Thursday, August 23, 2007

(165) குடிதாங்கி ராமதாசு சிவாஜி பட "அங்கவை.. சங்கவை" மேட்டரில் கப்சிப் ஏன்?

சிவாஜி திரைப்படத்தில் அங்கவை சங்கவை என்று பாரிவள்ளலின் மகள்கள் பெயர் கொண்ட பாத்திரங்கள் தமிழர் மாண்பை குறைத்துவிட்டதாக எழுந்த தமிழர் எழுச்சியில் குடிதாங்கி ராமதாசு இன்று வரை ஏன் கப்சிப் என்று இருக்கிறார்!

கொஞ்சம் உற்று நோக்குவோம்!

கடையேழு வள்ளல்களில் முதன்மையானவன் பாரி வள்ளல். பாரிவள்ளலின் வள்ளல் தன்மையை தமிழ் மக்களிடையே பறைசாற்றும் நிகழ்வு எது?

சாலையோரத்தில் படர்வதற்குப் பிடிமானம் இல்லாமல் தவித்த ஒரே ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தேரையே தந்து முல்லைக்கொடி படர வழிவகை செய்த செயல் மூலம் தமிழர்களுக்குப் பாரிவள்ளல் அறிமுகமாகிறார்.

அப்படியே ஜூம் பண்ணுங்க குடிதாங்கிக்கு (விஜய்காந்த் ஸ்டைலில் ஜூம் என்று சொல்லவும்)

குடிதாங்கி ராமதாஸை தமிழர்கள் மத்தியில் பெருவாரியாக அறிமுகப்படுத்திய நிகழ்வு எது?

தமிழகத் தலைநகருக்கான பிரதான சாலையின் இருமருங்கும் நன்கு வளர்ந்த மக்களுக்கு நிழல் தரந்துகொண்டிருந்த ஓராயிரம் மரங்களை வெட்டி வீசிய வன்முறைச் செயல்!

முல்லைக்கொடிக்குத் தனது தேரை தாரைவார்த்துத் தந்த பாரிவள்ளல் குடிதாங்கியைப் பொறுத்த அளவில் பிழைக்கத் தெரியாத ஆள்!

குடிதாங்கி சந்தன மரவெட்டி வீரப்பனுக்கு / வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு உச் கொட்டி அனுதாபம் தெரிவித்தது என்பது இருவரும் மரவெட்டியாய் ஒத்த செயல் செய்ததாலேயே!

வீரப்பன் காட்டுக்குள் சந்தன மரவெட்டி!
குடிதாங்கி ராமதாசு ரோட்டில் புளியமரவெட்டி!

அங்கவை.. சங்கவையின் தந்தை பாரிவள்ளலோ ஒரே ஒரு முல்லைக் கொடிக்குப் போய்த் தனது தேரைத் தந்தவர்!

இப்பச் சொல்லுங்க... தன் அளவுக்கு ஓரளவுக்காவது ஒத்து இருக்கும் இன்னொரு மரவெட்டிக்குத்தான் மனமிறங்கி குரல் கொடுப்பேன் என்று கொள்கைக்குன்றாக குடிதாங்கி ராமதாசு இருப்பது தவறா?


அன்புடன்,

ஹரிஹரன்

1 comment: