Sunday, July 09, 2006

(11) அடியேன் இட்ட சமூக அக்கறைப் பின்னூட்டங்களின் தொகுப்பு-1

பிற வலைப்பக்கங்களில் சமூக அக்கறைப் பதிவுகளில் நான் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு பதிவாக தங்கள் பார்வைக்கு:

திரு. கால்கேரி சிவாவின் அரேபிய அனுபவங்கள்10.3 பதிவில்அரேபிய நாடுகளில் வேலை செய்வோர்க்கு வசதிகள், சலுகைகள் இல்லாத நிலை குறித்த பதிவில் நானிட்ட பின்னூட்டம்:
http://sivacalgary.blogspot.com/2006/07/103.html

பாலைவனத்தில் லேபர் கேம்ப் விஷயங்கள் சில நேரங்களில் சிலரை மனம் பிறழ்ந்து போகவும் வைத்திருக்கிறது.

முழுமையான சுதந்திரம் மிக மிக 'லக்சுரியான"விஷயம்.

நம்மவர் பலர் "கப கப" எனப் பசிக்கும் வயிறு(கள்)க்காக, சார்ந்திருக்கும் குடும்பத்தவரை நிமிர்ந்து வாழும்படிச் செய்யும் முயற்சியில் படுகின்ற அவஸ்தை / தியாகம்!

என்றாலும் சவூதி மாதிரியானதாக மனிதாபிமானமற்ற சட்டதிட்டமில்லாத இதர ஒரு சுமாரான நடைமுறைநாடுகளை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் இருந்தால் அங்கு வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

நடைமுறையில் இந்தியர்கள் எல்லோருமே சுதந்திரத்தை முதன்மையாகக் கருதி வேலையை/நாட்டினை/ வாழ்க்கையைத் தேர்வு செய்ய இயலாத சூழல் தானே இன்னும் நிலவுகிறது!

உங்கள் பதிவு ஒரு Caution advise! for those who have the fortune of choosing what they want! நல்ல பதிவு.
------------------------------------------------------------------------------------------------
வஜ்ராஷங்கரின் ஆரியர் என்றொரு "இனம்" உண்டா? பதிவில்
http://http://sankarmanicka.blogspot.com/2006/07/blog-post.html
நானிட்ட பின்னூட்டம்:

ஷங்கர்,

நமது திரா(வக)விட(ம்) பகுத்தறிவு வாதிகளுக்கு, இன்று வரை எக்கச்சக்கமாக ஸ்டோரி டிஸ்கஷன்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, என்று டெவெலப் செய்து, பெருமளவுக்கு வெற்றியும் பெற்றுத் தந்த "ஒன் லைன் ஸ்டோரியான" வந்தேரி ஆரிய இனம் இருந்தே ஆகவேண்டும்.

ஆனால் அமெரிக்காவிலே இந்தப்"பேருண்மை" "மீண்டும்" கண்டுப்டிக்கப்பட்டுள்ள படியால் தமிழகத்தின் ஏகபோக பகுத்தறிவு-பார்ட்டிகள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அல்லது தங்களது வழக்கமான "வீர வசனமான" ஆரியப் புற்றிலிருந்து வந்த / ஆரிய அடிவருடிகளின் சதி, பண முதலைகளாம் அமெரிக்கர்கள் துணையோடு சரித்திரத்தை மாற்ற விழைந்த கயமைத்தனத்தை பெரியார் பாசறையின் பகுத்தறிவுக் "கோனார் கையேடு" கிழிந்த நிலைமையில் இருந்தும் உண்மையைச் சோற்றாலடித்த பிண்டமான "மறத்(துப்போன)தமிழனுக்கு உணர்த்திட உதவியதாக மீண்டும் அறைகூவக்கூடும்!
---------------------------------------------------------------------------------------
திரு. ஜோ அவர்களது இந்து மதம் சில சந்தேகங்கள் பதிவில்
http://cdjm.blogspot.com/2006/07/blog-post.html

நானிட்ட பின்னூட்டம்:

ஜோ அவர்களே,

தங்களது சந்தேகத்திற்கு எனது பங்களிப்பாக எனக்குப் பட்டதைச் சொல்கிறேன்:

//1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்குசெல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை இது ஏன்?//

நம்மூரில் வைணவர்கள் சிலர் விஷ்ணுவுக்கு உகந்ததாகக் கருதப்படும்"துளசி"யைக்கூட "திருத்துளை" என்று சொல்வார்கள். துளசியில் வரும் 'சி' சிவனின் முதல் எழுத்து என்பதால் இந்த வார்த்தை 'பகிஷ்கரிப்பு" சிவ,சிவ என்றால் காதைப் பொத்திக்கொள்வர் சிலர்.

ஆனல், இங்கு நான் வசிக்கும் குவைத்தில் நம்மக்களின் வீடுகளில் நடத்தப்படும் "ருத்ரம்" "சமகம்" போன்ற சிவ மந்த்ர ஸ்துதிக்களில் திருமண் நாமமிட்ட வைணவர்களும் மனனமாகச் சொல்வதுடன், சிவனுடைய ப்ரஸாதமாக தரப்படும் "வீபூதி"யை நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள்.

முப்பத்துமுக்கோடி தேவர்கள் இருப்பதாக சராசரி ஹிந்து அவர்களது LKG அளவிலான மத அறிவின்படி ஆரம்பத்தில் சரி, முழுமையாக வேதங்கள், கீதை படிக்கும் போது இருப்பது ஒரே இறைவன் அதுவும் வெளியிலில்லை, அவனுக்குள்ளேதான் என்பது தெரிந்துவிடும். உண்மையான எந்த மதப்படிப்பும் துவேஷத்தைத் தூண்டுவதில்லை.

தொலைதூரநாடுகளில்குடும்ப,சமூக,அழுத்தம் நீர்த்துப்போவதாலும், கிடைக்கும் கூடுதல் சேரங்களில், தனித்துச் சிந்திக்க முற்படும்போது அதுநாள்வரை நம்பிய மூடநம்பிக்கைகள் உடைபடுகின்றன.

//2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை.//

இது மென்மையாய்ச் சொன்னால் பயன் விளையாத கடினமான நபர்/சமூகத்தினரிடம் தெய்வம் கண்ணை நோண்டிவிடும் என்று சொல்லித் தேவையான ஒழுக்கத்தை ஏற்படுத்த வந்தது, இன்று சிலரால், சில சமயம் தனிப் பலன்களுக்கென திரிந்து விடுகிறது.

//3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? //

இந்த நடைமுறை பெண்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. நானறிந்து 25% பெண்கள் இக்காலகட்டங்களில் நிற்கக்கூடமுடியாத அளவுக்கு வயிற்றுவலியால் துடிக்க வைக்க வல்லதாக உள்ளது.

இதையும் தாண்டி ஹார்மோன் இம்பேலன்ஸால் கடும்கோபம், இயலாமையில் தடித்த சொல்பிரயோகம் என ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி அளவுக்கு பெண்களிடிடையே பெரும் behavioural change ஏற்படுகிறது.

அக்காலங்களில் மதகுருமார்கள் உள்ளூர்ப் பிரச்னைகளையும் தீர்க்கும் நீதிபதிகளாகவும் பணியாற்றவேண்டியிருந்திருக்கிறது. நீதிபதியின் தீர்ப்பு மாதத்தில் 3நாட்கள் அவரது இயற்கை உடற்கூறு காரணமாக ஏற்படும் உணர்வு வேறுபாடுகளால் பிறழ்ந்து போகும் வாய்ப்பும் இருப்பதனால் பெண்களை மதகுருவாக்காமல் தவிர்க்கப்பட்டார்கள்.

இக்காலகட்டங்களில், நடந்து அலைந்து கோவில் சென்று, ப்ரகாரம் சுற்றி என ஆரோக்கியம் கெட வேண்டியதில்லை என்பதால் கோவில் செல்லவேண்டாம் என்று வழிநடத்தப்பட்டனர்.

சுகாதாரம் என்றளவில் சரி. தீட்டு எனும் பதம் தற்போது தேவையற்றது.
--------------------------------------------------------------------------------
திரு. கால்கேரி சிவாவின் அரேபிய அனுபவங்கள்10.4 பதிவில்
அரேபிய நாடுகளில் பலகாலம் வேலை செய்வோர்க்கு குடியுரிமை, ச்லுகைகள் இல்லாத நிலை குறித்து நானிட்ட பின்னூட்டம்:

http://http://sivacalgary.blogspot.com/2006/07/104.html

ஷிவா அவர்களே,

உதாரணத்திற்கு 10ஆண்டுகள் வேலை செய்தவர்க்கு நிரந்தரதர ரெஸிடன்ஸி, 15ஆண்டுகள் வேலை செய்தவர்க்கு குடியுரிமை(சிட்டிஸன்ஷிப்) என்று தந்தால், பஹ்ரைன், கத்தார், குவைத், அமீரகம் போன்ற நாடுகளில் GCC-Indian citizens ன் மக்கள்தொகை ஒரிஜினல் GCC-Arabic Citizen மக்கள்தொகைக்கு இணையானதகிவிடும்.

சவூதி அரேபியாவிலும் பெரிய அளவிலான GCC-Indian citizens ன் மக்கள்தொகை பெருகிவிடும்.

அரசியல் ரீதியாக இது அரேபிய நாடுகளை இந்தியாவின் extended territories ஆக்கிவிடும் நிதர்சனம் மற்றும் தற்போதுள்ள Religious dogmatism நீர்த்துப்போய்விடும் நிதர்சனமும், இன்றளவுக்கும் "authoritative Moarchy" அரசியல் அமைப்பு உள்ள அரேபிய நாடுகளை ஆள்வோர் அறிந்துள்ளதும் காரணமாகின்றன.

இன்றும் 90% பெட்ரோலிய வருவாய் இந்த அரேபிய நாடுகளை ஆள்வோர் குடும்பத்திற்குத்தானே செல்கின்றன, இந்த அரேபிய அரச குடும்பத்தவர் பணம் பெரும்பாலும் சுவிஸ்,ஐரோப்பிய வங்கிகளில்தானே சென்று சேர்கிறது.

உழைத்து உளுத்துப்போவது இந்தியர்கள். "இண்டர்நேஷனல் நம்பிக்கையான-ரகசியக்காப்பு வங்கிதொழில்" நடத்தும் வெள்ளைக்கார நாடுகள்தானே முழுப்பயனாளிகள்!

இந்த அரேபியநாடுகளின் அரசியல் சிந்தனையில் புரட்சி வந்தாலேயன்றி ஏதும் மாறாது. புரட்சியாக எவெரேனும்அரசியல் மாற்றத்திற்கு குரல் கொடுத்தால், ஷரியத்போர்வையில் தங்கக்கொடுவாளால் சிரச்சேதம் செய்யப்படுவர்..அல்லது ப்ளைட்பிடித்துத் தப்பி தாங்களிருக்கும் கனடாவிற்குத்தப்பி 'அரசியல் அகதி" கோட்டாவில் இம்மிக்கிரேட் ஆகவேண்டிய நிலைதானே நிதர்சனம்.

இந்த மத்திய கிழக்கு நாட்டு அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, priority-ல் முதலில் வரும் தன் குடும்பத்தில் உள்ள "நாலு பேருக்காக சவூதியில் வேலை செஞ்சாக்கூட பரவாயில்லை" என்று சொல்லும் "நாயகனாக"த் தானே நம்ம சராசரி இந்தியன் இருக்கிறான்.

-------------------------------------------------------------------------------------------
வெட்டிப்பயலின் "கணவனைக் கொல்" என்ற தலைப்பில் வந்த பதிவில்
//நம்ம தமிழ்மணத்துல சில பேர் இந்து மதத்தை அழித்தால் சாதி பிரச்சனைக்கு முடிவு கட்டிடலாம்னு நினைக்கறாங்க.மத்த மதங்கள் எல்லாம் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற மாதிரியும் அவர்களுக்கு ஒரு எண்ணம்...இக்கரைக்கு அக்கரை எப்பொழுதும் பச்சையாகத்தான் தெரியும்.//

நானிட்ட பின்னூட்டம்
எனக்குத்தெரிந்து படிப்புக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் கிரிஸ்தவ மதம் மாறுவோர்தான் அதிகம்.படிச்சா முன்னேறலாம். எங்க நிஜமா இருக்கற நிலையப் பாருங்க.. நம்ம "கல்விக்கடவுள் சரஸ்வதி" மைனாரிட்டி மற்ற மதக் கல்விநிறுவனங்களில் மே, ஜூன் மாதம் அதிக மகசூல் தரும் பணப்பயிராக ஆக்கியது நமது "அரசியல் பகுத்தறிவால்"தானே?

ஜேப்பியார், காருண்யா மற்றும் பலகல்விநிறுவனங்கள், 90%ஆசிரியர் பயிற்சி தனியார் நிறுவனங்கள் கிறிஸ்தவ மைனரிட்டி நிறுவனங்களுக்குத் தானே அனுமதிதரப்பட்டுள்ளது நமது பகுத்தறிவு அரசியல் அரசுகளால்.

சின்மயா,ராமகிருஷ்ண,சாரதா மற்றும் இன்ன பிற இந்து நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிப்பதில்லை நம் பகுத்தறிவு அரசுகள்?

நல்லாபடிச்சு வாழ்க்கையிலே வெளங்கிவருவதற்கு வாய்ப்புத் தரும் வகையில் காமராஜர் பள்ளிக்கல்விக்குச் செய்தமாதிரி மக்கள் தொகை பெருகிப்போன பின்னும் அதே பத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரிகள்தான், ஆனால் கல்லூரிகளைப்பெருக்காமல் இட ஒதுக்கீடு, மண்டல் என மக்களைப் பிளக்கும் திரா(வக)விட பகுத்தறிவுகளிடம் "குரங்கு அப்பம்" மாதிரி நொந்து தனிவாழ்வைக் காவு தந்தபின் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எங்காணும் கடற்கரையில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்கள்" தான் தமது முடத்தை, செவிட்டுத்தனத்தை,நீக்கும் என்று சரணடைவோர்தானே அதிகம்
-----------------------------------------------------------------------------------------------
வெட்டிப்பயலின் திராவிடன் என்பவன் யார் எனும் பதிவில்
http://vettipaiyal.blogspot.com/2006/06/blog-post_28.html

நானிட்ட பின்னூட்டங்கள்:

//திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?//

இமயத்ததிலிருந்து கல்லெடுத்து வந்து நிழல் கீழே விழாத கோபுரத்துடன் தஞ்சைப் பெரிய ( பிரகதீஸ்வரர்) கோவில் கட்டிய சோழ மன்னன் இராஜராஜன், மாமல்லபுரம் குடவறை, மற்றும் கடற்கரைக் கோயில்கள் கட்டிய மகேந்திரவர்மன் இவர்களெல்லாம் -தற்போது கடந்த 80 ஆண்டுகளாக தமிழகத்தைப் பீடித்திருக்கும் "சுயநல அரசியல் திராவிட சித்தாந்தத்தின்" அளவுகோல்படி "காட்டுமிராண்டிகள்" என்றும் ஆகம சாஸ்திரப்படி கோவில்கள் கட்டியதால் "ஆரிய மாயையில்" சிக்குண்டுவிட்ட "பார்ப்பன அடிவருடிகள்" என வகைப்படுத்தப்படும் நிலை தெரியவில்லையா திரு.வெட்டிப்பயலாரே?

//ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?//

இம்மாதிரி பகுத்தறிவுப் பகலவனின் அடிமடியிலேயே கை வைக்கும் கேள்வியைக் கேட்போரை நோக்கி பதிலலேதுமளிக்காது "மறத்தமிழன்" செய்யவேண்டியதாகச் இன்னும் சொல்லப்படுபவை "பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேரக் காணும் நிலையில் பார்ப்பானைக் கொல்லவும், பாம்பினை விட்டுவிடவும் வேண்டும்".என்ற "அரசியல்-த்ரா(வக)விடம் - நீ அறியவேண்டும் வெட்டிப்பயலாரே!

//இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?//

பகுத்தறிவுப் பகலவர்களின் அரசியல்-திராவிடப் பாசறைக் கோனார் கையேட்டு விளக்கம் படிக்கவும் வெட்டிப்பயலாரே: "இதோ ஆரியப் புற்றிலிருந்து, ஆரிய மாயையில் மயங்கிய, சோற்றாலடித்த பிண்டமான தமிழன் நிலை பிறழ்ந்துபோய், தரம் தாழ்ந்துபோய்விட்டதன் விளைவே இந்தக் கேள்வி."

//காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?//

பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காணும் திரு. காமராஜ் மாதிரியான உண்மையான தலைவனுக்குத் "திராவிட-அரசியல் பதில் மரியாதை" செய்யவேண்டாமா?எதிர்காலத் தமிழனின் தேவைகள உணர்ந்து 3கி.மீ தூரத்திற்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7கி.மீ தூரத்திற்கு ஒரு மேல்நிலைப்பள்ளியும், ஐஐடியும், பாசனத்திற்குஆறுகளின் குறுக்கே ஐந்துக்கும் மேற்பட்ட அணகளயும் கட்டிச் சாதனைகள் செய்தால் விட்ருவோமா?

தமிழகத்தின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தங்கத் தலைவன் காமராஜரைச் சரியாப் பழி தீர்த்துட்டோம்ல! என்ன வெட்டிப்பயலரே இப்பவாணும் விஷயம்அறிந்து கொள்ளவும்!

------------------------------------------------------------------------------------------------

2 comments:

குமரன் (Kumaran) said...

திரு.ஹரிஹரன். வைணவர்களின் 'துளசி - திருத்துழாய்' பற்றிய உங்கள் அறிவு பூர்வமான வாதத்திற்கு :-) அடியேனின் பதிலை ஜோவின் பதிவில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் பார்க்கவில்லையென்றால் தயவு செய்து பாருங்கள். வேண்டுமானால் அந்தப் பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்.

துளசி --> திருத்துழாய் (ஏனென்றால் சி என்ற சிவன் பெயரின் முதலெழுத்தே காரணம்)
விபூதி --> திருநீறு (ஏனென்றால் வி என்ற விஷ்ணு பெயரின் முதலெழுத்தே காரணம்)

உங்களின் லாஜிக் படியே விபூதி --> திருநீறுக்கு ஒரு விளக்கம்.

ஜோவின் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டத்தின் இந்தப் பகுதியில் சமூக அக்கறை தெரியவில்லை. வெறுப்பு தான் தெரிகிறது.

Hariharan # 03985177737685368452 said...

// வைணவர்களின் 'துளசி - திருத்துழாய்' பற்றிய உங்கள் அறிவு பூர்வமான வாதத்திற்கு :-) அடியேனின் பதிலை ஜோவின் பதிவில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.//

திரு.குமரன்,

வணக்கம். அது நான் பார்த்த, கேட்டவை. எனது வெறுப்பு இல்லை. சென்னையில் தியாகராய நகர் சிவவிஷ்ணு ஆலயத்தில் இன்றும் இம்மாதிரி வித்தியாசம் காட்டுகிறார்கள். எனது நண்பனின் பாட்டி சிவ சிவ என்றால் காதைப் பொத்திக்கொள்வார். அது அவர்கள் அறியாமை.

ஹரிஹரன் எனது பெயரே சைவ-வைணவ இணைப்புத்தானே.

நான் அனைத்தையும் வழிபடும் ஸ்மார்த்தன். எனக்கு எதிலும் வெறுப்பு தனிப்பட்டுக் கிடையாது.

வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்கும் நன்றிகள் குமரன்.