Sunday, November 12, 2006

(52) பெரியார்மதம் நாடெங்கும் பல்கிப்பெருகும்போது...

இன்றைக்கு நாலு ஷேர் ஆட்டோவுக்கு ரெண்டு பேர் குறையும் அளவில் காணப்படும் கூட்டமாக இந்துமதக் கோட்பாடுகள், இந்தியக் கலாச்சாரத்திற்கு கண்டமாக இருக்கும் பெரியார்மதம் நாடெல்லாம் தழைத்துப் பல்கிப் பெருகினால் (நெருப்புன்னா வாய்வெந்துடாது)அந்த கருப்புக்காண்டம் எப்படியிருக்கும்னு கொஞ்சம் தொலைநோக்கியபோது வந்த சீர்திருத்தக் காட்சிகள் இவை:

1. மணியாட்டிப் பூசை நடக்கும் கோவில்களில் இந்து தெய்வச்சிலைகளுக்குப் பதிலாக....
மணியம்மை ஆட்டிப்படைத்த கடவுள்வெங்காயம் ஈ.வெ.ரா உருவச்சிலைகள் இருக்கும்!

2. இந்துமதக் கோவில் பிரசாதங்களில் வெங்காயம் தவிர்க்கப்பட்ட நிலைமாறி சீர்திருத்தமாக வருணாசிரமத் "துளசிஇலை தீர்த்தம்" தூக்கப்பட்டு "வெங்காயஇலை தீர்த்தம்" வழங்கப்படும்.


3. ராமபிரான் வாழ்ந்து காட்டிய ஏகபத்தினி விரதத்தை ஏகடியம் செய்து மணியம்மை, ஈவெரா போட்டோவுக்கு /சிலைக்கு மணியாட்டிப் பூசை செய்து தொழுவர்!

4. காருக்கு ஸ்டெப்னி இல்லை என்றால் கூட கவலை இல்லை. வாழ்க்கைக்குத் துணையாக கூடுதல் ஸ்டெப்னி இல்லை எனில் ஏகடியம் செய்யப்படுவர். ஒரே வாழ்க்கைத்துணைதான் என்றால் அவருக்கு அய்யோ பாவம்...வார்டு கவுன்சிலருக்கு வெற்றிலை கூஜாதூக்கும் பதவி கூட கிடைக்காது!

5. பகுத்தறிவு...பகுத்தறிவு, சீர்திருத்தம்..சீர்திருத்தம் என மூலையிலே அமர்ந்து, கருஞ்சட்டையணிந்து தெருமூலையிலே நின்று சூரியவெப்பத்தை உள்வாங்கித் தனது மூளையால் யோசித்ததால் பெரும்பாலோர் தன் மூலாதாரம் சூடேறி உடல் வெளித்தள்ளிய மூலத்திற்கு பத்தியமாகச் சின்னவெங்காயம் தின்று தீர்ப்பார்கள்.

6. நாட்டிலே இதனால் முதன்மை விவசாயப் பொருளாக சின்ன /பெரிய வெங்காயம் பெரிய அளவில் சாகுபடி செய்ய மத்திய/மாநில அரசுகள் வற்புறுத்தும். தரிசு நிலங்களில் கூடுதலாக வெள்ளை வெங்காயம் விளைவிக்கப்படும்!

7. இன்னிக்கு கொஞ்சூண்டு சுரணையோடு சம்பளம் இவ்வளவு கிம்பளம் இவ்வளவு எனும் நிலையில் மாபெரும் சீர்திருத்தம் வரும். லஞ்சம் இத்தனை என்று காலரைத்தூக்கிவிட்டுச் சொல்வார்கள்!
எல்லா இரண்டாம் த(ர்)ர விஷயங்கள் பூரிக்கும், செழிக்கும்.

நேர்மை தீண்டத்தகாத லிஸ்டிலிருந்து காணாமல் போன லிஸ்டுக்கு புரமோஷன் பெறும்!

8. ஆறிய டீ குடித்தபடியே தேநீர்க்கடைகளில் அப்போதும் ஆரிய முறியடிப்பு பற்றிப் பேச்சு நடக்கும்!

9. பழக்க தோஷத்தில் எதிர்கருத்துச் சொன்னவர் பற்றி நாத்திகமானதொரு அச்சகத்தில் அடித்த அவதூறு கருப்பு போஸ்டர்களை கும்மிருட்டு நள்ளிரவில் சாராய போதையோடு ஒட்டி ஊரெல்லாம் வெளிச்சம் வருமுன் "உண்மை"யான தகவலாக "விடுதலை" செய்வர்!

பெரியார்மதத்திற்கு எதிர்கருத்து உடையவர்களது தாய், தமக்கை, தங்கை, தாரம், மகள்களை விபசாரிகள் என்பார்கள், பிராத்தல் செய்ய ரேட் ஃபிக்ஸ் செய்ய முன்வருவார்கள்!

10. அரசு சொன்னைதையும் சொல்லாததையும் செய்யும். திருமணம் , எளவுக்கு வந்து நடத்தித்தரும் சீர்திருத்தவாதிகள் முன்னுதாரணமாக மேம்பட்டு வாழ்ந்து மக்களுக்கு சீரியபடி எடுத்துக்காட்டிக்கொண்டிருப்பர்!

11. சேர, சோழ, பாண்டிய, பல்லவன் கட்டிய கலை வளாகங்களான கோவில்கள் ஊமத்தம் புதர்மண்டிப்போய் எதாவது ஒரு சுயமரியாதைச் சிங்கத்தின் சுராபான தயாரிப்பு வளாகங்களாகும்!

12.அப்போதும் இடஒதுக்கீட்டுக்கு ஏதாவது காரணம் தேடிகொண்டிருப்பார்கள். கூட்டணியிலே வாக்குவாதத்தின் போது அரிவாள் தூக்கிப் பொருதாமல் தன் அறிவால் பொருதுபவனை அப்போதும் பலியாடாக்குவார்கள்!



யப்பா...ஒரு டஜனே கண்ணைக்கட்டுகிறது!

இளமையோடு ஆக்கமும் ஆற்றலும் ஒருசேரப்பெற்ற தமிழ்க்கடவுளே குமரா! கந்தா! கடம்பா! கதிர்வேலா! முருகா! தமிழைக் காத்து ரட்ஷிப்பதோடு பார்ட் டைமில் இந்துமதத்தையும் இந்திய தேசமும் காப்பாய்!

அன்புடன்,

ஹரிஹரன்

15 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

bala said...

ஹரிஹரன் அய்யா,

முருகன் அருள் நிச்சயம் உண்டு.கவலை வேண்டாம்.

பாலா

ஜயராமன் said...

ஹரிஹரன்,

முன்பெஞ்சில் உட்கார்ந்து இரவு 10 மணிக்கு ஒரு மேடை மீட்டிங் பேச்சை கேட்டதுபோல் கிக்காக இருக்கிறது.

ஆமாம், அது "கலாசார கண்டமா" இல்லை "கருப்புகாண்டமா". இரண்டையும் எழுதியிருக்கிறீர்களே? காண்டம் என்பதே சரியாக இருக்கிறது, இதுகளுக்கு.

நன்றி

Hariharan # 03985177737685368452 said...

ஜெயராமன் சார்,

இந்தியக்கலாச்சாரத்திற்கு கண்டமான கருப்புக்காண்டம்.

கண்டமானது காண்டமானால் என்பதுதான். ஒரு கண்டம் ஒரு காண்டம்!

மாஸ் லாங்க்வேஜ் அப்படித்தான் கிக்காக இருக்கும். சென்றடையும் வீச்சுக்காக குறிப்பிட்ட சிரத்தையுடன் எழுதப்பட்டிருக்கிறது.

இப்பதிவு வெஜிடேரியன் சால்னா! (சால்னாவில் வெஜிடேரியன் வேரியேஷன் சொன்ன கால்கரி சிவாவுக்கு நன்றிகள்)

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

//முருகன் அருள் நிச்சயம் உண்டு.கவலை வேண்டாம்.//

தங்கள் அருள் வாக்குக்கு நன்றிகள்!

கால்கரி சிவா said...

ஸ்டெப்னியாக இருக்கும் பெண்ணுக்கு ஸ்டெப்னி ஆண் கிடைப்பார்களா?

Hariharan # 03985177737685368452 said...

//ஸ்டெப்னியாக இருக்கும் பெண்ணுக்கு ஸ்டெப்னி ஆண் கிடைப்பார்களா?//

பகுத்தறிவுப் பகலவனாகிய
ஸ்டெப்னி ஸ்பெசலிஸ்ட் சபலிஸ்ட்டுகளிடம் தான் இதற்கு விடை கிடைக்கும்.

தனிநபர் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கும் செயல் என்று!

சீனு said...

அட! என்ன சார்!! அவங்களப் போல நீங்களும் ஆரம்பிசுட்டீங்களே? :(

ஆனா, டைட்டில் என்னவோ நெசம் தான்.

லக்கிலுக் said...

அடுத்தாத்து
அம்புஜத்தை
பாத்தேளா?

அவ
ஆத்துக்காரன்
சொல்லுறதை
எல்லாம்
கேட்டேளா?

Amar said...

//வாழ்க்கைக்குத் துணையாக கூடுதல் ஸ்டெப்னி இல்லை எனில் ஏகடியம் செய்யப்படுவர். //

அட அட அட...என்னே பெரியார்மத மகிமை... :)

எப்பிடிங்க ஹரிஹரன் உங்களால மட்டும் இப்படி....? :)

Hariharan # 03985177737685368452 said...

//அடுத்தாத்து
அம்புஜத்தை
பாத்தேளா?

அவ
ஆத்துக்காரன்
சொல்லுறதை
எல்லாம்
கேட்டேளா?//

லக்கி,

அடுத்தாத்தையெல்லாம் இதுக்கு பார்க்கணுமா? நேரா லோகத்திலே குறிப்பா தமிழ்நாட்டுலே நடக்குறத கண்கொண்டு பார்த்தாலே போதுமே!

எல்லாம் நேரே பார்த்தது, கண்டது கேட்டதுதான்!

Hariharan # 03985177737685368452 said...

சமுத்ரா,

////வாழ்க்கைக்குத் துணையாக கூடுதல் ஸ்டெப்னி இல்லை எனில் ஏகடியம் செய்யப்படுவர். //

அட அட அட...என்னே பெரியார்மத மகிமை... :)

எப்பிடிங்க ஹரிஹரன் உங்களால மட்டும் இப்படி....? //

அரசியல் திரா'விட' சமுத்திரத்திலே நீந்திக் கரையேற கை கொடுக்கும் கைகளா இருப்பது ஸ்டெப்னிக்கள்தானுங்க!

bala said...

ஹரிஹரன் அய்யா,

பெரியார்மதம் நாடெங்கும் பல்கிப்பெருகும்போது ஒரு பிரச்சனை வருவது தவிர்க்க முடியாதுங்கய்யா..
இப்பவே நாட்டில் பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் எண்ணிக்கையை விட குறைவு என்கிறார்கள்.
அப்போ, எல்லாரும் பகுத்தறிவோட செயல்பட்டா ஸ்டெப்னிக்கு எங்கே போவாங்க?
இறக்குமதி செய்யாக்கட்டி water war மாதிரி ஸ்டெப்னி வார் மூளுவது தவிர்க்க முடியாதல்லவா?
இந்த பிரச்சனையை பகுத்தறிவு எப்படி எதிர் கொள்ளும்னு நினைக்கறீங்க?எனக்கு புரியல..பேசாம லக்கி அய்யாவை கேக்கலாமா?

பாலா

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

//இப்பவே நாட்டில் பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் எண்ணிக்கையை விட குறைவு என்கிறார்கள்.//

பெண் சிசுக் கொலையோட இம்பாக்ட் தெரிய ஆரம்பிச்சிருக்குன்றதைச் சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா?

//இந்த பிரச்சனையை பகுத்தறிவு எப்படி எதிர் கொள்ளும்னு நினைக்கறீங்க?எனக்கு புரியல..பேசாம லக்கி அய்யாவை கேக்கலாமா?//

பெண்சிசுக்கள் மேல எல்லோருக்கும் லக்கிலுக் இருக்கவேணும்னுதான் சொல்லுவார்னு எதிர்பார்க்கலாம்.

லக்கிலுக் said...

அவா ஊதுன்னா இவா வருவா :-)