Tuesday, December 05, 2006

(75) பாப்ஸுக்கு 2 திரா"விட"ப் பகுத்தறிவுக்கு நூறுநாக்கு

பாப்பானுக்கு ரெட்டைநாக்கு பகுத்தறிவுக்கு எத்தனை நாக்கு என்கிற பகுத்தறிவைச் சோதிக்கும் சிறு ஆராய்ச்சியில் கண்ணுக்கு முன்னே உடனே தட்டிய உண்மையை விடுதலை செய்கிறேன்!

தமிழின் தமிழ் கருணாநிதியின் உடல் நலத்தை வழக்கமாக அவரது ஆஸ்தான மருத்துவர்
(தமிழ்க் குடிதாங்கி மருத்துவர் இல்லீங்க) ரத்த அழுத்தம் சோதித்துக் கொண்டிருக்கும் போது "பார்ப்பனனுக்கு எப்பவுமே ரெட்டை நாக்குதான்" என்று சொல்லியவாறே மஞ்சள் துண்டை சரி செய்து கொள்கிறார்.


அடுத்த செக்கப்பான டெம்பரேச்சருக்கு தெர்மாமீட்டரை வாயில் நாக்கின் அடியில் வைத்துக்கொள்ள மருத்துவர் சொல்ல கருணாநிதி வாய் திறக்கிறார்... மருத்துவர் அதிர்கிறார் இதென்ன உங்கள் நாக்கே கைத்தறி மாதிரி நூறு நாக்குகளா இருக்கு நாக்கு கூட மஞ்சள் நிறமாயிருக்கு என்று கட்டுப்பாடுகளை நினைவூட்டி அறிவுறுத்துகிறார்!

வயதில் மூத்த, அனுபவத்தில் பழுத்த இந்த திரா"விட'ப் பகுத்தறிவுச் சிங்கம் தான் அணிந்திருக்கும் அம்மட்டும் அடுத்தவருக்கு பலனற்ற ஒரு மஞ்சள் துண்டுக்கே இதுவரை 100 முறைக்கும் மேலாக இன்னமும் விடாமல் தினமும் புரட்டு புரட்டுன்னு புரட்டிக் காரணம் சொன்ன இந்த நாக்கு பகுத்தறிவு நாக்கு தானே?

அப்போ ஆதாயமான விஷயங்களில் எவ்வளவுக்கு நேராக பிறழாமல் பேசும்னு இதுலேர்ந்தே தெரிஞ்சுக்கலாம்:-)))))

எனக்கு நினைவில் இருக்கும் பகுத்தறிவுப் பாசறை பயிற்சி எடுத்த கருணாநிதி தானே இதுவரை மஞ்சள் துண்டுக்காக துண்டு துண்டாகத் தெரிவித்த சில காரணங்களைப் பட்டியலிடுகிறேன்:

1. குடும்பத்தார் எல்லோரும் சொன்னார்கள் அதனாலேயே அணிகிறேன்!

2. கூட்டணி அமைத்த போது மருத்துவக் குடிதாங்கி அணிவித்ததை அப்படியே தொடர்கிறேன்!

3. மஞ்சள் துண்டு அணிவதற்கு எந்தக் காரணமும் இல்லை!

4. தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதால்!


இன்னும் பல காரணங்களை பின்னூட்டினால் தொகுத்து ஒரு விஷயத்தை பார்ப்பான் மாதிரி ரெட்டை நாக்கா புரட்டிப் பேசாமல் இருக்க தமிழக மக்களை வழிநடத்த ஒரு அருமையான அரசியல் திரா"விட"ப் பகுத்தறிவுக் கையேடாகத் தயார் செய்யாலாம்னுதான்!

ஏன் 108 நாக்குகள் கருணாநிதியின் சமாளிப்புக்காக:

வெறும் ரெண்டு நாக்கெல்லாம் இரண்டு விரல் காட்டிய அரசியல் எதிரி எம்.ஜி.ஆரைச் சுட்டிக்காட்டிவிடும் அபாயம் உள்ளதால் பகுத்தறிவோடு நான் சிந்தித்து சும்மா 108 நாக்குகளாக எனக்கு ஆக்கி இருப்பது எனக்குத் கஞ்சித்தொட்டித் தமிழனின் பாரம்பர்ய தறி நெசவின் மீதான அக்கறை வெளிச்சம் போடவே!

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

கார்மேகராஜா said...

டெஸ்ட் மெசேஜ்.

இது என்னுடையது.

Hariharan # 03985177737685368452 said...

மறைந்து கொண்டவாறே வந்து அர்ச்சிக்கும் ம(ர)றத் தமிழர்களுக்கு...

ஐயாக்களே... என்னைத் திட்டும்போது கூட நீங்க ஸ்கூல்ல தமிழைக்கூட சரியாப் படிக்காம...எந்நேரமும் கருத்தாக மனிதக்"குறி"களிலேயே மீண்டும் மீண்டும் குறியாய் இருந்து.. இருந்து..சேச்சே எவ்ளோ எழுத்துப் பிழைடா சாமி!

இதுல தமிழ்த்தாயை எங்கிட்டிருந்து வளக்குறது நீங்க!

மாயவரத்தான் said...

சூப்பர்.. உங்க மேல மேற்படி அல்லக்கைகள் ஏன் ரொம்ப கடுப்பாகிறார்கள் என்று இப்போது தான் புரிகிறது. 'உண்மை' உரைக்க தானே செய்யும்.

வாழ்த்துக்கள்.

Hariharan # 03985177737685368452 said...

அய்யா கார்மேகம்,

முதலில் வருவதற்கு பெரிய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பது புரிகிறது. இன்னும் கொஞ்சம் முயன்றால் முதலில் வந்து விடலாம்!

ஜஸ்ட் லேட் பை 4 நிமிடங்கள்!

முதல் பின்னூட்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! :-)))

bala said...

//இதுல தமிழ்த்தாயை எங்கிட்டிருந்து வளக்குறது நீங்க//

இவங்க தமிழ்த் தாயை வளக்கறதா? விக்கதான் செய்வாங்க..இந்த தெய்வப்பிறவிங்க..மறுபடி மறுபடி தமிழ்த் தாயை க்ளோன் பண்ணி விப்பாங்க..இதைத் தான் தமிழை வைத்து வியாபாரம் பண்ணுவது என்று சொல்வார்கள். இந்த வியாபாரம் செம்மையா லாபகரமா போகிறதால், நன்றி உணர்வோடு சொல்லிக்கொடுத்தவரை தந்தை என்று செல்லமா கூப்பிடுவாங்க..
கரும் பாறையாக ஆங்காங்கெ நிக்கவைப்பாங்க.

பாலா

Hariharan # 03985177737685368452 said...

செவ்விந்தியரே!

எனது வலைப்பூவிற்கு புதிதாக வருகிறீர்கள் என நினைக்கின்றேன்.

ஜெயலலிதா பற்றி எனது விமர்சனங்களை 48,49,50வது பதிவுக்குப் போய் படித்து ஆறுதல் பெறவும்!

Hariharan # 03985177737685368452 said...

//சூப்பர்.. உங்க மேல மேற்படி அல்லக்கைகள் ஏன் ரொம்ப கடுப்பாகிறார்கள் என்று இப்போது தான் புரிகிறது. 'உண்மை' உரைக்க தானே செய்யும்.//

மாயவரத்தான்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை என்பதே... கல(ழ)க அல்லக்கைகள் கடுப்பானா போதிலும் உண்மையை விடுதலை செய்ய அச்சமென்பதில்லையே :-)))

முதல் முறையாக பின்னூட்டியதற்கும், பாராட்டுக்கும் நன்றிகள்!

Unknown said...

அருமை ஹரி , வெங்காயங்களைப்பற்றி மேலும் பதிவுகளை தொடருங்கள் . ஆனா மொத்தம் எத்தனை மனை துணை என்ற விவரந்தான் தெரியவில்லை , நீங்கள் அறிவீர்களா ?