Wednesday, September 12, 2007

(173) So Called (இந்தியப்) பெண்ணடிமைத்தனத்திற்கு(??) ஆண்கள் மட்டுமா பொறுப்பேற்கவேண்டும்?

பெண்ணடிமைத்தனம் என்கிற விஷ(ய)த்திற்கு ஆண்களை 100% பொறுப்பேற்கச் சொன்னால் அதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது.

ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்றவாறே பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் அடிமைத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களின் இயற்கையான இயல்பே ஆண்களை விட பலமடங்கு அதிகப்படியாக சுயநலமாக இருப்பது.

குடும்பப் பெண்கள் அவர்கள் வீட்டுத்தேவைக்காக வாங்கிய புடவை, பாத்திரம், பண்டம், நகை,நட்டுன்னு தான் வாங்கிய அனைத்தையும் அப்பார்ட்மெண்டில் அத்தனை ப்ளாட்களில் வசிக்கும் தோழியரிடம் காட்டி பெருமை பறைசாற்றி அடுத்த பெண்களிடையே நமக்கு இப்படி வாழ்க்கை அமையவில்லையே என்று மன நிறைவின்மைக்கு அடிமையாக்கிக் கொள்வது யார் குற்றம்.


குடும்பத்தினுள்ளே இருக்கும் பெண்களால் அவர்கள் பேராசை காரணமாக தொடர் நச்சரிப்பு செய்து ஆண்கள் லஞ்சம் வாங்க, ஊழல் செய்ய என்று உந்து சக்தியாக இருந்து ஊறு விளைவிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியாவில் இந்திராகாந்தி, சோனியாகாந்தி, பிரதீபா பாட்டில், தமிழகத்தில் ஜெயலலிதா, உபியில் மாயாவதி,ராஜஸ்தானில் விஜய ராஜெ சிந்தியா,மம்தா பானர்ஜி, ரேணுகா சௌத்ரி இலங்கையில் பண்டாரநாயகா, சந்திரிகா, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, பேகம் காலிதா, பாகிஸ்தானில் பெனாசீர் புட்டோன்னு அரசியல் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் இருப்பது பெண்ணடிமைத்தனம் செய்யும் ஆணாதிக்க ஆண்கள் இருப்பதால்தானே.

ஐ லவ் யூ டார்லிங் எனும்போது ஐ லவ் யூ டூ /டா எனும் acknowledgment இல்லாளிடம் இருந்து வருவது தொடரவேண்டியே சீரியல்கள் பல பார்த்துக்களைத்து முன் தூங்கிப் பின் எழும் மனைவியரைக் காலையில் எழுப்ப "பய"Logical அலாரமாக எத்தனையோ கணவர்கள் ப்ரஷ்ஷில் பேஸ்ட் ரெடியாய் வைத்து பெட்காபி ரெடிசெய்து அட்ஜஸ்ட் செய்து வண்டி ஓட்டுவது பெண்ணடிமைத்தனம் தானே!

பொண்ணு பார்க்கும் / நிச்சயதார்த்தத்தின் போது எம்பொண்ணு செல்லமா வளர்ந்தவ.. நீங்கதான் அணுசரணையா இருக்கணும்னு சொல்லிட்டே அடையாறு ஆனந்தபவன்ல் வாங்கின பஜ்ஜியை பரிமாறியது புரிபடாமல் கல்யாணமாகி வந்தபின்னால் "ஐ நோ ஒன்லி ஹவ் டு குக் ஹாட் வாட்டர்யா" எனும் மனைவி இருக்கின்ற யதார்த்தத்தில் கையில் கத்தி எடுத்த (காய்கறி நறுக்கத்தான்) எதார்த்தம் ஆணாதிக்கம் அன்றி வேறென்ன?

புது மனைவியின் மரணவிலாஸ் சமையலை வீட்டிலும் சமாளித்து அந்த விஷ(ய)த்தை லஞ்ச் பாக்ஸில் கட்டித்தந்து "மிச்சம் வைக்காம சாப்பிடுங்க" என்று சொல்லி இல்லாள் வழியனுப்பியதற்காக, பாதி லஞ்சிலேயே நீர்பெருகிய கண்களினூடே எமனின் பாசக்கயிறும், எருமைக்கொம்பும் தென்பட்டாலும் விக்கலோடு விழுங்கிவிட்டு என்று பல்வகையான பேர்களோடு இருந்தாலும் கணவர்கள் அனைவரும் நீலகண்டன்களாகி நிற்பதுவே நடப்பதுவேக்களாக அணுசரணையாக இருப்பது பெண்ணடிமைத்தனம்தானே!

சீரியஸான விஷயமா பார்க்கலாம். பல குடும்பத்தினுள்ளே பெண்கள் தான் தாம்பத்ய உறவைத் துருப்புச் சீட்டாக, அவர்கள் ஆசையை நிறைவேற்ற வற்புறுத்தி ஆண்களிடம் காரியத்தை சாதிக்கிறார்கள்.

தனது சின்னவீ(ட்)டு (களு)க்காக நம் அரசியல் வாதிகள் / மன்னர்கள் செய்யும் / செய்த சமூக அட்டூழியங்கள் நடவாதிருந்தால் எவ்வளவோ மேம்பட்டு இருந்திருக்கலாம்.

சமூகத்திலே வெகுதியான அளவில் திருமணமான பின்னர் அம்மா(மாமியார்), தங்கை ,மனைவி எனும் உறவுகள் ஒரு சராசரி ஆணை எந்த ஊரில்/நாட்டில் வாழ்ந்தாலும் கீழ்ப்பாக்கம் மானசீகமாகப் போக வைக்கிறதா? இல்லையா?

ஆணாக இருந்ததால் பாரிவள்ளல் முல்லைக்குத் தன் தேரையே தந்து உதவினான். அம்மா-மனைவி-தங்கை எனும் மூன்று பெண்கள் மூன்று முழ முல்லைப்பூவைப் பிரிந்துக்கொள்வதில் சண்டையை ஆரம்பித்து குடும்பம் எனும் தேரையே சாய்த்து, முழுக்குடும்பத்தையுமே பிரிக்கும் வல்லமை பெண்களுக்கே இருக்கிறது.

இவ்வளவு கொடுமை அனுபவித்தும் ஆண் திருந்துகிறானா என்றால் இல்லை.
பெண்கள் பூ போன்ற மென்மையான இதயம் படைத்தவர்கள் என்று வசனம் எழுதுகிறான். திருமணம் என்று உறவு இணையத்திலே வந்து விட்ட ஒவ்வொரு ஆணும் சந்தேகமே இல்லாமல் மசோகிஸ்டுதான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கருத்து.

குடும்பத்தினுள்ளே பெண்களுக்கு இருக்கும் ஆளுமையே பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. திருமணமான பெரும்பான்மை ஆண்கள் சேர்ந்து வாழ்வதை மட்டுமே விரும்புபவர்கள். ஆணின் குடும்பக் கடமைகளுக்கு ஹவுஸ் வொய்ப்/ வொர்க்கிங் வொய்ப் எனும் பேதமின்றி பெண்களே தங்கள் சுயநலசிந்தனையால் முட்டுக்கட்டை போடுபவர்கள்.

இன்றைக்கு குடும்பத்தில் ஆண்கள் சம்பாதிப்பதோடு பள்ளிக்குக் குழந்தைகளைத் தயார்செய்வதில் பங்களிப்பு, உணவுதயாரிப்பு, வீட்டுவேலை இவைகளில் பங்களிப்பு என்பதை ஆணடிமை என்று முழங்காமல் கடமையாகச் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இதெல்லாம் நகரத்து ஆண்கள் நிலையாக இருக்கலாம். கிராமங்களில் பெண்களுக்குக் கல்வி இல்லை,வாழ்வியல் உரிமைகள் இல்லை என்போருக்கு தேசமெங்கும் தேநீர்க்கடையகளில் டோர் டெலிவரி வேலைசெய்யும் பையன்கள், பட்டாசுக்கம்பெனியில் வேலைசெய்யும் பையன்களாகிய ஆண்களுக்கும் கல்வி, இதர உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவில் காணாமல் போகும் அப்பாவிப் பெண்களை ஈவு இரக்கமின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில் அயோக்கிய ஆண்களை மிஞ்சும்விதமாக "அக்கா"க்களின் பங்களிப்பும் மிக அதிகம்!

முள்ளுக்காட்டில் சாராயம் காய்ச்சுவது ஆண்கள் அதை இடுப்பில் உறைகளாக்கி, ரப்பர் டியூப்பில் நகரின் தெருக்களில் ரீடைல் சேல் செய்வது பெண்கள்தானே!

ஆணுக்கும் பெண்ணுக்கும் Equal Rights என்று முழங்குவார்கள் எல்லாம் செய்துவிட்டு ரயில் டிக்கட் ரிசர்வேசனுக்கு பொதுவரிசை என்றால் பெண் என்று ஈவு இரக்கம் இருக்கா பாரு என்று வசை பாடுவார்கள்.

உண்மையில் ஆணடிமையை எதிர்த்து ஆண்கள் போராடினால் Need of the Hour எனும் அர்த்தம் இருக்கும். அதை விடுத்து பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று மசோகிஸ்டாக ஆண்கள் இருந்து குரல் தருவது ஏற்கனவே ஆண்களை மஸ்கிடோவாக நடத்தும் பெண்களிடம் இன்னமும் ஓடஓட விரட்ட ஓடோமாஸ் எடுத்துத் தருவதாகவே இருக்கும்.


குறிப்பு: இது நகைச்சுவைப் பதிவு இல்லீங்க! இணையத்தில்(ஆண்)வர்க்கப் போராட்டம்!

அன்புடன்,


ஹரிஹரன்

4 comments:

Hariharan # 03985177737685368452 said...

39337
டெஸ்ட் மெசேஜ்!

இ.பி.கோ 498A said...

ஆண் வர்க்கத்தினரின் சோகக் கதையைக் காணுங்கள் என் பதிவில் :(

http://tamil498a.blogspot.com/

மங்களூர் சிவா said...

கண்ணுல ரத்தம் வருதுங்னா..

மங்களூர் சிவா

அது ஒரு கனாக் காலம் said...

Hi

Absolutely true, I remember the other blogger, who was not married but analysed about பெண்ணடிமைத்தனம்... family is a joint effort, the days of sitting and ordering food,coffee not cleaning the plate etc etc have all gone long time ago...now its the turn of husbands to suffer, But the balanced mind (people) are very happy.

Sundar - dxb