Tuesday, October 31, 2006

(39) எம்டன் மகன் 'n' கருணாநிதி

சென்ற பதிவில் கருணாநிதியைப் போற்றி உண்மையில் உயர்வு நவிற்சியில் கவிதையை ஆசையோடு எழுதிவிட்டு கவிதையின் கீழே கருணாநிதியால் தமிழக சரித்திரத்தில் நிகழ்ந்திட்ட தரித்திர உண்மை நிகழ்வுகளை குறிப்பாக இட்டேன். தமிழ்த்தாய்க்கே கோபம் எனது உயற்வு நவிற்சிக் கவிதைகள் உணர்வு மாறி வஞ்சப்புகழ்ச்சியாகி தோற்றம் மாறிவிட்டது!

சென்ற இப்பதிவில் பின்னூட்டத்தில் குழலி " ஹரிகரா உனக்கு மனச்சாட்சியே இல்லியா?" கருணாநிதி சாகவேண்டும் என்று மட்டமான சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறாயே! என்று அவர் பார்வையை எனது பதிவின் பார்வையாக்க முயன்றார்.

கடற்புறத்தான் ஜோவோ குழலியினும் ஒருபடி மேலே போய் நான் பதிவெழுதும் போது நினைத்திடாத, "கருணாநிதி செத்தால்தான் எனக்கு நிம்மதி என்று நான் தெளிவாகச் சொல்லிவிட்டதாக" தன் கருத்தை எனது பதிவின் கருத்தாக மண்டகப்படி நடத்தினார்!

அடடா! என்ன இது உண்மைகளை மட்டுமே பதிவிட்ட என்னைப் போய் கருணாநிதி சாவை எதிர்நோக்கும் கொம்பேறிமூக்கன்னு குழலி ஐயாவும், ஜோ ஐயாவும் சொல்லிப்புட்டாங்களேன்னு பெரும் மனக்கவலையுடன் நேற்று மாலை வீட்டுக்கு வந்து " இந்த அபவாதத்திலிருந்து என்னைக் காப்பாத்து முருகா-ன்னு தமிழ்க்கடவுள் முருகனை (எனது உயர்வு நவிற்சிக் கவிதையை வஞ்சப்புகழ்ச்சியாக்கியது இத்தமிழ்க்கடவுள் முருகன் செயல் தானெ) வேண்டியவாறு வருத்தப்பட்ட மனதை மாற்றிட சினிமாவை பார்க்கலாம்னு "எம்டன் மகன்" திரைப்படத்தைப் போட்டுப்பார்த்தேன்.

நாசர், வடிவேலு, பரத்னு திரையில வந்து பட்டைய கிளப்பி நடிச்சிட்டு இருந்தாங்க! இடைவேளைக்கு முன்பாக பரத்தின் தாய்வழிப்பாட்டன், நோய்வாய்ப்பட்ட கிழவன், செயல்பாட்டு ஆக்கம் குன்றிய கிழவன், சுமையாகிப் போன கிழவன் படுக்கையில் இழுத்துக்கொண்டு கிடப்பார், டாக்டர் வந்து உறவுகள் எல்லாம் சூழ்ந்து கொள்ள சோதனை செய்து கொண்டிருக்கும் போது அந்தக் கிழவனின் அடுத்த இளைய தலைமுறைப் பேரன்கள் டாக்டரைச் சுற்றிக்கொண்டு எதிர்பார்ப்போடு பார்க்க ..ம்ம் எல்லாருக்கும் சொல்லி அனுப்புங்க என்பார் டாக்டர்... பேரன்கள் கோரஸாக இதுவரை நாலுவாட்டி சொந்த பந்தங்களுக்குச் சொல்லி அனுப்பியாச்சு ஒரு நல்லதும் நடக்கக்காணோம் என்னய்யா டாக்டர்ன்னு முற்றுகையிடுவார்கள்.

சில சீன்கள்கழித்து சீரியஸாகிப்போன கிழவனை மீண்டும் டாக்டர் பரிசோதித்து வாயெல்லாம் பல்லாக கன்பார்ம்டு... கிழம் மண்டையப் போட்டாச்சுன்னு சொன்னதும் பேரன்கள் மூஞ்சியில் ஆயிரம் வாட் ஒளியோடு பெரு மகிழ்ச்சியோடு "கல்யாணசாவு" என்று பாட்டுப்பாடி, தேரேற்றி கிழவனை மயானத்திற்கு இறுதி ஊர்வலம்னு சாவை இந்த அளவுக்குக் காமெடியா சொல்லியிருப்பார் இயக்குநர்.

ஆக இளைய தலைமுறை பேராண்டிகள் நோய்வாய்ப்பட்ட, ஆக்கம் குன்றிய, சுமையாகிப்போன தாத்தாவின் முடிவை எதிர்நோக்குவது தமிழ்நாட்டு நடைமுறையில் இருக்கும் திராவிட வழக்கமே என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் அக்மார்க் திராவிடத் தமிழர் திருமுருகன் . கருணாநிதியின் சன் டிவியிலே "மெட்டி ஒலி" சீரியல் தந்தவர். (நல்லவேளை எம்டன் மகன் திரைப்படத்தின் இயக்குநராக மணிரத்னமோ, பாலச்சந்தரோ,ஷங்கரோ இல்லை (முருகக்கடவுளே! கருணைகாட்டினாய்))

கருணாநிதியும்...

.....ஊழல் நோய் தாக்கிய முதியவரே!

.....தமிழகத்தின் வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆக்கம் குன்றிய முதியவரே!

..மக்கள் நலத்திட்ட நிதியைக் களவாடி தமிழகத்தின் சுமையாகிய முதியவரே!

பேரனாக என்னை ஏற்றுக்கொள்வாயா கருணாநிதியே! மாட்டாய்!

ஆகவே கருணாநிதியே நீடுழி நூறாண்டுகள் வாழ்ந்திடுக!

அன்புடன்,

ஹரிஹரன்

11 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்

நன்மனம் said...

//"எம்டன் மகன்" திரைப்படத்தைப் போட்டுப்பார்த்தேன்.//

சரியா பாத்தீங்களா... "எம் மகனா" இல்ல "எம்டன் மகனா"...

ஓ, தமிழ்நாட்ல மட்டும் தான் சலுகையா.... உலகம் முழுக்க சலுகை வழங்கி "தங்க உலகம்" வாங்க முடியாம போச்சேனு வருத்தமா இருக்குங்க.

வெங்கட்ராமன் said...

நல்லாயிருக்கு உதாரணம்.

பார்த்துக்குங்க, ஆட்டோ கீட்டோ வ்ந்திடப்போவுது.

Hariharan # 03985177737685368452 said...

குவைத்தில் எம்டன் மகன் தான்.

என்ன சலுகையோ என்னவோ. ஜால்ராக்கள் இல்லாமல் இருக்கமுடியாதே அதான் கருணைமழை சலுகைகள்.

Hariharan # 03985177737685368452 said...

வெங்க ராமன்,

ஆட்டோ அரபிக்கடலில் சீறிவராது முங்கிப்போயிடும்னு ஒரு நம்பிக்கைதான்!

தமிழ்மணத்துல இந்தப் பதிவை இணைக்கமுடியலை. கம்ப்ளைண்ட் கந்தசாமியா மெயில் விடணும்!

We The People said...

தம்பி ஹரி,

உங்க நேரம் நல்லா இல்லைன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு ஆட்டோ கண்டிப்பா ரெடி ஆயிருக்கும்!! ஜாக்கிரதை!!! என்னைக்கு இந்தியா வந்தாலும் யார்கிட்டயும் சொல்லாம வாங்க, குறிப்பா தமிழ்மணத்துல போடாதீங்க சென்னைக்கு வரேன்னு :( யார் கண்டா நீங்க எப்ப இந்தியா வருவீங்கன்னு உங்க ஆப்பீஸ்ல கூட கேட்டு வைத்து ரெடியா இருப்பாங்க!! ஐயோ பாவம்!!! ஏம்பா இந்த மாதிரி உண்மையை போட்டு உடைக்கிற... அவ்வளோ தான் சொல்லமுடியும்.

நன்றி

நண்பன் (முதல் முறையா அனானி கமெண்ட் போடலாம்னு நினைத்தேன் என்ன பண்ண விட மாட்டீங்கறீங்களே!!)

Hariharan # 03985177737685368452 said...

ஜெய் அண்ணா,

பஜாஜ் ஆட்டோ இவனுங்கள நம்பித்தான் ஆட்டோ தயாரிப்பே நடத்துறாங்களோ?!

தமிழ்நாட்டின் தாத்தனைப் பற்றி உண்மையேயேயே பேசக்கூடாது! பேசினா ஆட்டோதானா? :-(( பயமா வருது கொளுமோர் குடிச்சு ஆஞ்சநேயரை வேண்டிக்கிறேன் கூடுதல் வீரத்திற்கு!

அப்போ தமிழ்மணத்துல இந்தப் பதிவு சேராதது தற்செயலான டெக்னிகல் தவறு இல்லியா?

We The People said...

தம்பி தாதாவை இல்ல இங்க யாரை சொன்னாலும் ஆட்டோ தான். அது அம்மாவா இருந்தாலும் சரி, அய்யாவா இருந்தாலும் சரி, புது கட்சி கண்ட தலைவனா இருந்தாலும் சரி... சரி சரி நமக்கேன் வம்பு

Hariharan # 03985177737685368452 said...

அண்ணே

விழிப்புணர்வுக்கு இந்தமாதிரி "உண்மை" எழுதினா "விடுதலை" தரச்சொல்லித்தான் பாசறையில் பயிற்சியா?


என்ன பண்ணலாம். மக்களை பெத்தடின் கொளுகையிலே முங்கிக் கெடங்கடான்னு விட்டுட்டு பேசாம
"அவ்வையாருக்கு அதியமான் அளித்த நெல்லிக்கனி இனித்ததா? துவர்த்ததா?"ன்னு தமிழ் பேசணுமா?

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நினவாகத்தான் பாரிஸ் கார்னர்னு சென்னையின் வரலாறு பேசணுமா?

BadNewsIndia said...

ஹரிஹரன்,

உயர்வுக்கான (உயர்வு இல்லண்ணாலும், atleast, கீழிருந்து மேலெழுந்து சம நிலமைக்காவது ) வழியை பார்போம்.

அதை விட்டுட்டு இந்த மாதிரி 'வஞ்சப்புகழ்ச்சி' தாக்குதல்கள் எல்லாம் வேணாமே.

என்னதான் இருந்தாலும் பல கோடி மக்களுக்கு தலைவர்கள்தானே. சில நன்மைகளும் செய்தவர்கள்த்தானே.
இந்த மாதிரி போட்டா சிலர் மனது புண்படலாம்.
அவங்க திரும்ப தாக்கலாம் (atleast வார்த்தையிலாவது. ஆட்டோ வருதோ இல்லையோ)

எதுக்கு வீண் விவாதம்? யாருக்கும் பிரயோஜனம் இல்லை இதெல்லாம்.

ஏற்றத்திர்க்கான வழியை ஆலோசிச்சு விழிப்புணர்வு வர எழுதலாமே, எல்லோரும்.

என்ன சொல்றீங்க (எங்க வீட்டுக்கு நீங்க ஆட்டோ அனுப்பிடாதீங்க) தோன்றியதை கூறினேன். அம்புடுதேன்.

Hariharan # 03985177737685368452 said...

BNI,

முதலில் புனித பிம்பமாக எதையுமே செய்யாத அரசியல் திரா'விட'ப் பெத்தடின் ஏற்றுவதை மட்டுமே செய்கின்ற கூட்டதின் தலைமையை தேவையற்று larger than life என்று காட்ட முற்படுவதினைக் சுட்டவே சரித்திரத்தில் வடுவாகிப்போன உண்மைகள் பற்றி இப்பதிவு.

எதைச்செய்தால் திரா'விட' அரசியல் மக்களுக்குத் தோண்டிய குழியினின்று விடுபடலாம் என்று தமிழக மக்கள் எல்லோரும் அவர்களது வளர்ச்சித்திட்ட உரிமைகளைப் பெற்றே ஆகவேண்டும் என்றும் சொல்லிப் பதிவிட்டு இருக்கிறேன்!