Wednesday, August 29, 2007

(168) வளைகுடா இந்தியர் பணத்தில் திளைக்கும் இந்திய வங்கிகளின் கயமை!

வளைகுடா இந்தியர்களுக்கு இந்திய வங்கிகள் வளைத்து வளைத்து செய்யும் மோசடியை கவனிப்போம்.

இந்தியா சென்ற 2006 ஆண்டு பெற்ற ஒட்டு மொத்த அயல்நாட்டு நேரடி இன்வெஸ்ட்மெண்ட் Foreign Direct Investment $ 16 பில்லியன் டாலர்கள்.
அதாவது 16 x 1000 x 1000000 x 41 = Rs.656,000,000,000 = அறுநூற்று ஐம்பத்து ஆறாயிரம் கோடி ரூபாய்கள்.

Bahran, Kuwait, Oman,Qatar, Saudi,UAE நாடுகளில் வசிக்கும் வளைகுடா வாழ் வெளிநாட்டு இந்தியர் இந்தியாவுக்கு 2006ம் ஆண்டில் அனுப்பி வைத்த மொத்த தொகை Total Gulf NRI remittance to India $ 25 பில்லியன் டாலர்கள்.
அதாவது 25 x 1000 x 1000000 x 41 = Rs.1,025,000,000,000/- ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.

Foreign Direct Investment செய்யும் நிறுவனங்கள், நாடுகள், அமைப்புகளுக்கு இந்திய அரசு ஏராளமான சலுகைகள் தருகின்றன.

மேற்கத்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அங்கேயே வீடு, உயர்படிப்பு,என்று சொத்து சௌகர்யங்களுக்கே தங்கள் பணத்தை மேற்கத்திய வங்கிகள் மூலமாகவே 90% பரிவர்த்தனை செய்தபடி அவர்கள் இருக்கும் அயல்நாட்டிலேயே தாங்கள் ஈட்டிய பணத்தைச் செலவிடுகிறார்கள்.

அயல்நாட்டில் உழைத்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு 26 பில்லியன் டாலர்கள் தொகையை (ஒரு லட்சம் கோடி ரூபாய்)அனுப்பும் வளைகுடா இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான இன்னல்களை மட்டுமே அள்ளித்தருகின்றன.

இந்திய வங்கிகளில் புழங்கும் அயல்நாட்டு இந்தியர் பணத்தில் 70% வளைகுடா வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணமே.


வளைகுடாவில் இருந்து வேலை செய்து பொருளீட்டும் இந்தியர்களில் 90 சதவீதம் இந்திய வங்கிகளின் வாயிலாக மட்டும் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள்.

வளைகுடா ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில், டவுன் பஞ்சாயத்துகளில் இருக்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள். Foreign Exchange NRI account remittance வங்கிகளின் மாவட்ட தலைமையகத்திற்கு டிராப்ட் தரப்பட்டு வளைகுடா ஊழியரின் ஊர்க்கிளையில் வரவு வைக்க Out station collection charge என்ற வகையில் ஒவ்வொருவரின் பரிவர்த்தனைக்கும் 100 ரூபாய் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. குறைந்தபட்சம் ஒருவாரம் பதினைந்து நாட்கள் வரவு வைக்க ஆகிறது.

வங்கியின் வசம் இருந்த தொகைக்கு 14நாட்கள் வட்டி வீதத்தில் வட்டியும் கணக்குவைத்திருப்பவருக்கு வராது!


இந்திய வங்கிகளில் (டொமஸ்டிக் டெபாசிட்டுகளுக்கு) உள்நாட்டு பண வைப்பு வட்டி 9 %சதவீதம். வளைகுடா வாழ் இந்தியர்க்கு பண வைப்பு வட்டி 5.25%

இந்திய உள்நாட்டுப் பண வட்டி வீதத்திற்கும், வளைகுடா/வெளிநாடுவாழ் இந்தியர் பண வைப்புக்கும் இடையே யான வட்டி வீத வித்தியாசம் 3.75%


ஆனால் இந்திய அரசியல் வா(ந்)திகள், இந்திய வங்கிகளுக்கு வளைகுடா இந்தியர் அனுப்பும் பணத்திற்கு வளைத்து வளைத்து கட்டணம், டெபாசிட்டுக்கு வட்டிக்குறைப்பு என்று சலுகை பறிப்பு திட்டமிட்டு செய்துவிட்டு,பினாமிகள் மூலம் வளைகுடாவில் இருந்து உழைத்துச் சம்பாதித்த பணத்தை அனுப்புபவர்களைக் குறிவைத்து அணுகி, நீங்க ஹவாலா முறையில் அனுப்பினால் எக்சேஞ் ரேட் குறைவு, மறுநாளே பணம் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்று அரசியல்வா(ந்)திகளின் பினாமிகள் இந்திய வளர்ச்சித்திட்டங்களில் ஊழல் செய்த கறுப்பு பணத்தை வெள்ளையாக்கி (Money Laundering-பணவெளுப்பு)அந்நியச்செலாவணி என்றும், Foreign Direct Investment என்று முகம் மாற்றி வந்து மீண்டும் இந்திய அரசின் வரிச்சலுகைகள் ஏராளம் பெறும் நிலை!

இந்திய வங்கிகளில் ஊழல் அரசியல்வா(ந்)திகள் ஆதரவும் ஆசியும் பெற்ற புண்ணாக்குத் தொழிலதிபர்கள் பெற்ற கடன்கள் வராக்கடனாக நிலுவையில் நின்றுபோய்விட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்திய வங்கிகள் மீட்க வக்கில்லை! வெக்கமும் இல்லை!

வளைகுடா நாடுகளில் ஐம்பது டிகிரி வெய்யிலில், பாலைவனத்தில் உண்மையாய் வியர்வை உருக உழைத்து ஊருக்கு அனுப்பும் பணத்திற்கு உரிய பலனை இந்திய வங்கிகள் தர மறுக்கின்றன!

வளைகுடாவாழ் இந்தியர்கள் அனுப்பும் ஆண்டுத்தொகை ஒரு லட்சம் கோடியின் மீது இந்த 3.75% டெபாசிட்வட்டி வீத பேதத்தைக் கணக்கிட்டால் வரும் வித்தியாசம் 3,843,350,000/- ஆண்டுக்கு 384 கோடி ரூபாய்கள், டிராப்ட் கலெக்சன் என்று 15 நாட்கள் தாமதத்திற்கான வட்டி இழப்பைச் சேர்த்தால் இன்னும் பலகோடி ரூபாய்கள் சேரும்.

வளைகுடா இந்தியர்கள் அனுப்பும் 26 பில்லியன் டாலர்கள் பணத்திற்கு இந்திய வங்கிகள் டெபாசிட் வட்டி குறைப்பு, டிராப்ட்கள் நிறுத்திவைக்கப்படும் குறைந்த காலத்திற்கு வட்டி தராத மோசடி என்பவைகளின் மதிப்பைக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் என்று கணக்கில் கொண்டாலும் இதைவைத்து வளைகுடாநாடுகளில் பல இன்னல்களிடையே கட்டுமான வேலை செய்யும் பல லட்சம் இந்தியர்களின் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகள் ஆண்டுக்கு 4 என்ற வீதம் மாநிலத்திற்கு மாநிலம் இந்திய அரசு துவங்கலாம்.

உருப்படியாக இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை அனைத்து தளங்களிலும் மேம்படுத்த நல்லதாக எதையுமே யோசிப்பதில்லை, ஒன்றைக்கூட நல்லதாக செயல்படுத்துவதில்லை இந்திய அரசியல்வா(ந்)திகள். இவர்கள் செய்வதெல்லாம் இந்தியர்களை ஒற்றுமையாக இருக்கவிடாமல் மதம், சாதி, இனம் என்று பல்வேறு வகையில் கூறுபோட்டு மக்களின் உழைப்பினை ரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமே!

அன்புடன்,


ஹரிஹரன்

Tuesday, August 28, 2007

(167) கம்யூனிஸம் = கயமைத்தனம் + களவாணித்தனம்

பள்ளிக்கூட காலங்களில் கம்யூனிஸம் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்த விஷயங்கள் எனது பதின்ம வயதில் பள்ளிச் சிறுவனாக இருந்த போது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.

சோவியத் ரஷ்யாவில் எல்லோருக்கும் கம்யூனிஸ அரசாங்கமே ரொட்டி இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே மாஸ்கோ நகரத்தின் சாலை சந்திப்புகளில் கண்ணாடி அலமாரிகளில் ரொட்டிகளை அடுக்கி வைத்திருப்பார்கள், அலமாரியைப் பூட்டக்கூட மாட்டார்கள் என்று கம்யூனிஸ அரசின் சாதனைகள் காதில் வந்து விழும்.

ரொட்டி என்றாலே 25 பைசாவுக்கு கிடைத்த பன் ரொட்டியும் அதன் மீது அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு செர்ரியும் நினைவுக்கு வரும். பொய்யாக காய்ச்சல் என்று சிவப்பு செர்ரி வைத்த பன் ரொட்டிக்காக தவமிருந்திருக்கிறேன்.

இந்தியாவில் ஒரு பன் ரொட்டிக்கே பெற்றோரிடம் நாம் மன்றாட வேண்டியிருக்கிறது. மாஸ்கோவில் மட்டும் பிறந்திருந்தால் சாலை ஓரங்களில் அலமாரிகளில் இருந்து தேவையான ரொட்டியை எடுத்துக் கொள்ளும் பாக்கியம் இருந்திருக்கும் என்று எண்ணிக்கொள்வேன்.

இதற்கு மேலாக சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள் பெயர்கள் குருசேவ், கோர்பசேவ் என்று இருந்து என்னை கம்யூனிஸ்ட் ரஷ்யர்களை தமிழகத்தின் காராசேவ், சீனிசேவ் பண்டங்களுடன் தொடர்புடையவர்களாகக் கருத வைத்து ஒரு ஸ்பெஷல் அந்நியோன்னியத்துடன் மனதில் நினைக்க வைத்தது!

இந்திய ரஷிய ராஜாங்க உறவுகள் புரிபடும் முன்பே போடி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் மலையாகக் குவித்துவைக்கப்பட்ட சீனிச்சேவ், காராச்சேவ்களில் கம்யூனிஸ்ட் ரஷ்ய தொடர்பு இந்திய கிராமங்கள் வரையில் ஊடுருவியிருப்பதை உணரவைத்தது.

பள்ளி இறுதி வகுப்பு கோடை விடுமுறைக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சியில் மாஸ் மசாலா பால் சாம்பிளைச் சுவைத்துவிட்டு அங்கே இருந்த ஒரு புத்தகக்கடை/ கம்யூனிஸ மிர் பப்ளிகேசன்ஸ் பதிப்பகத்தின் மிக மலிவான விலையிலான புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது தமிழ்வாத்தியார் திரு.சுப்பிரமணி சொல்லித் தந்த தமிழ்நடையில் இல்லாத எழுத்துநடையில் எழுதப்பட்டிருந்தது கண்டு குழம்பினேன்.

மிர் பப்ளிகேசன்ஸ் புத்தகங்களில் கையாளப்பட்ட தமிழ் "ஜுனூன்" தொலைக்காட்சி தொடரில் பயன்படுத்தப்பட்ட கையாலாகத தமிழின் முதல் மூலம்!

பிற்பாடு 89-90ல் காராச்சேவ் தலைமையில் மன்னிக்கணும்... கார்ப்பசேவ் தலைமையிலான சோவியத் சிதறுண்டு போனபோது மாஸ்கோ எந்த திசையிலிருக்கிறது என்பதே தெரியாத நிலையிலும் ஏதோ ஒரு மெல்லிய சோகம்!

பிறகு ரஷ்யாவினுள்ளே நடக்கும் விஷயங்கள், செய்திகளாக உலக மீடியாவில் மெல்ல வெளிவரத் துவங்கியது. ஒரு ரஷிய ராணுவ வீரனுக்கு மாத சம்பளமாக ஒரே ஒரு தர்பூசணிப்பழம் மட்டுமே தரப்பட்டது என்று 1991-ல் வந்த செய்தி துணுக்குற வைத்தது.

அடுத்தடுத்து ரஷ்யாவைப் பற்றி வந்த செய்திகள் கம்யூனிஸ ரஷிய அரசாங்கத்தின் சாதனைகளை பறை சாற்றியது. பொதுவுடமை கம்யூனிஸ ரஷ்யப் பெண்கள் மிகுந்த தனியுடமைக்காக பொருளீட்டும் வாழ்க்கை வழியாகத் தேர்ந்தெடுத்தது விபச்சாரத்தை!

90களின் மத்தியில் பஹ்ரைன் தலைநகரில் நான் தங்கியிருந்த ஹோட்டலின் லிப்டில் கட்டுப்பாடு ஒழுக்கம் மிகுந்த சவுதிநாட்டினர் சிலர் உடைந்த ஆங்கிலத்தில் கேட்டது " வேர் ஆர் த ரஷ்யன் கேர்ள்ஸ்?" ரஷ்யாவின் நிலை நினைத்து நொந்தவாறே ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது டெலிபோன் ஒலித்தது. எடுத்தால் அடுத்த முனையில் ஹஸ்கி வாய்சில் ஒரு ரஷிய அழகி எனது மாலைப்பொழுதை மகிழ்வூட்ட ரேட் ஒப்பித்தாள்!!


அமெரிக்கா இந்தியாவைத் தாக்கினால் ரஷ்யா உடனடியாக இருந்த இடத்திலிருந்தே பட்டனை அமுக்கி மிஸைல் அனுப்பி இந்தியாவைக் காக்கும் என்று கம்யூனிஸ ரஷ்யாவின் தொழில்நுட்ப உறவு அருமை பற்றிச் சிலாகிப்பார்கள் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள்.

ரஷ்யாவின் டகால்டி தொழில் நுட்பம்.

இந்திய ராணுவத்திலிருக்கும் , பயிற்சியின் போது தினத்திற்கு ஒன்றாக விழுந்து நொறுங்கும் ரஷ்ய மிக் 25 போர்விமானங்கள் ரஷ்ய தொழில் நுட்பத்தின் இன்னொரு அனுபவரீதியாக உணர்ந்த உதாரணம்.

கம்யூனிஸ ரஷ்யாவின் அணுசக்தி தொழில் நுட்பம் பொதுவுடமை ரஷ்யர்களுக்கே புரிபடாதது என்பது 1986 ல் செர்னோபில் அணு உலை வெடிப்பு நடந்து உலகுக்கு வெளிப்படுத்தியது.


2004ல் நார்வே-ரஷ்ய எல்லையில் பேரண்ட் கடலின் ஆழத்தில் ரஷ்யாவின் Kursk அணுசக்தி நீர்மூழ்கி Submarine 118 ரஷ்ய ராணுவவீரர்களுடன் சிக்குண்டபோது ரஷ்யா அவர்களை மீட்கத் திணறிய பாடு, இரண்டு வாரம் முயன்று முடியாமல் நார்வே தந்த உதவியை ஏற்காமல் 118 வீரர்களும் மாண்டனர். கடைசியில் நார்வே உதவியோடு முழுகிப்போன Kursk அணுசக்தி நீர்மூழ்கி Submarine ஐ மேலே கொண்டுவந்தனர்.


ரஷியாவின் ஆட்டோ மொபைல் தொழில் நுட்பம் என்பது 200% டகால்டி தொழில் நுட்பம் என்பதில் ஐயம் இல்லை.

1970 பியட் நிறுவன technology பயன்படுத்தும் கார்தான் இன்றும் ரஷியாவின் தேசிய கார்! லாடா LADA என்ற கண்றாவி கார், ஜீப் இவைதான் ரஷ்யாவின் தயாரிப்பு!

லெனின், ஸ்டாலின் என்று பொதுவுடமை கம்யூனிஸம் பேசியே அழிந்த ரஷ்யாவின் பொருளாதாரம் இன்றைக்கு மேம்படத் துவங்கியிருப்பதற்கு காரணம் தனியுடமை அமெரிக்காவின் ஈராக் போரால் பீப்பாய் 12 டாலரிலிருந்து 70 டாலருக்கு மேலெழும்பிய கச்சா எண்ணைய் விலை!

பொதுவுடமை கம்யூனிஸம் பேசியே சிதைந்துபோன ரஷியாவின் பெரும் நிதி தேவைப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பணமுடை நேர்ந்தபோது அமெரிக்க தனியுடமை தொழிலதிபர்களை பத்துலட்சம் டாலர்கள் கட்டணத்தில் சுற்றுலாவுக்கு விண்வெளிக்கு அழைத்துச்சென்றது!

ரஷ்யாவின் கம்யூனிஸம் வீழ்ந்த பின்னும் கயமைத்தனம் இன்னும் முழுமையாகப் போகவில்லை! 2003ல் ரஷ்ய மிகப்பெரும் தனியார் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான மிகையீல் கோட்ரோவோஸ்கியை ரஷ்ய அரசியலில் தனியுடமைப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டியதற்காக வரி ஏய்ப்பு என்கிற போர்வையில் Yukos Petroluem எனும் தனியார் நிறுவனத்தை அரசுடமையாக்கி சிதைத்து, நிறுவனத்தின் தலைவரை எட்டு ஆண்டுகள் சிறைக்குள் வைத்திருக்கிறது ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் அரசு.

இன்றைக்கு ஆர்டிக்கின் பனிக்கடல் அடியே ரஷ்ய தேசியக்கொடியைப் பதித்து அதனடியே இருக்கும் பெரும் பெட் ரோலிய வளத்துக்கு பண்டைய ரஷ்ய ஜார்மன்னர்கள் பாணியில் ரிசர்வ் செய்து சர்ச்சையை, நிஜமான Cold warஐ ரஷ்யா ஆரம்பித்துவைத்திருக்கிறது!


ரஷ்யா இன்னமும் வெளிப்படையாகப் புரிந்துகொள்ளும்படியான தேசமாக இல்லை.
இரும்புத்திரை போர்த்திய தேசமாகவே ரஷ்யா இன்றும் தொடர்கிறது.


குவைத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ரஷ்ய நர்ஸ் ஒருவர் இந்தியன் என்பதால் என்னிடம் மெனக்கெட்டுப் பேசி தான் "மேட் இன் இந்தியா" உடைகள் அணிந்து வளர்ந்ததை, ராஜ்கபூர், அமிதாப் பச்சன் படங்கள் பார்த்திருப்பதை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார்.

ரஷ்யர்கள் வாங்கியது இந்திய உடைகளை மட்டுமே.. ரஷ்யர்கள் ரசித்தது ராஜ்கபூரையும், அமிதாப்பையும் மட்டுமே! இந்தியர்கள் எத்தனை நூறு மிக் 25 போர்விமானங்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்கி தினத்துக்கு ஒன்றாக இந்திய ராணுவத்தில் பயிற்சியின் போது விழுந்து நொறுங்குவதைப் பார்க்கிறோம்.

மரியா ஷரபோவா, ஆன்னா கார்னிகோவா போன்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைகளை இந்தியர்கள் வோட்காவை அடித்தபடியே ரசித்து என்ற அளவில் இந்தியா-ரஷ்யாவுடனான உறவுக்கு பதில் மரியாதை செலுத்துவதோடு இருக்கட்டும்.

அணுசக்தி தொழில் நுட்பத்திற்கு அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசியம்.

இந்தியா எப்படியும் அணுசக்தி மற்றும் இதர தொழில்நுட்பத்தை வெளியே இருந்துதான் வாங்கவேண்டும் எனும் போது நல்லதாக வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்!

நல்ல தொழில்நுட்பத்தை இந்தியா வாங்க முட்டுக்கட்டையாக இருக்கும், இந்தியாவில் இன்னமும் உலகளவில் காயலான் கடைக்குப் போய்விட்ட பொதுவுடமை கம்யூனிஸம் பேசும்
பரதன், சீதாராம் யச்சூரி, பிரகாஷ்கராத், ஜோதிபாசு,புத்ததேவ் போன்றவர்களை பொதுவுடமை-கம்யூனிஸ தெய்வங்களான லெனின், ஸ்டாலின்,மாவோ, காஸ்ட்ரோ, சேகுவேரா, தோன்றிய தேசங்களான ரஷ்யா,சீனா, கியூபா,பொலிவியா போன்ற பொதுவுடமை கம்யூனிசகொள்கையால் பிரகாசிக்கும் தேசங்களுக்கு 14 ஆண்டுகள் புனிதப் பயணிகளாக அனுப்பிவைப்போம்!

இந்த களவாணித்தனம் + கயமைத்தனம் = கம்யூனிஸம் பேசித்திரியும் காம்ரேடுகள் 14 ஆண்டுகள் கம்யூனிஸ கொள்கை நிறுவிய காம்ரேடு தெய்வங்கள் பிறந்த தேசங்களுக்கான புனிதப்பயணத்திலிருந்து திரும்பி வரும்போது 2020ல் காம்ரேடுகள் தொல்லையில்லா இந்தியா கலாம் கனவுகண்டபடி தொழில்நுட்பத்தில், அனைத்துவிதத்திலும் வல்லரசாகாவிட்டாலும் கண்டிப்பாக முன்னேறி இருக்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, August 27, 2007

(166) வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்துகொள்ளும் இந்திய ஊழியர்கள்

இரு நாட்களுக்கு முன்பாக அல் ஜசீரா ஆங்கில தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான Blood Sweat and Tears எனும் நிகழ்வு வளைகுடா நாடுகளில் கட்டுமான வேலைகளில் சிக்கிக்கொண்டு கொத்தடிமைகளாக்கப்பட்டு அல்லலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்களைச் சந்தித்து அவர்களது நிலையினைச் சித்தரிக்கும் நிகழ்ச்சி.

குறிப்பாக அமீரகம் எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கட்டுமானத் துறையில் ஊழியர்களாக 70 சதவீதம் இருக்கும் இந்தியர்கள், இதர துணைக்கண்டத்தவரின் அடிப்படை நலன் மிக மோசடி செய்யப்படும் சூழ்நிலையை வெளிச்சம் போடுகிறது இந்த நிகழ்வு.

செல்வக்குமார் எனும் 22 வயது தமிழ் இளைஞன் லேபர் கேம்ப்பில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதற்குக் காரணம் டிராவல் ஏஜெண்டுக்குத் தரவேண்டிய 65000 ரூபாய் கடன் சுமை, வேலை செய்த நிறுவனம் ஒன்பது மாத சம்பளம் தராதது, உடல்நலக்குறைவுக்கு மருத்துவம் பார்க்க கையில் காசு இல்லாத நிலை.

இந்த ஆண்டு துபாயில் இந்திய தூதரகத்தில் பதிவான இந்திய ஊழியர் தற்கொலைகள் நூறுக்கும் மேல். கடந்த ஆண்டினை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகம்.

அதாவது சராசரியாக மாதத்திற்கு 10 இந்தியர்கள் துபாயில்(அமீரகத்தில்) ஏஜண்ட் கடன் தொல்லை, பலமாதங்கள் சம்பளம் கிட்டாமை, அடிப்படை தங்குமிட, உணவு, மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான செல்வக்குமார் மாதிரியான நபர்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனங்களில் பிரதானமானது Ambe International என்பது. மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டு துபாய் வந்து சேர்ந்து பலமாத சம்பளம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கில் செல்வக்குமார்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.


நரைத்த தாடியுடன் கண்களில் சோகமுமாய் செல்வக்குமாரின் தந்தையும், தளர்ந்துவிட்ட தாயும் சுவரில் மாட்டப்பட்ட சந்தனப்பொட்டுவைத்து, மாலையிடப்பட்ட படத்திலிருக்கும் 22வயதில் துபாயில் தூக்கிட்டுக்கொண்டு மடிந்துபோன தன் மகனைக் கடைசியாகச் சந்தித்தது- இரண்டாண்டுகளுக்கு முன்பாக நிலத்தை விற்றுக்காசாக்கிக்கொண்டு ஏஜெண்டை சந்தித்து துபாய்க்கு பயணப்படுவதற்கு முன்பாக!

அல்ஜசீரா தொலைக்காட்சி ரகசிய கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விபரங்களுடன் இந்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க புகார் தந்திருக்கின்றார்கள்.

இந்தியாவில் பணிக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டுகள் அனைவரும் அரசியல் தொடர்புடையவர்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வா(ந்)திகள் தொடர்புள்ள பத்து தொலைக்காட்சிகளும் இருபத்து நாலுமணி நேரமும் சினிமா, குத்துப்பாட்டு, மடத்தனமான சீரியல்கள் என்பதான நிகழ்வுகளை மட்டுமே மக்கள் அக்கறையோடு தொலைபரப்பும்.

ஆட்சி,அதிகாரத்தில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் கட்சிகள் அல்ஜசீராவின் ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்ட ஏஜெண்டுகள் க்ளிப்பை இன்னொரு செல்வக்குமாராக இந்தியர்/தமிழர் மோசடி விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலை மாற்றிட ஆவன செய்வார்களா??

இல்லை அரசியல் கட்சிகள் தங்களது வழக்கமான உத்தியான கட்டிங்/கமிஷன் ரேட்டை உயர்த்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வளைகுடா வேலைக்கு கல்வி அறிவு குறைந்த கிராமத்து மக்களை இன்னும் தொடர்ச்சியாக மோசடி செய்தபடியாக ஆட்களை அனுப்புவதைச் செய்தபடியே இருக்கப்போகிறார்களா??

துபாயில் வேலைசெய்யும் ஏழு இலட்ச இந்தியர்களில் 80% கிட்டத்தட்ட ஐந்து லட்சம்பேர் கட்டுமான உழைப்பாளர்கள்! மிக மிகக் குறைவாக மாதம் 500 திர்ஹாம் அளவில் இவர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும் தொகை 500 x 500000 x16 = Rs. 4,000,000,000 (நானூறு கோடி ரூபாய்) ஒரு ஆண்டுக்கு 400 x 12 = 4800 கோடி ரூபாய்!


சம்பாதித்த காசை அயல்நாட்டின் பச்சை அட்டை நிரந்தர குடிமை பெற்று அயல் நாட்டிலேயே முடக்கி செத்தாலும் அயல்நாட்டிலேயே புதைக்க வேண்டும் என்று விரும்பும் பேராசியர் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தால் ஒன்பது பேருக்கு அரசு செலவில் விமான டிக்கெட் தரும் பகுத்தறிவு அரசியல்வா(ந்)திகள் நிறைந்த நாடு நம் இந்தியாவாகத்தான் இருக்கும்!

வளைகுடா கட்டுமான வேலைக்கு நிலத்தை விற்று ஏஜெண்டுக்குப் பணம் கட்டி விமான டிக்கெட் எடுத்து வந்து துபாயிலிருந்து தன் தாய் நாட்டிற்கு மாதம் நானூறு கோடி நிதியைத் தன் ரத்தம் சிந்தி 50மாடிக் கட்டிடத்தின் மீதும், ஐம்பது டிகிரி வெய்யிலிலும், கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலேயே காற்றடித்து மண் விழுந்த நிலையில் மதியச் சாப்பாட்டை சாப்பிட்டு உழன்றபடியே உழைத்து அனுப்பி வைக்கும் செல்வக்குமார் மாதிரியானவர்களை தளரவைத்து, மனமுடைந்து தற்கொலை செய்ய வைப்போம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, August 23, 2007

(165) குடிதாங்கி ராமதாசு சிவாஜி பட "அங்கவை.. சங்கவை" மேட்டரில் கப்சிப் ஏன்?

சிவாஜி திரைப்படத்தில் அங்கவை சங்கவை என்று பாரிவள்ளலின் மகள்கள் பெயர் கொண்ட பாத்திரங்கள் தமிழர் மாண்பை குறைத்துவிட்டதாக எழுந்த தமிழர் எழுச்சியில் குடிதாங்கி ராமதாசு இன்று வரை ஏன் கப்சிப் என்று இருக்கிறார்!

கொஞ்சம் உற்று நோக்குவோம்!

கடையேழு வள்ளல்களில் முதன்மையானவன் பாரி வள்ளல். பாரிவள்ளலின் வள்ளல் தன்மையை தமிழ் மக்களிடையே பறைசாற்றும் நிகழ்வு எது?

சாலையோரத்தில் படர்வதற்குப் பிடிமானம் இல்லாமல் தவித்த ஒரே ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தேரையே தந்து முல்லைக்கொடி படர வழிவகை செய்த செயல் மூலம் தமிழர்களுக்குப் பாரிவள்ளல் அறிமுகமாகிறார்.

அப்படியே ஜூம் பண்ணுங்க குடிதாங்கிக்கு (விஜய்காந்த் ஸ்டைலில் ஜூம் என்று சொல்லவும்)

குடிதாங்கி ராமதாஸை தமிழர்கள் மத்தியில் பெருவாரியாக அறிமுகப்படுத்திய நிகழ்வு எது?

தமிழகத் தலைநகருக்கான பிரதான சாலையின் இருமருங்கும் நன்கு வளர்ந்த மக்களுக்கு நிழல் தரந்துகொண்டிருந்த ஓராயிரம் மரங்களை வெட்டி வீசிய வன்முறைச் செயல்!

முல்லைக்கொடிக்குத் தனது தேரை தாரைவார்த்துத் தந்த பாரிவள்ளல் குடிதாங்கியைப் பொறுத்த அளவில் பிழைக்கத் தெரியாத ஆள்!

குடிதாங்கி சந்தன மரவெட்டி வீரப்பனுக்கு / வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு உச் கொட்டி அனுதாபம் தெரிவித்தது என்பது இருவரும் மரவெட்டியாய் ஒத்த செயல் செய்ததாலேயே!

வீரப்பன் காட்டுக்குள் சந்தன மரவெட்டி!
குடிதாங்கி ராமதாசு ரோட்டில் புளியமரவெட்டி!

அங்கவை.. சங்கவையின் தந்தை பாரிவள்ளலோ ஒரே ஒரு முல்லைக் கொடிக்குப் போய்த் தனது தேரைத் தந்தவர்!

இப்பச் சொல்லுங்க... தன் அளவுக்கு ஓரளவுக்காவது ஒத்து இருக்கும் இன்னொரு மரவெட்டிக்குத்தான் மனமிறங்கி குரல் கொடுப்பேன் என்று கொள்கைக்குன்றாக குடிதாங்கி ராமதாசு இருப்பது தவறா?


அன்புடன்,

ஹரிஹரன்

(164) தைலபுர குடிதாங்கி ராமதாசு அடிக்கடி கட்சி தாவுவது ஏன்?

பாமக நிறுவனர் குடிதாங்கி ராமதாசு அரசியலில் ஒரு கட்சி விட்டு அடுத்த கட்சி தாவி பலன் பெறுவதில் உலகிலேயே சாதனை படைத்தவர்.

இப்படி கட்சித்தாவி உலக சாதனை படைக்கும் ஆற்றல், திறன் எங்கிருந்து வந்தது குடிதாங்கி ராமதாசுக்கு? வேறென்ன வாஸ்து தான்!

திண்டிவனத்தில் இருந்தபோது இல்லாத ஆற்றல் தைலாபுரத்தில் குடிவந்தபின் குடிதாங்கிக்கு வந்தது என்பது மெய்தானே?

தைலாபுரம்...தைலபுரம்...தைலம்.. நீலகிரித்தைலம்...

நீலகிரித் தைலம் தயாரிப்பு பற்றி பள்ளிக்கூடத்தில் நாம் படித்திருக்கிறோம்.

ஒவ்வொரு நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களில் மீதும் ஏறியவர் இலைகளைப் பறித்து கீழேபோட்டு விட்டு, மீண்டும் மீண்டும் மரத்தில் இறங்கி ஏறாமல் ஒரு மரத்தில் இருந்தபடியே அடுத்த மரத்திற்கு வானரங்கள் போல் தாவி மீண்டும் இலைகளைப் பறிப்பார்கள்
பறித்த இலைகளை வேகவைத்து வரும் நீராவியைக் குளிரவைத்தால் நீலகிரித்தைலம் தயார்!

இப்போ தைலபுரதோட்ட வாசியான குடிதாங்கி இராமதாசு தமிழக அரசியலில் செய்வதை ஒப்பு நோக்குங்கள்: முதலில் அதிமுக உடன் சட்டமன்ற தேர்தலுக்குக் கூட்டணி, பின்பு திமுகவுடன் பாரளுமன்றக்கூட்டணி, பிறகு அன்புச் சகோதரியுடன் கூட்டணி, அப்புறம் தமிழினத்தலைவருடன் கூட்டணி...பாஜகவுடன் மத்தியில் உறவு , காங்கிரசுடன் மாநிலத்தில் உறவு...

தாவு தாவு என்று தாவித் தாவியே அ முதல் ஃ வரையிலான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு பின்பு விமர்சனங்களால் வேகவைத்து கூட்டணி உறவு, ஆதரவு தொடரும் என குளிரவைத்து கமிஷன், பதவிப் பலன் பெறுவது!

தைலபுர ஸ்தல வாச வாஸ்து புராணத்தில் சூட்சுமமாக குடிதாங்கி ராமதாஸின் அரசியல் வஸ்து அடங்கியிருக்கிறது.

அலோபதி டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் ஹோமியோபதி / நாட்டுமருத்துவ நீலகிரித் தைலமகிமை அறிந்தவர் குடிதாங்கி ராமதாசு!


அன்புடன்,


ஹரிஹரன்

Wednesday, August 22, 2007

(163) பாமக விலிருந்து ராமதாஸ் விலகல்

குமுதம் ரிப்போர்ட்டரில் குடிதாங்கி ராமதாஸிடம் கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: எதிர்காலத்தில் விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி வைக்குமா பாமக?

குடிதாங்கி ராமதாஸ் பதில்: பாமக எந்த நடிகருடனும் கூட்டணி வைக்காது!

பெரிய மருந்து தமிழ்க்குடிதாங்கி ராமதாஸ் அவர்களின் மாஸ்டர் பீஸ் நடிப்புகளில் தமிழகம் கண்டு ரசித்த காட்சிகள்/நிகழ்வுகள் சில:

1)அரசியல் கூட்டுக்களவாணிக் கூட்டணி நடிப்பு...
2)பொங்குதமிழ் இயக்கம் அமைத்து தமிழைப்பாதுகாப்பதான நடிப்பு...
3)மரவெட்டி டூ பசுமைத்தாயக அக்கறை நடிப்பு...
4)தன் குடும்பத்தினர் எந்தப் பதவியிலும் இருக்கமாட்டார்கள் என்ற தன் சத்தியம் மீறி அன்புமணியை மத்திய அமைச்சர் பதிவியில் வைத்து அழகுபார்க்கும் தான் தான் தன் சமூகத்தினர்க்கு சத்தியம் செய்தது - மீறினால் தனக்கு முச்சந்தியில் சவுக்கடி தண்டனை அறிவித்தது என்பதை மறந்த நடிப்பு...

இப்படி இயற்கையான நடிப்புத் திறன் நிறைந்த அரசியல் நடிகர் குடிதாங்கி ராமதாஸ் நடிகர்களுக்கும் பாமகவுக்கும் கூட்டணியோ தொடர்போ இருக்காது என்று செல்ஃப் ஹிட் செய்து பாமகவிலிருந்து தன்னை விலக்கி கொண்டுவிட்டாரா???

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, August 21, 2007

(162) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடரக் காரணம் பஞ்சாப் சர்தார்ஜிக்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஏன்? என்பது அனைத்து 100% அக்மார்க் இலங்கைத் தமிழருக்குமே ஒருமித்தபடி என்னன்னு இன்றளவில் 100% தெரியாத விஷயம்.

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் இன்றையக்கு இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும் என்று வை.கோ சொல்லியிருக்கிறது செய்தி.

இந்திரா காந்தியை சர்தார்ஜிக்கள் துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்துக்கட்டியதால் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படமுடியவில்லை.

ஆக இன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராமல் தொடருவதற்குக் காரணம் இந்திரா காந்தியைக் கொன்ற சர்தார்ஜிக்கள் தான் காரணம்...

சர்தார்ஜிக்கள் என்றாலே ஜோக்குதான்.

1984ல் இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்ற சர்தார்ஜி(களு)க்கே தெரிஞ்சிருக்காது 2007ல் வை.கோ ஜோக்கடிப்பதிலே சர்தார்ஜியை மிஞ்சிடுவாருன்னு :-))


குறிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எனக்கு ஒரு கருத்தும் கிடையாது!


அன்புடன்,


ஹரிஹரன்

(161) அங்கவை...சங்கவை...இங்கவை...வை ராஜா வை..தமிழ் உண(ர்)வு

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நடிக்க இரண்டு கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
நல்லா இருக்கட்டும். எல்லா வளத்துடனும் சிறப்புடன் வளமா வாழ வாழ்த்துவோம்.

நேற்று இரவு சன் டிவியில் வந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் வடிவேலுவின் சூப்பர் ஹிட் நகைச்சுவைக் காட்சிகளை தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். எந்த திரைப்படத்தில் இந்த நகைச்சுவைக்காட்சி என்று தெரியவில்லை. சாராம்சம் இதுதான்:

வடிவேலு ஒரு முடிதிருத்தும் கடைக்கு வருகிறார். நாவிதர் கடையின் உள்ளே ஒருவருக்கு சவரம் செய்துகொண்டிருக்கிறார்... கடையின் வெளியே பெஞ்சில் ஒருவர் அமர்ந்து தினசரி செய்திகளை சத்தமாகப் படித்தபடியே வடிவேலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.

செய்தித்தாள் படிப்பவர் : (உரத்த குரலில்) சுனாமி சேதாரங்களை அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் பார்வையிட்டார்... வடிவேலைப் பார்த்து கிளிண்டனைத் தெரியுமா?

வடிவேலு: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க..

செய்தித்தாள் படிப்பவர்: கிளிண்டனைத் தெரியாமல் ஏன் சலூனுக்கு வந்தாய்?
மீண்டும் செய்தி படிப்பதைத் தொடர்கிறார்... சதாம் உசேனைத் தூக்கில் போட்டது சரியா?
வடிவேலைப் பார்த்து சதாம் உசேனைத் தெரியுமா?

வடிவேலு: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க.. கடைவீதியில் கறிக்கடை வைத்திருக்கும் உசேனைத் தெரியும்

செய்தித்தாள் படிப்பவர் : சதாம் உசேனைத் தெரியாமல் ஏன் சலூனுக்கு வந்தாய்?

டென்சனான வடிவேலு: உனக்கு முனியாண்டியைத் தெரியுமா?

செய்தித்தாள் படிப்பவர்: யார் முனியாண்டி எனக்கு ஏன் தெரியணும்?

வடிவேலு : உன் மனைவியை உனக்குத் தெரியாமல் ஒருவருஷமாக "வைத்துக் கொண்டிருக்கும்" முனியாண்டி உன் மனைவியோடு ஓடிப்போயிட்டிருக்கிறான்..

இதைக் கேட்டதும் அய்யோ ஓசம்மா...மோசம் போயிட்டியேன்னு ஓடுகிறார் செய்தித்தாள் படித்தவர்..

ஓடு ஓடிப்போய் ஓசூர் எக்ஸ்பிரஸ்லே போய்த் தேடுன்னு டிப்ஸ் வேறு வடிவேலு தருகிறார்.

அடுத்து நாவிதர் வடிவேலிடம் : முனியாண்டி தான் அந்தாளோட பொண்டாட்டியை வைச்சிட்டுருக்கான்னு எப்படி உங்களுக்குத் தெரியும்?

வடிவேலு: அது உன் பொண்டாட்டியை வைத்துக்கொண்டிருக்கும் இந்த ஆறுமுகம் சொல்லித்தெரியும்..

நாவிதரும் சவரம் செய்துகொண்டிருந்த ஆறுமுகம் என்ற நபரும் அலறியபடியே ஓடுகிறார்கள்.


மழைத்துளி விழுந்த தார்ச்சாலை நிறத்தில் இருக்கும் அக்மார்க் தமிழன் வடிவேலு, தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை மண்ணின் மைந்தன் வடிவேலு, இரண்டுகோடி ரூபாய் சம்பளம் வாங்கியபடியே தமிழ்த் திரைப்படங்களில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மனைமாட்சியை
இந்த அளவுக்குப் பெருமைப்படுத்தியிருக்கக்கூடாது!


அடுதத கொடுமை தொகுப்பாளினியின் அறிவிப்பு... நேயர்களே வைகைப்புயலின் இந்த காமெடி சீனை ரசித்து மனம் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள் அடுத்து சந்திக்கும் வரை பை..பை..

இதே வடிவேலு கிரி எனும் படத்தில் தன் தமக்கையை வைத்துப் பிழைப்பதாக கேடுகெட்ட கலாச்சாரப் பிழையுடன் கூடிய நகைச்சுவையை!! செய்திருப்பார்! வாழ்க வடிவேலு! இன்னும் இதுமாதிரியான நகைச்சுவைகாட்சிகளை பெருவாரியாக ரசித்து தமிழ்மக்களாகிய நாம் வடிவேலுவின் சம்பளத்தை இரண்டு கோடி ரூபாயிலிருந்து நான்கு கோடி ஆக்குவோம்!


இன்னொரு சினிமா நகைச்சுவை காட்சியில் சாமி, பூதம் இவைகளில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவா(ந்)தி மணிவண்ணன் நகைச்சுவை பாத்திரங்களில் உச்சத்தில் இருந்து நடித்த போது வந்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சியில் உதிர்த்த முத்து இது:

ஒரு குடியிருப்பில் ரெண்டு சிறுவர்களிடம் பேசும் காட்சி:

மணி வண்ணன் : டேய் தம்பி அது யார்ரா உங்கூட இருக்கும் பையன்?

சிறுவன் : என் தம்பி

மணி வண்ணன் : என்ன வயசுடா உன் தம்பிக்கு?

சிறுவன் : ரெண்டு வயசுஆகுது

மணிவண்ணன் : எப்படி? உங்கப்பன் துபாய்க்குப் போய் மூணு வருஷமாச்சு... உன் தம்பிக்கு ரெண்டு வயசா? எப்படி? குழப்புறயே...!!


சின்னக் கலைவாணர் விவேக் ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் கறுப்பு மனைவி, கறுப்பு புருஷனுக்கு கலரான குழந்தை பிறந்ததால் எழுந்த சந்தேகத்தினை கறுப்பு பலப்பம் கறுப்பு சிலேட்டில் எழுதும் போது வெள்ளை நிறத்தில் எழுத்து உருவாவதைக் காட்டி பஞ்சாயத்து செய்துவிட்டு... அந்தப் பெண்ணிடம் ப்ரௌன் நிறத்தில் குழந்தை வேணும்னா எங்கிட்ட வான்னு வெட்கப்பட்டுக்கொண்டு சொல்வார்..

இன்றைக்கு அடல்ட்ரி தான் தமிழ் சினிமாவின் மச் டிலைட்டட் & அல்டிமேட் நகைச்சுவை!

வள்ளுவர் போன்ற தமிழ் ஆன்றோர்கள் மனைமாட்சி குறித்துச் சொன்னதெல்லாம் இன்றைக்கு தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்துமான்னு கேள்வி வருது.

சிவாஜி படத்து அங்கவை.. சங்கவை மேட்டரை வைத்து சுஜாதாவை வை.. ராஜா வை... உன் பதிலை இங்கவைன்னு பாமரத்தனமா அசுர ஓசையுடன் தமிழுணர்வு பொங்க வலைப்பதிவில் எழுப்புகிறோம்!

சிவாஜியில் நடிகை ஸ்ரேயாவின் நெகிழ்ந்த மேலாடை வழியே வெளித்தெரியும் அங்கங்களைக் கண்டு மகிழ்ந்த படியே ஸ்ரேயாவின் திறந்த மனத்தைப் பாராட்டிக்கொண்டே அண்ணாமலையில் நேற்றைய அண்ணி குஷ்பூ மாதிரி இன்றைய அண்ணி ஸ்ரேயா ஆவதற்காக மணிமேகலைப்பிரசுர சினிமாப் பிரபலங்கள் முகவரிகள் புத்தகத்தில் ஸ்ரேயாவின் சென்னை/ஹைதராபாத் இல்லம் தேடி ஸ்ரேயா அண்ணியின் இளைத்த உடல் தேறி வர சாத்துக்குடி, ஹார்லிக்ஸ் சகிதம் நிற்பவர்கள்தானே தமிழர்களாகிய நாம்!

கூடையில் என்ன பூ குஷ்பூ என்ற வரிகளை வகைக்கு ஏற்ப புரிந்து கொண்டு கோவில் கட்டி வழிபட்ட நவீன பாரம்பரியம் தமிழர்களாகிய நமது பாரம்பரியம்! அடுத்த தலையாய கடமை புது அண்ணி ஸ்ரேயாவுக்குத் தமிழகத்தில் சிலை எடுப்பதுதானே!


வைகைப்புயல் வடிவேலின் தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய மனைமாட்சியை பாலியல் இச்சை வக்கிர வடிவமைப்பு நகைச்சுவைக்காட்சியை நயந்து ரசித்த தமிழர்களாகிய நாம்...

பகுத்தறிவு வா(ந்)தி மணிவண்ணனின் கணவன் மனைவி பிழைப்பு காரணமாக பிரிந்து வாழும் சூழலை மங்கி, மாசுபட்ட மனைமாட்சியாய் சித்தரித்த சீக்குப்பிடித்த நகைச்சுவைக் காட்சியை ரசித்த தமிழர்களாகிய நாம்..

இன்ன பிற நடிகர்களின், திரைப்பட கர்த்தாக்களின் பாலியல் வக்கிர, மனைமாட்சி மாசு நிறைந்த காட்சிகளை கைதட்டி விசிலடித்து ரசிக்கும் தமிழர்களாகிய நாம்...

இன்றைக்கு வலையுலகில் அசுரத்தனமான ஓசையுடன் பாமரத்தனத்துடன் பாரிவள்ளலின் மகள்கள் அங்கவை சங்கவையை கருப்பாக்கிக் காட்டி பார்ப்பனராகிய, திருவரங்கத்து அக்கிரஹார சுஜாதா மட்டம் தட்டிவிட்டார் பொங்கி எழுங்கள் என்று அறைகூவுகிறோம்!

ரெண்டு கோடி சம்பளம் தந்து வடிவேலு, விவேக் போன்றோர் தமிழர் பாரம்பரிய மனைமாட்சியை நெறியற்ற வாழ்வியலாகச் சித்தரிக்கும் செய்தியை அங்கீகரித்து கைதட்டி விசிலடித்து மகிழும் பகுத்தறிவுத் தமிழர்களாகிய நமக்கு அறைகூவும் அருகதை நமக்கு இருக்கிறதா!!


சுஜாதா-ஷங்கரின் சிவாஜி அங்கவை.. சங்கவை கருப்பு மேக்கப் காட்சியோடு பாரிவள்ளல் மகள்களை இணைத்து தமிழர் பாரம்பரியத்துக்கு பார்ப்பன சுஜாதாவால் இழுக்கு எனும் அறைகூவல் எழுப்புவோர்க்கு இருப்பது தமிழுணர்வு என்பதை விட இவர்களுக்குத் தமிழால் உணவு எனும் உண்மை விடுதலையாகிறது!

தமிழர்களின் கரிய நிறம் சிறுமையானது அல்ல! beauty is only Skin deep!

ஆனால் வெகுதியான தமிழர் சமூக, மனைமாட்சி, வாழ்வியல் நிகழ்வுகளின் பாரம்பரியத்தினைச் சிதைப்போரை மறுப்பதை மறுத்து, சாதி, அரசியல் கொண்டு கறுப்புத் திரை போட்டு மூடியபடி அறைகூவுவது என்பது you RACE to ERACE the true heritage of your own RACE! என்பதாகவே இருக்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, August 01, 2007

(160) குவைத்தில் மீண்டும் ஈவெராமஸ்வாமி

அலாவுதீன் அற்புத விளக்கு கதைகளில் அலாவுதீன் விளக்கைத் தேய்த்தவுடன் பூதம் தோன்றும்.

அலாவுதீன் கதைகளில் வருவது மாதிரி பெல்லாரி மேன் ஈவெராமசாமி சென்ற முறை குவைத்துக்கு வந்திருந்த அடுத்தமுறை எப்போ வருவீங்க என்று நான் வினவிய போது "என்ன பெரிய வெங்காயம்... பெல்லாரி பெரியவெங்காயத்தை எடுத்துத் தேய்ச்சா வந்திட்டுப் போறேன்" என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

நேத்திக்கு கிச்சனில் வயலட் கலரில் இருந்த பெரிய வெங்காயத்தை விளையாட்டாகப் பளபளன்னு பாலீஷ் போட்டமாதிரி தேய்ச்சா பக்கத்துலேர்ந்து என்னை என்ன வெங்காயத்துக்குக் கூப்பிட்டன்னு சத்தம்... மை பிரண்ட் ஈவெரா ஆஜராகியிருந்தார்.

ஹரி: வாங்க மை பிரண்ட் ஈவெரா நமஸ்காரம். சௌக்கியமா? உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க... ஒன்லி வெஜிடேரியன் அவைலபிள். பத்து நிமிஷத்துல ரவா உப்புமா ரெடி ஆகிடும் சாப்பிடலாம்.

ஈவெரா: சௌக்கியமெல்லாம் கெடக்கட்டும் என்ன விஷயம்?
உப்புமா மேட்டர் வெங்காய பகுத்தறிவு கிங்குக்கே வெங்காய உப்புமா ஆஃபரா? ஹாட் Dogs இல்லை Ox tongue டிஷ் வெளியேவே சாப்பிடுவேன்... மேட்டருக்கு வா நீ முதல்ல..

ஹரி: மை ப்ரண்ட் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் நீங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956 வந்த மேட்டர் பத்தித்தான் யோசிச்சுட்டே வெங்காயத்தை அழுத்தித் தேச்சுட்டேன் நீங்களும் வந்துட்டீங்க.

ஈவெரா: அப்படி அது என்ன வெங்காய மேட்டர்? 51 வருஷம் கழிச்சு சந்தேகம் இப்போ?

ஹரி: மேட்டரைக் கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்
"லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள்."

மாமாங்கமாவது 12 வருஷத்துக்கு ஒருதரம் வரும் ஆன்மீக விழா. வருஷத்துக்குப் பன்னிரண்டு தரம் பகுத்தறிவுப்பாசறை முழக்கத்துடன் கடற்கரை சீரணி அரங்க முப்பெரும் ஐம்பெரும் விழா மாநாட்டுக் கூட்டங்களுக்கு வரும் பகுத்தறிவுகள் டாஸ்மாக் தீர்த்தத்தை குடித்தும் தெளித்தும் என்று மதியற்று மாக்களாக மக்கள் 2007ஆம் ஆண்டில் இருப்பது காட்டுமிராண்டித்தனம் இல்லீங்களா மை பிரண்ட்?

ஈவெரா: அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஹரி: என்ன இதுக்கே இப்படி சவுண்ட் விட்டா எப்படி... மை பிரண்ட் அடுத்த மேட்டர் "அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை".

உங்க பகுத்தறிவுப் பாசறை ஆட்கள் நீங்க இப்படி சவுண்ட் விட்ட 1956 லிருந்து 51 வருஷங்களில் 40 ஆண்டுகள் ஆட்சியில், அதிகாரத்தில் இருந்ததால் கோவில் கட்டுவது உற்சவம் கொண்டாடுவது நிறுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் கட்டப்பட்டு 9000கோடிக்கு சாராய வியாபாரம் செய்து மக்களிடையே சமூக ஒழுக்கம் பேணுகிறார்கள்.

ஈவெரா: ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்

ஹரி: அதுக்குள்ள நாயகன் கமல் எபெக்ட் தர்றீங்களே மை பிரண்ட்...
மெயின் மேட்டருக்கு வருவோம். நீங்க சமூக விஞ்ஞானி, பகுத்தறிவுவா(ந்)தின்னு சொன்னதை நம்பாதவங்களும் நம்புற மாதிரி இந்தக்கருத்தைச் சொல்லியிருக்கீங்க:

"எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்."

எப்படி மை பிரண்ட் இப்படி? சட்டியில இருக்கிறது அகப்பையில் வருகிறது. மனசுக்குள்ள நீங்க நினைக்கிறதை அப்படியே சொல்லியிருக்கீங்க!
ஆர்க்கிமிடீஸ் யுரேகா தத்துவம் தெரியாதா உங்களுக்கு... ஆர்க்கிமிடிஸ் கிடக்கட்டும்... காக்காக் கதை கூடவா தெரியாது... கல்லு கல்லா கொண்டுவந்து போட்டு குடத்துக்குள்ள இருந்த கொஞ்சூண்டு தண்ணீரை மேலே எழும்ப வைத்துக் குடித்து தாகம் தீர்த்துகொண்ட தண்ணீர் மேலெழும்புவதற்கும் நிறை-எடை-Mass (weight)க்கும் உள்ள அறிவியல் தொடர்பு உங்களுக்குத் தெரியலை பாவம்!

ஈவெரா: என்ன வெங்காயம் ஆர்க்கிமிடீஸ் எடை..நிறை..மாஸூ பார்ப்பன ஏமாற்றுதல்
காக்கா கதை எல்லாம் சுத்த சாம்பார் வெங்காயம்!

ஹரி: மை பிரண்ட்.. விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் யுரேகா தத்துவத்தை குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்த போது அவரது உடல் நிறைக்கு எடைக்கு நிகரான நீர் குளியல் தொட்டியிலிருந்து வெளியேறியதைப் பார்த்து யூரேகா தத்துவத்தை கண்டுபிடித்தார்...

மகாமகக் குளத்தில் மக்கள் இறங்குவது குளிப்பதற்கு...

மைபிரண்ட் உங்களுக்கோ குளிப்பதே ஆகாது.... குளிப்பதை அறவே வெறுத்த மாமனிதர் நீங்கள்...(குளத்தில்) குளிக்கும் அனுபவம் இல்லாததால் இப்படி நாற்றமடிக்கும் சிந்தனை உங்களுக்கு வந்திருக்கிறது..

ஹாலில் ஓடிக்கொண்டிருந்த மக்கள் தொலைக்காட்சி நிகழ்வில் பழமொழி சொல்லு நிகழ்ச்சியில் ஒரு பழமொழி சொல்லப்படுகிறது கேட்கிறது "ஆறு நிறையப் பால் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்"

ஈவெரா: அவ்வ்வ்வ் ஆஆஆ மை குளிச்சிங்...மை பகுத்தறிவு...மை ரெப்புட்டேசன் டோட்டல் டாமஜ்..டோட்டல் டாமஜ்... என்ற படியே மறைந்து காற்றில் கலக்கிறார்.

காலை சிற்றுண்டி ரவா உப்புமாவுக்கு பாலீஷ் போட்ட பெரிய வெங்காயம் சிறு துண்டுகளாக்கி நறுக்கப்படுகிறது. ஏனோ தெரியவில்லை உப்புமாவின் சுவை கொஞ்சம் கூடியிருந்தது.

அன்புடன்

ஹரிஹரன்