Tuesday, February 20, 2007

(122) ஐயாம் டில்லி....ஐ யம் வேர்ல்டு மேப்

யோவ் மதுரை சூப்பர்வைசர் திரு.அண்ணாமலைகிட்ட அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல் என்னய்யா ஆச்சு? கர்ஜித்தார் சிதம்பரம்.

நடுங்கியபடியே வந்த மதுரையை திரு.அண்ணாமலையை பாலோ அப் பண்ணச் சொல்கிறார் சிதம்பரம்.

போன அமாவாசைக்கு அனுப்பினா ஃபைலை மலையாக்குமிச்சு வச்ச திரு.அண்ணாமலை டேபிளை பவுர்ணமி வரைக்கும் சுத்தி சுத்தி வலம் வருதே ரெண்டு வாரமான்னு டென்சனாகிறார் சிதம்பரம்.

இந்தச் சிதம்பரத்தையே இந்த ஆட்டம் ஆடவைக்கிறானுங்களே. இங்கிலீஷ்ல தெளிவாப் புரிகிறமாதிரிதானே எழுதியிருந்தேன் என முணுமுணுக்கிறார்.

இதற்கிடையில் மதுரை வந்து பைல் பழனியிடம் விளக்கத்திற்குச் சென்று இருக்கிறது என்று அப்டேட் செய்கிறார்.

சிதம்பரம் துணுக்குற்று பழனிகிட்டேயா? எப்பவோ யாருக்காகவோ பின்புறமா அவனைச் சுரண்டிட்டாங்கன்னு வர்ற கோவத்தில என்னை இப்போ வெளக்கம் கேள்வின்னு உருவிக் கோவணத்தோட நிப்பாட்டிருவானே?

பைலை எப்படியும் மாற்று வழியில் சேஸ் செய்தே தீருவது என்று சிதம்பரம் முடிவெடுக்கிறார். அடுத்த டிபார்ட்மெண்ட் நண்பர் டில்லிக்கு போனைப் போடுகிறார்.

யோவ் டில்லி நீதான்யா இந்த சிதம்பரம் திரு.அண்ணாமலைக்கு அனுப்பி திரு.அண்ணாமலை பழனிக்கு அனுப்புன அந்த பைலை பழனிகிட்டேர்ந்து அவன் கேள்வி, வெளக்கம்னு கேட்டு கோவணத்தோட என்னை நிறுத்தும் முன்பு திரு.அண்னாமலைக்கு திரும்பி அனுப்பிடாம ஏழுமலைக்கு அனுப்பி வைக்கணும் என்று வேண்டுகிறார்.

டில்லியும் கலவரப்படாதே சிதம்பரம் நான் இப்பவே திருமலையை அனுப்பிவைக்கிறேன் பழனிகிட்டேர்ந்து ஃபைலை திருமலை இன்டரப்ட் செய்து ஏழுமலைக்கு பார்வர்டு செய்ய ஆவன செய்யச் சொல்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார்.

கலவரமாகிய சிதம்பரமோ திருமலையா? அவர் மேட்டருக்கு வாங்கின கடனுக்கு மீட்டர்வட்டியையே காலா காலத்துக்கும் வசூல்பண்ணிக் கட்டுறதுக்கே முழிபிதுங்கி பொண்டாட்டி குடும்பத்தை விட்டுத் தள்ளியிருக்கிற டென்சன்ல இருக்கப்போராருன்னு சிதம்பரம் நண்பன் டில்லி பரிந்துரைத்த திருமலைக்கு பதிலாக திருப்பதியை அனுப்பிவைக்கச் சொல்கிறார்.

டில்லி கோபமாகிறார். என்னப்பா சிதம்பரம் நானே என்னோட பாஸ் பத்ரிநாத் தொல்லைக்கு நடுவே உனக்கு உதவ உடனே ஆளனுப்புனா திருமலை வேண்டாம் திருப்பதிய அனுப்புன்னு நச்சு பண்ணுறே? சரி சரி என் பாஸ் பத்ரிநாத் வெடவெடன்னு குளிரெடுக்கும் உயரமான அவரிடத்திலிருந்து டில்லியை ஈஸியா டிராக் செய்யப்போராரு, சிதம்பரம் உனக்கு திருமலை வேணாம் திருப்பதி தான் வேணும்னா நம்ம காசியைக் கேட்டுப்பாருன்னு ஐடியா குடுத்து போனை வைக்கிறார்.

காசியா? நேர்மை, புண்ணியம்னு பாவமாப் பேசியே கரைச்சிருவானே பழனியே பரவாயில்லை இதுக்குன்னு மனசுக்குள் நினைக்கிறார் சிதம்பரம்.

மதுரை மாதிரி அடக்கமா இருக்கானா பாரு இந்தச் சிதம்பரம்? ஆட்டமா ஆடுறானேன்னு டில்லி மனசுக்குள்ளே புலம்பியபடியே பாஸ் பத்ரிநாத்தைப் பார்க்கச் செல்கிறார்.

டில்லி ஆர்க்கிடெக்ட் அமர்நாத் கிட்டேர்ந்து ரிப்போர்ட் வந்துருச்சா? வந்துடுச்சு சார் ஆனா அமர்நாத் ஆர்க்கிடெக்ச்சர்ல பிரச்சினை இருக்குமோன்னு சந்தேகமா இருக்குங்க பத்ரிநாத்ன்னு டில்லி சொல்ல டென்சனாகிற பத்ரிநாத் ஆயிரம் ரிவ்யூ செக்யூரிட்டி இஷ்யூ எல்லாம் மினிட்ஸ் ஆஃப் மீட்டின் போது பேசி முடிச்சாச்சே டில்லி... சம்மர் வேற வருது அமர்நாத் ஆர்க்கிடெக்சர் பிரச்சினையால உரு(வா)காம இருந்தா சரி.

இதற்கிடையில் திரு அண்ணாமலைக்கு போன் வருகிறது.
ஈஸ் தட் திரு.அண்ணாமலை? ஐயாம் ஓர்லாண்டோ ஸ்பீகிங் மை செல்ப் அண்ட் மிஸ்டர் ரியாத் அலாங் வித் கதிர்காமர் விஸிட்டிங் ஃபார் இன்ஸ்பெக்ஷன் ப்ளீஸ் பிரிப்பேர் அர்ஜெண்ட் அஜெண்டா பார் அவர் செட்யூல்ட் மீட்டிங். ஓகே பை ஃபார் நௌ.

ஒர்லாண்டோ அண்ட் ரியாத் அண்ட் கதிர்காமர் டிஸ்னிலேண்ட் கார்ட்டூன்ஸ் அர்ஜெண்ட் ஆர்டினரின்னு லாண்டரி அஜண்டாவை இந்த அனகொண்டாக்களுக்கு இந்த லெஜண்ட் தயார் செய்யும் நிலையா எனப் புலம்பியபடியே திரு.அண்ணாமலை அஜெண்டாவை ரெடி செய்கிறார்.

திரு அண்ணாமலை அவசரமாக போனைப் போட்டு யோவ் டில்லி இன்ஸ் பெக்சனுக்கு நாளைக்கு சாயந்திரம் க்ளையண்ட் வர்றாங்க இடனரி டீடெய்ல்ஸ் எடுத்துக்கோ

ஒர்லாண்டோ டிபார்டிங் ஒர்லாண்டோ அண்ட் அரைவிங் அட் ரியாத் தென் ஜாயினிங் வித் ரியாத் அண்ட் தென் ரியாத் அண்ட் ஒர்லாண்டோ டுகெதர் டிபார்ட்டிங் ரியாத் அண்ட் ஜாயினிங் வித் கதிர்காமம் இன் லங்கா தென் ஒர்லாண்டோ, ரியாத்,அண்ட் கதிர்காமம் விஸிட்டிங் அவர் புவனேஸ்வர் பிளாண்ட் இஸ் தட் க்ளியர்.

டில்லி மறக்காம ஏர்போர்ட்டுக்கு பிக்கப்புக்கு அரேஞ்மெண்ட் செஞ்சுடு டில்லின்னுட்டு போனை வைச்சுடுறார்.


மறுநாள் மாலை க்ளையண்ட் இன்ஸ்பெக்ஷனுக்கு வருகிறார்கள் பரஸ்பரம் அறிமுகமாகிறார்கள்.

ஹலோ ஐயாம் ஒர்லாண்டோ.. ஹலோ ஐயாம் ரியாத்.. ஹலோ ஐயாம் கதிர்காமம்..
ஹலோ ஐயாம் அமர்நாத்... ஐயாம் பத்ரிநாத்... ஐயாம் புவனேஸ்வர்...ஐயாம் சிதம்பரம்..
ஐயம் திரு.அண்ணாமலை... ஐயம் ஏழுமலை..ஐயம் திருப்பதி...ஐயம் திருமலை...
ஐயம் பழனி... ஐயம் மதுரை...

ஹலோ மிஸ்டர் ஒர்லாண்டோ.. ஹலோ மிஸ்டர் ரியாத் அண்ட் ஹலோ மிஸ்டர் கதிர்காமம் ஹௌ ஆர் யூ ஆல்... ஐயம் டில்லி என டில்லி தன்னை அலப்பறையாக அறிமுகம் செய்து கொள்ள ஒர்லாண்டோ ஹௌ இஸ் த வெதர் இன் டில்லி என அக்கறையாகக் கேட்க.. டில்லி மீண்டும் ஐயாம் டில்லி என அழுத்திச் சொல்லுகிறார்...

இந்த பூகோள வித்தகர்கள் அறிமுகத்தை கேட்ட அப்பாவி காசிக்கு ஏதோ பூகோளப் பொறியோன்னு பொறிதட்ட ஹலோ யூ ஆல்.. ஹௌ ஆர் யூயூ.. ஐயம் வேர்டுமேப்-ன்னு சவுண்ட் விட்டுக்கொண்டார்.

குறிப்பு:
1991-92ல் சென்னையில் மவுண்ட் ரோடு-சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் இஞ்சின் பேக்டரியில் UVNDT (Ultraviolet Non Destructive Test) டெக்னாலஜியைப் பயன்படுத்தி புதிய இஞ்சின் பிளாக்குகளில் கீறல்கள் இருக்கிறதா இல்லையா என புற ஊதாக்கதிர்கள் மூலம் சோதிக்கும் கருவியை நிறுவும்போது அந்த டிபார்ட்மெண்ட் இன்சார்ஜுடன் அவரிடம் எனது பிஸினஸ் கார்டைத் தந்துவிட்டு அறிமுகமாகும்போது என்கையைக் குலுக்கிவிட்டு ஐ யம் டில்லி என்றார்.

நான் அவர் ஊர் டில்லி என அர்த்தம் கொண்டு ஹௌ இஸ் த வெதர் இன் டில்லி என்று கேட்டு எங்கள் அஜ்மீர் பிளாண்டுக்கு டிரைனிங் டில்லி வழியாக சென்று வந்த கெத்தில் பதிலாக டில்லி மஸ்ட் பி கோல்ட் நௌ என நானே சொல்லிக்கொள்ள மீண்டும் அவர் ஐ யாம்
டில்லி எனச் சொன்னபோது சமாளித்தது நினவில் வர இப்பதிவு.

அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

30982
டெஸ்ட் மெசேஜ்!

சென்ஷி said...

//இந்த பூகோள வித்தகர்கள் அறிமுகத்தை கேட்ட அப்பாவி காசிக்கு ஏதோ பூகோளப் பொறியோன்னு பொறிதட்ட ஹலோ யூ ஆல்.. ஹௌ ஆர் யூயூ.. ஐயம் வேர்டுமேப்-ன்னு சவுண்ட் விட்டுக்கொண்டார்.//

:))))

Hari said...

அநியாயத்துக்க்கு மொக்கை போடுறீங்க.

dondu(#11168674346665545885) said...

எஸ்.வி.சேகர் டிராமா ஒன்றில் இம்மாதிரி ஊர்ப்பெயராகவே அடுக்குவார்கள்.

அதுல ஒரு டயலாக்.

சேகர்: அப்போ சீர்காழி மதுரையெல்லாம் எங்கே?

சிதம்பரம்: சீர்காழி எங்க அப்பா, மதுரை எங்க பெரியப்பா. அவரோட சம்சாரம் பேரு காஞ்சிபுரம்

சேகர்: மதுரைக்கு ஒரு சின்ன காஞ்சிபுரமும் இருக்கறதா சொல்றாங்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

சென்ஷி,

வந்து படித்து சிரித்ததற்கு நன்றி

Hariharan # 03985177737685368452 said...

//Hari said...
அநியாயத்துக்க்கு மொக்கை போடுறீங்க//

இது உள்குத்தா வெளிக்குத்தா :-))

நன்மனம் said...

:-)))