Wednesday, April 11, 2007

(148) பீர்பல் கதைகள் தொகுப்பு-4

பீர்பல் கதை-பகுதி-1

பீர்பல் கதை-பகுதி-2

பீர்பல் கதை-பகுதி-3


அக்பர் அரசவையில் இருக்கிறார். சபைக்காவலன் ஓடி வந்து ஒரு ஓலையைத் தருகிறான்.

பாரசீகத்து மன்னன் எழுதிய சவால் மடல். இந்த மடலுடன் எமது படைவீரனுடன் ஒரு சிங்கத்தைக் கூண்டில் வைத்து அனுப்பி வைத்திருக்கிறேன். கூண்டைத் திறக்காமல், உடைக்காமல் சிங்கத்தை எடுத்துக்கொண்டு படைவீரனோடு கூண்டைத் திரும்பி சில நாட்களுக்குள் எனக்கு அனுப்பவும். தாமதித்தாலோ கூண்டு பாதிக்கப்பட்டாலோ படை எடுக்கப்படும் என்பது தான் மடல் சொன்ன செய்தி!

அக்பர் தன் அமைச்சரவை சகாக்களுடன் சென்று சிங்கக்கூண்டைப் பார்வையிடுகிறார். தன் மந்திரிகளுக்கு சவாலைச் சொல்லி உபாயம் கேட்கிறார். நெடிய யோசனைக்குப்பின்னும் எவரும் வாய்திறக்கவில்லை, உருப்படியான உபாயம் சொல்லவில்லை.

சவால் வந்த நாள் அன்று பீர்பல் வேறு ஊரில் இல்லை. எனவே அக்பர் பீர்பலை மிக அவசரமாக அரசவைக்கு அழைத்துவர ஆணையிடுகிறார்.

மறுநாள் மிக அவசரமாக பீர்பல் அரசவைக்கு அழைத்துவரப்படுகிறார். அக்பர் பீர்பலிடம் பாரசீகத்தில் இருந்து தனக்குத் தலைவலியாக வந்த சவாலைச் சொல்லி அச்சவாலை முறியடிக்கும் பொறுப்பை பீர்பலிடம் ஒப்படைக்கிறார்.

பீர்பல் சிங்கக்கூண்டினைப் பார்வையிடுகிறார். சுற்று முற்றும் வந்தவர் பழுக்கும் இரும்புக்கம்பியை எடுத்துவரும்படி பணிக்கிறார். கொதிக்கும் இரும்புக்கம்பி வந்ததும் அதைக் கூண்டின் கம்பிகளுக்கிடையே நுழைத்து சிங்கத்தை பழுக்கும் கம்பியால் தொடுகிறார்.
சிங்கம் உருக ஆரம்பிக்கிறது.

இவ்வாறு பீர்பல் தன் மதியூகத்தால் பாரசீக அரசன் அனுப்பி வைத்த மெழுகுச் சிங்கத்தைக் கூண்டைத் திறக்காமல், உடைக்காமல் உருக்கி இளக்கி, கரையவைத்து சிங்கத்தை எடுத்துக்கொண்டு பாரசீக மன்னனின் சவாலில் வென்று கூண்டைப் பாரசீகப் படைவீரனிடம் திருப்பித் தந்து அனுப்பிவைக்கிறார்!

அக்பர் மீண்டும் பீர்பலை மெச்சி பரிசுகள் தந்து கௌரவிக்கிறார்!

குறிப்பு:

அந்தக் காலத்தில் சும்மாத் தின்று தினவெடுத்த அரசர்களுக்கு அடுத்த நாட்டின் மீது படையெடுக்க எதுவேண்டுமானாலும் போதுமான காரணமாயிருந்திருக்கிறது. (இன்றைய நம் தெலுங்கு(ரீமேக்)படங்களில் நாயகன் ஹீரோயிஸம் காட்டுவதற்காக பைட் சீன் வருவதற்கு படு சப்பையான காரணங்கள் போதுமானதாக இருப்பது மாதிரி :-))


அன்புடன்,


ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

சேதுக்கரசி said...

கதைக்குப் பொருத்தமான பின்குறிப்பு!

சுப.செந்தில் said...

//படு சப்பையான காரணங்கள் போதுமானதாக இருப்பது மாதிரி//

வரலாற்று கதைக்கு ஏற்ற நவீன நக்கலையும் வெளிப்படுத்தி கலக்கியிருக்கீங்க ஹரி!!