Wednesday, December 13, 2006

(83) மாடப்புறாக்கள்...மனிதர்கள்...மதங்கள் (ஆன்மா அறுவடை)

கொஞ்சம் பெரிய கட்டுரை முழுக்கப் படிக்க வேண்டுகிறேன். சமீபத்தில் நான் கேட்க நேர்ந்த எல்லோருக்கும் நல்லவனாய் மனிதன் இருக்க மாடப்புறாக்கள் மனிதர்களுக்குச் சொல்லும் விஷயத்திற்கு வருவோம்! (கதைக்குப் பின் எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன்) முதலில் கதை:

ஒரு இந்துக் கோவிலின் ராஜ கோபுரத்தின் மாடத்தில் மாடப்புறாக்கள் பல தங்கி இருந்தன. கோவிலுக்குக் குடமுழுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட சாரம் கட்டி கோபுரத்திற்கு வர்ணம் தீட்டப்படும் வேலை நடக்க அங்கே வாழ்ந்த மாடப்புறாக்கள் இந்த வேலைகளால் நேர்ந்த இடையூறுகளினால் மாற்று இடமாக அருகே இருந்த சர்ச்சின் கோபுரத்தில் சென்று தங்கின... சர்ச்சுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வர இருந்தகாரணத்தால் சர்ச்சுக்கும் வெள்ளையடிக்கும் பணி ஆரம்பமாக மாடப்புறாக்கள் அருகே இருந்த மசூதியின் ஒலிபெருக்கி கோபுரத்தில் சென்றமர்ந்தன!

குட்டிப்புறா அம்மா புறாவைக் கேட்டது கீழே என்ன சத்தம் என்று. அம்மா புறா சொன்னது கீழே மனிதர்கள் ஒருவரையொருவர் வெட்டிச்சாய்த்துக் கொள்ளுகிறார்கள் என்று. ஏன் என்றது குட்டிப்புறா. அம்மா புறா சொன்னது அவர்களுக்கு மதம் பிடித்துப் போனதால் மதம் பிடித்து விட்டது என்று.

குட்டிப் புறா மீண்டும் அம்மாவிடம் கேட்டது. அது என்னது மதம்? அது ஏன் பிடிக்க வேண்டும் என்று. அம்மா புறா சொன்னது கோவிலுக்குச் செல்லும் மனிதர்கள் இந்துக்கள். சர்ச்சுக்குச் செல்பவர்கள் கிறித்துவர்கள். மசூதிக்குச் செல்பவர்கள் இசுலாமியர்கள் என்று. இப்படித்தான் அவர்கள் மதம் அவர்களுக்குப் பிடித்துப்போய் மதம் பிடிக்கிறது என்று.

குட்டிப்புறா கேட்டது அம்மாவை அது எப்படி? நாம் எல்லா இடத்துக்கும் கோவில், சர்ச், மசூதி என்று சுற்றித்திரிந்தாலும் நாம் மட்டும் புறாக்கள் தானே மனிதர்கள் மட்டும் ஏன் இந்துக்கள், கிறித்தவர்க்ள், இசுலாமியர்கள் என்று வெவ்வேறாக இருக்கிறார்கள் என்று.

அம்மா புறா சொன்னது நாம் எங்கு சென்றாலும் புறாக்கள் என்பதை அறிந்திருப்பதால் தான் நாம் மாடங்களில் உயரே இருக்கிறோம். இதை உணராத மனிதர்கள் கீழே இந்துக்கள், கிறித்தவர்க்ள், இசுலாமியர்கள் என்று பிரிந்து அடித்துக்கொண்டு சாகிறார்கள் என்று!

எல்லோருக்கும் நல்லவனாக இந்தக் கதையைச் சொல்லும் நேரத்தில் நேரில் கண்ட மற்றும் மெய்யான இந்திய வரலாற்றில் நிகழ்ந்த கொடூர நிதர்சனங்கள் கண் முன்னே வந்து காட்சிகளாக விரிகின்றன!

பள்ளிப்படிப்பின் போது அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து அமைதியான காலை நேரத்தில் படித்தால் மனதில் பதியும் என்று பெற்றோரின் வன்மையான வழிநடத்தலில் மீறமுடியாத காலகட்டம். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை இந்தப் பழக்கம் கண்டிப்பான மிலிட்டரி அமலில் இருந்தது.

காலை அலாரம் கடிகாரத்தில் அடிக்கிறதோ இல்லையோ தூரத்து அல்லா கோவில் தொழுகை அழைப்புச் சத்தம் கேட்டு அம்மா எழுப்பிவிட அம்மாவிடம் நன்மதிப்புப் பெற வேண்டி மேற்குத்தொடர்ச்சி மலைகிராம-நகரத்தின் குளிர் நிறை மார்கழிக் காலையின் சுகமான தூக்கம் தியாகம் செய்து எழுந்து படிக்க ஆரம்பிப்பேன். அல்லா கோவில் அலாரம் கேட்கவில்லை எனில் அடுத்த சில நிமிடங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முதல் கால பூஜைக்கு கோவில் மணி அடிக்கும் சத்தம்... முருகனும் தூங்கட்டும் குழந்தை ஹரிஹரன் என்று கருணையோடு எழுப்பாவிட்டால் போடி நகராட்சியின் சங்கொலி எழுப்பி விட்டுவிடும்.

எனது பள்ளித்தோழன் சுரேஷ் அவனோடு கிறிஸ்துமஸ் விழாவுக்கு போடியில் சர்ச்சுக்கு போயிருக்கிறேன். சுரேஷின் தந்தை பெயர் காமாட்சி, அண்ணன்கள் ஜோஷி, அமலன், சகோதரி பெயர் நிர்மலா தாயின் பெயர் கிரேஸ் டீச்சர். எங்க ஸ்கூல் டீச்சர். பெரிசா நெற்றியில பொட்டு வைத்திருப்பார். அவர்கள் வீட்டுக்குப் போய் விளையாடுவது என்றிருப்பேன். சில வருடங்கள் முன்பாக கன்வெர்ட் ஆகி யிருக்க வேண்டும். சுரேஷின் தந்தைவழிப்பாட்டி வீட்டின் மாடியிலிருந்து எதிரே தெரியும் விநாயகர் கோவில் கோபுரம் பார்த்து வீட்டினர் அருகில் இல்லை என்கிற போது கன்னத்தில் போட்டுக்கொள்வார்! பாவம் பாட்டி!
காருண்யா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் அவர்கள் வீட்டினர் அனைவரும் பொறியியல் படித்தார்கள். சகோதரர் தினகரனின் மகிமை! குடும்பமே கல்விக்காக மதம் மாறியவர்கள்!


இன்றைக்கும் குவைத்தில் காலை நேரத்தில் குளித்தவுடன் சென்று தொழக் கோவில் இல்லை என்ற சூழலில் உதித்து வரும் சூரியனைத் தரிசித்து வழிபட்டுவிட்டு அலுவலகம் வந்தால் 12வது மாடியிலிருந்து பார்த்தால் எதிரே இருக்கும் மசூதியைப் பார்த்தும் உள்ளிருக்கும் கடவுளை வணங்குவது எனது இயல்பு!

பரம்பரை பரம்பரையாக பாரம்பர்யமாக இந்துவாக இருப்பதில் தொடர்வதில் இது பெரிய சிறப்பு! இந்து மதத்தில் இறைவன் ஒன்றே ஆனால் இறைவனின் சொரூபங்களாக முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு கூடுதலாக அல்லாவையும், இயேசுவையும், குருநானக்கையும், மகாவீரரையும், புத்த்னையும் வணங்க சுணக்கம் வருவதில்லை! சீனக்கோவிலின் கடவுளான கன்பூஷியஸையும் நம்மூர் சிவன் கோவிலில் காலபைரவரை வழிபடுகிற நேர்த்தியோடு வணங்கிவிட இந்துவாழ்வியல் நெறியில் வளர்ந்த மனம் மக்கர் செய்யாது!

இப்படியாக அனைத்தையும் உள்வாங்குகிற சக்தி இந்து மத வாழ்க்கை நெறிக்கு அது "வெரி வெரி அக்கமோடேடிவ்வாக" இருப்பதாலேயே இதர நிறுவனப் படுத்தப்பட்ட மதங்களுக்கு இந்து மதத்தைப் பிடிக்காதபடிக்கு அவர்கள் மதம் பிடித்துப்போனதால் மதம் பிடித்து அலைகிறார்கள்!

இந்து மதத்தில் இறைவன் வெளியில் இல்லை தன்னுள்ளே உறைகிறான் என்பதைத் தெளிவாக உரத்துச் சொல்லிச்சென்றிருக்கின்றார்கள் ரிஷிகள், ஞானிகள் பலர்! இதனாலேயே இந்து மதத்தை எனக்குப் பிடித்திருக்கிறது!

அல்லாவின்மீதும் இயேசுவின் மீதும் இந்துக்களுக்கு என்றைக்கும் வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு நான் சென்று வழிபட்டிருக்கின்றேன். மாரியம்மனுக்கும் மேரியம்மனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக இந்துக்களின் மனம் பார்ப்பதில்லை. அஜ்மீர், நாகூர் தர்காக்களுக்கு என்னால் குழப்பமில்லாமல் அடுத்த இந்துக்கள் என்ன சொல்வார்களோ என்கிற அச்சமில்லாமல் சென்று வழிபட முடிகிறது என்மாதிரி ஏராளமான ஹிந்துக்களால்.

அடுத்தவர் மீது இந்துமத வேதநெறி வாழ்வியல் தத்துவத்தை வணிகமாக விற்பனை செய்யாத, ஆட்டுமந்தைக்கூட்டமாக எண்ணிக்கைக்காக என்னவேண்டுமானாலும் செய்யாத வைராக்கியம் இந்துமதத்தினை விழி உயர்த்தி மிகுந்த மரியாதையோடு பார்க்க வைக்கிறது!

எகிப்தின் லக்ஸர், கெய்ரோவில் இருந்த பண்டைய ரோமாபுரிக் கலாச்சரம் இன்றும் சன் டெம்பிள், பிரமிடுகள் என்று உறைந்துபோன உயர் சரித்திரக் கலாச்சாரமாக எகிப்தில் இன்று இருக்கும் இசுலாமிய சமய நம்பிக்கைகள் வழி வந்த அன்னியக் கலாச்சாரம் ஒட்டு மொத்தமாக எகிப்தின் பண்டைய கலாச்சாரத்தினை இயக்கத்தினை நிறுத்தி காட்சிப்பொருளாக்கி இருக்கிறது.

பண்டைய கிரேக்கக் கலாச்சாரத்தினை கிறிஸ்தவம் மியூசியத்தில் வைக்கப்பட்ட உயிரற்ற காட்சிப் பொருளாக ஆக்கியிருக்கிறது!


இந்து வாழ்வியல் வேத நெறி என்ன சொல்கிறது என்று அறியாமல் அறியாமையில் இருக்கின்றவர்களிடம் நீ பாவி என்றும், கல்விச்சலுகைகள், பொருட்சலுகைகளுக்காக ஆன்மா அறுவடை செய்பவர்கள், அவர்களுக்குள்ளேயே தெளிவில்லாமல் அடித்துக் கொல்(ள்)பவர்கள் என்கிற கூட்டத்தினரால் மீண்டும் இந்து மத வேத நெறி மாட்டித் தவிக்கக்கூடாது என்கிற எண்ணம் அன்பில்லாத அன்னியரது வரலாற்றுப் படையெடுப்புக்களால் ஆயிரங்காலம் பட்ட அவதிகளாலும், வணிகத்துக்கென ஒட்டகம் மாதிரி உள் நுழைந்து நாட்டையே அடிமைப் படுத்தியவர்கள் நம்பும் ஆக்கங்குறைந்த இதர சமயச் சித்தாந்தங்களிடம் பட்ட வரலாற்றுப் பாடங்களினால் எனது தேசத்தின் பாரம்பர்ய வாழ்வியல் கலாச்சாரத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு வெளிப்புற மாசு, அசுத்தங்கள் இல்லாமல் ஒப்படைக்கின்ற பொறுப்பு இன்றைய நவயுக இந்துமத இளைஞனுக்கு அடிப்படைக் கடமையாகிறது இன்றைய காலத்தின் கட்டாயமே!

இந்திய பாரம்பரிய வேதநெறிக் கலாச்சாரத்தினைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும், அடுத்துவரும் பல இந்தியத்தலைமுறைகளின் செறிந்த பயனுக்காகவும் வேத நெறி அறிவால் பொருதி விளக்கவேண்டியது மிக அவசியமாகிறது. அரிவாளும் குருதியும் முதன்மைப் பிரயோகிப்பாக என்றுமே வேத வழி இந்துக்கள் எடுப்பதில்லை. ஆயிரம் ஆண்டு அன்பில்லாத அன்னியரின் கொடூரமான கொடுமைகளுக்கு உள்ளான வரலாற்றைத் தன்னகத்தே வடுவாகக் கொண்ட நிதர்சனம் மீண்டும் இந்தியப் பாரம்பரியம் அழிக்கப்படவேண்டும் என்றெண்ணி அயல்நாட்டு நம்பிக்கை, கலாச்சாரத்தினால் தாக்கப்படும் போது செல்ஃப் டிபன்ஸ் என்று முழுமையான வீரியத்துடன் அனைத்துவிதத்திலும் தயார்நிலையில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

பலகாலம் சமய வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படாத ஒரு இடத்தில் 1992ல் நடந்த டிசம்பர் 6 நிகழ்வுக்காக இன்றும் துடிப்பவர்கள் தினமும் காஷ்மீரத்திலும், மும்பை,கோவை குண்டு வெடிப்புக்கள், குஜராத் சுவாமிநாராயண் கோவிலில் உயிரோடு பெண்கள், குழந்தைகளைக் சுட்டுப்பொசுக்கிய கயவர்களுக்கு எல்லாவிதமான பின்புலமாக இருப்பதினை கண்டும் காணாமல் இருக்கக் காரணம் அந்நிய கலாச்சாரத்தின் வழியாக இவர்கள் மனம் சேர்க்கும் கலாச்சார மாசு! சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் எல்லா மத வழிபாட்டுதலங்கள் அகற்றப்பட்ட நிலையில் இவர்களது வழிபாட்டுத்தலத்துக்காக கலகம் வெடிப்பு, குண்டுவீசுதல் என்று செயல்படக் காரணம் அந்நியப்பட்ட கலாச்சாரம் உந்த இங்கே இந்தியாவில் வாழ்ந்துகொண்டு சமய , கலாச்சார நன்றியை கடல் கடந்து காட்டுவதால் இந்திய சமூகத்தின் கலாச்சாரம் மாசுபட்டு வருகிறது.

கிரேக்க ரோமாபுரியின் பண்டைய கலாச்சாரங்களை இந்த வணிகநோக்கு சமயங்கள் சரித்திரத்திலே உயிரற்று உறைந்து போகச் செய்த வரலாற்றை அறிகின்ற போது இந்தியப் பாரம்பர்யக் கலாச்சாரத்தினை இந்த வணிக நோக்கு கொண்ட சமயங்களின் நேர்மையற்ற தேவையற்ற தத்துவக்கோட்பாடுகளற்ற தினசரித் தாக்குதல்களை இந்தியாவிலிருக்கும் இந்திய நாத்திகர்கள், பிழைப்புவாத அரசியல்வாதிகளைத் அதிகாரத் தரகர்களாக்கி போலி சிறுபான்மை பேசியபடியே நைச்சியமாக பெரும்பான்மை இந்தியர்களால் ஓரளவுக்குத் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் இந்தியப் பாரம்பர்ய வாழ்வியலை வணிக நோக்கிலான மதமாற்றங்கள் மூலமாக மாசு படுத்திட முற்றிலுமாக முழுமையாக முயன்றபடியே இருக்கிறது!


இசுலாமிய தைமூரில் ஆரம்பித்து கஜ்னி, கோரி முகமதுக்கள், பாபர் இன்னபிற அன்பில்லாத அந்நியர்கள்தான் இந்தியாமீது செல்வத்தை,பொருட்களை, வளத்தினைக் கொள்ளையடிக்க வேண்டும் என்கிற ஒரே நல்ல எண்ணத்தில் போர் திணித்து வந்தவர்கள். அப்படி வந்தவனில் ஒருவன் போர்க்களத்திலே நிராயுதபாணியாகியதால் ராஜபுத்திர இந்திய அரசன் இந்தியப் பாரம்பர்ய நெறிப்படி போக அனுமதித்ததால் அதே அன்பில்லாத அந்நியனால் கொல்லப்பட்டு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இந்த அன்பற்ற கொள்கை கொண்ட சமயக் கூட்டத்தினரால் படுகொலைகள், கொடூரங்களைச் சந்தித்த இந்திய சமூகத்தின் வரலாறு இன்றுவரை உள்ளது உள்ளபடியாகச் சொல்லிவிட முடியாத ரத்தக் கறைபடிந்த கோரமான உண்மைகள் நிரம்பியது!

அன்பில்லாத இந்த அந்நியக்கூட்டத்தின் ஆட்சியானது ஆங்கிலேயனின் கிழக்கிந்தியக் கம்பெனி வழியில் வந்த வெள்ளைக்காரர்களால் தான் முடிவுரை எழுதப்பட்டது. ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் பல சமூக மேடுபள்ளங்கள் தீவிரப்பட்டாலும் அவனால் உள் வந்த ஆங்கில மொழியாலும், சிதறிக்கிடந்த சிற்றரசுகள் ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவானதும் ஆங்கிலேயனால் விளைந்த சில முக்கிய நல்லவைகள்.

ஆங்கிலேயன் விட்டுச்சென்ற மெக்காலே கல்விக்கலாச்சாரமும் அதன்வழி இன்னமும் தொடரும் தாழ்வுமனப்பான்மைச் சிந்தனைகளும், மிஷனரிகளின் வணிக சமயப் பரப்பல்களின் முக்கிய அம்சமான ஆன்மா அறுவடைச் சித்தாந்தமும் இந்தியப் பாரம்பர்யத்திற்கு மிகக் கேடான விஷயங்கள்.

கோவில் மாடப்புறாவின் ஆன்மாவை யாரும் அறுவடை செய்யத் தனிக்கூண்டில் அடைப்பதில்லை. என் மாதிரியான தனிநபர்கள்கூட இந்தக் கிறிஸ்தவ ஆன்மா அறுவடைக் கூண்டு என்கிற கட்டாய சமய மாற்றும், இந்தியப் பாரம்பர்யக் கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்படுவது என்பது இன்றைக்கு இந்தியாவில் நிகழும் சிறுபான்மை மகிழ்விப்பு அரசியல் என்கிற வாகனத்தினால் இன்னும் வேகப்படுத்தப் படுகிறது!

இசுலாமைத் தழுவவில்லை என்றால் காஃபிர் என்று கொலை செய்யப்படக்கூடிய தகுதி இந்தியப் பாரம்பர்யத்தினைப் வாழ்வியலில், சமய நம்பிக்கைகளைப் பின்பற்றும், அதனை அடுத்தவர் மீது திணிக்காத என் மாதிரியானவர்களை வெகு இயற்கையாகவே காஃபிர்களின் கொலைக்களத்திற்கு இட்டுச்செல்கிறது!

இந்த நிதர்சனங்கள் நடந்தேறிவிடாமல் இருக்க இந்தியப் பாரம்பர்ய வாழ்வியல், சமயக் கோட்பாடுகளை அனுசரிக்கும் இந்துக்கள் பாதுகாப்பு உணர்வோடு வேத நெறி வாழ்வியலை ஆழமாக அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த அவசியத்துடன் எடுத்துரைத்து ஈடுபடுத்துவது மிக அவசியமாகும்.

இந்துமதம் என்பது சமயங்களிலேயே விடுமுறை மாதிரி இந்துவாகப் பெயரளவில் இருக்கும் பெருவாரி பாரம்பர்ய இந்துக்கள் இந்தியாவில் தினசரி வாழ்வில் எதையுமே இந்து நெறியிலிருந்து பின்பற்றுவதில்லை! The most un-practiced Religion is Hindu Religion என்று இவர்கள் அக்கறையின்மையால் ஆக்கியிருக்கின்றார்கள்.

வேகமான தீவிரப் பற்றுதல் கொண்ட இந்துவின் கையிலிருக்கும் அருவாளால் நடந்தேறும் சமய வணிகமான ஆன்மா அறுவடையைத் தடுத்துவிடமுடியாது. அதற்கு ஆழ்ந்த வேத அறிவுடன் அனைவருக்கும் இந்தியப் பாரம்பர்ய வேத நெறியை பாரபட்சமில்லாமல் அறியச் செய்வதனாலேயே ஆன்மா அறுவடைக்கு இந்தியாவில் பயிர்விளைச்சல் இனி நடந்தேறாது என்றாக்க முடியும்.

அல்லாவைத்தவிர எதைத் தொழுபவனும் காஃபிர் என்று வாளோடு பொருதி இந்தியப் பாரம்பர்ய வேத வாழ்வியல் முறையினைப் பின்பற்றுபவனை கொலைசெய்வது தான் தனது சமயத்தின் தர்மம் என்று மட்டும் இருப்போரிடம் பண்போடு பேசினால் மட்டுமே பலன் விளையாது. இந்தச் சூழலை அறிவால் மட்டுமே எதிர் கொண்டுவிடமுடியும் என்று தோன்றவில்லை. இந்தியாவின் ஆயிரம் ஆண்டு முந்தைய செங்குருதி சிந்திய சரித்திரம் மீண்டும் நிதழாதிருக்க பாதுகாப்புக்காக காஃபிர் எனக்கூறியே மதியற்றுக் கொலை செய்ய வருபவனை எதிர்கொள்ளும்( இவர்களது வாளின் மேல் சென்று விழுந்து தற்கொலை செய்யாத, வைக்கின்ற வெடிகளின் மீது வலியச் சென்று விழுந்து துயிலாத அளவுக்கு) எல்லாவிதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் பயிற்சி பெற்றே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்தியப் பாரம்பர்ய வழி, வழியாக இந்துவான எனக்கு கிறித்துவர்கள் கண்டுணரும் கடவுளான "மை ஃபாதர் இன் த ஹெவன்" மீதும் இசுலாமியர்களின் கடவுளான "அல்லா"வின் மீதும் எந்தவிதமான மறுப்பும் கிடையாது. இதையே பரப்பிரம்மமாக எனது இந்தியப் பாரம்பர்யத்தின் வாழ்வியல் நெறியின் படி நாரயணணாக தொழுது வழிபடுகிறேன்!

ஆனால் இந்தியப் பாரம்பரியக் வாழ்வியல் வேத நெறிக் கலாச்சாரம் அதன் அடையாளங்களான கோவில்கள், கலைகள், தத்துவங்கள் இவையனைத்தும் இன்றைய எகிப்தின் உயிரற்ற ரோமாபுரிப் பண்பாடுகள், கலாச்சாரம், கோவில்கள், கலைகள் போன்றோ, மியூசியத்தில் வைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்ட கிரேக்கப் பண்பாடு, கலாச்சாரம், கோவில்கள், கலைகள் போன்று எனது, என்மாதிரியான பெரும்பான்மை இந்துக்களின் அக்கறையின்மையினால் உயர்ந்த இந்தியப் பாரம்பர்ய வேத நெறிக் கலாச்சாரம் உயிரற்ற கண்காட்சிப் பொருளாக வருங்கால இந்தியாவில் ஏதாவது ஒரு வணிக நோக்கு சமயத்திலான அரசின் டூரிஸத்திற்கான முக்கிய வணிகமாக மட்டுமே என்கிற பரிதாப நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது என்கிற தொலைநோக்கு அக்கறை இருக்கிறது! அட்லீஸ்ட் இந்தமாதிரி புதிய தலைமுறை இந்துக்கள் தமது மிக உயர்ந்த, நல்ல பாரம்பர்யத்தைப் பேணிப் பாதுகாத்து ஒளிர்ந்தவாறே அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும்! இந்தியா உண்மையில் அப்போது தான் ஒளிரும்!


மாடப்புறாக்கள் மாதிரி மனிதனாய் வாழ்ந்ததில் இந்தியப் பாரம்பர்யமும் இந்து சமூகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பட்ட துன்பங்கள், கொடூரங்கள் நிறைந்த வரலாறும், சிறுபான்மை மகிழ்விப்பு அரசாங்கங்களின் அரசியல்வாதிகளின் செய்கைகளும், மாடப்புறாக்கள் மாதிரி சுதந்திரமான சூழலில் மனிதனாகிய நான் இருப்பதாக நிறைவான ஒரு உணர்வினைத் தரவில்லை.

வணிக நோக்கு மதமான மிஷனரி கிறித்துவம் இந்தியப் பாரம்பர்யத்தினை பூகோள இந்தியாவின் காலான கன்னியாகுமரியில் நிறைவுதரும் அளவுக்கு ஆன்மாக்கள் அறுவடை செய்யப்பட்டு விட்ட கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமேரி மாவட்டமாக மாறவேண்டும் என்று இந்தியப் பாரம்பரிய வேத நெறி வாழ்வியல் முறையிலிருந்து கலாச்சார விடுதலைக்குப் போராட்டம் நடத்துகிறது பெனின்சுலார் இந்தியாவினை கிறிஸ்துஸ்தான் ஆக்க நாத்திக, நம்பிக்கையற்ற பகுத்தறிவு பிழைப்புவாதிகளின் நயவஞ்சக ஆட்சி அதிகாரத்தின் போலி மதசார்பின்மை, பச்சையான சிறுபான்மை அடிவருடித்தனத்துடன் முயன்றுவருகிறது.

பூகோள இந்தியாவின் தலையான் காஷ்மீரத்தில் சவூதிக் காசில் அல்குவைதா பயிற்சி பெற்ற பாலஸ்தீனர்கள் முதல் ஆப்கானியன், செச்சனியன், பாகிஸ்தானியனின் துணையோடு வந்து அவர்கள் வழக்கமான அன்பில்லாத முறையில் காஷ்மீர பண்டிட்டுகளையும் காஷ்மீர இந்துக்களையும் இசுலாம் அல்லாத அனைத்து காஃபிர்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். காஷ்மீரில் பாதுகாப்புக்கு என்று செலவிடப்படும் ஓராண்டு நிதியில் 500 கல்வி நிலையங்கள், சாலைகள், சுகாதாரம் ஏற்படுதமுடியும்! என்ற போதும் இந்திய இறையாண்மைக்கு சகல பலியையும் தர வேண்டியிருக்கிறது!

வணிக நோக்கு மதங்கள் இந்தியப் பிரதேசங்களில் பெரும்பான்மையானால் அங்கு முதலில் குழிதோண்டிப் புதைக்கப்படுவது உயர்வான வழிவழியான இந்தியப் பாரம்பரியமே! கோவா எனில் இன்று அதன் வாழ்க்கை அமைப்பு, பாரம்பர்யமாக கேளிக்கை விடுதிகள், காபரே, டிஸ்கோ ஆட்ட விடுதிகள், சூதாட்டம், குடிக்கும் பார்கள், காமம், விலை மகளிர் என்று மேற்கத்திய போர்ச்சுக்கீசிய வாழ்க்கைமுறை முழு அமலில் இருக்கிறது!

கலாச்சாரக்கேடு இந்தியாவில் ஆழமாக அழிக்கும் அளவுக்கு வணிக நோக்கு மதங்களின் சாதனைகள் இதுவரையிலான இவைகளின் ஊடுருவல்கள் நிலை நாட்டிக் காட்டிக்கொண்டிருக்கின்றன. இந்தியா இன்றைய மலேஷியா மாதிரி தினம் ஒரு கோவில் உடைப்பு என்கிற அவலமான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடும் நிதர்சனம் இல்லாமல் இல்லை.

இந்தியாவின் வேத நெறிக் கலாச்சார வாழ்வியலைத் தனது பாரம்பரியமாகக் கொண்ட ஒவ்வொரு
தனிமனிதனும் மிகவும் கவனமாக இருந்து கவனிக்க வேண்டிய சூழல் இது. ஓணான்களான கிழக்கிந்தியக் கம்பெனியை உள்ளே பரவவிட்டு அப்புறம் குத்துது குடையுதுன்னு உப்புக்காய்ச்சிய மடத்தனத்தை மீண்டும் அடுத்ததலைமுறை செய்யும்படி செய்திடக்கூடாது. அதே மாதிரி நிராயுதபாணி அன்பிலா அந்நியனை மீண்டும் மீண்டும் மன்னித்து வலிந்து காஃபிர் கொலைக்களத்தில் உயிரோடு தோல் உரிக்கப்பட்டுச் சாகவேண்டிய சூழலை இந்தியாவில் வேத நெறிக் கலாச்சார வாழ்வியலைத் தனது பாரம்பரியமாகக் கொண்ட இந்தியனுக்கு, அடுத்த தலைமுறையினருக்குப் பரிசாகத் தந்துவிட்டுச்செல்லக் கூடாது!

நேர்மையோடு, உள்ளதை உள்ளவாறே இருக்கின்ற இன்றைய சூழலை எதிர் நோக்குவதே இந்தியப் பாரம்பர்ய வேத நெறி வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு இவைகளைப் பேணி வரும் தலை முறைகளுகளிடம் மாசுகளின்றி ஒப்படைக்க வழிவகை செய்யும் என்பதே சரியானதாக இருக்கும்

அன்புடன்,


ஹரிஹரன்.

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

சுய பின்னூட்ட பரிசோதனை!

வடுவூர் குமார் said...

ஹரி
அழகான,ஆழமான பதிவு.
உள்ளக்குமுறலை புறா மூலம் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
நான் நாகையில் இருந்த காலங்களில் நாகூர் தர்காவிற்க்கு போய் பலமுறை கும்பிட்டு இருக்கேன்.வேளாங்கன்னி மற்றும் பல சர்ச்க்கும் போய் மண்டியிட்டிருக்கேன்.இதில் எனக்கு எந்தவித தயக்கமும் வந்ததில்லை.என் பெற்றோர்கள் தடுக்கவும் இல்லை.
நான் கற்ற கல்வி நிலையங்கள் யாவும் கிருஸ்தவ நிறுவனங்களே.1980 வரை அவ்வளவாக தெரியாத இந்த ஜாதி பிரிவினை நடுவில் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.
1997 யில் நான் படித்த பள்ளிக்கு சென்று வீடியோ எடுக்க அனுமதி கேட்ட போது,தலைமையாசிரியர் தலையை குனிந்தவாறு ஜாதி பிரச்சனையை சொன்னபோது மனது எரிந்தது.
நாம் விட்டுப்போகவேண்டியது அடுத்த சமூகத்துக்கு நலம் பயக்ககூடியதாக இருக்கவேண்டும்.

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

அடிப்படையிலே இந்தியப் பாரம்பரிய இந்துவாக இருப்பதில் மனம் பன்முகத் தன்மையோடிருக்கும்.

ஆட்டுமந்தை என எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக மறைமுகமாக கலாச்சார, நம்பிக்கைகள் மாற்றம் மூலம் படையெடுக்கும் இந்த வணிக நோக்கம் மட்டுமே உள்ள சமயங்கள் இந்திய அரசியலில் சுயநலமே பிரதானமான நாத்திக, சுயமரியாதை, பகுத்தறிவு பேசும் பிரிவினரது துணையுடன் நித்தம் நிகழ்த்தும் கலாச்சாரப் போரின் பேரபாயம் வெறும் அமைதி சுபாவத்துடனான இந்தியப் பாரம்பரிய கலாச்சார வழியில் வாழ்க்கை நடத்தும் சாதாரண சாமானியனை அடுத்த தலைமுறையிலே இன்னும் 20-25 ஆண்டுகளுக்குள் எதிர் கொள்ளவிருக்கும் ஆபத்தான சூழல் குறித்துக் கவலை கொள்வது மிக அவசியம்!

இந்தியாவில் இன்றைய தினம் வெகு வேகமாக நடந்தேறும் தீவிரப்படுத்தப்பட்ட அந்நிய கலாச்சாரப் படையெடுப்பு ஆன்மா அறுவடைக் களத்துமேட்டின், காஃபிர் கொலைக்களத்தின் வெகு அருகாமையில்
இந்திய பாரம்பர்ய வாழ்க்கை நெறியில் வாழ்பவனை இட்டுச்செல்கிறது.

கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டால் இட் ஈஸ் எ மேட்டர் ஆஃப் இயர்ஸ் அவ்வளவுதான். பேரபாயம் இது!

Krishna (#24094743) said...

ஹரி: Excellent post! இன்றைய தேவைகளைப் பற்றிய ஒரு தீர்க்கமான அலசல். இன்று மத மாற்ற முயற்சிகள் 'அன்னை'யின் தயவால் ஒரு புதிய உயரத்தை எட்டிப்பிடித்துள்ளன. எ.கா: திருப்பதி, சபரிமலை போன்ற 'மாஸ்' செண்டர்களே இன்றைய குறி. அதற்குத் தோதாக காங்கிரஸ் YSR வேறு திருப்பதியை திறந்து விடுகிறார். இந்த அம்மையாரை கோவிலுக்குள் அனுமதித்தது யார் என தெரியவில்லை. வேத நெறிக் கோட்பாடுகளைப் பற்றியும் உணர்த்தக்கூடியவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஒரு சிறிய பதத்திற்கு விளக்கம் இதோ:

ஆஸ்திகம் எனும் சொல் வந்தது இவ்வாறு. ஸமஸ்க்ருதத்தில்,
"அஸ்து(தி)" - என்றால் 'உண்டு', அதாவது வேத நெறிகள் உண்டு என நம்புபவன் 'ஆஸ்திகன்'. வேத நெறி இல்லை என்பது 'ந அஸ்தி' - மறுவி 'நாஸ்திகன்'. இதிலுள்ள நுட்பம் என்னவென்றால் வேத காலத்தில், நெறி உண்டு என்பவன் ஆஸ்திகன், இல்லை என்பவன் ஆஸ்திகன்.
'கடவுள்'/'இறை' ஆகியவற்றை இல்லை என்று மறுப்பவன் அந்தக் காலத்தில் கிடையாது. தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு, அதை மறுத்தல் பேதமை என்பது வேத கால புரிதல். ஆகவே நாத்திகம் என்றால் 'கடவுள் மறுப்பு' என்று நம்பும் இன்றைய குஞ்சுகளின் அடிப்படை அறிவே தவறே என்பது விளங்கும்.

மற்றுமொரு highlight. ஆஸ்திகம், நாஸ்திகம் என்கிற பதங்களுக்கு தமிழில் வார்த்தைகளே கிடையாது.

Krishna (#24094743) said...

//இல்லை என்பவன் ஆஸ்திகன்//
இல்லை என்பவன் நாஸ்திகன் என வாசிக்கவும்.