய்தது சீனா ஆயிற்றே எப்படி காட்டிக்கொடுத்து எழுதமுடியும் இடதுசாரிகளால்?!!

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் தன் ஏவல் படியே நடக்கும் ஆட்கள் என்று காங்கிரஸ் கட்சிமூலமாக பாரத தேசத்தை மிக அசிங்கமாக நாட்டிலும் உலக அரங்கில் ஆட்டிபடைக்கும் சூனியக்காரி சோனியா காந்தியால் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அழைக்கப்படாமல் சீனாவால் இளப்பமாக இந்தியா அவமானப்பட்டிருக்கிறது!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் முழக்கத்தோடும், பாகிஸ்தான் கொடியோடும் பாகிஸ்தானுக்குள் சென்று வர்த்தகம் செய்வோம் என்று பாகிஸ்தான் பிரிவினைவாதிகளான மெஹ்பூபா முப்திகளுடனும், கையாலாகத அப்துல்லாக்களுடனும், ஹுரியத் தீவிரவாதிகளுடனும் கை குலுக்கிக் கொண்டு இருக்கிறது கையாலாகத சூனியக்காரி சோனியாவின் அடிமையான மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் அரசு!

60 ஆண்டுகளாக பச்சை பாகிஸ்தான் கொடி பிடித்து, பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொல்லும் பிரிவினை கோரும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாய்களுடன் கைகோர்த்து "செக்குலரிஸம்" பேசி வரும் மத்திய காங்கிரஸ் அரசு மீது கொதித்துப்போய் நாற்பது நாட்களாக ஜம்முவில் பாகுபேதமின்றி அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள்!

சூனியக்காரி சோனியா தன் மோசமான அடிமைத்தனத்தை மேலெடுக்கும் வழிநடத்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து பாரத தேசத்தையே தொடர் தலைக்குனிவுகளுக்குள் தள்ளி வருகிறது!

சீன ஒலிம்பிக்ஸ் விழாவுக்கு இந்தியா அழைக்கப்படாமல் அவமதிக்கப்பட்டு, தேச அவமானமாக சோனியாவை சீனா அழைத்ததை ஆளும் காங்கிரஸ், இடது சாரி கம்யூனிஸ்டுகள், எதிர்கட்சிகளான பிஜேபி மௌனமாக இருந்து ஆமோதிப்பது ஏன்??

ஒலிம்பிக்ஸில் அகஸ்மாத்தாக ஏதோ ஒரு பதக்கம் வெல்லும் தேசம் என்பது உண்மை என்றாலும் ஒலிம்பிக்ஸுக்கு முறையாக அழைக்காத சீனாவுக்கு தேச அவமானத்தை எதிர்க்கும் விதமாக இந்திய வீரர்களை அனுப்பாமல் இருத்தல்தானே மானமுள்ள தேசத்தின் அரசு செய்யவேண்டிய முதல் கடமை?

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் சீனாவில் ஒலிம்பிக்ஸ் கண்டுகளித்துக்கொண்டிருக்கும் அன்னை சோனியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றார்களா?

சூனியக்காரியின் சூதில் மாட்டித்தவிக்கிறது பாரத தேசம்!


கோபத்துடன்,

ஹரிஹரன்

Sunday, July 27, 2008

(191) பகுத்தறிவு தமிழகத்தில் இடஒதுக்கீடு தந்த பலன்

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டினால் பகுத்தறிவு வற்றாது ஓடும் சமூகநீதியை அரசியல் திராவிட பெத்தடின் கொள்கைக் கட்சிகளின் ஆட்சிகள் நிலை நாட்டிவிட்டதாக புருடா விடப்படுவது அறிந்ததே.

சில நாட்கள் சமீபத்தில் சக பதிவர் தனது பதிவில் மருத்துவக் கல்லூரி இடங்களில் முதல் 300மதிப்பெண்களால் தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுகீட்டினால் மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டு இந்தியாவுக்கே முன்மாதிரியாகைவிட்டதாகச் சொல்லியிருந்தார்.

நான் பின்னூட்டமாக அந்தப்பதிவில், "மருத்துவக்கல்லூரி சேர்க்கை லிஸ்ட்டில் தெரிவிக்கப்படும் ஜாதியை மட்டும் வைத்து சமூகநீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது" உண்மையில் ஜாதிச் சான்றிதழ் சார்ந்த இட ஒதுக்கீட்டு வெற்றி என்பது பம்மாத்து என்பதாக கருத்து தெரிவித்திருந்தேன்


கல்வி, அரசு வேலைக்கான ஜாதிச் சான்றிதழ் விற்பனைத் திருவிழா கொண்டாட்டம் ஆண்டுதோறும் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பு ஆரம்பமாகும் ஜூன் மாதத்தில் உச்சத்தில் இருக்கும்.


நிதர்சனத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு பாயும் தமிழகத்தினை பகுத்தறிவற்று வேத ஆகமப்படி பரந்த கோவில்கள் கட்டி அரசாண்ட சோழர் / பல்லவர்-பாண்டியர் வழித்தோன்றலாகவும் இருந்துகொண்டே பிற்படுத்தப்பட்டவராக, தமிழக அரசியல் களத்தில் முனைப்பில் இருந்து, கடின உழைப்பால் நூறாண்டுகள் நின்ற மரங்களை வெட்டி சாலையெங்கும் வீழ்த்தி சுயமாக மிகவும் பிற்படுத்திக்கொண்டுவிட்ட சமூகமாக இருந்துகொண்டே ஆதி திராவிடரை / பழங்குடியினரை வெறுத்தாலும் ...

தமிழகத்தில் ஆட்சி செய்யும் / அதிகாரத்தில் இருக்கும் பகுத்தறிவு பெத்தடின் ஏற்றும் அரசியல் திராவிட கழக உறுப்பினர் அட்டை இருந்தால் தமிழ்நாட்டில் 69% சமூகநீதி நிலவிடச் செய்யும் "இட ஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்" ஆவது எளிது.

தமிழகத்தில் 2008-09 ஆண்டு 70,000 பொறியியல் கல்வி இடங்கள் அரசு கோட்டாவில் இருக்கிறது. அரசு தனியாருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் கல்விச் சந்தையில் 50%மானேஜ்மெண்ட் கோட்டா 70,000 இடங்கள் இருக்கின்றது.

இந்த 70-85,000இடங்களுக்கான டொனேஷன் தொகை என்பது தமிழக்த்திலே ஜாதியை அறவே ஒழித்துவிட்டு, சமூகநீதிப்படி பகுத்தறிவோடு இயங்கும் அரசியல் திரா"விட" பெத்தடின் அரசு ஆசிர்வாதத்தில் ஓப்பன் கேட்டகிரிக்கு 5-9லட்சம் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3-5 லட்சம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (இந்நாள் அரசியல்வாதிகள்/முன்னாள் அரச வம்சத்தினர்)2-3 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இடஒதுக்கீட்டு சான்றிதழ் ஏஜண்ட்டுக்குத் தரவேண்டியது ரூ. 5000/- கல்லூரி கேபிடேஷன் தொகை ரூ இரண்டு முதல் நாலு லட்சம் வரை சேமிப்பு!

எனவே சாதியை முற்றிலும் ஒழித்துவிட்ட புரட்(டு)சி /வீரபூமியான தமிழகத்தில் இட ஒதுக்கீடு தேவையுள்ள அனைவரும் இந்த இடஒதுக்கீட்டு சான்றிதழ் விற்பனையைப் பயன்படுத்தி கல்வியில் மேம்படவும்.


பகுத்தறிவு தமிழகத்தில் இட ஒதுக்கீடு தரும் பலன்

`சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!

என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படவோ அதிசயிக்கவோ இதில் எதுவுமே இல்லை... உங்களிடம் காசிருந்தால் போதும் நீங்கள் விரும்பும் ஜாதியில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வளவு ஏன்? உங்களுக்குப் பிறக்காத குழந்தை முதல் மூன்று தலைமுறைக்கு முன் மறைந்த உங்கள் மூதாதையர் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த சாதியிலும் நீங்கள் இடஒதுக்கீடு பெறலாம்.

அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!

நிஜமான தகவல்களைச் சொல்லி, நியாயமான சான்றிதழைக் கேட்டால் பெறுபவரை நேரில் வரச்சொல்லி, பிறப்புச் சான்றிதழில் என்ன ஜாதி? பள்ளிக்கூட சான்றிதழில் என்ன ஜாதி? விலாசத்தை உறுதிப்படுத்த, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் நகல் என பலவற்றைக் கேட்டு பாடாய்ப்படுத்தும் அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதன் காரணம்தான் நமக்குப் புரியவில்லை.

பாரதியார் பெயரில் இந்த கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க நாமும் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.சில ஆயிரங்களை இடைத்தரகரிடம்இழந்தோம். அவ்வளவுதான். கொஞ்சம் சிரமப்பட்டது பொருத்தமான புரோக்கரை கண்டுபிடிக்க மட்டும்தான்.

அதற்காக, அந்த அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நம் விசாரணையைத் தொடங்கி அலைந்து கொண்டிருந்ததை அவர்களும் கண்காணித்திருக்க வேண்டும். கொஞ்சம் சோர்ந்து ஒரு மரநிழலில் சற்று ஒதுங்கிய நேரத்தில் கரெக்டாக வந்தார் ஆஜானுபாகுவான அந்த ஆள்.

``சாருக்கென்ன, சாதி சர்டிஃபிகேட் வேணுமா?'' என்று சம்மன் இல்லாமல் அவர் ஆஜராக, அப்பொழுதே நம் முயற்சியில் பாதி முடிந்துவிட்ட மாதிரிதான்!

``எந்த புரூஃபும் இல்லாம `பி.சி.' சர்டிஃபிகேட் வேணும்னா சார்ஜ் ஜாஸ்தியாகும். நாளும் முன்ன பின்ன ஆகும்! சரின்னா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க! வேலை முடிஞ்சதும் மீதி!'' என்று நேரிடையாகவே அவர் மேட்டருக்கு வர, நமக்கு கொஞ்சம் தயக்கம்தான்! ஆனாலும் காசைக் கொடுத்துட்டு, சான்றிதழுக்கான விவரங்களை ஒரு துண்டுக் காகிதத்தில். `சி. சுப்பிரமணிய பாரதி, தந்தை பெயர் சின்னசாமி என்று மட்டும் எழுதிக் கொடுத்தோம். நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அந்த புரோக்கர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

பிளாட்ஃபாரத்து பெட்டிக்கடையில் ஒரு ஃபார்ம் வாங்கினார். அதை நிரப்புவதற்கு ஒருவரிடம் கொடுத்தார். அழுக்கு மூட்டையாய் நின்ற மற்றொருவரிடம் கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் வாங்கினார். பின் நம்மைப் பார்த்து, ``ரெண்டு நாள் கழிச்சு வாங்க! எல்லாம் ரெடியா இருக்கும்!'' என்று சொன்னவர், அடுத்த நிமிஷம் எங்கே போனார்னே தெரியலை. அந்த புரோக்கரின் நேர்மையை உறுதிப்படுத்த இன்னும் சில புரோக்கர்களிடம் விசாரித்தோம். `பர்ஃபெக்ட் பார்ட்டி'ன்னு பலரும் சர்டிஃபிகேட் தந்தனர்.

ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. ```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.

புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'

`இந்த அலுவலகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லா இடத்திலும் இதுதான் நிலைமையா?இதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள மற்றொரு இடத்திற்குச் சென்றோம்...

பாரதி சினிமாவுக்குப் பாட்டெழுதியிருந்தால் ஒருவேளை இவர்களுக்கு நினைவிருந்திருக்கலாம். அதனால் இம்முறை ஒரு சினிமா பிரபலத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்... ஸ்ரேயா, அசின் என்றால் நாற்பதைத் தாண்டிய புரோக்கர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பளிச்சென்று ஞாபகத்துக்கு வராது! அதனால் குஷ்பு பெயரைத் தேர்வு செய்தோம்...

இது இரண்டாவது அனுபவம் என்பதால் வேலை சுலபமாகவே இருந்தது. புரோக்கர் கேட்டதைவிட, `ஐநூறு ரூபாய் அதிகம் தருகிறோம்; அவசரம்!' என்று நாம் சொன்னதும் வேலைகள் விரைந்து நடந்தன. அந்த அவசரத்தில் குஷ்பு_சுந்தர் என நாம் எழுதிக் கொடுத்ததை எப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. சுந்தரைத் தகப்பனார் என்று மாற்றிவிட்டனர். சாதியையும் அவர்கள் சவுகரியத்திற்கு மறவர் என முடிவு செய்து கொண்டனர்.

சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.

``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.

ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.


பி.குறிப்பு 1:
குஷ்பூவுக்கு கோவில் கட்டிய பகுத்தறிவு தமிழன் தான் மறத்தமிழனே என்பதை மீண்டும் ஒருமுறை குஷ்பூவுக்கு மறவர் ஜாதி சான்றிதழ் வழங்கி பறைசாற்றியிருக்கிறான் அந்த "இடஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்"


பி.குறிப்பு 2:
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி, கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் அடிப்படையிலான மக்கள் தொகை 10 கோடிக்கும் மேல்??

பி.குறிப்பு 3:

இனி தமிழ்நாட்டுல போங்கடா புள்ளகுட்டிங்கள டிஸ்கவுண்டட் இடஒதுக்கீடு ஜாதிச்சான்றிதழ் வாங்கிட்டு படிக்க வைங்கடான்னு சொல்லிக்கலாம்!

பி.குறிப்பு 4:

மெய்யாகவே தம் வாழ்வில் மேம்பட வேண்டிய கல்வி வேலைவாய்ப்பு உதவி தேவைப்படும் அனைத்து பிரிவு தமிழகத்து மக்களுக்கும் கனிவான மொழியில் கழக அரசு பதில் சொல்லாமல் கனிமொழியை மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்திட அன்னை சோனியாவின் ஆமோதிக்கும் கனிமொழிக்காகவும், கடைக்கண்பார்வைக்காகவும் அலையும் ஐந்து முறை தமிழகத்து முதல்வரான 85 வயது இளைஞனை வாழ்த்தி கட் அவுட் வைத்து மூப்பெரும் விழா எடுத்து மகிழவேண்டியதுதான்!


அன்புடன்,

ஹரிஹரன்

Monday, April 14, 2008

(190) உலகத்தமிழர் வீடுகளெங்கும் ISO:9001 அங்கீகாரம் பெற்ற "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கும் பல்வேறு தேசங்களில் வாழும் உலகத் தமிழர் அனைவருக்கும் "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொதுவா தீபாவளிப் பண்டிகைக்குத்தான் "லேகியம்" என்பது அனைவரும் அறிந்தது. இந்த 2008ஆண்டு வரும் "ஸர்வதாரி" தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல்வர் கருணாநிதி அவர்கள் இனிமேல் ஜனவரியில்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்தது லேகியமாகியிருக்கிறது.

கழ(ல)கத்தின் நிரந்தர ஓட்டு வங்கியாகவும், கருணாநிதியின் கழகத்திற்குச் சிறப்பு நிதி வழங்கியாகவும் தொடர்ந்து இருந்து, கருணாநிதியான தன்னை ஐந்தாவது முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் கிறிஸ்துவ சர்ச்களின் அமைப்புகளுக்கு கடமைப்பட்டவராக கருணாநிதி செயல்படுவதில் உலகில் தமிழர் மட்டுமல்ல வேறு எவர்க்கும் எந்த ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை.

கிறித்துவ ஆண்டு ஜனவரியில் வருவதால் தமிழ்ப்புத்தாண்டும் ஜனவரியில்தான் வருவது ஏற்புடையதாக கிறித்துவ சர்ச்களுக்கு இருக்கலாம். கருணாநிதியும் கிறித்துவ சர்ச்களுடன் உடன்பட்டுப் போவதில் உலகத்தமிழர் மட்டுமல்ல வேறு எவர்க்கும் எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை.

கருணாநிதி என்று தனிமனிதனாய் இருந்து இப்படியெல்லாம் செயல்பட்டால். ஆனால் மதசார்பற்று, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இன்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல்படுவேன் என்று முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கருணாநிதி இவ்விதம் செயல்படுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தாரா? என்று கிறித்துவத்தை கேள்விகேட்கும் மேற்கத்திய கிறித்துவர் இயக்கிய திரைப்படமான "தி டாவின்ஸி கோடு" திரைப்படத்திற்கு கருணாநிதி ஐந்தாம் முறை தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் இந்திய அரசை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் திரையிடத் தடை உத்தரவு பிறப்பித்த கருணாநிதியின் கிறித்துவ சர்ச்சுகளுக்கான செஞ்சோற்றுக்கடன் என்பது உலகத் தமிழர்களுக்கு ஒரு கண் திறப்பு சம்பவமே.

தேசமே தெய்வமாக வழிபடும் இராம பெருமானை எந்த எஞ்ஞினியரிங் காலேஜில் படித்து சேதுவை வடிவமைத்தார் என்று கேட்டு பகுத்தறிவையும் மதசார்பின்மையையும் கேட்போர் கிறு கிறுத்துபோகும் அளவுக்கு கிறித்துவ சர்ச்களுடைய கைப்பாவையாய் செயல்பட்டார் நம் முதல்வர் கருணாநிதி அவர்கள்!

தமிழகமெங்கும் அக்மார்க் தமிழ் ஆன்றோர்கள், தமிழ் முன்னோர்கள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக வாழ்ந்து என்று தமிழர்களது பாரம்பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழிபட்ட தமிழகத்தின் புராதான பண்டைய இந்துக் கோவில்களில் அனைத்திலும் இந்த 2008ம் ஆண்டு "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எந்த சிறப்பு நிகழ்வும் நடத்தக்கூடாது என்று கிறித்துவ சர்ச்களின் நிதிக்காகவும் கிறித்துவ ஓட்டுக்காகவும் மட்டும் நமது முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்து கொண்டு வாய்மொழியாக உத்தரவு போடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களில் கடைந்தேறிய அயோக்கியத்தனமாக உலகத்தமிழர்கள் உணர்கிறார்கள்.


அடுத்த சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மத சார்பற்ற தமிழக முதல்வர் பகுத்தறிவு மிகு திரு.கருணாநிதி அவர்கள் கிறித்துவ சர்ச்களின், இத்தாலிய அம்மையாரின் ஆசைக்கு இணங்கி தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்து ஆலயங்களில் இனி மூலவர் / உற்சவராக சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மட்டுமே தமிழ்க்கடவுளாக ஏற்கப்படுவார் என்று அறிவித்தாலும் அதிர்ச்சி அதிகம் இருக்காது வாழைமட்டையாகிவிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே!

எதிர்காலத்தில் வரும் 2009 சித்திரையில் வரும் தமிழ்ப் புத்தாண்டு "விரோதி" ஆண்டு என்பது கருணாநிதியின் கூமுட்டைத்தனமான செயல்பாடுகளால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் அவருக்குமான உறவைச் சொல்வதாக அமைந்துவிடும்.


சூடா இருந்தாத்தான் சூரியன்! சித்திரை ஒண்ணாம் தேதின்னாதான் தமிழ்ப்புத்தாண்டு!


அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, February 28, 2008

(189) சுஜாதா எனும் வரலாற்று மைல்கல்!

சுஜாதா காலமானார் என்ற செய்தி அறிந்தவுடன் என் மனம் கனத்து வெறுமையானது.

சுஜாதாவின் பாசாங்கு குறைவான சாமானியனுக்குப் புரிகிற மாதிரியான நாடகத்தனம் இல்லாத அவரது தமிழ் எழுத்து அவருடன் வாசகனுக்கு ஒரு நெருங்கிய மானசீகமான நட்பை, உறவை, இணைப்பை ஏற்படுத்துகிறது.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போன்ற அனுபவப்பகிர்வு எழுத்து அவரை ஓரளவுக்கு ஒவ்வொரு வாசகனும் தனிப்பட்டு அறிந்து கொண்ட நிறைவைத் தந்த உபயோகமான வழிகாட்டுதல் எழுத்து.

சுஜாதாவின் எழுத்து இரண்டு தலைமுறையையும் தாண்டி எளிமையான வெகுஜன சாமனியர்களை விரைந்து கவர்ந்திழுத்தது.

பெரும்பாலும் பொறியியல் படிப்பு, பெரிய நிறுவனத்தில் நல்ல உயர்ந்த வேலை என்று வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் முழுமையான தமிழில் எழுதுவது, பேசுவதை தவிர்க்கும் நமது சமூகத்தில் பொறியாளர்,விஞ்ஞானி, பெரிய நிறுவனத்தின் டைரக்டர் என்று வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றும் எளிமையாக தமிழில் அளவளாவி, தன் தமிழ் எழுத்துக்களால் வெகுஜனத்தைக் கட்டிப்போட்ட திரு. சுஜாதாவின் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது.

2000-ல் இங்கே குவைத்தில் "தமிழ் பொறியாளர்கள் அமைப்பு"(Tamil Engineers Forum-TEF) துவக்க விழாவில் கலந்து கொண்டு தமிழ் பொறியாளர்கள் அமைப்பு விழாவில் தமிழில் பேசாவிட்டால் சாப்பாடு கிடைக்காது என்று மிக எளிமையாக பேச்சைத் துவங்கினார். விழா முடிந்து இரவு உணவின் போது கையில் உணவுத்தட்டை ஏந்தியபடி மிக சகஜமாக அளவளாவிய எளிமையை வெளிப்படுத்திய அனுபவத்தை நினைவு கூர்கிறேன்.


சுஜாதா அவரது அறிவியல், கணினி விஞ்ஞானம், கதை, கவிதை, கட்டுரை, சினிமா, பொது அறிவு என்று தமிழில் அவரால் எழுத முடிந்த அவரது பன்முகத் திறன் அவருக்கு வெகுஜன சாமானிய மக்களால் தனித்து தனக்கென்று சாம்ராஜ்ஜியம் அமைக்க முடிந்ததற்கு காரணம்.

சுஜாதாவின் எழுத்துக்கு இருந்த வரவேற்பை அவர் வீட்டு சலவைத்துணிக் கணக்கை வாராந்திர பத்திரிக்கை வெளியிட்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்படித் தனக்கு இருந்த வெகுஜன ஆதரவை உணர்ந்து பொறுப்பாக அவரது தமிழ் எழுத்தில் கணிணி, அறிவியல் பதங்கள் என்று தமிழை செம்மொழி ஆக்கியதில் தனது பணியைச் செய்தவர்.

சுஜாதா மிக எளிமையாக்கிய திருக்குறளை படிக்கும் போது சுஜாதா பொறியாளராக, விஞ்ஞானியாக தமிழை மீட்டெடுத்து மீண்டும் வெகுஜன புழக்கத்தில் எடுத்துவருவதில் அவருக்கான பங்களிப்பை செவ்வனே செய்தவர்.

சுஜாதாவை பாகுபாடு இல்லாமல் வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு நன்கு அறியப்பட்ட தமிழ் ஆசானாகவே உணர்கிறேன். பரந்துபட்டு தனக்குக்கிடைத்த வாழ்க்கையினை கட்டுரைகளாக்கிய அனுபவப்பகிர்வின் மூலம் வெகுஜனங்களுக்குக் கிடைத்த வழிகாட்டியாகவும் உணர்கிறேன்.

ஒரு தமிழ் ஆசானை, ஒரு வழிகாட்டியை இழந்த இரட்டை சோகம்!

சுஜாதா என்ற ஒரு தமிழ் எழுத்தாளன் தன் மறைவால் இத்தனைக்கு இழப்பாக உணரவைத்திருக்கிறான்!

சுஜாதா ஒரு வரலாற்று மைல்கல்.


வெறுமையை உணரும் சுஜாதாவின் வாசகனாக,

ஹரிஹரன்

Monday, February 11, 2008

(188) சுய பரிமாறல் பிணங்களினூடே நான்

சென்னை மாதிரி பெரு நகரமானாலும், கிராமமானாலும் மனித உடல் எரியூட்டப்படும் இடம் சுடுகாடு! பிணமாகிவிட்ட மனித உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவது விறகினாலா அல்லது மின்சாராத்தாலா என்பது வேண்டுமானால் வேறுபடலாம். உடல் மனித மிருகத்தினுடையதாக இருப்பின்! சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டும் நபர் வெட்டியான்!

பிணம் எரிக்கப்படும் ஒரு சுடுகாட்டுக்கு வார இறுதியில் செல்லவேண்டும் என்று எந்த மனிதனும் விரும்புவதில்லை!

பிணம் எரிக்கப்படும் சுடுகாடுகளுக்கு நட்சத்திர அந்தஸ்து என்று தந்து மனிதன் வார இறுதி மற்றும் கொண்டாட்ட நாட்களைக் கொண்டாடுவதில்லை.

ஏனெனில் உயிரிழந்து பிணமான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்படுவது முற்றிலும் தன்னை ஒத்த உயிரினம் என்பதால்!

ஆனால் உயிருள்ள போது மனிதன் இதர பிராணிகளுக்குச் செய்யும் கொடுமைகளில் கொடூரமானது ஐந்து நட்சத்திர ஸ்டார் ஹோட்டல்கள் முதல் தட்டேந்தும் தள்ளுவண்டி உணவகம் வரை தினசரியாகக் காணப்படுவது!

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அலுவலக விஷயமாக சுயபரிமாறல் பஃபே லன்ச் ஆன் அல்லது டின்னர் என்றாலே பல்வேறு உயிரனங்கள் பிணங்களாக்கப்பட்டு பிணவாடை நிறைந்த அந்த நிகழ்வு என்னை வேறு தளத்தில் இட்டுச்செல்லும்.


தண்ணீரில் நீந்தும் மீனைப் பிணமாக்கிக் குடல்நீக்கிக் கொதிக்கும் எண்ணைய்ச் சட்டியில் போட்டு எடுத்து அடுக்கிவைக்கப்பட்டவை ஒருபுறம்!

ம்மே...ம்மே என்று நியுஸிலாந்தில் பிறந்து பாலைவன குவைத்துக்கு கப்பலில் பயணித்து பாலைவனத்தில் பட்டியில் அடைக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் "ஹலால்"முறைப்படி கொலை செய்யப்பட்டு Lamb Stewவாகி விட்ட ஆட்டுக்குட்டியை நிரப்பிய சுடுசட்டி இன்னொருபுறம்!

தான் வாழமுடிந்தவரையில் எந்த ஒரு சுடுசொல்லும் பேசியிருக்கமுடியாத வாயில்லா ஜீவனான காளையின் நாக்கு துண்டிக்கப்பட்டு Ox tongue என்று சிறப்பு உணவாக ஒருபுறம்!

மெக்கானிக்கல்,குவார்ட்ஸ், கடிகாரம் என்று காலம் உணர்திடும் கருவிகள் வருமுன்னே, இருள் கவிந்த அதிகாலையில் வெயில் கொண்டு விழும் நிழலால் காலம் உணர்த்திய ஆதவனைப்போல் மனிதனுக்கு அவனது பொக்கிஷமான காலம் தூக்கத்தில் விரயமாகாமல் பல்வேறு ஆக்கமான காரியங்களுக்கு உதவிட கொக்கரக்கோ என்று கூவியும்... தொடைதட்டி சவால் ஏதும் விடாமல் பக்..பக்..பக் என்றபடிக்கு இருந்த சேவக்கோழிகள் தொடையறுக்கப்பட்டு வறுக்கப்பட்ட Leg Pieces அடுக்கப்பட்ட தட்டு இன்னொருபுறம்.

ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, இறால் இதர உயிரினங்களின் நெஞ்செலும்பு, மூளை, தலைக்கறி, ஆட்டுக்கால்சூப்பு, குடல்குழம்பு, ஈரல், இரத்தப்பொறியல்-ன்னு மனிதன் மிருகங்களைப் பிணமாக்கி, அதைத்துண்டுகளாக்கி அதை நீராவியில் வேகவைத்தும், நேரடியாக நெருப்பில் வாட்டியும், எண்ணையில் பொரித்தும் என்று செய்யும் வெகுபிஸியான ஹைடெக் வெட்டியான்!

வெந்த அரிசிக்குள்ளே புதைக்கப்பட்ட வேகவைத்த பிராணியின் பிணத்தை பிரியாணி என்று மென்று தின்று கொண்டாடுகிறான்!

கரி நெருப்பில் பாதி எரிக்கப்பட்ட பிணத்தை பார்பிக்யு என்று பாராட்டுகிறான்!

ஐந்து நட்சத்திர Buffet உணவகக் காட்சி என்னை எப்போதும் நிலைகுலைய வைக்கும்! சுய பரிமாறல் செய்யப்படும் பல்வேறு வகைப் பிணங்களினூடே, மீன், நண்டு, இறால், ஆட்டுக்குட்டி சதை, மாட்டிறைச்சி எனப் பலவாக அடிக்கும் பிணவாசனைக்கு மத்தியில் மனம் முற்றுலும் ஒடுங்கிய நிலையில் ப்ளைன் ரைஸ் + யோகர்ட் (தயிர்) உண்ணும் யோகியாகி யோசிக்க வைக்கும்.

கொல்லப்பட்டு உண்ணப்படுவது நம்மை மாதிரியான அதே வகை உயிரினம் எனில் மட்டுமே நம்மால் கொடுமையை முழுதும் உணரமுடியும்!

நம்மில் வலிவானவன் நம்மை அடிமைப்படுத்தி வளர்த்து பின்பு நம்மில் சிலரைப் பிணமாக்கி, நமது செத்த உடலை மூளை, குடல், நாக்கு, சதை, நெஞ்செலும்பு, பிக் லெக் பீஸ், ஈரல் என்று ஈவு இரக்கம் இன்றிப் பலவகைகளில் நீராவியால் வேகவைத்து, நெருப்பில் சுட்டு, எண்ணையில் பொரித்து என்று பப்பே முறையில் பல விதமாகவும், நமது தொடை எலும்பினூடே இருக்கும் திரவத்தை உறிஞ்சி ரசித்து உண்டால் எப்படி?

நம் வீட்டுக்குழந்தை மாதிரிக் கொல்லையில் பேர் வைக்கப்பட்டு வளர்ந்த பிராணியை வராத விருந்தினர் வந்தார்ன்னு தண்ணிக்குள் முக்கித் திணறடித்தும், கழுத்தைத் திருகியும், தலையைக் கொய்தும் கொன்று அதன் பிணத்தை உணவாக உண்டு மகிழ்வது...சே! என்ன ஒரு கொடூரம்!

பிணமாக்கப்பட்ட கோழியின் உடலோடு மிளகாய், மிளகு, பூண்டு என்று சேர்த்து Chilly Chicken, Pepper Chicken, Garlic Chicken... அடப்பாவிகளா அடுத்தமுறை ஷேவிங் ரேஸர் கீறல்மீதும், அடுக்களைக் காய்கறி நறுக்கிய கீறல் சிராய்ப்பின் மீதும் மிளகாய், மிளகு, பூண்டு பூசிப் பாருங்க... ஊண் செய்து உண்ணும் பெருங்கொடூரம் உறைக்கும்!

இதிலே நவீன உரிமைக்குரலாக இந்த பண்டிகைக்கு ஒட்டகத்தைத் தான் அறுத்துப் பிணமாக்கி உண்டு களிப்போம் என்று தான் வாழும் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஒரு பிராணியைக் கொன்று பிரியாணியாக்கி உண்பது தங்கள் உரிமைக்குரல் என்று அடிமைத்தனம் நிரம்பிய ஒட்டக வெட்டியானாக விரும்பும் பாலைவன நம்பிக்கையாளர்கள்!

இதிலே கழுத்தை அறுத்துக் கொலை செய்வதில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பேச்சு!

தன் இருப்பை, பஞ்சபூதங்களை உணர்ந்து கொள்ளும் "கான்ஷியஸ்னஸ்" உள்ள, இதர சக பிராணிகளின் உயிரை எடுத்து பிணமாக்கி உணவாக்குவது இன்னொரு பிராணியான சிந்திக்க முடிந்த மனிதனுக்குள்ள உரிமையா? நிச்சயமாக இல்லை! முற்றிலும் இயற்கை ஸ்வரம் பிசகிய கொலை வெறி ஏறிய அசுரம்!


Cause and Effect நியதிப்படி இன்றைக்கு ப்ரைட்ய் லெக் பீஸ் , சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என்று ஊண் உண்ணும் பார்ட்டிகள் எல்லாம் பிறப்பு இறப்பு சங்கிலியில் அடுத்ததாக கொத்துக் கொத்தாக கோழிகளாகப் பிறந்து பறவைக்காய்ச்சல் என்று அறுபட்டு பிறப்பு நீக்கவேண்டி வரும்! After all Every Effect has to have a Cause!


பிராணிகளைக்கொலை செய்து உண்ணும் செயல்களின் விளைவுகள் அனைத்தும் தனக்கே திரும்பவரும்.

நான் மறை வேதங்கள் மற்றும் தமிழ்மறை சொன்ன வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் மனிதர்களை அறிவுறுத்தும் கோட்பாடு கொல்லாமை!

விலங்குகள் போல் இதர பிராணிகளின் பிணந்தின்னியாக மனிதன் வாழவேண்டிய கட்டாயம் இல்லை!

பகுத்தறிந்து கொல்லாமைக் கோட்பாடு பேணி வாழுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

(187) அபசகுனம் பார்த்தல்

இன்னார் முகத்தில இன்னிக்கு முழிச்சேன் நாளே நாசமாயிடுச்சு...என்று சகுனம் பார்ப்பது எனும் வழக்கம் சகட்டுமேனிக்கு நகரம் கிராமம் என்று பாகுபேதம் இல்லாமல் மக்களிடையே, ஆள்வோரிடையே பல நூறு ஆண்டுகளாக நீண்ட காலமாக இருக்கிறது.

சின்னக் கதை பார்க்கலாம்.

ஒரு அரசன் வேட்டையாட காட்டுக்குக் கிளம்பிச்செல்கிறான். செல்லும் வழியில் முகவெட்டு மோசமான மனிதன் எதிர்ப்பட்டு வருகிறான். காட்டில் வேட்டையாடும் போது குதிரை மீது இருந்து கீழே விழுந்து அரசன் காயமடைகிறான்.

காயம் பட்டது அரசன் அல்லவா? காலையில் தான் வேட்டைக்குச் சென்ற வழியில் எதிர்ப்பட்ட முகவெட்டு சரியில்லாத மனிதனைத் தேடி விசாரணைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு அரசாணை பறக்கிறது!

முகவெட்டு சரியில்லாத நபர் அரசவைக்கு கொணரப்படுகிறார்!
வேட்டையில் அரசன் குதிரையிலிருந்து கீழே விழ, காயம்பட காரணமாக முகவெட்டு சரியில்லாத அந்நபர் எதிரே வந்த சகுனமே என்று அரசன் கருதியதால் அம்மாதிரி அபசகுனநிலை எதிர்காலத்தில் தனக்கு நேர்வதைத் தடுக்க அந்நபருக்கு மரண தண்டனை வழங்குகிறான் அரசன்.

அரசாணைப்படி கொலைக்களத்திற்குக் காவலர்களால் இட்டுச்செல்லப்படுகிறான் முகவெட்டு சரியில்லாத மனிதன். மரண தண்டனை நிறைவேற்றப்படுமுன்பாக அவனது இறுதி ஆசை கேட்கப்படுகிறது.

தனக்கு ஏன் இந்த மரண தண்டனை என்பதை முழுவதும் விளங்கிக்கொள்ள முடியாத முகவெட்டு சரியில்லாத நபர் அரசனைக் காண விரும்புவதை இறுதி ஆசையாகச் சொல்கிறான்.

இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அரசனை சந்திக்க அழைத்துச்செல்கிறார்கள். இருவருக்கும் இடையே திரையிடப்பட்டு தன்னை ஏன் காண விரும்பினாய் என்று அரசன் வினவுகிறான்.

முகவெட்டு சரியில்லாத நபர் அரசனிடம் ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏன் என்கிறான். பதிலளிக்கும் அரசன் தான் வேட்டையின் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து காயம்பட்டது உன் முகத்தை எதிரே பார்த்த சகுனத்தால் தான் என்கிறான்.

மரண தண்டனை நபர் அரசே என்னைப் பார்த்ததால் தங்களுக்கு சிறு காயம் தான். என்னைப் பாருங்கள் உங்கள் முகத்தை பார்த்ததன் பலனாக மரண தண்டனைக்கு உள்ளாகிவிட்டேன்.


நரி மூஞ்சியில் முழிச்சா நல்லது... பூனை குறுக்கே ஓடினால் காரியத்தடை என்று மிருகங்கள் உலகத்திலும் நுழைவது அக்மார்க் அத்துமீறல்!

அபசகுனம் என்று அடுத்த நபர் மீதும், பரிகாரங்களின் மீதும் தனது பலகீனத்தை மறைப்பது மூடத்தனம்.

அபசகுன எபஃக்ட் மேம்படுத்திக்கொள்ள நிரந்தர மஞ்சள் துண்டு / பச்சை ஆடைன்னு பக்குவமா இருப்பது பகுத்தறிவான்னெல்லாம் ஆராய்ந்து தனிநபர் தாக்குதல் கேள்வி ஏதும் கேக்கக்கூடாது! :-))

அன்புடன்,

ஹரிஹரன்

(186) காதல்....ஐ லவ் யூ ப்ரோபோஸல்... பின் விளைவுகள்!

காதல்..காதல்..காதல்-பாகம்-1

காதல்..காதல்..காதல்-பாகம்-2

காதல்..காதல்..காதல்-பாகம்-3

பிப்ரவரி 14 வருது. முன்னெச்செரிக்கையா இருந்துக்குங்க! பல்லு போனவன் ப்ளூரைட் ஜெல் பேஸ்ட் விற்ற கதையாக இது:-))

என்னிடம் போட்டு வாங்கிய என் வாயாலேயே சொல்லிய விபரங்களை வைத்து எனக்குக் காதல் வியூகம் அமைக்க, எங்கே நான் பயத்தில் காதலைச் சொல்லுமுன் உளறி, சொதப்பிவிடுவேன் என்பதால், என் காதல் அறிவிப்பை ஆடியோ காசட்டில் பதிந்து சொல்லும்படி எனக்குத் தன்னார்வ காதல் டைரடக்கராகிய நண்பன் சைதாப்பேட்டை டி.ராஜேந்தர் என்னை இயக்கி அவன் திறமையை சோதித்துக் கொண்டிருந்தான். What to say? I was letting him to shoot from my shoulders??? :-)))

But I must confess, those were the MOST happiest, fun& laughter filled, high-energy days of my life!


நான் வேணாம் என்றாலும் அவனுக்கு இந்த டைரக்டர் போஸ்ட் மிகவும் பிடித்துப்போனது. சென்னையில் இருந்து திருச்சி வரை வேலை சம்பந்தமாக ரெண்டுபேரும் செல்லும் சந்தர்ப்பத்தை வலிய உருவாக்கிக்கொண்டு பாரத மிகுமின் நிறுவனத்தில் வேலையை அவசரமாக முடித்துக்கொண்டு மலைக்கோட்டையிலே இருந்த எனது தூரத்து மாமா வீடிருக்கும் தெருவரை வந்து தெரு முனையிலேயே அவன் டைரக்ஷனுக்குக் கிட்டிய ஒரே ஹீரோவான ஹரிஹரனின் சில பல கலவர, ரணகள முக எக்ஸ்பிரசன்கள் கண்டு கலவரமாகி, என் காதல் ஹை டிராமா கிளைமாக்ஸ் காதலைச் சொல்லிவிடாது மனசுக்குள்ளேயே முடக்கிக்கொள்ளும் முரளி -கதிர் படம் மாதிரி ஆகிவிடக்கூடது என்று என் நிழல் மாதிரி விடாது துரத்திய ஏழரையாக எனக்கு ஆரம்பமான என் ப்ராஜக்ட் காதல் தந்த ரிசல்ட் பற்றி
இந்தப்பதிவில் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன் :-))!

I wish I get such a wonderful, colourful days all again! This time I can SELF-direct myself SUCCESSFULLY better, as all mandatory ,strategic points can be CAREFULLY adhered to with a better (SELECTION of the)feasible Love Target!:-))


தனது காதலைத் தான் விரும்பும் பெண்ணிடம் சொல்லிவிடுவது என முடிவெடுக்கும் போது மிக முக்கியமாக "இல்லை" என நிராகரிக்கப்பட நேர்ந்தால் எப்படி ரியாக்ட் செய்வது, எதுமாதிரி எதிர்கொள்வது என்பது காதல் ப்ரொபோஸல் ப்ராஸஸில் முக்கியமான மாட்யூல்! பெரும்பாலும் காதல் ப்ரோபோஸல் செய்யும் எல்லோரும் செண்டிமெண்ட் / ஓவர் கான்பிடன்ஸால் இதற்குத் தன்னைத் தயாரிக்காமல் சாய்ஸில் விடும் விஷயம் இது! இதன் பின் விளைவுதான் தாடி, குடி, புகை, இருமல் என்கிறதெல்லாம்!

அதே மாதிரியாக பெண்களின் சாமர்த்தியமான "காதல் ப்ரொபோசல் ரிஜெக்டர்"-கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். முக்கியமாக காதல் கடிதம்-ப்ரொபோஸல் க்ரீட்டிங்ஸ் அம்புடன் வருபவரைச் சாய்க்கும் பிரம்மாஸ்திரமான "அண்ணா" என்று விளித்து சிதற அடிப்பது! இதுக்கும் அடங்காதவனை ஆகஸ்டட் மாதத்தில் முதல்"ராக்கி" கயிறு கட்டி சகோதரி பாசத்தை வெளிப்"படுத்திவிடுவது. இவற்றில் எதாவது ஒன்றுக்குத் தயாராக மனதைப் பக்குவப்படுத்திக்கொண்ட பின்னரே காதலைப் ப்ரொபோஸ் செய்வது நல்லது!

அதுவரையில் டைம்பாஸ் டீ-பொறை நண்பர்கள் வீரம் அற்றவன், வெட்டி.. இன்னபிற என்று ரேக்கி ஏற்றிவிடுவதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் தரவேண்டாம்:-))

அடடா! அண்ணனாக நினைத்தவளிடம் கடிதம் தந்துவிட்டேனே / ILU சொல்லிப் ப்ரோபோஸ் செய்துவிட்டேனே எனும் உளவியல் கலக்கம், கழிவிரக்கம் சார்ந்த டிப்ரஷென்கள் இந்த மனத்தயாரிப்புடன் போனால் மனநோயாகக் காதல் தோல்வியின் உப விளைவாக உள்ளே வராது!


காது கேட்காமலே செவிடாக இருந்தால் கூட பரவாயில்லை... ப்ரோபோஸ் செய்த பெண் அண்ணா எனச் சொல்வதைத் தெளிவாக உள்வாங்கிப் பின்னர் காயடித்த ஆடு மாதிரி தனிமையில் புகை, குடி போன்ற பழக்கத்தின் துணையோடு 7:1 டிஜிடல் எபெக்டில் காதிலே திரும்பத்திரும்ப அந்த அண்ணாவும், சூழலும் நினைவுகளில் உறைந்ந்து போய்விடும்!

கழிவிரக்கம், இயலாமை, சோகப்பாடல்கள் இவை மிகச்சரியாக காதல் நிராகரிப்பை நினைவூட்டும்! Tend to induce a conducive climate for reclussive life! செயற்கையாக தைரியமாக இருந்து, நகைச்சுவைப்படம் பாருங்கள்! வெற்றிக்கதைகள் படியுங்கள்!

"அண்ணா" என அழைத்து பிடிக்காத / சரிப்படாது என நினைக்கும் காதலை நிராகரிப்பது ரசாபாசம் தவிக்கும் பெண்களின்உத்தி! அவ்வளவே!

தினசரி டைம் பாஸ் டீ-பொறைக்காக உள்ளுறைந்திருந்த காதல் பண்பை "ஸ்டார்ட் மீஜிக்" சொல்லி ஆரம்பிக்க ஐடியா தந்த நண்பர்கள் நிலை "நிராகரிப்பு" எனும் இக்கட்டத்திற்குப் பின்னால் பரிதாபமாகும
:-))


நிராகரிக்கப்பட்டவனுக்கு அந்தி மாலையில் சூரியன் மறைவது தன் சோகத்தினைப் பார்த்துதான் என எண்ணத்தோன்றும்! காயடிக்கப்பட்ட ஆடு மாதிரி நகரமுடியாமல் சோகம் மனதில் பாரமாக அமுக்கும்! காதல் நிராகரிக்கப்பட்டவன் நிலை நிஜமாகவே ஐயோ பாவம் தான்!

ஆறடி உயரம், ஓங்குதாக்கான உடம்பு, தினசரி காலை 6 மணிக்கு 7'0 Clock பிளேடு போட்டு ஷேவிங் செய்து மாலை 4 மணிக்கே 5'0 Clock shadow வாக தாடி, மீசை எக்ஸ்பிரஸ்வேகத்தில் வளர்கிற ஆண்மை ஹார்மோன்கள் மிககுந்த நபரையும் இந்தக் காதல் நிராகரிப்பு தூக்கம் வராத இரவுகளில் துக்கம் மேலிட்டு தலையணை நனைக்க வைக்கும்!

தான் விரும்பிய பெண்ணால் காதல் நிராகரிப்பு என்பது ஒருவனுக்கு நியூக்ளியர் பியூஷன் மாதிரியான தொடர் எதிர்விளைவுகளை, பெரும்பாலும் எதிர்மறையாக ஏற்படுத்தும். குறைவான காலத்தில் பெருவாரியான விளைவுகள் மனத்தில் ஏற்படும்!

ஒரு இளைஞன் தன் காதலை சொல்லிவிடும் செயலோடு அவனுக்குள் Latentஉறைநிலையில் அதுவரையில் இருக்கும் பெரும் மனோசக்தியானது, ஹைவோல்டேஜ் மின்சாரம் மாதிரி உடன் உருவாகித் தயார் நிலையில் இருக்கும்! தான் விரும்பிய பெண்ணால் தனது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால் உடனே பெரு மகிழ்ச்சி, ட் ரீட், ஒரே பைக்கில் சுற்றுவது, ஒரு இளநீரில் ரெண்டு கொழாய் போட்டு உறிஞ்சுவது என்று இந்த சக்தி செலவாகிவிடுகிறது, வீட்டுக்குத் தெரிந்தால் அதை எதிர்கொள்ள இந்தச் சக்தி உருமாறி உதவுகிறது!

காதல் நிராகரிக்கப்படுகின்ற போது இளைஞனின் இந்த மனோ சக்தி, ஹைவோல்டேஜ் எனர்ஜி செலவாக வழி இல்லாமல் போகிறது. இந்த சக்தியானது உடனே வேறு உருப்படியான விஷயத்தில் முறையாகத் திருப்பி விடப்படவேண்டும்! இல்லையேல் இந்த ஹை எனர்ஜி அந்த ஆளை உருக்குலைத்துவிடும்! புகை,குடி, கஞ்சா, வெறுப்பு, பற்றற்றதனம், உலகம் தனக்கில்லை எனும் ஆதங்கம் காரணமாக தாடி மழிக்காமல், தலை சீவாமல், உடை மீது கவனம் காட்டாமல் தடம் பிறண்டு போக வழி அமைத்துத் தரும்!

ஏதாவது ஒரு நெகடிவ் இம்பாக்ட் ஏற்படுத்தியே தீரும் காதல் தோல்வி என்பது! தன் காதல் ராஜாங்கத்துக் கொடியை , காதல் மலையின் உச்சியில் நாட்டப் பயணித்த வேளையில், காதலி(??)யின் காதல் நிராகரிப்பால் ப்ரேக் பெயிலியர் ஆன வண்டியை, வாழ்க்கைப் பள்ளத்தாக்கில் பாய்ந்து உருளவிடாமல், வாழ்வனுபவச்சாலையோர மரத்தில் ஓரமாக இடித்து நிறுத்துவது மாதிரி சிறு இழப்போடு நிறுத்த முனைய வேண்டும். நான் தேர்ந்தெடுத்தது குறைந்தபட்ச(மாக எனக்குப்பட்டது) எதிர்மறை விளைவு புகைப்பு!

1992இறுதியில் ஆரம்பித்த புகைப்பழக்கம் பதிநான்கு ஆண்டுகள் கழித்து 2005ஏப்ரலில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாகப் புகைப்பதை அகில உலக டைரக்டரான இறைவனின் அருளாலும், இறைவன் தந்த சரியாய்ச் சிந்திக்கும் பகுத்தறிவினாலும் உணர்ந்து முற்றிலுமாக நிறுத்தியும் விட்டேன்!

தாய் தந்தையர் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமைதியாக வாழ்ந்திருந்தால் கிடைத்திராத வாழ்வை எதிர்கொள்ளும் அனுபவம், ஒரு நிராகரிப்பை, மறுப்பை அதுதரும் தளர்ச்சியை சமாளித்து சக்தியை வெற்றி நோக்கித் திருப்பிக்கொள்ளும் லாவகம் எனக்கு கிடைக்கப்பெற்றது!

காதல்... காதல்... காதல்...காதல் போயின் நன்கு வாழ்தல்!

அடுத்த பதிவில் ப்ரொபோஸல் ரிஜெக்டர்-2 ல் Combo-வான " உங்களை எப்பவுமே அண்ணனாகத்தான் நினைச்சேன்" ஆனா நான் மிஸ்டர்----- ஐ மிகவும் விரும்புகிறேன் Can U help me? என்று உங்கள் ஒருதலைக் காதலியால் நீங்கள் காதல் தியாகியாக ஆக்கப்படும் பெருங்கொடுமை Ever green Double Shot பட்டாசு சமாளிப்புகேஷன் பற்றிப்பார்க்கலாம் :-))

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, December 04, 2007

(185) ஈவெரா கொளுகைப்படி மானமிகு / இனமான தலைவனாவது எப்படி?

மடையா , மக்குன்னு மக்கள் பட்டப்பெயர் சூட்டிக் கலாய்ப்பதில் இருந்து மேம்பட்டு மானமிகு / இனமான என்று அடைமொழியோடு வானவில்லின் ஏதோ ஒரு கலர் துண்டு, சட்டை போட்டு உலா வரணும்னு ஆசைப்படும் மக்களுக்கு உங்கள் கனவு நனவாக இந்த ஐந்து ஸ்டெப் கொண்ட க்ராஷ் கோர்ஸ்.

மானமிகு -இனமான அடைமொழிகொண்ட தலைவன் ஆக ஸ்டெப் 1.

நாய் /பூனை/ஆடு/மாடு/கோழின்னு சகட்டு மேனிக்கு ஏதாவது ஒண்ணை தன் வீட்டில் வளர்க்கிற ஒரு பிரபலமான கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாய்சேகர்/நாய்பாஸ்கர் மாதிரி நபரிடம் கைத்தடியா சேர்ந்துடுங்க.

ஸ்டெப் 2.

பசித்திருந்து, தனித்திருந்து, வாய்ப்புக்கு விழித்திருக்க வேண்டியதில்லை.

அவசியம் மறக்காமல் தங்கள் உடன் எதிர்கால எவிடெண்ஸுக்கு வேண்டி ஒரு ஆளை கம்பெனிக்கு வச்சுக்குங்க!

ஆனா ஒரே ஒரு ஸ்டிரிக்ட் கண்டிஷன்! அவரும் இன்னொரு இனமான -மானமிகு தலைவனாகும் தீவிரமான கனவும்,எண்ணமும்டையவராக இருக்கணும்.

ஸ்டெப் 3:

நீங்க காத்திருந்தது வீண் போகலை. நாய் வளர்க்கும் பார்ட்டி உங்களை தீவனம் வாங்கி வரச்சொல்லிட்டாங்க.

ஸ்டெப் 4:

தெரு முக்கு சந்தைக் கடைக்குப் போய் அங்கேர்ந்து கீரைக்கட்டு /புண்ணாக்கு / நொய்யரிசித்தவிடு / பொறைன்னு எதையும் வாங்காம நோட்டம் விட்டுட்டுவந்துடணும்!

ஸ்டெப் 5:

இப்போ மிருகத்துக்குத் தீவனம் வாங்கிட்டு வரச்சொன்னவர் வெறும் கை வேந்தனா வந்து நிக்கும் உங்களைப் பார்த்து கேட்குமுன் நீங்களே சொல்லிடுங்க

1. நான் ஏன் நாய்க்கு பொறை வாங்கலை தெரியுமா? தமிழினாத்தின் உணவு அரிசிச்சோறு! பொறை வடநாட்டான்களின் உணவான கோதுமையால் செய்யப்பட்டதுன்னு!

முக்கியமா இந்த வரலாற்று இனமானப் போராட்டப் பாசறைப் பயிற்சியை உங்க கூட இருக்குற கூட்டணி ஆள்கிட்ட மேட்டரை அப்டேட் செஞ்சுக்குங்க!

நாளைக்கு நாயைப் பட்டினி போட்டு ஆரம்பிச்சு, பேவரிட் உணவா தந்தூரி ரொட்டி சாப்பிட்டபடிக்கு, இனமான மானமிகு தலைவனா கோலோச்சி 75 வயசு விழாவில் உங்க கோதுமை மறுப்பு கொள்கைப் பிடிப்பைப் பாராட்ட வசதியா இருக்கும்!

என்ன சந்தேகம் நாயைப் பட்டினி போட்டா ப்ளூக்ராஸ்கிட்ட மாட்டிப்போம்னா?

அட நீங்க வேற! நாய்க்கு கிடைக்க இருந்த பாலை கிடைக்க விடாம விழுந்து கெடுத்து நாயைப் பட்டினி போட்டா மானமிகுன்னு பட்டம் தமிழ்நாட்டில் மேடைபோட்டு நாமளே நமக்கு தந்துக்கிட்டதை சிலாகிக்கலாம்!

இந்த விஷயம் தெரிஞ்சா தெருநாய்கூட மதிக்காதுன்னு பொது அறிவு சொல்லுதா?

உங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு! தெருநாய்கூட மதிக்காத செயலைச் செஞ்சீங்கன்னா நீங்க சந்தேகமே இல்லாம்ம பகுத்தறிவுப் பகலவனின் பிரதான் சீடரா உருவாகிட்டீங்க!

கையைக் குடுங்க கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க 101வது மானமிகு-இனமானத் தலைவன் இன் த மேக்கிங்!

குறிப்பு: டிஸ்கி:கி.வீரமணி சாரோட 75வது பிறந்த நாள்விழாவில் அவரது ஈவெரா வின் கொள்கைப்பிடிப்பை முதல்வர் மு.கருணாநிதி பேசிய புளகாங்கித பேச்சுக்கும் இதுக்கும் நோ சம்பந்தம்!


இப்படிக்கு,

வெளியே அதிகம் தெரியாத இன்னொரு மானமிகு-இனமானத் தலைவன்
ஹரிஹரன்

நான் இனமான-மானமிகுவான கதை சிறு குறிப்பாக உங்கள் பார்வைக்கு:
(பசியோடு இருந்த நாய்க்கு தெரு முக்கு நாயர் சாயா கடையில் பால் வாங்காமல் நாயர் தமிழனே அல்ல! மலையாளி என்று கொள்கைப்பிடிப்பைக் காட்டி மானமிகு-இனமானத் தலைவனானவன். எனக்கு இப்போது 39வயது இன்னும் 36 வருடம் கழித்து எனது கொள்கைப்பிடிப்பை எனது கஞ்சாக்கருப்பு மாதிரியான நெடுநாள் தோழனைவைத்து பிரகடனம் செய்வேந் விழாவில் அனைவருக்கும் அருகாமை அச்சுதன் நாயர் கடை சாயாவையும் சப்ளை செய்வேன்

அறிவிப்பு:
இந்த மானமிகு-இனமானத் தலைவன் ஆகும் கோர்ஸ் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கவும். கோர்ஸ் உள்ளடக்கம்-மேம்பாட்டுக்கான வாசகர் டிப்ஸ் வரவேற்கப்படுகின்றன.

Monday, December 03, 2007

(184) ஈவெராவின் கொளுகைக் களுதையை 100% பின்பற்றிய வீரமணி...புளகாங்கிதப்படும் கருணாநிதி...

தமிழ்நாட்டின் தற்போதைய டாப் நகைச்சுவை நடிகர் யார்?

கைப்புள்ள வடிவேலுவோ சின்னக் கலைவாணர் விவேக் என்றோ நினைத்தால் தவறு. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்!

நேற்றைக்கு இந்த சாதனையை கருணாநிதி இப்படி நகைச்சுவையாகப் பேசி நிகழ்த்தியிருக்கிறார்:

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி. பெரியார் தனது நாய் குட்டிக்கு பால் வாங்கிவரும்படி வீரமணியிடம் கூறினார். கடைக்கு சென்ற வீரமணி பால் வாங்காமல் திரும்பி வருகிறார். பெரியார், ஏன் பால் வாங்க வில்லை என்று கேட்டதற்கு பிராமணர் ஓட்டலாக இருந்ததால் வாங்கவில்லை என்று வீரமணி கூறியுள்ளார்.


பெரியார் பிராமணர் ஓட்டலில் எதுவும் வாங்க கூடாது என்று கூறியதற்காக நாய்க் குட்டிக்கு கூட பால் வாங்காமல் வரும் அளவுக்கு அவ்வளவு பிடிவாதமாக கொள்கையை காப்பாற்றியவர் வீரமணி என்கிற போது புளகாங்கிதம் அடைந்தேன்.
என்னையே பாராட்டிக் கொள்கிறேன் எவ்வளவு பெரிய சகோதரனை பெற்றிருக்கிறேன்.


ஈவெராவுக்கு மெய்யாவே கொளுகைன்னு ஒன்னு இருந்துச்சா???
ஈவெராவின் கொளுகையை அவரே பின்பற்ற நினைத்ததில்லை!

எக்ஸாம்பிள்ஸ் சிலது பார்க்கலாம்:

ஈவெராவின் தந்தை வழிச் சொத்து முழுதும் ஈவெராவுக்கு கிடைக்கும்படி நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத்தந்தவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் எனும் பிராமணரே!

கருணாநிதியின் குடும்ப மருத்துவர், வக்கீல், ஆடிட்டர் எல்லோரும் பிராமணர்களே!

பொய்ப் பகுத்தறிவுப்பால் ஊட்டி சமானியத் தமிழர்களை நோஞ்சான் நாய்க்குட்டிகளாக்கிவிட்டு வெட்கம் என்பதே இல்லாமல் எப்படிங்க இப்படி?

மிஸ்டர் ஜோக்கர் கருணாநிதி??? ஷேம் ஆன் யூ!

அடுத்து மூடநம்பிக்கையைப் பற்றி

பெரியாரின் கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர் வீரமணி.

எப்படிங்க இப்படி? ஈவெராவுக்கே இல்லாத கொள்கையை எப்படி கண்ணைமூடிக்கொண்டு பின் பற்றி?? யே..அப்பா காமெடி இவ்வளவுக்கு கொட்டிக்கிடக்கு?

அப்புறம் கி. வீரமணி சார். இன்னொருவாட்டி அடுத்தவர்களின் மூட நம்பிக்கை பற்றி நீங்க பேசாதீங்க!

இன்னொரு விஷயம். உங்க நகைச்சுவைக் கூட்டணி நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது. வடிவேலு + விவேக் + கஞ்சாக்கருப்பு காம்பினேஷன் காமெடி எல்லாம் சும்மா ஜூஜூபி!

கங்ராஜுலேஷன்ஸ் டு மு.கருணாநிதி + கி.வீரமணி

கொசுறு நியூஸ்: பொய்ப் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா எனும் நிரந்தர கொளுகை நகைச்சுவையாளனுக்கு கஞ்சாக்கருப்பு கருணாநிதியும் கைப்புள்ள கி.வீரமணியுமாச் சேர்ந்து பகுத்தறிவு நகைச்சுவைத் தலைநகரமாம் சென்னையில் 95 அடியில் சிலை வைக்கப்போறாங்களாம்.

சப் கொசுறு நியூஸ்: ரஷ்யா, மற்றும் ஐரோப்பாவில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் டிரான்ஸ் மைக்ரேட்டரி பறவைகள் சங்கம் 95அடி உயரமான டாய்லட் வசதியை தங்களுக்கு வழியில் சென்னையில் ஏற்படுத்தித் தருவதற்காக நன்றியை பகுத்தறிவு நகைச்சுவை இளையர்களான கஞ்சாக் கருப்பு கருணாநிதிக்கும் கைப்புள்ள கி.வீரமணிக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன!

அரசியல் திரா"விட" பெத்தடின் பகுத்தறிவுகளின் கொளுகைக் களுதையை நினைச்சு சிரிங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, December 02, 2007

(183) தமிழ் மொழியில் அறிவியல் கல்வி சாத்தியப்படும் அவசியமா?

பிளஸ்டூ வரைக்கும் தமிழ்வழியில் கல்வி கற்று 85% மதிப்பெண் பெற்ற மாணவன் பொறியியல் கல்வி ஆங்கிலத்தில் இருந்ததால் விளங்கிக்கொள்ள இயலாமல் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு மாண்டு போன செய்தியை வைத்து தமிழிலேயே பொறியியல் கல்வி படிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.

தமிழிலேயே அனைத்து பொறியியல் துறைகளிலும் கல்வி சாத்தியமா?
ஏரோநாட்டிக், பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட் ரிகல், எலக்ட் ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று இந்த அனைத்து பொறியியல் பாடங்களின் தமிழ் வடிவம் அதன் சூத்திரம், சூட்சுமங்கள் என அனைத்தும் தமிழ் மூலத்திலேயே அமைந்து சாமானிய கிராமத்து மாணவர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்கிறதா?

மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் தமிழ் எந்த அளவுக்கு இருக்கிறது?

உதாரணமாக வேதியலில் ஹீலியம், ஹைட் ரஜன், நைட் ரஜன், வாயுக்கள் தமிழ்ப்படுத்தப்படுமா மற்றும் வேதிக்குறியீடுகளான H2O, NaCl, K, N, He, போன்றவை தமிழ்நாட்டு லைசன்ஸ் ப்ளேட் ஸ்டைலில் தமிழாக்கப்படுமா?

கணிதத்தில் 1,2 3...9 என்பது தமிழ் எண்களாக்கப்பட்டு தமிழ்படுத்தப்படுமா?
Fourier Transformation, Vector, Aljebra போன்றவை எவ்விதம் பயிலத்தக்கவகையில் முழுமையாய்த் தமிழ்ப்படுத்தப்படும்?

குறைகடத்தி என்று Semi Conductors ஐத் தமிழாக்கித் திருப்திப்பட்டுக்கொண்டு மின்ணணுவியலின் பிரதான விஷயங்களான Thyrister, Silicon Controlled Rectifier, Diac, Triac,Microprocessors, Transistors, இன்ன பிற மின்ணணு குறைகடத்திக் கருவிகள் செயல்படும் முறைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழில் பயிலத்தக்கவகையில் முழுமையாகத் தமிழ்படுத்தப்படுமா?

அடுக்களைக் கரப்பான் பூச்சி உயிரியலில் Periplaneta americana என்றழைக்கப்டுவதும், தோட்டத்து செம்பருத்திப்பூ hybiscus Rosa Sinenis என்று அழைக்கப்படுவது தமிழ்வழி அறிவியல் கல்வியமைப்பில் எங்கனம் தமிழ்ப்படுத்தப்படும்?

தாவரவியலின் Malvaceae, Fabaceae, Solanaceae, மால்வேசி, ஃபேபெசி, சொலனேசி இன்ன பிற தாவரகுடும்பப் பெயர்கள் வேசி, ஏசி என்று வசையாய் இருப்பதாய் எண்ண நேரிடும் நிலை தவிர்க்க மால், பெப, சொல என்று குறுக்கப்பட்டு தமிழ்ப்படுத்தப்படுமா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?

ஜப்பானியர், ஜெர்மானியர், ப்ரஞ்சு, டச்சுக்காரர்கள் தாய் மொழியில் அறிவியலை படிக்கிறார்கள்! எப்படி சாத்தியமாகிறது இந்த தேசங்களில் தாய்மொழிக்கல்வி??
இந்த தேசங்களின் கல்வித் திட்டத்தில் "ஓட்டு" அரசியல் கிடையாது.
தாய்மொழி மெய்யாக பேணப்பட வேண்டும் எனும் அக்கறையில் நாடகத் தன்மை இல்லை.

ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் ஹெல்முட் கோல் / ஜெர்ஹார்டு ஷ்ரோடர்/ஆஞ்சலா மெர்க்கல் வழி நில், என்று புதிய ஆத்திச்சூடி பாடி இளைஞர்களை ஜெர்மன் மொழி பேண வழி நடத்துவதில்லை.

ப்ரான்சில் ஜாக்குஸ் சிராக் / நிக்கோலஸ் சர்கோஸி வழி நில் என்று பிரஞ்சு ஆட்சியாளர்கள் கதறி கலம்பகம் பாடுவதில்லை!

ஜப்பானிய ஆட்சியாளர்கள் தம் நாட்டு மக்களை டொஷிகி கய்ஃபூ / யூனிச்சிரோ கொய்சூமி வழி நில் என்று வழி நடத்துவதில்லை.

ஜெர்மனி ஹிட்லரை உருவாக்கிய தேசம் என்பது வரலாறு என்ற போதும் ஜெர்மனியின் சகல சாதகமற்ற விஷயங்களுக்கும் / நிகழ்வுகளுக்கும் ஹிட்லரின் சமூகத்தவரே காரணம் என்று 1945ல் இருந்து ஜெர்மனியின் ஆட்சியாளர்கள் பழிசூட்டும் விளையாட்டை மட்டும் விளையாடுபவராக இல்லை.

ஜப்பானின் சமூராய் இனத்தவர் போர்வெறியால் கிழக்கு ஆசியா முழுதும் பல சேதாரங்கள் செய்தவர் என்பது வரலாறு. ஜப்பானின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட, பல லட்சம் ஜப்பானியர்கள் தாய்நாட்டின் ஹிரோஷிமா நாகசாகியில் மடிய நேர்ந்த நிலைக்கு சமுராய் இனத்தவர்களின் போர்வெறியே வித்து. ஜப்பானிய ஆட்சியாளர்கள் சமுராய் இனத்தவரைக் கைகாட்டிப் பழிக்கும் வேலையை 1945ல் இருந்து செய்யவில்லை.

பிரஞ்சு அரசன் பதினாறாம் லூயியின் மோசமான அரசாட்சி ப்ரஞ்சுப்புரட்சி, கலவரத்துக்குக் காரணமானது என்பது வரலாறு. பிரான்ஸில் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் லூயி பரம்பரையினர் மீது பழி போடும் சாதனையை மட்டும் 1800ல் இருந்து செய்ய வில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் சிந்தனையின் தரம், செயல்பாட்டுத் திறமை, ஜெர்மனி, ஜப்பான், ப்ரான்ஸ் தேசத்தின் ஆட்சியாளர்களுடன் ஒப்பீடு செய்யத் தக்க அருகதையுடன் இருக்கிறதா?

அருகதை அற்ற ஆட்சியாளர்களால் ஆளப்படும் தமிழ்நாட்டில் ஆசை மட்டும் இருந்து என்ன பயன்?

"அரசு சொத்தை ஆட்டையா போடணும்னா...அண்ணாவழி நில்" எனும் புத்தம்புதிய அரசியல் திரா"விட" பெத்தடின் ஆத்திச்சூடி படித்து தமிழுணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

தமிழிலேயே பொறியியல் கல்வி கற்க அரசியல் சார்பற்ற, சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளில் இருக்கும் அறிவார்ந்த கல்வியாளர்கள் ஒன்று பட்டு பல காலம் உழைத்து பயிலத்தக்க அறிவியல் பதங்களுடனான பாடங்களை உருவாக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தமிழை விற்கும் கலைநயமிக்க வியாபாரிகள் தமிழுணர்வாளர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்து தொடரும் நிலை இருக்கும் வரையில் முழுமையான, முறையான தமிழ் வழிக் கல்வி என்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இருப்பதாக உணர முடியவில்லை.

அதுவரையில் அவரவர் வயதுக்கு ஏற்றார்போல இத்தனை ஆண்டுகளாக தமிழ் உணர்வு எனது ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது என்று சொல்லி நடமாடும் ஊறுகாய் பாட்டில்களாக உலா வரலாம்! (ஊறுகாய்கள் நக்கப்படும் அபாயம் இருப்பதால் டாஸ்மாக் பக்கம் போகும் போது கவனமாயிருக்கவும் )


வரலாற்றுப்பாடத்தில் கடையேழு வள்ளல்கள்னு கம்பீரமா படிச்சது நவீன புவியியல் பார்வை கொண்டு, ஈவெரா தோன்றி 100% சாதியை மறுத்து/ஒழித்து விட்ட தமிழ்நாட்டில் லேட்டஸ்டா சிவாஜி அங்கவை சங்கவை மேட்டருக்குப் பின்னாலே அதியமான், பாரி வள்ளல்களே வன்னியர்னு பின்நவீனமா சிந்திக்க ஆரம்பிச்சாச்சு.

இந்த மாதிரியான பார்வை 100% தமிழ்வழியில் கற்கும் பாடத்திட்டத்தில் பிரதிபலிக்காது என்பதற்கு உத்திரவாதம் மாணவர்களுக்கு உண்டா?

எலக்ட்ரிகல் டெக்னாலஜியின் அடிப்படை விதிகளான Thevenin's theorem, Norton's theorem என்பவை தேவனின் தியரம், நாட்டார் தியரம் என்று சாதி வளையத்துக்குள் வந்துவிடாமல் தமிழ்ப்படுத்தும் முயற்சியாக அம்பேத்கார், ஈவெரா, தாளமுத்துநடராசர் பெயரிடப்படுமா?

மின்னியலின் மிக அடிப்படை விதியான "ஓம்" விதி Ohm's Law இந்து அடிப்படைவாதம் பேசுவதாக இசுலாமிய-கிறித்துவர் மனம் புண்படும் விதத்தில் பெயர் அமைந்துவிடுவதை தடுக்கும் விதமாக "சமத்துவ விதி" எனப் பெயரிடப்பட்டு இந்துத்துவத்துக்கு சம்மட்டி அடிதரும் விதம் மதசார்பின்றி தமிழ் படுத்தப்படுமா?


அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, November 18, 2007

(182) உதவி தேவை: சென்னை சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு

இணையத்தில் உலாவரும் இளகிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இன்றிலிருந்து 365வது நாள் எனக்கு நாய் குணம் ஆரம்பிக்கும் 40 வயது ஆரம்பிக்கும் (இப்பவே அப்படித்தானே எனும் தீர்க்கதரிசி நண்பர்களுக்குச் சொல்ல ஏதும் இல்லை)

இந்தப் பதிவு வாயிலாக சென்னை போரூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சாதாரண கூரியர் கம்பெனியில் வேலைசெய்துவரும் இளைஞனுக்கு உதவி கோருகிறேன்.

கடந்த 30-அக்டோபர்-2007 அன்று தனியார் கூரியர் கம்பெனியில் வேலை செய்யும் கமல்குமார் எனும் 29வயது இளைஞனை அவர் சென்ற பைக்கை ஒரு வேன் மோதிவிட்டு ஹிட் அண்டு ரன் என நிற்காமல் சென்று விட்டது.

பைக்கில் தலைக்கவசம் அணிந்து சென்றபோதும் ஹெல்மெட்டின் கண்ணாடி தலையில் குத்தி மூளையில் இறங்கி காயப்படுத்தியிருக்கிறது. விபத்து நடந்த போருர் பகுதி பொதுமக்கள் உடனடியாக சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷனில் சேர்த்திருக்கிறார்கள்.

சுந்தரம் மருத்துவமனை அட்மிஷன் கார்டு



சுந்தரம் மருத்துவமனை ரிப்போர்ட்


விபத்தில் சிக்குண்டு தலையில் அடிபட்டு மூளைக்காயம் அடைந்த இளைஞன் கமல்குமார் சாதாரணமான வருவாய் கொண்ட மத்திய தரக்குடும்பத்தினைச் சார்ந்தவர். முறையான மருத்துவம் செய்தால் விரைந்து காயங்களில் இருந்து மீண்டு விடலாம் என்பது மருத்துவமனையினர் நம்பிக்கை. தினசரி ரூ.10,000/- செலவு செய்து சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொருளாதார சக்தி இல்லாத குடும்பம்.

என்னால் இயன்ற உதவியாகச் சில ஆயிரம் ரூபாய் உதவி செய்திருக்கிறேன். ஊர்கூடி உதவினால் இந்த இளைஞன் காயங்களிலிருந்து மீண்டு மறு வாழ்வு பெறுவார்.

பொருளாதார உதவியாகவோ, சகாயமான - இலவச சிகிச்சையாகவோ உதவும்படி வேண்டுகிறேன்.

உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு செல்வம் Mob: No: 9994477784

திரு கமல்குமார் வீட்டு முகவரி:

V. கமல்குமார்,
1/115 ஈஸ்வரன் கோவில் தெரு,
பாடிய நல்லூர்,
ரெட் ஹில்ஸ்,
சென்னை -600 052
தொலைபேசி: 65379022

இன்னலில் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் இளகிய நெஞ்சங்கள் தமிழ் வலைப்பூக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்ந்திருப்பதாலேயே இந்தப் பதிவைப் பதிகிறேன்.

நம் போன்ற முகம் அறியாத பல நண்பர்கள் செய்யும் சிறிய அளவிலான பொருளாதார உதவி ஒரு குடும்பத்திற்கு அவர்களது மகனை கொடூர சாலை விபத்தின் படு காயங்களிலிருந்து மீட்டுத்தரும் சக்தி உடையது.

சிகரெட், பான்பராக்,கட்டிங்-குவார்ட்டர், பீட்ஸா-கோக், இன்னபிற லாகிரி வஸ்துக்களை இந்த ஆண்டின் இறுதிவரை பாதியாகக் குறைந்த்துக் கொண்டு அந்த நிதியைக் கொண்டு உதவினால் விபத்தில் படுகாயப்பட்ட இளைஞனுக்கு மறுவாழ்வு தரலாம் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டியும் விபத்தில் சிக்கி தலைக்காயம் அடைந்து அவதியுறும் 29 வ்யது இளைஞன் திரு. கமல்குமாருக்கு கவசமாக இருந்து இணையத்து தமிழன்பர்கள் மூலம் நிதியுதவி-சிகிச்சை உதவி கிட்டச்செய்து காக்குமாறு முருகப்பெருமானை உளமாற வேண்டியபடி எனது இன்றைக்கு எனது 39வது பிறந்தநாள் தினத்தைத் துவக்குகிறேன்.

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, October 23, 2007

(181) இந்தியன் ரயில்வே - பெஸ்ட் ஆஃப் இந்தியா

இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்தியாவை வடக்கில் ஹிமாச்சலில் ஆரம்பித்து - பஞ்சாப் பதன்கோட்டில் இருந்து தெற்காக சென்னைக்கு 2800 கிமீ தூரத்தை ஹரித்வார்-டில்லி வழியாக ரயிலில் 48 மணிநேரம் பயணித்தது தனி அனுபவம்.

ஐரோப்பாவின் மேற்கத்திய லண்டன் நகரிலிருந்து ஐரோப்பாவின் கிழக்கு முனை நகரமான இஸ்தான் புல்லிற்கு இடையே இருக்கும் தூரம் கிட்டத்தட 2700 கிமீ.

லண்டன்(இங்கிலாந்து) - பாரீஸ்(ப்ரான்ஸ்) 350 கிமீ
பாரீஸ் - ம்யூனிச்(ஜெர்மனி) 685 கிமீ
ம்யூனிச்- வியன்னா(ஆஸ்திரியா) 350கிமீ
வியன்னா -ப்யூடாபெஸ்ட்(ஹங்கேரி) 220கிமீ
ப்யூடாபெஸ்ட் - புசாரெஸ்ட்(ரொமானியா)650 கிமி
புசாரெஸ்ட்- இஸ்தான்புல்(துருக்கி) - 445 கிமீ


இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்கு ரயிலில் கிளம்பினால் மூன்று இரவுகள் ரயிலில் பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள இரண்டாம் வகுப்பில் ஒரு நபருக்கு 400 யூரோ கட்டணம் 400 x 55 = Rs. 22,000/-

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முதாவியிலிருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு இடையே இருக்கும் தூரம் 3739 கிமீ 4 நாட்கள் 96 மணி நேரம் பயணிக்க வேண்டும்
கட்டணம் குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 2900/-, மூன்றடுக்கு குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 1950/- தூங்கும் வசதி இரண்டாம் வகுப்பில் ரூ 690/-

இந்திய ரயில்வே சந்தேகமே இல்லாமல் க்ரேட் ஓவர் ஆல் பெர்பார்மர். (லாலுவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை)

எந்த நேரத்திலும் ஆறு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மேலும் கீழுமாய் டில்லி-சென்னைக்கு இடையே ஓடுகிறது!

டில்லி, சென்னை ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன்களில் வசூலிக்கும் காசுக்கு ஏற்ற அளவில் உணவுப் பண்டங்களின் தரம் இருக்கிறது.

டில்லி ரயில்வே கேண்டீனில் மண்சொப்புவில் (பாறை)இட்லிக்கு சாம்பார் வாங்கிச் சாப்பிட்டது டிபிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்! (மண் சொப்புவுக்கும் லாலுவுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு)

தமிழகத்தில் கன்னியாகுமரி, குஜராத் கட்சில் இருக்கும் Okha, இவை இந்தியா தேசத்தின் விளிம்பில் இருக்கும் ரயில் நிலையங்கள்!

ஊட்டி, சிம்லா ரெண்டு இடங்களில் மட்டும் குறுகிய ரயில்பாதை மலை ரயில் இருப்பதாக நம்மில் பலர் நினைப்பதைத் தாண்டி பஞ்சாப் பதான் கோட்டில் இருந்து ஹிமாச்சல் பிரதேஷ் ஜோஹீந்தர் நகருக்கு நேரோ கேஜ் பொம்மை மலை ரயில் ஓடுகிறது.

இந்திய ரயில்வேயின் முழு நெட்வொர்க்கையும் இந்த மேப்பில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ரயில் நெட்வொர்க்கை விட மிக விஸ்தாரணமான நெட்வொர்க் இந்தியன் ரயில்வே நெட்வொர்க்.

வால்யூ பார் மணி இந்தியன் ரயில்வேயில் உத்திரவாதம்.

சதாப்தி ரயில்கள் வேகம் + வசதிகளில் மேம்பட்டிருக்கிறது.

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவிக்கு 3739 கிமீ தூரம் ஓடும் நெடுந்தூர வாராந்திர ரயில். திருவனந்தபுரம் - கௌஹாத்தி 3300 கிமீதூரம் ஓடி தெற்கிலிருந்து கிழக்கை இணைக்கிறது.

இந்தியன் ரயில்வேயில் பல்வேறு தரங்களில் பயண வசதி ரயிலில் கிடைக்கிறது.
வரிசைப்படி மிகுந்த முதல் தரமான ரயில் சேவை கிடைப்பது:
முதலிடம்- ராஜதானி துரித ரயில்கள்
இரண்டாம் இடம்- சதாப்தி, ஜன-சதாப்தி துரித ரயில்கள்
மூன்றாம் இடம் -சம்பர்க்ராந்தி துரித ரயில்கள்-
நான்காவது இடம் கரீப் ரத்-ஏழைகளின் ரதம் துரித ரயில்கள்
ஐந்தாம் இடம் - இதர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்


இந்தியன் ரயில்வேயில் முன்னுரிமை தந்து அவசரமாக சில மாற்றங்கள் எடுத்துவரவேண்டும்:

1. தற்போது ரயில்களில் நடைமுறையில் இருக்கும் ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லெட் மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

இந்த ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட் மாறினாலே ரயில் நிலையங்களில் துர்நாற்றம், ஈக்கள், கொசுத்தொல்லை,பெருச்சாளிகள் தொல்லைகள் 80% குறைந்துவிடும்.

தற்போதைய தினசரி துப்புறவு,சானிடேசன் செலவுகளில் பெரும்பாலானதை அடுத்தகட்ட பயணிகளின் வசதிகளை மேம்படுத்தலாம்.

குறிப்பாக 100% ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கலாம்.

அதிகமான பயணிகள் வந்துபோகும் பிசியான ஸ்டேஷன்களில் கூடுதலாக நாற்றம் குறைந்த பல கழிப்பிடங்கள் ஏற்படுத்திப் பராமரிக்கலாம்.

2. பான்பராக் தயாரிப்பாளர்கள் ரயில்வே ஸ்டேஷன் சுத்தப்படுத்தும் செலவுகளில் 50% ஏற்கவேண்டும் மீதியை சிகரட் தயாரிப்பாளர்கள்+குளிர்பான தயாரிப்பாளர்கள் ஸ்பான்ஸர் செய்யவேண்டும்.

3. பயணிகளில் பான்பராக் போட்டு சகட்டுமேனிக்குத் துப்புபவர்களை அப்போதுதான் பயணிகள் ரயில் வந்து போன ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தின் தண்டவாளத்தை ஒருமணிநேரம் கட்டாயம் சுத்தப்படுத்தும் பொறுப்பைத் தரவேண்டும்.

இந்திய ரயில்களில் ரயில் நிலையங்களுக்குள்ளே பயணிப்பதை / இருப்பத்தைத் தவிர்த்து, இந்தியன் ரயில்வேயின் ரயில்களில் பயணிப்பது இணையற்றது.

இந்திய ரயில்வேயின் ரிசர்வேசனுக்கு இணையில்லை! திறமையாக, விரைந்து செயல்படும் மக்கள் உணரும் சேவைகளில் இந்திய ரயில்வேயின் இணைய முன்பதிவு / எங்கிருந்தும் எந்த ரயிலுக்கும் முன்பதிவு என்பது உலகத் தரமான விஷயம்.

மொத்த ஐரோப்பா ரயில் நெட்வொர்க்கைக் காட்டிலும் பரந்த கட்டமைப்பு, ஸ்டேஷன்கள், ரயில்கள் அதிகம் இருப்பது இந்தியரயில்வேயில். ஆன்லைனில் ரிசர்வேசன் செய்துகொள்ளலாம். உள்ளூர் முகவரி தந்தால் மூன்று நாட்களில் கொரியரில் அனுப்பிவிடுகிறர்கள். இல்லை இந்தியாவில் பயணத்தைத் துவங்கும் நாளில் டில்லி, மும்பாய், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், ஆமதாபாத், கொச்சி போன்ற பெரிய ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தியா வந்ததும் கலெக்ட் செய்து கொள்ளலாம்!


தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் Pantry Car கல்யாண வீடு மாதிரி பரபரப்பா டீ, காபி,குளிர்பானம், இட்லி, வடை, பொங்கல், சாம்பார், மசால்தோசை, ப்ரட் சாண்ட்விச், மதிய மீல்ஸ், மாலையில் பக்கோடா, மெதுவடை, சிப்ஸ், இரவு சூப் , மீல்ஸ் என்று ரவுண்டு கட்டி விற்பனை செய்கிறார்கள். விலை கொஞ்சம் கூடுதல் என்றாலும் நகரும் ரயிலில் கிடைக்கும் வசதிக்கும் , வெரைட்டிக்கும் சமாதானம் செய்துகொள்ளலாம்.


இந்திய ரயில்வேயின் டெலஸ்கோபிக் கட்டணமுறை இன்னொரு ஆச்சரியம். சென்னை to மதுரை 500கிமீ தூரத்திற்கு ரூ. 230 கட்டணம் சென்னை to ஜம்மு 2800 கிமீ தூரத்திற்கு ரூ 570 கட்டணம். ஒரே தேசமாக இந்திய யூனியனாக இருப்பதால் இந்தக் கட்டணமுறை சாத்தியம்.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிப்பதிலே பெரிய மகிழ்ச்சி. பல்வேறு விதமான மக்களோடு 36 மணிநேரம் பயணிக்கும் கலகலப்பு நிறைந்த பெரிய வாய்ப்பு.
வீட்டில் பெரும்பாலானோர் தேர்வான ஏசி பெட்டியைத் தவிர்த்து வெகுஜன கலகலப்பான சூழலை அனுபவிக்க வேண்டி சாதாரண தூங்கும் வசதிப் பெட்டியை வற்புறுத்தியிருந்தேன். நான் சற்று பயந்தது ஜூன் மாத மத்தியபிரதேச, நாக்பூர், ஆந்திரா வெய்யில் உக்கிரத்தை எண்ணியே. தெய்வம் அருள் புரிந்தது. ஜான்ஸியில் பெய்ய ஆரம்பித்த மழை சென்னை வரும்வரை சூரியன் குளிர் மேகத்துகுள்ளேயே இருந்துகொண்டார். இயற்கை அன்னையே மொத்த ரயிலுக்கும் குளிர்சாதனம் செய்து தந்தது.

90களில் இருந்த ரயில் பெட்டிகளை விட புதிய இரண்டாம்வகுப்பு பெட்டிகளில் மினரல்வாட்டல் ஹோல்டர், யுடிலிடி நெட், முகம் பார்க்கும் கண்ணாடி என்று கூடுதல் கொஞ்சம் வசதி செய்து தந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக அனைத்து பெட்டிகளையும் கரப்பு-பூச்சித்தொல்லையிலிருந்து பெஸ்ட் கண்ட்ரோல் சிலமாதங்களுக்கு ஒரு முறை செய்வது தரும் பலனைக் கொஞ்சம் உணரமுடிகிறது.

இடார்சி தாண்டி விந்திய மலைக்குடைவுகள் வாயிலாக பயணிக்கிறபோது சட்டென்று இருட்டி வெளிச்சம் மீண்டு வருவது மும்பை தடத்தில் லோனாவாலா-புனே ரயில்வே டன்னல்களை நினைவூட்டுகிறது. அப்பர் பர்த்தில் பகலில் ஏறிப் படுத்துக்கொண்டு சடசடசட என்று பாலங்களில் இசை எழுப்பிய படி ரயில் செல்வதை ரசித்தபடி பயணிப்பது அந்த ரயில் அனுபவத்தை நினைவுகளில் பதியவைக்கிறது.

இந்திய ரயில்வேயின் எலக்டிரிக் டிராக்ஷன் (மின்மயமான தடங்கள்) பிரமிப்பு இன்னும் இருக்கிறது. விமானம் தவிர்த்த இந்திய பொது மக்கள் போக்குவரத்தில் சகாயமான விலையில் 125 கிமீ வேகத்தில் தொடர்ந்து செல்ல முடிவது சூப்பர் பாஸ்ட் ரயில்களால் தான்.
புதுடில்லியிலிருந்து சென்னைக்கான 2200 கிமீ தூரத்தை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 9 ஊர்களில் மட்டும் நின்று செல்கிறது.

இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான ஒரே பெரிய குறை ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட். மக்களுடன் நேரடியான தொடர்பு இருக்கும் இந்திய அரசுத்துறைகளில் சிறப்பான நிர்வாகத்திறன் இருப்பது முதலிடம் தபால் துறைக்கு இரண்டாவது இடம் ரயில்வே என்பது எனது எண்ணம்.


அன்புடன்,


ஹரிஹரன்

Monday, October 22, 2007

(180) பெஸ்ட் ஆஃப் இந்தியா & பெஸ்ட் ஆஃப் ஐரோப்பா

இமயமலையின் க்ளாசியர் பனிக்கட்டி உருகி கங்கையாக ப்ரவாகமெடுத்து மலையினின்று இறங்கி வெகு வேகத்துடன் பூமியைத் தொடும் இடம் ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் இங்கே கங்கை நீர் கலங்கலாக மணல்துகள்களுடனும், கொளுத்தும் 45டிகிரி சம்மர் வெய்யிலிலும் ஆற்றுநீரில் ஐந்து நிமிடம் அமிழ்ந்திருந்தால் உடல் மரத்துப்போகும் குளிர்ச்சியோடு இருக்கிறது. ரிஷிகேஷில் குளித்தால் கண்,மூக்கு, காது எல்லாம் நுண்மையான மண்துகள் மயமாகிவிடும்!

ரிஷிகேஷிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் பூமியில் ஓடி வந்து ஹரித்வாரில் கங்கை நீரில் மணல் துகள் நிறையவே மட்டுப்பட்டு விடுகிறது. கங்கையின் ஆர்ப்பரிக்கும் வேகம் படித்துறையிலேயே தெரியும். பாதுகாப்புக்கு இருக்கும் இரும்புச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு குளித்தல் அவசியம். படித்துறையில் அமர்ந்து கொண்டு ஆற்றின் ஓட்டத்துக்கு குறுக்காக காலை நீட்டினால் காலை ஒடித்துவிடும் வேகத்துடன் ஓடுகிறாள் கங்கை!

டெல்லி வெய்யிலில் அலைந்த சூடு தணிக்கும் படுகுளிர்ச்சியான கங்கைக்குளியல். எண்பதுகளில் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது கோடை விடுமுறை நாட்களில் வைகையாற்றில் குளித்ததை அடுத்து நான் அதிகமாகக் குளித்தது கங்கையில் தான் (1991, 2007) (ரெண்டு தரத்துக்கே இவ்வளவு பில்டப்பான்னு டென்ஷனாகாதீங்க)

ஹரித்வாரில் கங்கை நீரை பாட்டிலில் பிடித்தால் வேகம் காரணமாக turbidity கலங்கல் அதிகமாக இருக்கிறது. சிலமணி நேரம் கழித்து Crystal clear ஆகிவிடுகிறது மிகச் சொற்பமான வெண்ணிற Sand Residues பாட்டிலின் அடியில்.

குறுகலான வாயுடைய பெட் பாட்டிலில் புரண்டோடும் அதிவேக கங்கையில் பாட்டிலை நீரோடு விட்டுவிடாமல் நீரை ரொப்புவது என்பது தனி அட்வஞ்சர்!

இமயத்திலிருந்து நதியாக உருவாகி வங்காள விரிகுடா கடலில் கலக்கும் வரை கங்கைநதியின் நீளம் 2510 கிமீ. கங்கை நதி உத்ராகண்ட், உத்ரபிரதேஷ், பீஹார், மேற்கு வங்காளம், வங்க தேசம் எனப் பாய்ந்தோடி வளப்படுத்தி கடலில் கலக்கிறது.


ஐரோப்பாவில் டான்பெ Daunbe நதி ஜெர்மனியில் கருங்காடுகளில் உருவாகி மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா முழுவதும் பாய்ந்தோடி நிலத்தால் சூழப்பட்ட கருங்கடலில் கலக்கிறது.

Germany ,Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Bulgaria, Romania, and Ukraine என்று 9 தேசங்கள் வழியாக 2850 கிமீ தூரம் பயணிக்கிறது டான்பெ நதி.

இயற்கையை, நதியை தெய்வமாக வழிபடும் சனாதன கலாச்சாரம் நிரம்பியிருந்த பாரதத்தில் ஓடும் கங்கையை காசியில் பாதி எரிந்த பிணங்கள் மிதக்கும் காட்சியாகக் கண்டால் பாரம்பரிய கலாச்சார-தத்துவ பிணைப்பு சிதைந்து போனால், சுயநல சூப்பர்ஸ்டிஷன் மட்டும் நிரம்பிய தினசரி வாழ்வியல் பேணும் மூடர் கூட்டமாக நம்மக்கள் வாழ்வது தெரிகிறது.

ஐரோப்பாவில் நதிகளைப் பேணுகிறார்கள். அனைத்து ஐரோப்பிய பெருநகர்களூடாக நதிகள் ஓடுகின்றன. ஐரோப்பாவில் நதிகளை சாலை, ரயில் போக்குவரத்துக்கு இணையாக முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

கங்கையாவது ஆன்மீகத் தலைநகரமான வாரணாசி நகருக்குள்ளே சுயநல மூடநம்பிக்கையாளர்களால் சில பல கிலோமீட்டர்களுக்கு மாசுபடுத்தப்பட்ட நதியாக இருக்கிறது.

தமிழகத் தலைநகரில் மூட நம்பிக்கைகளை உடைத்த பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் சென்னை நகருக்குள்ளே ஒடுகின்ற கூவம் நதி, அடையாறு நதிகளின் பவித்ரமான தூய நிலையை நினைத்துக்கொண்டேன்!

நதியை தெய்வம் என்று தொழுதவர்களே தமிழர்கள். தெய்வமே இல்லை எனும் கொள்கையுடையோர் ஆட்சிக்கு வந்து 40 ஆண்டுகள் கோலோச்சி தலைநகர் சென்னையின் நதிகளில் இருந்த தெய்வத்தை வெற்றிகரமாக விரட்டிவிட்டார்கள்!

பகுத்தறிவான செயல்பாடுகளால் இன்றைக்கு தமிழ்நாட்டின் எந்த நதிகளிலும் நீர் ஓடினால் அது செய்தி எனும் நிலை! தெய்வம் நீங்கிய ஆட்சிகளால் தமிழகத்து நகரங்களில் ஓடும் நதிகளில் அரசியல் திரா"விட" பகுத்தறிவு மட்டும் நிரம்பி ஓடி பெரிதாய் மணக்கிறது!

எங்காவது ஒரு பெரிய நகருக்குள் நல்ல நீர் நிரம்பி ஓடும் நதிகளைக் காணும்போதெல்லாம் இந்த ஆதங்கம் பெரிதாக எனக்குள் வரும். சென்னையில் வாழும் தமிழனாயிருப்பதில் ஒரு வசதி எனக்கு! வெட்கப்படுவது என்பது மறந்துவிட்டது!

அடுத்த தலைமுறைக்கு நதிகள் மாதிரியான இயற்கைச் செல்வங்களை எப்படி விட்டுச்செல்வது என்பதை ஐரோப்பாவின் டான்பெ நதியைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

தமிழன் என்ற இன உணர்வுடன், பகுத்தறிவோடு சிந்தித்து திட்டம் தீட்டி தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து ஆட்சி நடத்தும் திரா"விட" கட்சியினரது வாழ்நாள் சாதனைகளான கூவம் ஆறு, அடையாறு இவற்றின் நிலையினைப் பார்த்து அடுத்த தலைமுறையினர்க்கு இயற்கைச்செல்வங்களை எப்படியான நிலையில் விட்டுச்செல்லக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

அன்புடன்

ஹரிஹரன்

Sunday, October 21, 2007

(179) தமிழின முப்பாட்டன் இராவணன்..அருணகிரிநாதர் எனும் ஆரிய அடிவருடி!!

தமிழின வரலாறு வலைப்பூ வழியா கத்துக்கிட்டா எங்க ரீச்சாவீங்க? பதில் பதிவின் கீழே!

இட்லிவடையின் இந்தப்பதிவில் படித்த தொல்.திருமாவளவன் தந்த புல்லரிக்கும் வரலாற்று விளக்கம் இது:


"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்" - விடுதலைசிறுத்தை திருமாவளவன்


இன்றைய எனது இணைய மேய்ச்சலை நீட்டி இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு தந்த விளக்கத்தைப் படிக்கையிலே, அருணகிரி எப்படிப்பட்ட பச்சையான ஆரிய அடிவருடி என்பதை தமிழின துரோகியான அருணகிரியின் இந்தப்பாடல் விளக்கிவிட்டது.

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!


தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழின முப்பாட்டனான இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டிச்சாய்த்தவன் முருகப்பெருமான்னு எழுதியிருக்கும் அருணகிரி மட்டும் இன்னிக்கு இருந்திருந்தா சிறுத்தையா பாய்ஞ்சு அவரோட அருணாக்கொடியைப் பிடித்து தலையைச் சுத்தி வீசுவதில் தமிழின எதிரி அருணகிரி தமிழின முப்பாட்டன் இராவணனின் தேசத்தில் போய் விழவேண்டியிருக்கும்!


முத்தமிழுக்கும் முதல்வன் முருகப்பெருமான். முருகன் அக்மார்க்/ISO தரம் பெற்ற ஒரிஜினல் தமிழ்க்கடவுள். ஆகவே முருகப் பெருமான் தமிழின முப்பாட்டன் இராவணனின் பத்து தலைகளைத் தன் கூரிய வேலால் எப்படிக் கொய்திருக்க முடியும்???


அருணகிரிதான் அந்தக்காலத்திலே ஓ போட்ட ஆ.வி.ஞானி ! தமிழின் மீது பற்று இருப்பது மாதிரி தமிழின முப்பாட்டன் இராவணனது பத்துத் தலைகளை தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வைத்தே வேலால் கொய்ய வைத்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்தாலே லெமூரியாக் கண்டம் மூழ்கி தமிழினம் பிரிந்த வரலாறு புரிபடும்!

இப்படிப்பட்ட தமிழின துரோகியான ஆரிய அடிவருடி அருணகிரிநாதர் திருஅண்ணாமலையின் உச்சியிலிருந்து குதித்தபோது தமிழ்க்கடவுள் முருகன் தோன்றி அவரைக் காத்தது மட்டுமின்றி அருணகிரியின் நாக்க்கில் முத்தமிழின் அப்டேட்டட் வெர்ஷனை கூர்வேலால் என்க்ரிப்ட் செய்தும் விட்டார் என்று புரட்டையும் பரப்பியவர் அருணகிரிநாதர்!


ஆதியிலிருந்தே தமிழனுக்கு நகைச்சுவை அதிகம்! இணையத்தில் இறைந்து கிடக்கிறது தமிழினமான நகைச்சுவைகள்! சிறுத்தை மாதிரி பாய்ந்து தாக்குகிறது சிறப்பான நகைச்சுவை.

குவிஸ் பதில்: தமிழின அரசியல் வாதியின் வரலாற்று விளக்கம் மூலமாக, மேற்கொண்டு இணையத்தில் தமிழ்வலைப்பூ வாயிலாக வரலாற்றைப் படித்தால் நீங்கள் ரீச்சாகும் இடம் சென்னையின் கீழ்ப்பாக்கம், வேலூரின் பாகாயம்!


அன்புடன்

ஹரிஹரன்

Wednesday, October 03, 2007

(178) ஹேப்பி பர்த் டே காந்திஜி!

பாரதத்தின் சுதந்திரப்போராட்டம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் காந்திஜி.

காந்திஜியின் சுதந்திரப்போராட்டங்கள் என்றதும் நினைவுக்கு வருவது உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்.


இங்கிலாந்தில் இருந்து பாரதம் வரும் கப்பல்களில், சீரான கடல்பயணத்திறக்காக கப்பலின் சீரான எடை நிரவலுக்காக உப்பு மூட்டைகள் கப்பல்களின் அடித்தளத்தில் நிரப்பிக்கொண்டு பாரதம் நோக்கிப் பயணிக்கும்.

இந்தக் கப்பல்கள் இங்கிலாந்துக்கு திரும்பச் செல்லும் போது பாரதத்தின் எண்ணற்ற வளங்களைக் கொள்ளையடித்து மூட்டை கட்டி எடுத்துச் செல்லும்.

இங்கிலாந்தில் இருந்து வந்த கப்பல்களின் மூலம் இப்படி நிறையச் சேர்ந்துவிட்ட உப்பை
என்ன செய்வது என்று யோசித்த ஆங்கிலேய அரசு, பாரதமக்கள் இங்கிலாந்து உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உள்நாட்டு உப்புக்கு வரிபோட்டு உத்தரவு போட்டது.
இதனால் இங்கிலாந்து உப்பு உள்நாட்டு உப்பை விட மலிவான விலைக்கு கிடைக்கும் சூழலை ஏற்படுத்தியது இங்கிலாந்து அரசு.


மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பரந்து பட்ட பிரிக்கப்படாத பாரத நாட்டில், பாரத மக்கள் ஏன் வெளிநாட்டு உப்பை தங்கள் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்நாடு உப்பு மீது விதிக்கப்பட்ட வரியை நீக்கவேண்டும் என்று காந்தியடிகள் எதிரிப்புத் தெரிவித்தார்.

எதிர்ப்பு தெரிவிப்பதோடு இல்லாமல் ஆங்கிலேய அரசின் உத்தரவைத மீறி, உப்புச் சத்தியாகிரஹம் எனும் சுதேசி உப்புக் காய்ச்சும் போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார்.

ஆங்கில அரசு உப்புப் பெறாத இன்னுமொரு முட்டாள் போராட்டத்தை காந்தியடிகள் முன்னெடுப்பதாக அசட்டையாக நினைத்தது.

12 மார்ச் முதல் 06 ஏப்ரல் வரை 1930 ஆண்டில் காந்திஅடிகள் உப்புக்காய்ச்சும் போராட்ட யாத்திரையை 400 கி.மீ தூரம் நடந்து மேற்கொண்டு தண்டி கடற்கரையில் நடத்தினார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடந்தது.



தண்டி கடற்கரையில் உப்புக் காய்ச்சும் காந்தியடிகள்

ஆனால் பாரதம் முழுவதும் மக்கள் முழுமையாக இணைந்து போராடும் போராட்டமாக உப்புச்சத்தியாகிரகம் உருவெடுத்தது. பிரிக்கப்படாத பாரதத்தின் முப்புறமும் நிறைந்த பரந்துபட்ட கடற்கரைகள் அனைத்திலும் பாரத மக்கள் கூடிச் சேர்ந்து ஆங்கிலேயர்களின் அரசுக்கு தமது கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவிக்க ஏதுவான எளிமையான போராட்டமாக உப்புச்சத்தியாகிரகப்போராட்டம் வலுப்பெற்றது.

ஆங்கிலேய அரசு மக்கள் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது.
காந்தியடிகள் பாரத மக்களிடையே நடைமுறைப்படுத்திய ஒத்துழையாமை போராட்டத்தில் வெகுஜன மக்கள் திரளாகப் பங்கேற்ற நிகழ்வுகளில் முக்கியமானது உப்புச்சத்தியாகிரகப் போராட்டம்.

கடல்நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றுவது என்பது தான் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டம். மிக எளிதான போராட்டம். ஆனால் மக்களின் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் போராட்ட மன உறுதியை பன்மடங்கு ஏற்றிய போராட்டம்.

முதல் நபர் கடல் நீரை எடுத்து வந்து கடற்கரையில் ஊற்றுவார். ஆங்கிலேயபோலீஸ் சட்டத்தை மீறியதற்காக அந்த நபரை தடியால் அடித்து மண்டையை உடைத்து தண்டிக்கும்.

அடுத்ததாகப் போராட்டம் செய்ய வேண்டிய ஆள் (பொதுஜனம்) முதலில் போராட்டம் செய்து வெள்ளைக்காரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடியால் அடிபட்ட நபருக்கு முதலுதவி செய்து விட்டு, அடுத்து தனக்கு இதே நிலை தான் என்பதை அறிந்த, தெரிந்துகொண்ட நிலையில் கொள்கைப் பிடிப்போடு கடல் நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றிய படிக்கு உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இப்படி பாரத தேசமெங்கும் அமைதியாக கொள்கையுடன் உப்புக்காகப் போராடும் பல லட்சம் பேரை வெள்ளைக்கார போலீஸ் அடித்து துன்புறுத்தினாலும் இறுதியாக தோல்வி கண்டது.

பல்வேறு சூழல் நிலையில் இருந்த பொது மக்களை கொள்கையால் ஒருங்கிணைத்துச் செல்லும் திறன் அஹிம்சைப் போராட்டத்திற்கு மட்டுமே உண்டு என்று உலகிற்கு உணர்த்தியவர் காந்தியடிகள்.


மதுரை வந்த காந்தி அப்பகுதி மக்கள் வறுமை நிலை கண்டு வருந்தி அவர்கள் நிலை மேம்படும் வரையில் தனக்கு ஆடம்பர உடை தேவையில்லை என்று சொல்லி தனது எஞ்சிய வாழ்நாள் முழுதும் நாலுமுழ வேட்டியே அணிந்தார்.



அரைவேட்டி உடையுடன் இங்கிலாந்து பிரதமர் வீட்டின் முன் காந்தியடிகள்


Ireland, Kosovo, Serbia, Srilanka, Malaysia, மத்திய கிழக்கு என்று பல தேசங்களில் அதன் தலைவர்கள் மதம் கொண்டு மக்களை (தரம்)பிரிக்கையில், பாரதத்தை மதம் கொண்டு முகம்மது அலி ஜின்னாவும், ஆங்கிலேயரும் பிரித்த பின்னரும், மதத்தின் காரணமாக இந்தியாவை விட்டுச் செல்லவேண்டியதில்லை... தொடர்ந்து வசிக்கலாம் என்று இந்தியாவின் பெரும்பான்மை மதத்தினரை மத உணர்வுரீதியாக பெருந்தன்மையாக, சகிப்புத்தன்மையை முன்னெடுக்கவைத்த உண்மையான மக்கள்தலைவர் காந்தியடிகள்.

காந்தியடிகளின் கொள்கைகளால்தான் இன்றைக்கும் பாரத தேசத்தின் வெகுஜன மக்கள் ரசிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டில் பிற மதத்து அசாருதீன்கள் தலைமையேற்கவும், இர்பான் பதான், ஜாஹீர், முகம்மது கைப்-கள் தொடர்ச்சியாக விளையாடவும், அகம்மதி போன்றோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, முகம்மது ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதியாக வலம் வர முடிகிறது.

காந்தியடிகளும் (முகம்மது அலி ஜின்னா போன்று) மத ரீதியாக இசுலாமிய மக்கள் பாகிஸ்தான் போயே ஆகவேண்டும் என்று நிலைப்பாடு எடுத்திருந்தால், இன்று இந்தியர்களாக (ஜஹாங்கீர்) ரத்தன் டாட்டா, அப்துல்கலாம், அஜிம் பிரேம்ஜி போன்றோர் நம்மிடையே இருந்திருக்க முடியாது போயிருக்கும். இவர்கள் தத்தம் திறமையால் வெற்றி அடைய அவர்கள் திறமையை மதம் தவிர்த்த மனதால் ஏற்றுக்கொள்ளும்படியான All inclusive Pluralistic சமூகமாக பாரத சமூகம் தொடர முக்கியமான சமயத்தில் தருமமான முடிவை 1947ல் எடுத்த உன்னதமான தலைவர் காந்தியடிகள்.

பாரதத்தின் சனாதன தருமம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் all inclusive தன்மை உடையது. காந்தி பாரதப்பிரிவினையின் போது Hindu Exclusive தேசமாக இந்தியா உருவாவதை எதிர்க்கவைத்தது சனாதன தரும all inclusive பாரதப் பாரம்பரிய சித்தாந்தமே.

பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு, சாக்குச் சணலில் கைதி உடை அணிந்து உடல் முழுதும் அரிப்பெடுத்து சொறிந்து சொறிந்து உடல் புண்ணாகி சீழ்பிடித்து சிதைந்து மடிந்த பல்வேறு முகம் தெரியாத பாரத சுதந்திரபோராட்ட வீரர்களை காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று நினைத்துக் கொள்கிறேன்.

வெளிஉலக சுதந்திரம் கிடைக்கும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் டீன் ஏஜ் மாணவனுக்கு முதல் எதிரியாக எள்ளலுக்கு உள்ளாவது அவனது சொந்தத் தந்தைதான்.
இத்தனைக்கும் மகன் கல்லூரிப்படிப்பும் விடுதி வாழ்க்கை என வெளிஉலகில் சுதந்திரமான சூழலில் இருந்து அனுபவம் பெற அடிநாதமாய் இருப்பது தந்தைதான்.

இன்றைய சுதந்திரமான சூழலில், படித்த பாரத தேச இளைஞர்கள் நமது தேசத்தந்தையான காந்தியடிகளை இப்படித்தான் தங்கள் இஷ்டத்துக்குப் பேசுவது என்று ஏகமாக எள்ளி நகையாடுகிறார்கள்.

இருபது ஆண்டுகள் முன்பாக தந்தையின் காசில் விடுதியில் தங்கிப் படித்த கல்லூரி மாணவன் தான் நான். சொந்த அப்பனையே எந்தப் புரிதலும் இல்லாமல், விடுதியிலும் நேரிலுமாக அப்போது நையாண்டிகள் பல செய்தவன் தான் நான்.

காந்திக்கு இருந்த சமூக அக்கறையில் புள்ளி அளவுக்கு இல்லாமலே அவர் செயல்களை ஒப்புக்கொள்ளாது விமர்சித்தவன் தான் நான்.

இன்று என் தந்தை எனது வெளிஉலக, பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தந்த கல்விக்காகச் செய்த தியாகமும், உழைப்பும், ரத்தத்தை வியர்வையாகச் சிந்திய அருமையை உணர்கிறேன்.

அதே மாதிரியே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் அருமையை உணர / விமர்சிக்க எவருக்கும் உண்மையில் ஒரு அருகதை வேண்டும் என உணர்கிறேன்.


ஹாப்பி பர்த் டே காந்திஜி!

Let us think of Reflecting some of the Gandhian values in our day to day life.

அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, September 27, 2007

(177) பெண்ணடிமைத்தனம் made easy to understand

பெண்ணடிமைத்தனம்னு முழங்கி மேம்பட்ட-பெரியாளாகும் பகுத்தறிவு முயற்சி இல்லை இப்பதிவு.

குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி.

உண்மையில் தன்னடிமைத்தனமான பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

அம்மாவாய் சில பல மாதங்கள் முயற்சித்து, தானே முன் நின்று அலசி,தேடித் தெரிவு செய்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கி திருமணம் செய்வித்த மகனின் வாழ்க்கையில் திருமணமான சில நாட்களில்(வாரங்களில், மாதங்களில், வருடங்களில்)அதே அம்மா சொல்வது:

மகனே நீ உம் பொண்டாட்டி நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆட்டமா ஆடுவேன்னு நான் கனவுலேயும் நினைக்கலைடா... (ஆண்)மகனுக்கு ஜென்மச்சனி உச்சத்துக்கு பெயர்கிறது.

இதுக்காடா உன்னை பெத்து வளர்த்து படிக்கவச்சு நானும் உன் அப்பாவும் ஆளாக்கினது? (அப்பாவின் விருப்பம் இல்லாமலே இந்த அம்மா-மருமகள் எனும் இரு பெண்கள் மேட்டரில் அவரும் அய்யோ பாவத்துக்கு உள்ளுக்கு இழுக்கப்படுகிறார்)

அம்மாவுக்கு என்ன ஆச்சு காலங்காத்தால? என்னைத் தாளிக்கிறா? என்று குழம்பிய படியே மகன் தன் அறைக்குள் சென்றால்... அங்கே இன்ஸ்டண்ட் கண்ணீருடன் மனைவி... உங்கம்மா என்னைத்தானே சொன்னாங்க? நீங்க கேட்டுட்டு ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க? ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆகியாச்சு இன்னும் அம்மாக்கோண்டுவாக அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே நடப்பீங்க்களா? என்னை "யார்" என்ன சொன்னாலும் பரவாயில்லையா?

குளிக்க அவசியமில்லாமல் மனைவியின் அங்கலாய்ப்பு அருவியில் குளித்து வரும் (ஆண்)மகன் ஹாலில் அப்பா பேப்பருக்குள் வசதியாக தன்னை மூழ்கடித்துக்கொண்டதில் ஏதோ ஒரு சாமர்த்தியம் இருப்பதை மெல்ல உணர்கிறார்.

இப்படி விடுமுறை தினத்தில் அம்மா, மனைவின்னு ரெண்டு பேரும் எப்படா விடியும்னு காத்திருந்தது இப்படி தன் தலையில் வந்துதான் விடியணுமா?ன்னு க்ராஸ்பய்யரில் மாட்டிக்கொண்டுவிட்ட தன் அவலநிலையை (ஆண்)மகன் நொந்துகொண்டு இருக்கும் போதே தனது மகள் வந்து அன்றைய நாளேட்டில் வந்த க்ராஸ்வேர்டு-குறுக்கெழுத்துப் புதிருக்கு வகபுலரியில் உதவ வேண்டியதை ஏற்காமல் மறுத்த மறுவிநாடி அந்தச் சின்னப்பெண்ணோ, அவள் அம்மாவாகிய தன் மனைவி தந்த பாலபாடம் முன்னெடுத்துச்செல்ல" போ..அப்பா... உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்ற சர்டிபிகேட் தந்து மும்முனைத்தாக்குதலில் (ஆண்) மகனை ஆழ்த்திடுகிறாள்.

சோபாவில் பேப்பர் கொஞ்சம் கீழிறங்கி மறைந்திருந்த அப்பாவின் முகம் கண்கள் அளவுக்குத் தெரிய அந்தக் கண்களில் அதீத அனுதாபம் தென்படுவதாக உணர்கிறார் (ஆண்)மகன்.


மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அம்மா தனியாக இருக்கும் நேரத்தில் மனைவியின் மாமியாராகிய தனது அம்மாவிடம் கட்டாயமாகத் தெரிவித்துவிடும்படி (எச்சரித்து)சொல்லிய கருத்தை தூதுவராக அம்மாவிடம் திக்கித் திணறித் தெரிவித்து முடிக்குமுன்பே... "மகனே உனக்கு இப்படி தலையணைமந்திரம் போட்டு வச்சிருக்காளேடா உம்பொண்டாட்டி... நீயும் அவ போட்ட மந்திரத்துக்கு சாமிவந்த மாதிரி ஆடுறியேடா"-ன்னு அம்மா சாமியாடி முடிக்க...

தன் அறைக்குள்ளே போனால் "மீண்டும் அம்மாக்கோண்டு... உங்களுக்கு எதுவும் தெரியாது" எனும் பட்டம் 1008வது முறையாக தன் குழந்தைகள் முன்னிலையில் தரப்படுவதை நினைத்து மீண்டும் செல்ல பயப்பட்ட நிலையில் தவிக்கும் (ஆண்)மகனை நோக்கி அம்மாவீட்டுக்கு வந்திறங்கிய, அம்மாவின் அணி நிரந்தர சப்போர்ட்டரான தன் சகோதரி
அண்ணா /டேய் தம்பி... நீ கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டன்னு கண்களின் ஷட்டரைத் திறந்து 1-டிஎம்சி இன்ஸ்டண்ட் கண்ணீரை வெளியேற்ற...

அங்கே வந்த அம்மாவோ... சபாஷ் ..வந்தும் வராததுமா கூடப்பிறந்தவளைக் கண்கலங்க வைச்சுட்டயேடான்னு அடுத்த எபிசோடை ஆரம்பிக்க... கிச்சனில் பலமான பல பாத்திரச் சத்தங்கள் செய்தபடியே மனைவி வேலை செய்வதில்- ஈராக்கில் அமெரிக்கா+பிரிட்டிஷ் கண்டுபிடிக்காத WMDயை தான் கண்டுபிடித்துவிட்டதாக மனசுக்குள்ளே உணர்ந்தாலும் ... முந்நாள் ஹீரோவான (ஆண்)மகன் தன் நிலையை WMD விழுந்த ஹிரோஷிமாவாக்கிக் கொள்ள விரும்பாமல் 1500வது முறையாக அடங்கிப்போய் நழுவ...

அப்பா தன்னுடைய எழுபதுவயதில் ஏன் காய்கறி மார்க்கெட்டுக்கு கறிகாய் வாங்க ஒரு நடை, பச்சைமிளகாய்க்கு ஒரு நடை, கறிவேப்பிலைக்கு ஒரு நடை, கீரைவாங்கன்னு ஒரு நடைன்னு லூசுமாதிரி இருக்கிறார் என்பதில் இருக்கும் சூட்சுமம் புரிகிறது. After all it is necessary to get fresh air very often - which is directly to the proportion of number of பெண்மணிகள்(வயது வித்தியாசம் இல்லாமல்) in the home)

இப்போ பெண்ணடிமைத்தனம் அப்டீன்னா என்னன்னு பார்க்கலாம்.

அடிமைத்தனம் அப்டீன்னா என்னங்க?

நம்ம விருப்பத்திற்கு, சொல்லுகிற சொல்லுக்கு வரவேற்பு, மரியாதை இருக்காத நிலையை அடிமைத்தனம்னு சொல்லலாம்.

அம்மா எனும் தானே தேடி,அலசி ஆராய்ஞ்சு, விசாரிச்சு, தேர்ந்தெடுத்துத் தந்த வாழ்க்கைத் துணைவி என்று இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிட்டு... பழியை எல்லாம் மகன் மேலே சுமத்துவது... பொண்டாட்டியோட நட்டுவாங்கத்துக்கு ஆடுறவன்...தலையணை மந்திரத்துக்கு மயங்கினவன்ன்னு பழிக்கவேண்டியது,

மனைவி எனும் பெண் கல்யாணமானவுடனே கணவனை அவனது தாயாரிடம் இருந்து கத்தரிக்க ஆனதைச் செய்யவேண்டியது... அம்மாக்கோண்டு என்பது.... அலுவலகத்தில் திறமையான மேலாளராக இருந்தாலும் ...உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...ஒரு மண்ணும் தெரியாதுன்னு கும்ம வேண்டியது...

சகோதரி எனும் பெண் "கல்யாணத்துக்கு அப்புறமா நீ ரொம்ம மாறிட்ட"ன்னு பத்திரம் தரவேண்டியது... கல்யாணமானா.. எப்படி அப்படியே இருப்பது... கணவனாக..குழந்தைகளுக்கு அப்பாவாக என்று முன்னில்லாத கூடுதல் கடமைகள் என பல மாற்றங்கள் வந்துவிட்ட வாழ்க்கை... இதில் எப்படி அப்படியே இருந்து தொடர்வது?

ஒரு ஆணின் வாழ்க்கையில் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்கள் கூட்டணி இப்படி முன்னே போனால் கடிப்பதாக... பின்னே வந்தால் உதைப்பதாக இருந்து அவர்களாக அவர்களை ஆட்டுவித்துக்கொண்டுவிட்டு அய்யோ பெண்ணடிமைத்தனம் என்றால்... அது தன்னடிமைத்தனம்.

தலைமுறை தலைமுறையாக இவ்வளவுக்கு முன்னுக்குப்பின் முரண்படும் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்களது நச்சரிப்புப் பேச்சை ஆண்கள் நாள்போக்கில் சீரியஸாக மதிப்பும் மரியாதையும் தந்து வரவேற்று எடுப்பது குறைவதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

குரல் கொடுப்பது என்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட கல்யாணமாகி, அம்மா-மனைவி-சகோதரியாகிய இப்பெண்களிடம் தினசரி"எமோஷனல் ப்ளாக்மெயில்", எமோஷனல் பிக்பாக்கெட் நிகழ்வுகளில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் அபலை(ஆண்)மகன்களுக்குக் குரல் தருவதே நியாயம்!

இன்னொருதரம் பெண்ணடிமைத்தனம்னு சொல்லுமுன் யோசிங்க ... திருத்திச்சொல்லுங்க.. அது தன்னடிமைத்தனம் என்று!

அன்புடன்,

ஹரிஹரன்