Thursday, August 23, 2007

(164) தைலபுர குடிதாங்கி ராமதாசு அடிக்கடி கட்சி தாவுவது ஏன்?

பாமக நிறுவனர் குடிதாங்கி ராமதாசு அரசியலில் ஒரு கட்சி விட்டு அடுத்த கட்சி தாவி பலன் பெறுவதில் உலகிலேயே சாதனை படைத்தவர்.

இப்படி கட்சித்தாவி உலக சாதனை படைக்கும் ஆற்றல், திறன் எங்கிருந்து வந்தது குடிதாங்கி ராமதாசுக்கு? வேறென்ன வாஸ்து தான்!

திண்டிவனத்தில் இருந்தபோது இல்லாத ஆற்றல் தைலாபுரத்தில் குடிவந்தபின் குடிதாங்கிக்கு வந்தது என்பது மெய்தானே?

தைலாபுரம்...தைலபுரம்...தைலம்.. நீலகிரித்தைலம்...

நீலகிரித் தைலம் தயாரிப்பு பற்றி பள்ளிக்கூடத்தில் நாம் படித்திருக்கிறோம்.

ஒவ்வொரு நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களில் மீதும் ஏறியவர் இலைகளைப் பறித்து கீழேபோட்டு விட்டு, மீண்டும் மீண்டும் மரத்தில் இறங்கி ஏறாமல் ஒரு மரத்தில் இருந்தபடியே அடுத்த மரத்திற்கு வானரங்கள் போல் தாவி மீண்டும் இலைகளைப் பறிப்பார்கள்
பறித்த இலைகளை வேகவைத்து வரும் நீராவியைக் குளிரவைத்தால் நீலகிரித்தைலம் தயார்!

இப்போ தைலபுரதோட்ட வாசியான குடிதாங்கி இராமதாசு தமிழக அரசியலில் செய்வதை ஒப்பு நோக்குங்கள்: முதலில் அதிமுக உடன் சட்டமன்ற தேர்தலுக்குக் கூட்டணி, பின்பு திமுகவுடன் பாரளுமன்றக்கூட்டணி, பிறகு அன்புச் சகோதரியுடன் கூட்டணி, அப்புறம் தமிழினத்தலைவருடன் கூட்டணி...பாஜகவுடன் மத்தியில் உறவு , காங்கிரசுடன் மாநிலத்தில் உறவு...

தாவு தாவு என்று தாவித் தாவியே அ முதல் ஃ வரையிலான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு பின்பு விமர்சனங்களால் வேகவைத்து கூட்டணி உறவு, ஆதரவு தொடரும் என குளிரவைத்து கமிஷன், பதவிப் பலன் பெறுவது!

தைலபுர ஸ்தல வாச வாஸ்து புராணத்தில் சூட்சுமமாக குடிதாங்கி ராமதாஸின் அரசியல் வஸ்து அடங்கியிருக்கிறது.

அலோபதி டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் ஹோமியோபதி / நாட்டுமருத்துவ நீலகிரித் தைலமகிமை அறிந்தவர் குடிதாங்கி ராமதாசு!


அன்புடன்,


ஹரிஹரன்

1 comment:

Hariharan # 03985177737685368452 said...

38481
டெஸ்ட் மெசேஜ்!