Sunday, September 09, 2007

(172) பகுத்தறிவுப் பகலவர் ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகம்

ஈவெரா எனும் பகுத்தறிவுப் பகலவன் எழுந்ததால் தான் சூரியன் அஸ்தமிக்காத பகுத்தறிவு ராஜ்ஜியம் தமிழகத்தில் தோன்றியது என்று கதறும் பகுத்தறிவு ஆட்களே அய்யா பாவமாகி சினிமா செண்டிமெண்ட் ரேஞ்சில் அச்சுப் பிசகாமல் கடல் கடந்தும் இந்துமதம்,பிள்ளையார் சிலை-இவற்றைக் கடைந்தே பகுத்தறிவு"வெண்ணைய்" திரட்டிக் கடைந்தேறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் மனோஜ் Knight சியாமளன் Sixth sense சினிமாவாக Hollywoodவாயிலாக ஆறாம் அறிவுணர்வைத் உலகிற்குத் தருவதற்கு பலகாலம் முன்னமே நம்ம ஈரோட்டு வெங்காய. ராம்சாமி பகுத்தறிவை மலிவு விலையில் பகுத்தறிவுக்கு ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்து ( திஸ் வேர்ல்டு & அண்டு அதர் காலக்ஸீஸ் ரைட்ஸுடன்) பூமியிலே ஏர்பிடிப்பவனிடமும் ஆகாயத்தில் ஏரோப்பிளேன் ஓட்டுபவனிடமும் ஒரே நேரத்தில் Two way One wire transmission எனும் நானோtechnology மூலமாக பகுத்தறிவு விழிப்புணர்வை நிலைநாட்டியவர்.

பகுத்தறிவு பகலவரு தோன்றிய தமிழகத்திலே வேளாங்கண்ணி மாதா ஐரோப்பாவில் இல்லாத கிறித்துவ தேச்சப்பரத்தில் பவனி வந்ததை Notice செய்யாத பகுத்தறிவு"வெண்ணை" உருகி பார்வை மங்கினாலும், ரமலான் நோன்புக்கஞ்சி பாரம்பரியத்தை- பகுத்தறிவின் பரிந்துரையை வியந்தபடியே, வாழவிடாத போரிலே தொலைந்துபோய்விட்ட தொன்மையான பாரம்பரியத்தை, வசிக்கும் தொலைதேசத்தில் விநாயகர் தேர்ச்சப்பரத்தினை பகுத்தறிவு நோட்டீஸால் நிறுத்தும் முயற்சி - SELF LESS self-respect Matter that got self exported!

மைனர் ஈ.வெ.ராமசாமி சண்டித்தனம் செய்ய
1) பிராமண எதிர்ப்பு
2)இந்துக் கடவுள் எதிர்ப்பு
3)இந்து-தெய்வ இலக்கியங்கள் எதிர்ப்பு
4)வெள்ளைக்கார துரையே இருக்கட்டும்,
5)தமிழர்கள் இசுலாமியராக மாறவேண்டும் -என்று ஐந்துக்கும் மேற்பட்ட பகுத்தறிவுக் கொள்கைகளை வைத்து திராவிட-பகுத்தறிவுக் கொள்கை எழுச்சிக் குழையடிப்புக் கூத்தை தமிழகத்தில் நடத்தினார்/ நடாத்துகிறார்.

ஒரு தமிழ் சினிமாவில் கவுண்டமணி அஞ்சுகொலை செய்த பெரிய தாதா என்கிற பில்டப் தரப்பட்டு பெரிய கித்தாப்புடன் ஊரில் வலம் வருவார்.

அடுத்தடுத்த காட்சிகளில் அஞ்சு கொலை செய்யுமளவுக்கு கவுண்டமணிக்கு வீரதீரம் ஏற்பட்டது எப்படி? அஞ்சு கொலை செய்த விதம் எப்படி? என்று விவரிக்கப்படும் போது கவுண்டமணி தானாக, கொலைகாரத் தொழில், கொள்கைப்பிடிப்புடன் எந்தக் கொலையுமே உண்மையில் செய்திருக்கமாட்டார்.

தென்னந்தோப்பில் கொலைசெய்யப்பட வேண்டி எதிரியிடம் கவுண்டமணி காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்கும் போது தென்னைமரத்தில் இருந்து தேங்காய் விழுந்து அகஸ்மாத்தாய் எதிரி மாண்டுபோவார். இப்படி ஒவ்வொரு கொலைக்கும் பிண்ணனியாக இருக்கும் கொள்கைகள் வெளிவரும்.

கடைசியாக அஞ்சுகொலை ஆறுமுகம் என்று கவுண்டமணியின் பெயர்க் காரணமானது அவர் சந்தையிலே ஐந்து தேங்காய் குலைகளைக் களவாடிய குற்றதிற்காக ஐந்துகுலை ஆறுமுகம் என்பது மருவி அஞ்சுகொலை ஆறுமுகமாகியது வெளிவந்து அதுவரை இருந்த கவுண்டமணியின் வீரதீர அஞ்சுகொலை அடைமொழி பில்டப் உடைந்து சுக்குநூறாகும்.

பிராமணர்களின் செருக்கைக் கொலை செய்தவர் - பகுத்தறிவு பகலவரு ஈவெரா

இதிலே பிராமணர்கள் தம்மீது சுட்டிக்காட்டப்பட்ட தவறை தாமாக, தங்களுக்குள்ளேயே முன்வந்து மாற்றிக் களைந்து கொண்டனர், இன்னும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.


இந்துமத தெய்வீகத்தை சிலைகள் உடைத்தே கொலை செய்தவர் பகுத்தறிவு பகலவரு ஈவெரா

பொதுமக்கள் எவர் செய்தது அதிமூடத்தனம் என்று உணர்ந்திருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தரிசனமும், தமிழகத்து திருவண்ணாமலை கிரிவலமே நலம் தருவது என்று பகுத்தறிந்திருக்கிறார்கள்

ராமாயண,பாரத,திருக்குறளை மலமென உரைத்தே இல்லை என்றாக்கியவர்-பகுத்தறிவு பகலவரு

இரண்டடிக் குறளில் இருக்கும் மணம் ஈராயிரம் அடி பகுத்தறிவு எழுத்து பேச்சில் இல்லை என்றும், எது உண்மையான மலம் என்றும் இன்று மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

சாதியைத் தமிழகத்தில் இருந்து ஓடஓட விரட்டிக் கொலை செய்தவர் -பகுத்தறிவு பகலவரு

பகுத்தறிவு பகலவரு ஈவெரா சீர்திருத்திய பின்பு சாதி தமிழகத்திலே மூலை முடுக்கேல்லாம் அரசியல் ஆதரவுடன் தழைத்திருப்பது மாதிரி வேறெங்கும் காணமுடியாது!

தேர்தல், நலத்திட்டம், ஆட்சி என எதுவும் எது பயன் தரும் சாதி? எது பயந்தரும் சாதி? என்ற கணக்கினை ஆய்வு செய்த பின்னரே நடக்கும்!


அமெரிக்க விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எல்லாம் எங்கள் ஈரோட்டுப் பகலவரு பகுத்தறிவுக் கேண்டீனில் பயின்றவர் (பாசறை பயிற்சி பெஞ்சு எல்லாம் ரெயின்போ கலரில் சாதிக் கட்சிகள் துண்டுகள் போட்டு ரிசர்வ் ஆகிவிட்டபடியால்!) என்று அள்ளிவிட்டாலும் சத்தியமா யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை!

தமிழ்நாட்டின் மக்கள் தம் தலைக்குமேலே அரசியல் திரா"விட" பகுத்தறிவு வெள்ளம் பெருக்கிட்டு ஓடுவதையே கணக்கில் கொள்வதில்லை!

One can Prove his stupidity in two ways:

1. By remaining silent
2. By uttering aloud


வரலாற்றை நோக்குகையிலும், நோட்டீஸடித்துப் பன்னாட்டளவில் பிரகடனம் செய்துவரும் பகுத்தறிவுப் பகலவரின் கிர(ஹ)ணங்கள் சொல்வதிலிருந்தும் விளங்குவது:

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பகலவரு ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகம் தெரிவு செய்தது இரண்டாம் வகை என்று.

E.V.Ramsamy Proves aloud his stupidity in all of his concepts & contemplations!

தமிழ் இணையம் செய்து கொண்டிருக்கும் பகுத்தறிவுப் பகலவரு ஈவெரா என்ற அஞ்சுகொலை ஆறுமுகத்தின் உண்மையான பகுத்தறிவு வேட்கை, கொள்கைப் பிடிப்பு என்று விடுதலை செய்து இருட்டுக்கருமையை இந்நாள் வரை உணராதோருக்கும் உணரவைப்பதே!

உண்மை எதுவோ அது விடுதலையாகியே தீரும்!

அன்புடன்,


ஹரிஹரன்

1 comment:

Hariharan # 03985177737685368452 said...

39228
டெஸ்ட் மெசேஜ்!